অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மாவட்ட தொழில் மையம்

மாவட்ட தொழில் மையம்

அறிமுகம்

மாவட்ட தொழில் மையம், கடலுார் அலுவலகமானது தமிழக அரசின் கீழ் செயல்படும் தொழில் வணிகத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இவ்வலுவலகமானது தொழில் முனைவோர்களுக்கு ஆலோசனை, பயிற்சி மற்றும் கடன் வசதி ஆகியவற்றை தேசீயமயமாக்கப்பட்ட மற்றும் பட்டியலிடப்பட்ட வங்கிகளிடமிருந்து பெற்று வழங்க ஏற்பாடு செய்கிறது. குடிசைத் தொழில் மற்றும் கைவினைத் தொழில்களை ஊக்கப்படுத்துவத்றகு குடிசைத் தொழில் மற்றும் கைவினைத் தொழில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. 2007-2008 ஆண்டுவரை செயல்பட்டு வந்த பாரத பிரதமரின் ரோஜ்கார் யோஜனா திட்டம் மற்றும் கிராமப்புற வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டமாக 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக புதியதாக தொழில் துவங்க நிதி உதவி பெறுவதற்கு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டுச் சட்டம் 2006 ஆகியவற்றின்படியான திட்டங்கள் இவ்வலுவலகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

மேலும் தமிழக அரசினால் அறிவிக்கப்பட்ட வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் ஆகியன இவ்வலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மற்றும் அம்மா திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டம் இவ்வலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசானது தமிழ்நாடு வணிக வசதியாக்கல் அவசர சட்டத்தினை அறிமுகப்படுத்தி, 12.01.2018 முதல் தமிழ்நாடு வணிக வசதியாக்கல் சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டமானது ஒருமுனையில் விண்ணப்பங்களைப் பெற்று தீா்வு காண்பதற்கு வழிவகை செய்கிறது. இதன் தொடா்பாக www.easybusiness.tn.gov.in என்ற வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாவட்ட தொழில் மையமானது ஆற்றல் தணிக்கை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மற்றும் ஆற்றல் தணிக்கையின் பரிந்துரைப்படி மாற்று இயந்திரங்கள் பொருத்தும் நிறுவனங்களுக்கும் மானிய உதவியினை எரிபொருள் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு திட்டம் மூலம் செயல்படுத்தி வருகிறது.

இ-கவர்னன்ஸ்

மாவட்ட தொழில் மையம், கடலுார் அலுவலகம் மூலமாக செயல்படுத்தப்படும் கடன்திட்டங்கள். உத்யோக் ஆதார் பதிவறிக்கை பெறுதல் மற்றும் உரிமங்கள், அனுமதிகள் பெறுதல் ஆகிய அனைத்தும் பின்வரும் வலைதள முகவரி மூலமாக செயல்படுத்தப்படுகிறது.

  • www.udyogaadhaarmemorandum.gov.in – இதன் மூலம் உற்பத்தி துவங்கிய நிறுவனங்கள் உத்யோக் ஆதார் பதிவறிக்கை பெறலாம்.
  • www.msmeonline.tn.gov.in/uyegp – இதன் மூலம் படித்த வேலை வாய்ப்பற்ற வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் உதவி பெறுபவா்கள் விண்ணப்பிக்கலாம்.
  • www.msmeonline.tn.gov.in/needs – இதன் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன் உதவி பெறுபவா்கள் விண்ணப்பிக்கலாம்.
  • www.kviconline.gov.in – இதன் மூலம் பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் உதவி பெறுபவா்கள் விண்ணப்பிக்கலாம்.
  • www.easybusiness.tn.gov.in – பல்வேறு துறையிலிருந்து நிறுவனம் நிறுவப்படுவதற்கு முன்னரும் மற்றும் நிறுவப்படுவதற்கு பின்னரும் பெறவேண்டிய உரிமங்கள் / அனுமதிகள் பெற இந்த வலைதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
  • https://gem.gov.in – இந்த வலைதளத்தில் தங்களுடைய உற்பத்தி பொருட்களை தொழில் முனைவோர்கள் சந்தைபடுத்துவதற்கு பதியலாம்.

வழிகாட்டு அலுவலர் / பதவி / தொலைபேசி எண்

பொதுமேலாளா் / இணை இயக்குநா் (தொழில் நுட்பம்) அவா்கள் மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தின் தலைமை அலுவலராக மாவட்ட அளவில் செயல்படுவார்.

தொழில் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநரின் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் தொழில் நுட்ப பணிகள் மற்றும் அனைத்து அலுவலகப் பணிகளையும் இவர் மேற்கொள்வார்.

மேலாளர் (கடன் வசதி) / துணைஇயக்குநர் (தொழில் நுட்பம்) அவா்கள் கடன் திட்டங்கள் தொடா்பான களப்பணிகளை மேற்கொள்வார்.

திட்ட மேலாளா் / உதவி இயக்குநா் (தொழில் நுட்பம்) அவா்கள் திட்ட அறிக்கைகள் தயாரித்தல், மானியம் தொடா்பான கோப்புகளை ஆய்வு செய்யும் பணிகளை மேற்கொள்வார்.

மேலாளா் (கிராமத் தொழில்கள் மற்றும் நிர்வாகம்) / உதவி இயக்குநா் (தொழில் நுட்பம் சாராதது) அவா்கள் குடிசைத் தொழில், கைவினைத் தொழில்களுக்கு சான்றிதழ் அளித்தல் மற்றும் அலுவலக நிர்வாகம் தொடா்பான பணிகளை மேற்கொள்வார்.

உதவி பொறியாளா் (தொழில்கள்) அவா்கள் அனைத்து திட்டங்கள் தொடா்பான களப்பணிகளை மேற்கொ்ளவார்.

புள்ளி விவர ஆய்வாளா் மற்றும் புலனராய்வாளா் அவா்கள் குறு சிறு நிறுவனங்கள் தொடா்பான புள்ளி விவரம் தொடா்பான பணிகளை மேற்கொள்ளும் களப்பணியாளராக செயல்படுவார்கள்.

பொது மேலாளா் மாவட்ட தொழில் மையம், கடலுார்
தொலைபேசி எண் 04142 – 290116
மின்னஞ்சல் முகவரி diccud[at]gmail.com

தொடா்பு கொள்ள வேண்டிய முகவரி
பொது மேலாளா்
மாவட்ட தொழில் மையம்,
சிட்கோ தொழிற்பேட்டை,
செம்மண்டலம்,
கடலுார் 607 001
தொலைபேசி எண் 04142 – 290116
மின்னஞ்சல் முகவரி diccud[at]gmail.com

மாவட்ட தொழில் மையம், கடலுார் – திட்டங்களின் முன்னேற்ற அறிக்கை

ஒற்றை சாளர தீர்வுக்குழு

தமிழக அரசானது 28.10.2017 அன்று தமிழ் நாடு வணிக வசதியாக்க அவசர சட்டம் மற்றும் விதிகளை அறிமுகபடுத்தி அதனை தமிழ் நாடு அரசு வணிக வசதியாக்க சட்டமாக 12.01.2018 அன்று அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு முனையிலிருந்து குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய அனைத்து அனுமதிகளையும் உரிமங்களையும் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரை தலைமையாக கொண்ட மாவட்ட அளவிலான ஒரு முனை தீர்வுக்குழு அமைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கடலுார் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். பதினொன்று துறைகளின் அனுமதிக்கு ஒற்றை சாளர முறையில், தேவையான அனைத்து ஆவணங்களுடன் www.easybusiness.tn.gov.in என்ற வலைதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இதன் மூலம் நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய அனுமதியினை உரிய கால அவகாசத்தில் பெறுவதற்கும் உரிய காலத்திற்குள் அனுமதி பெறப்படாத சில இனங்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவரே ஒப்புதல் அளிக்கவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் அனுமதி பெறாத நிறுவனங்கள் மற்றும் உரிய காலத்திற்குள் அனுமதி வழங்காத துறை அதிகாரிகளுக்கும் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (யு.ஒய்.இ.ஜி.பி) (மாநில அரசின் திட்டம்)

கல்வி தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி, வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை- பொது பிரிவினருக்கு 18 வயது வரம்பு, 45 வயது வரை – சிறப்பு பிரிவினருக்கு, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,50,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உற்பத்தி தொழில்களுக்கு ரூ.10.00 இலட்சம் வரை மற்றும் சேவைத் தொழில்களுக்கு 3.00 இலட்சம் வரை, வியாபார தொழில்களுக்கு 1.00 இலட்சம் வரை வங்கி கடனுக்கு வழிவகை செய்யப்படுகிறது.

மானியம் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.1,25,000/- கடந்த 7 ஆண்டுகளில் (2011-2018) 1,142 பயனாளிகளுக்கு ரூ. 614.95 இலட்சம் மானிய தொகையுடன் கூடிய கடன் வழங்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (பி.எம்.இ.ஜி.பி) (மத்திய அரசு திட்டம்)

உற்பத்தி ரக தொழில்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலும், சேவைத் தொழில்களுக்கு ரூ.10.00 லட்சம் வரையிலும் வங்கிகடனுக்கு வழிவகை செய்யப்பபடுகிறது.

மானியம்: பொதுப்பிரிவினா் – 15 சதவீதம் நகரப் பகுதியில் துவங்கப்படும் தொழில்களுக்கு மற்றும் 25 சதவீதம் ஊரகப் பகுதியில் துவங்கப்படும் தொழில்களுக்கு.

மானியம்: சிறப்பு பிரிவினர் – 25 சதவீதம் நகரப் பகுதியில் துவங்கப்படும் தொழில்களுக்கு, 35 சதவீதம் ஊரகப் பகுதியில் துவங்கப்படும் தொழில்களுக்கு.

உற்பத்தி தொழில்களுக்கு 10.00 இலட்சத்திற்கு மேலும், சேவைத் தொழில்களுக்கு ரூ.5.00 இலட்சத்திற்கு மேலும் கடன் பெறவேண்டுமெனில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கடந்த 7 ஆண்டுகளில் (2011-2018) 170 பயனாளிகளுக்கு ரூ. 570.65 இலட்சம் மானிய தொகையுடன் கூடிய கடன் வழங்கப்பட்டுள்ளது.

உற்பத்தி துவங்கிய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஆதார உதவிகள்

இந்திய அரசானது அறிவிக்கை நாள் 18.09.2015 ன் மூலம் நடை முறையிலிருந்த தொழில் முனைவோர்பதிவறிக்கை-I மற்றும் தொழில் முனைவோர்பதிவறிக்கை-II ஆகியவற்றினை பெறுவதினை நீக்கம் செய்து உத்யோக் ஆதார் பதிவறிக்கை என்ற சான்றினை www.udyogaadhaar.gov.in என்ற வலைதளம் மூலம் பெற வழி வகை செய்துள்ளது. இதன் மூலம் உற்பத்தி துவங்கிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்யோக் ஆதார் பதிவறிக்கை எண் பெற்று கொள்ளலாம்.

முதலீட்டு மானியம்

தமிழ்நாட்டில் அமைந்துள்ள குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அவற்றின் இயந்திர தளவாடங்களின் மதிப்பிற்கு 25 சதவீத முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் அமைந்துள்ள பின்தங்கிய வட்டாரங்களில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கும் வேளாண்சார் தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கும் அவற்றின் இயந்திர தளவாடங்களின் மதிப்பிற்கு 25 சதவீத முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது. மேலும் சிறப்பு வகை உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு (Thrust Sector) அவற்றின் இயந்திர தளவாடங்களின் மதிப்பிற்கு 25 சதவீத சிறப்பு முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது.
கடந்த 7 ஆண்டுகளில் ( 2011 – 2018 ) 153 குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ரூ.269.31 இலட்சம் மானியத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

குறைந்த அழுத்த மின்மானியம்

தமிழ்நாட்டில் அமைந்துள்ள குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு உற்பத்தி துவங்கிய முதல் மூன்று ஆண்டுகளுக்கு அவற்றின் மின்கட்டணத்தில் 20 சதவீத மின்மானியமாக வழங்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் அமைந்துள்ள பின்தங்கிய வட்டாரங்களில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கும் வேளாண்சார் தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கும் அவற்றின் உற்பத்தி துவங்கிய முதல் மூன்று ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தில் 20 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.

கடந்த 7 ஆண்டுகளில் ( 2011 – 2018 ) 161 குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ரூ.121.52 இலட்சம் மானியத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது

மின்னாக்கி மானியம்

தமிழ்நாட்டில் அமைந்துள்ள குறு மற்றும் சிறு உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் நிறுவியுள்ள 320 கேவிஏ வரை திறனுள்ளள மின்னாக்கி மதிப்பில் 25 சதவீதம் மின்னாக்கி மானியமாக அதிகபட்சம் ரூ.5.00 இலட்சம் வரை வழங்கப்படுகிறது.
கடந்த 7 ஆண்டுகளில் (2011 – 2018) 88 குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ரூ.83.36 இலட்சம் மானியத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

மதிப்பு கூட்டுவரி மானியம்

தமிழ்நாட்டில் அமைந்துள்ள குறு உற்பத்தி நிறுவனங்களின் இயந்திர தளவாடங்களின் மதிப்பிற்கு இணையாக தாங்கள் செலுத்தும் மதிப்பு கூட்டுவரியினை உற்பத்தி துவங்கிய முதல் ஆறு வருடங்களில் 100 சதவீதம் திரும்ப பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில் (2011 – 2018) 35 குறு நிறுவனங்களுக்கு ரூ.57.61 இலட்சம் மானியத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

அம்மா திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டம்

இத்திட்டத்தின் மூலம் படித்த இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு திட்டத்துடன் கூடிய பயிற்சியினை அதிகபட்சம் 6 மாதங்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் அளித்து அவா்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தரப்படுகிறது. பயிற்சி அளிக்கும் நிறுவனம் குறைந்த பட்சம் ரூ.5000 ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு வழங்க வேண்டும். அதில் ரூ.2000 ஐ தமிழக அரசின் மூலம் மீள அளிக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில் (2016 – 2018) 1064 – நபா்கள் இத்திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பு பெற்றுள்ளனா்.

ஆதாரம் : https://cuddalore.nic.in/

கடைசியாக மாற்றப்பட்டது : 6/17/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate