অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மீன்வளத்துறை

மீன்வளத்துறை

கடல் மீன்வள திட்டப்பணிகள்

கடலூர் மாவட்ட கடற்கரை நீளம் 57.5 கிலோ மீட்டர். இதில் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. கடல் மீனவ மக்கள் தொகை 47,000. இதில் 23,840 மீனவர்கள் நேரடியாக மீன்பிடித் தொழிலும், 15,000 மீனவ மகளிர் மீன்பிடிப்பு சார்ந்த தொழிலையும் செய்து வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் தற்சமயம் 235 மீன்பிடி விசைப்படகுகளும், 2345 கண்ணாடி நாரிழைப் படகுகளும் (உட்பொருத்தும்/வெளிப்பொருத்தும் இயந்திரம்) மீன்பிடித்தொழில்செய்து வருகிறது. கடலூர் விசைப்படகுகள் முடசல்ஓடை, சாமியார்பேட்டை, எம்.ஜி.ஆர்.திட்டு அன்னங்கோயில் மற்றும் பேட்டோடை ஆகிய மீன்பிடி தளங்களிலிருந்து மீன்பிடி தொழில் செய்துவருகிறது. இவற்றின் மூலம் ஆண்டுக்கு 25,000 டன் மீன்கள் பிடிக்கப்பட்டு உள்ளூரிலும், வெளி மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. அண்டை மாநிலம் கேரளாவுக்கு மீன்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் 36 கடல் மீனவர் கூட்டுறவு சங்கங்களும், 41 கடல் மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களும், 22 உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களும், 6 உள்நாட்டு மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களும் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் மீனவர்களுக்கான பல்வேறு அரசு நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தேசிய கடல் மீனவர்/மீனவ மகளிர் சேமிப்பு நிவாரணத் திட்டம்

கடல் மீனவர் சேமிக்கும் பழகத்தை ஏற்படுத்தவும், மீன்பிடிப்பு குறைவாகவுள்ள புயல், மழை காலங்களில் வருவாய் ஏற்படுத்தவும் இத்திட்டம் மத்திய மாநில அரசுகளில் 50:50 பங்களிப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினராக உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உட்பட்ட மீனவர்கள், ஜனவரி முதல் செப்டம்பர் வரை உள்ள ஒன்பது மாதங்களில் மொத்தம் ரூ.900/- சந்தாதொகை செலுத்த வேண்டும். மீனவர்கள் செலுத்தும் சந்தாத்தொகைக்கு இணையாக மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.900/- வீதம் ரூ.1800/- ஐ வழங்கி மொத்தம் ரூ.2700 ஒவ்வொரு மீனவ பயனாளிக்கும் வழங்கப்படும். இத்திட்டத்தினை போன்றே மீனவ மகளிருக்கு சேமிப்பு மற்றும் நிவாரணத்திட்டம் மாநில அரசு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீனவ மகளிர் செலுத்தும் சந்தாத் தொகைக்கு மாநில அரசு மட்டும் ரூ.1800/- வழங்கி மொத்தம் ரூ.2700/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுகிறது.

2012-13 –ம் ஆண்டு முதல் 2017-18ஆம் ஆண்டு வரை பயனடைந்த பயனாளிகள் மற்றும் தொகை விபரம்.

தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணம் (ஆண்கள்)
ஆண்டுபயனாளிகள்செலவினத் தொகை (ரூ.இலட்சத்தில்)
2012-13 13846 249.22
2013-14 14946 269.03
2014-15 14980 404.46
2015-16 15065 406. 0
2016-17 15329 413.88
2017-18 15333 689.98

தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணம் (மகளிர்)

ஆண்டுபயனாளிகள்செலவினத் தொகை (ரூ.இலட்சத்தில்)
2012-13 12054 216.97
2013-14 14181 255.26
2014-15 13970 377.19
2015-16 13675 369.22
2016-17 14358 387.66
2017-18 14734 663.03

பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு வெளிப்பொருத்தும் இயந்திரம் வழங்கிட மானியத் திட்டம்

இத்திட்டம் மத்திய மாநில அரசுகளின் சமவிகித பங்களிப்புத் திட்டமாகும். பாரம்பரிய மீன்பிடி கலன்கள் கடலில் அதிக தூரம் சென்று மீன்பிடித்து விரைவில் கரை திரும்பவதற்கேற்ற வகையில் வெளிப்பொருத்தும் இயந்திரத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் (அதிக பட்சமாக ரூ.30,000/- வரை) மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் மர கட்டு மரங்களும், பைபர் படகுகளும் பயனடைந்து வருகின்றன.

2012-13 –ம் ஆண்டு முதல் 2017-18ஆம் ஆண்டு வரை பயனடைந்த பயனாளிகள் மற்றும் தொகை விபரம்.

பாரம்பரிய மீன்பிடி கலன்களை இயந்திரமாக்கும் திட்டத்தின் கீழ் உட்பொருத்தும் / வெளிப்பொருத்தும் இயந்திரம் வாங்க மானியம் வழங்குதல்.
ஆண்டுபயனாளிகள்செலவினத் தொகை (ரூ.இலட்சத்தில்)
2012-13 111 30.89
2013-14 ஒதுக்கீடு செய்யப்பட வில்லை ஒதுக்கீடு செய்யப்பட வில்லை
2014-15 38 11.40
2015-16 ஒதுக்கீடு செய்யப்பட வில்லை ஒதுக்கீடு செய்யப்பட வில்லை
2016-17 ஒதுக்கீடு செய்யப்பட வில்லை ஒதுக்கீடு செய்யப்பட வில்லை
2017-18 122 ஒதுக்கீடு செய்யப்பட வில்லை

மீன்பிடி படகுகளுக்கு எரியெண்ணெய்க்கான விற்பனை வரி விலக்களிக்கும் திட்டம்

மீன்பிடி படகுகளுக்கு விற்பனை வரி விலக்களிக்கப்பட்டு டீசல் வழங்கப்பட்டு வருகின்றது. கடலூர் மாவட்டத்தில் 204 விசைப்படகுகளும், 1225 பைபர் படகுகளும் பயன் பெறுகின்றன. விசைப்படகுகளுக்கும் மாதம் ஒன்றிற்கு தலா 1800 லிட்டர் வீதம் மீன்பிடி தடைக்காலம் நீங்கலாக வருடத்தில் 10 மாதங்களுக்கு டீசல் எரியெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய படகுகளுக்கு அதே போன்று (வெளிப்பொருத்தும் இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள்) மாதம் ஒன்றிற்கு தலா 350 லிட்டர் வீதம் வருடத்தில் 12 மாதங்களுக்கும் டீசல் வழங்கப்பட்டு வருகின்றது.
கடலோர மீனவ குடும்பங்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணம் : மீன் இனப்பெருக்க காலத்தில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ள 45 நாட்களுக்கு மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவ குடும்பங்களுக்கு குடும்ப அட்டையின் அடிப்படையில் ரூ.2000/- வீதம் நிவாரணம் தமிழக அரசால் மீன்துறையின் மூலம் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வரப்படுகிறது.

கடலூர் வட்டத்தில் கடந்த 2012-13 முதல் பயனடைந்தவர்கள் விபரம்

மீன்பிடி தடைக்கால நிவாரணம்

ஆண்டுபயனாளிகள்செலவினத் தொகை (ரூ.இலட்சத்தில்)
2012-13 12042 240.84
2013-14 11017 220.34
2014-15 9076 181.52
2015-16 11169 223.38
2016-17 10874 217.48
2017-18 11139 555.95
2018-19 11073 553.65

கடலோர மீனவ குடும்பங்களுக்கான மீன்பிடி குறைந்த கால நிவாரணம்

மீன்பிடிப்பு குறைந்த பருவ காலமான அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கடல் மீனவர்கள் பயன்பெறுவதற்கான சிறப்பு நிவாரணம் உதவித்தொகையாக தமிழக அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.4,000/- வீதம் மீன்துறையின் மூலம் வழங்கி வருகிறது.

மீன்பிடி குறைவு காலத்திற்கான சிறப்பு நிவாரணம்
ஆண்டுபயனாளிகள்செலவினத் தொகை (ரூ.இலட்சத்தில்)
2012-13 11902 476.08
2013-14 11377 455.08
2014-15 10625 425.00
2015-16 10733 429.32
2016-17 10560 528.00
2017-18 11683 584.15

மீன்பிடி கலன்களுக்கான இணையதள நேரடி பதிவு செய்தல்

தேசிய பாதுகாப்பு நலன் கருதி இந்திய அரசாங்கம், அனைத்து கடலோர மீனவர்களின் மீன்பிடிகலன்களை ஒரே மாதிரியான இணையதள நேரடி பதிவுமுறையினை மேற்கொண்டு மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி செயல்படுத்தும் திட்டமாகும். கடலூர் மாவட்டத்தில் இதுவரை இத்திட்டத்தின் கீழ் 295 மீன்பிடி விசைப்படகுகளுக்கும், 2,133 வெளிபொருத்தும் பைபர் படகுகளுக்கும் இதுவரை இணையதள பதிவு மேற்கொள்ளப்பட்டு சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது.

மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்கள்

எம்.ஜி.ஆர். திட்டு மீன்பிடி இறங்குதளம் தேசிய மீன்வளர்ச்சி மேம்பாட்டு வாரிய உதவியுடன் 2.93 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு மீனவர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. மீனவர்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட கடலூர் மாவட்டத்தில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதி திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கடலூர் மாவட்டத்திலுள்ள பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் மீன்பிடி இறங்குதளம் ரூ.18.91 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு மீனவ மக்களின் பயன்பாட்டில் உள்ளது. இவை தவிர கடலூர் மீன்பிடி துறைமுகம் ரூ.10.35 கோடி செலவிலும், முடசல்ஓடை மீன்பிடி இறங்குதளம் ரூ.7.78 கோடி செலவிலும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தூண்டில் மூலம் மீன்பிடிப்பு மற்றும் செவுள் வலை பயன்படுத்தி புதிய மீன்பிடி விசைப்படகு கட்டும் மீனவர்களுக்கு 50 விழுக்காடு மானியம் வழங்கும் திட்டம்

அண்மைக்கடல் பகுதியில் அதிகரித்து வரும் மீன்பிடி அழுத்தத்தை குறைத்திடவும் ஆழ்கடல் பகுதியில் செறிந்துள்ள மீன்வள ஆதாரங்களை நீண்டகாலத்திற்கு பயன்படுத்திடவும், தூண்டில் முலம் மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப்படகினை கட்ட ஆகும் செலவில் மீனவர்களுக்கு 50 விழுக்காடு மானியம் (அதிகபட்சமாக ரூ.30.0 இலட்சம்) வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 18 மீனவர்கள் அடங்கிய 5 குழுக்களுக்கு புதிய மீன்பிடி படகுகள் கட்டுவதற்கு பணி ஆணைகள் வழங்கி இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மீனவர்களுக்கு வலை மானியம் வழங்கும் திட்டம்

கடலூர் மாவட்டத்தில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களில் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் வலை வாங்குவதற்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது

மீனவர் நலவாரியம்

தமிழக அரசு 2007-2008-ம் ஆண்டில் மீனவர்களின் சமூக பொருளாதார நலன் காக்க தமிழ்நாடு மீனவர் நலவாரியம் அமைத்துள்ளது. மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் மீன்பிடி சார்ந்த தொழில்கள் குறிப்பாக மீன் மற்றும் கருவாடு வியாபாரம் போன்ற தொழிலில் ஈடுபட்டுள்ளோர் இத்திட்டத்தில் உறுப்பினர்களாக சேர தகுதி உடையவராவார்கள்.

இத்திட்டத்தில் கீழ்க்காணும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திட்டம்தொகை
விபத்தினால் மரணம் ரூ.1.00 லட்சம்
இரு கைகளை இழந்தவர்களுக்கு ரூ.1.00 லட்சம்
இரு கால்களை இழந்தவர்களுக்கு ரூ.1.00 லட்சம்
ஒரு கை மற்றும் ஒரு கால் இழந்தவர்களுக்கு ரூ.1.00 லட்சம்
முழுமையாக இரு கண்பார்வை இழந்தவர்களுக்கு ரூ.1.00 லட்சம்

மீன்பிடிப்பின் போது கடலில் காணாமல் போனவர்களின் வாரிசு தார்களுக்கு

ரூ.1.00 லட்சம்
ஒரு கை அல்லது ஒரு கால் இழந்தவர்களுக்கு ரூ.50,000/-
உறுப்பினர்களின் மகன் மற்றும் மகள் கல்வி உதவித்தொகை ரூ.6750 வரை
திருமண உதவித்தொகை ஆண்கள் ரூ.3,000/-
திருமண உதவித்தொகை பெண்கள் ரூ.5,000/-
மகப்பேறு உதவித்தொகை ரூ.6,000/-
கருச்சிதைவு உதவித்தொகை ரூ.3,000/-
கருக்கலைப்பு உதவித்தொகை ரூ.3,000/-

அலுவலக முகவரி

மீன்துறை உதவி இயக்குநர்
மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம்
மீன்பிடி துறைமுக வளாகம்
கடலூர் 607301

உதவிக்கு அழைக்கும் எண்

மீன்துறை உதவிஇயக்குநர்

அலுவலக தொலைபேசி எண் 04142-238170

மீன்துறை துணை இயக்குநர் (மண்டலம்) கடலூர் 9384824217

மீன்துறை உதவி இயக்குநர், கடலூர் 9384824251

மீன்துறை ஆய்வாளர், பரங்கிப்பேட்டை 9384824358

மீன்துறை சார் ஆய்வாளர் கடலூர் 9384824506

மீன்துறை சார் ஆய்வாளர், சிதம்பரம் 9384824508

ஆதாரம் : கடலூா் மாவட்டம்

கடைசியாக மாற்றப்பட்டது : 6/18/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate