மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கிராமபுற பகுதிகளில் வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்தவும் மேற்பார்வையிடவும் மாவட்ட அளவில் முக்கிய அங்கமாக செயல்படுகிறது. இம்முகமையானது ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டத்தை நடைமுறைபடுத்த உருவாக்கப்பட்டது. பின்னர் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் இம்முகமை மூலம் செயல்படுத்த வரையறுக்கப்பட்டது. ஏப்ரல் 1999 ஆம் ஆண்டு முதல் நிர்வாக செலவினங்களை நிர்வகிக்க தனி நிறுவனமாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அறிமுகப்படுத்தப்பட்டது. இது கிராமபுற மேம்பாடு முகமையினை வலுப்படுத்தவும், வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகத்தையும், அரசையும் இணைக்கும் பாலமாக விளங்குகிறது.
கிராமபுற வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன பெரிய புவியியல் பகுதிகள் நிர்வாக தேவைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்துவதில் கீழ்நிலை அதிகாரிகள் மற்றும் சமூகம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது கிராமபுற பகுதிகளில் வேலைவாய்புகளை உருவாக்க மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. மாநில அளவில் முதன்மைச் செயலர் ஊரக வளர்ச்சி ஆணையர் ஆகிய அலுவலர்கள் இத்திட்டங்கள் செயல்படுத்துவதில் முழுப் பொறுப்பாவார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அளவில் உள்ள ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், வங்கியாளர்கள், அரசுசாரா தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூகத்தில் நலிவடைந்த மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஆலோசனைகள் வழங்கும் குழுவாக செயல்படுவார்கள். கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்துகின்றன. இத்திட்டங்களின் பயன்களை பொருத்து திட்டங்கள் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகிறது. ஊரக பகுதிகளில் தேவைகள் கண்டறிந்து திட்டங்கள் வகுத்து செயல்படுத்தவும், தொழில்நுட்பம் நிர்வாகம் மற்றும் நிதி தொடர்பான செயல்பாடுகளை செயல்படுத்துவதாகும்.
முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டமானது தமிழக அரசால் 2011-12 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஊரக பகுதிகளில் வறுமையில் வாழுகின்ற அனைத்து வீடற்ற மக்களுக்கு வீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழான அனைத்து வீடுகளுக்கும் சூரிய மின்சக்தி உடன் கூடிய விளக்குகள் அமைத்து தரப்படுகிறது. இத்திட்டமானது அனைவருக்கும் வீடு வழங்கும் ஒரு முன்னோடி திட்டமாகும்.
நன்மைகள்
பயனாளி:
கிராமப்புற பகுதி மக்கள்
பயன்கள்:
சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு
குக்கிராமங்களில் தற்போதுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் தேவைப்படும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை குறித்து விரிவான கணக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் கண்டறியப்படும் அடிப்படைத் தேவைகளை தாய் திட்ட நிதியிலிருந்தும், இதர திட்டங்கள் மற்றும் இதர துறை திட்டங்கள் மூலமும் நிறைவு செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்
மேற்கொள்ளப்படும் பணிகள்
குக்கிராமம் குறித்த அடிப்படை வசதிகளின் விவரங்களான குடிநீர் விநியோகம் (மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், சிறுமின்விசை பம்புகள், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள், கைப்பம்புகள்), தெருவிளக்குகள், தெருக்கள் மற்றும் சந்துகள், இடுகாடு / சுடுகாடு> அரசு / உள்ளாட்சி கட்டடங்கள்> அரசு / உள்ளாட்சி பள்ளி கட்டடங்கள்> சிறுகுளங்கள் மற்றும் ஊரணிகள்> விளையாட்டு திடல்கள்> பேருந்து நிலையங்கள்> சந்தைகள்> கிராம ஊராட்சி சாலைகள்> ஊராட்சி ஒன்றிய சாலைகள் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளின் இன்றைய தன்மையை அறிந்து அவற்றை மேம்படுத்துவது அல்லது புதிதாக உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
கூடுதல் தேவைப்பணிகளாக அங்கன்வாடி மையம், பொது விநியோக கடை, சுய உதவிக்குழு கட்டிடம், கதிரடிக்கும் களம், விளையாட்டு மைதானம் மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர பணிகள்.
கிராம ஊராட்சிகளில் அமைந்துள்ள குக்கிராமங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடும் மாநில அரசைச் சார்ந்தது.
தாய் திட்டம் II – 2016 – 17
குக்கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு 2011-12ம் ஆண்டு முதல் தாய் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு தாய்திட்டம் – II 2016-17-ம் ஆண்டின்கீழ் பின்வரும் பணிகள் செயல்படுத்தி வருகிறது.
சிறுபாசன ஏரிகள் மேம்படுத்தல்
தாய் திட்டத்தின்கீழ் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டிலுள்ள சிறுபாசன ஏரிகளில் 2016-17-ம் ஆண்டின்கீழ் 62 ஏரிகள் மேம்படுத்தும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் இயந்திரங்களின் மூலம் ஏரிகளில் உள்ள முட்புதர்களை அகற்றி தூரி வாரப்பட்டு மதகு மற்றும் கலங்கள் புதிதாக கட்டப்பட்டு கரைகள் பலத்தப்படும். இதனால் சிறுபாசன ஏரிகள் முழு கொள்ளளவினை எட்ட முடியும். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளை பூர்த்தி செய்ய வழி வகுக்கும்.
அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல்
தாய் திட்டத்தின்கீழ், குக்கிராமங்களில் குடிநீர் பணிகள், தெரு விளக்குகள், அணுகுசாலைகள், இடுகாடு அமைத்தல், இடுகாடு/சுடுகாடு செல்ல சிமெண்ட் சாலைகள் அமைத்தல் ஆகிய அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. மேலும் சாலைகளின் தரத்தினை மேம்படுத்தவும், மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றும் பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பயனாளி:
கிராமப்புற மக்கள்.
பயன்கள்:
கிராமப்புற பகுதிக்கு அடிப்படை வசதிகள்
ஊரகப் பகுதிகளிலுள்ள மக்களின் நலனுக்காக விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், விளையாட்டு மன்றங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் ஆகியவற்றை அமைத்தல் கிராம ஊராட்சியின் விருப்பக் கடமைகளில் ஒன்றாகும்.
அதனடிப்படையில், 2016-17 ஆம் நிதியாண்டில் நகர பகுதிகளுக்கு இணையாக ஊரக பகுதிகளில் கேளிக்கை உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பூங்கா ஒன்றுக்கு ரூ.20 இலட்சம் வீதம் 500 அம்மா பூங்காக்கள் அமைக்கும் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன.
அம்மா பூங்காக்கள் தெரிவு செய்தல் மற்றும் அதன் திட்ட கூறுகள்
அம்மா பூங்காக்கள், ஆண்டு வருமானம் ரூ.20 இலட்சத்திற்கு மேலாகவும் மற்றும் 14வது நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.20 இலட்சத்திற்கு மேலாக வருமானம் பெறக்கூடியதாகவும் உள்ள கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும். அம்மா பூங்கா கிராம ஊராட்சிகளில் குடியிருப்புகளுக்கு நடுவில் சுமார் 15,000 முதல் 20,000 சதுர அடி வரை கிராம ஊராட்சிக்கு சொந்தமான நிலம் அல்லது ஒப்படைக்கப்பட்ட திறந்த வெளி பாதுகாக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்படும்.
அம்மா பூங்கா அமைக்கப்படும் புற நகரம் / நகரத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் விளையாட்டு சாதனங்களுடன் கூடிய அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
அம்மா பூங்கா கீழ் கண்ட வசதிகளுடன் அமைக்கப்படும்
பயனாளி:
கிராமப்புற மக்கள்.
பயன்கள்:
கிராமப்புற மக்களின் பொழுதுபோக்கு
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 111 ன்படி ஊரகப் பகுதியிலுள்ள மக்களின் நலனுக்காக உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், விளையாட்டு மன்றங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் போன்ற தேவையான வசதிகளை வழங்குதல் கிராம ஊராட்சியின் விருப்பக் கடமைகளில் ஒன்றாகும். அதனடிப்படையில், 2016-17 ஆம் நிதியாண்டில் ஊரக இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தையும் மன வளத்தையும் மேம்படுத்த அம்மா உடற்பயிற்சி கூடம் ஒன்றுக்கு ரூ.10 இலட்சம் வீதம் ரூ.50 கோடி மதிப்பீட்டில், 1,161 சதுர அடி பரப்பளவில் 500 அம்மா உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கும் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன.
அம்மா உடற்பயிற்சி கூடத்தின் நன்மைகள்
பயனாளி:
கிராமப்புற பகுதி மக்கள்.
பயன்கள்:
கிராமப்புற பகுதி மக்களின் ஆரோக்கியம்
அனைத்து கிராம பகுதிகளில் உள்ள அனைத்து பேருந்து செல்லும் சாலைகள் மற்றும் கிராம மக்கள் பயன்படுத்தும் சாலைகள் தார் சாலைகளாக முழுவதுமாக செப்பனிட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல். இதன் மூலம் கிராம பகுதிகளிலிருந்து நகர பகுதிகளுக்கு தங்கு தடையின்றி போக்குவரத்து வசதி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் பழுதடைந்த ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் ஊராட்சி சாலைகளில் மிகவும் பழுதடைந்த சாலைகளை அன்றாட பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்காக தார்ச் சாலைகளாக மேம்பாடு செய்திட தமிழக அரசால் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் 2006-07ஆம் நிதியாண்டிலிருந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு ஆண்டு ஒன்றிற்கு தேவைப்படும் மொத்த நிதியில் 20% விழுக்காடு மாநில அரசாலும் மீதமுள்ள 80% நிதி ஒதுக்கீட்டினை நபார்டு வங்கியின் மூலம் கடன்தொகை மூலம் நிதி ஒதுக்கப்பட்டு தார்ச்சாலைப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இத்திட்டம் 2006-07 நிதியாண்டு முதல் ஐந்து கட்டங்களாக 2012-13ல் நபார்டு ஆர்.ஐ.டி.எப்.-XVII வரை உரிய நிதி ஒதுக்கீடுகள் மற்றும் நிர்வாக அனுமதி ஆணையர் ஊரக வளர்ச்சி முகமை மூலம் தார்ச் சாலைப் பணிகள் நபார்டு திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பணிகள் தேர்வு
ஒவ்வொரு நிதியாண்டும் மாவட்டத்திற்கு இத்திட்டத்திற்கென அரசால் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்ப பணிகள் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் கீழ்க்கண்ட தேர்வு குழு உறுப்பினர்கள் முன்னிலையில் கூட்டம் நடத்தி கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பேருந்து மற்றும் சிற்றுந்துகள் செல்லும் தார்ச் சாலைகளில் மிகவும் பழுதடைந்த சாலைகள் மற்றும் பொதுமக்களின் அன்றாடம் பயன்படுத்தும் சாலைகளின் தன்மை குறித்தும் பணிகள் தேர்வு செய்யப்படுகிறது.
பணிகள் தேர்வு செய்யும் முறை
சட்ட மன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் தனது தொகுதிக்குத் தேவைப்படும் முக்கியப் பணிகளை செயல்படுத்திடவும் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
சிறப்பு அம்சங்கள்
இத்திட்டம், மாநில அரசின் முழு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும். இதன்படி ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தனது தொகுதிகளில் தேவைப்படும் பணியினைக் கண்டறிந்து அப்பணியினை செயல்படுத்திட பரிந்துரைப்பார் ஊரக மற்றும் நகர்ப் புறங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு
சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டு ஒன்றிற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் 2011-12 ஆம் ஆண்டு முதல் 2016-17 ஆம் ஆண்டு வரை ரூ.200.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது 2017-18ஆம் ஆண்டு முதல் ரூ.250.00 இலட்சமாக உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட மற்றும் வரையறுக்கப்படாத நிதி
மொத்த ஒதுக்கீடான ரூ.250.00 இலட்சத்தில் ரூ.150.000 இலட்சம் வரையறுக்கப்பட்ட நிதியாகவும், அத்தொகையில் அரசால் குறிப்பிடப்பட்ட முன்னுரிமை பணிகளை மட்டும் செய்யப்படவேண்டும். மீதமுள்ள ரூ.100.000 இலட்சம் வரையறுக்கப்படாத நிதியாகவும் அத்தொகையில் சட்டமன்ற உறுப்பினர் தனது விருப்பப்படி சட்டமன்ற உறுப்பினர் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை தேர்வு செய்யலாம்.
மேற்கொள்ளப்படும் பணிகள் (ஊரகப் பகுதிகளில்)
வரையறுக்கப்பட்ட நிதியான ரூ.150.000 இலட்சத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் அவர் தம் விருப்பத்தின் அடிப்படையில் கீழ்க்கண்டவற்றுள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பணிகளை தேர்வு செய்யலாம்.
சூரிய சக்தியுடன் கூடிய தெரு விளக்குகள் நிறுவுதல், சரளை மற்றும் கப்பிச்சாலைகளை தார்ச்சாலையாக மேம்படுத்துதல், மிகவும் பழுதடைந்துள்ள தார்ச்சாலைகளைப் புதுப்பித்தல் (தேவையின் அடிப்படையில் தார்ச் சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்பி தார்ச்சாலைப் பணி மட்டும் மேற்கொள்ளல்), சிமெண்ட் கான்கிரிட் சாலைகள் அமைத்தல்.
அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கால்நடை மருத்துவமனைகள் ஆகியவைகளுக்கு கட்டடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டிக் கொடுத்தல் மற்றும் அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், ஆதி திராவிடர் நலப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு தங்கும் விடுதிகள் ஆகியவைகளுக்கு கட்டடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல்.
மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு நடத்தும் சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அனாதை விடுதிகள் ஆகியவைகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்தல், பாலங்கள் கட்டுதல், கிராம ஊராட்சிகளில் இடுகாடு / சுடுகாடு வசதி இல்லாத பகுதிகளில் கூடுதலாக இடுகாடு, சுடுகாடுகள் மற்றும் சுற்றுச் சுவர் அமைத்தல், இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்ட விதிமுறைகளின் அடிப்படையில் புதிய வீடுகள் கட்டுதல்.
மேற்கொள்ளப்படும் பணிகள் (நகர்ப்புறப் பகுதிகளில்)
சூரிய சக்தியுடன் கூடிய தெரு விளக்குகள் நிறுவுதல், சரளை மற்றும் கப்பிச்சாலைகளை தார்ச்சாலையாக மேம்படுத்துதல், மிகவும் பழுதடைந்துள்ள தார்ச்சாலைகளைப் புதுப்பித்தல் (தேவையின் அடிப்படையில் தார்ச் சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்பி தார்ச்சாலைப் பணி மட்டும் மேற்கொள்ளல்), சிமெண்ட் கான்கிரிட் சாலைகள் அமைத்தல்.
அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கால்நடை மருத்துவமனைகள் ஆகியவைகளுக்கு கட்டடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டிக் கொடுத்தல் மற்றும் அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், ஆதி திராவிடர் நலப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு தங்கும் விடுதிகள் ஆகியவைகளுக்கு கட்டடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல்.
மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு நடத்தும் சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அனாதை விடுதிகள் ஆகியவைகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்தல்.
பாலங்கள் கட்டுதல், இடுகாடு/சுடுகாடு வசதிகளை ஏற்படுத்துதல், தேவையின் அடிப்படையில் மழைநீர் வடிகால் வசதிகளுடன் கூடிய சிமெண்ட் கான்கிரிட் நடைபாதைகள் அமைத்தல், புதிய பொது பூங்காக்கள் அமைத்தல், பொதுக் கழிப்பிடங்கள் கட்டுதல், ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் ஹைட்ராலிக் விசையால் இயக்கப்படுகின்ற தூர்வாரும் இயந்திரங்கள் வாங்குதல்.
தமிழ்நாடு அரசு பொதுமக்கள் பங்களிப்புடன் பணிகள் செயல்படுத்த தன்னிறைவுத் திட்டம் என்ற திட்டத்தினை 2011-12-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
2017-18-ம் ஆண்டு தன்னிறைவுத் திட்டத்தின்கீழ் 10.83 இலட்சம் பொதுமக்கள் பங்குத் தொகை பெறப்பட்டு அங்கன்வாடி மையங்கள் மற்றும் சுற்றுச் சுவர் கட்டும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் பகுதி வாரியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பின்வரும் நடைமுறைகளால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்திட கீழ்கண்ட வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில், நக்சலைட்டுகளின் பிரச்னைகளை தடுத்திடும் வகையில் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான சிறப்புத் திட்டமாக 2003-04ம் ஆண்டு சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு முறையே தலா ரூ.700 இலட்சம் மற்றும் ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பசுமை வீடுகள் கட்டுதல், ஆவின் பாலகம் கட்டுதல், வேளாண் கூலி விவசாயிகளுக்கு பூச்சி மருந்து தெளிப்பான் வாங்குதல், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குதல், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் குழாய் விரிவாக்கம் செய்தல், அங்கன்வாடி மையங்களை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் பல்வேறு பயிற்சித் திட்டங்களும் 2015-16ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டன. 2016-17ம் நிதியாண்டிற்கும் இத்திட்டத்திற்காக ரூ.50.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டு, கிராம ஊராட்சிகளில் தெரு விளக்குகளில் உள்ள குழல் விளக்குகள், சோடியம் ஆவி விளக்குகள் மற்றும் பாதரச ஆவி விளக்குகளுக்கு பதிலாக எல்.இ.டி.விளக்குகள் பொருத்தும் பணிகள் 2015-16-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இயற்றப்பட்டது. 01/04/2008 முதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நோக்கம்
புதிய அணுகுமுறைகள்
மொத்தம் உள்ள 333 ஊராட்சிகளிலும் தொழிலாளர்களின் ஊதியம்தர் வங்கி கணக்கில் மின்னணு நிதி மாற்றம் மூலமாக அரசு கணக்கிலிருந்து நேரடியாக தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு ஊதியத்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது 09.11.2016 முதல் 333 ஊராட்சிகளிலும் தொழிலாளர்களின் ஊதியம் வங்கி கணக்கில் பயனாளியின் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு தேசிய மின்னணு நிதி மாற்றம் மூலமாக ஊதியத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்துக்கள் அனைத்தும் கைபேசி செயலி (Mobile Application) மூலம் பணியின் விவரங்களை பூகோள குறியிடுதல் (Geo – Tagging) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
2017-18-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் முக்கிய திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளில் பணிபுhpயும் தொழிலாளர்களுக்கு மின்னனு வருகை பட்டியல் (e-MR) முறையில் பயனாளிகள் (தனியாகவோ அல்லது குழுவாகவோ) பிரதி செவ்வாய்கிழமை தோறும் வேலை கேட்பு விண்ணப்பத்தின் அடிப்படையில் வேலை ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இணையத்திலிருந்து பெறப்படும் மின்னனு வருகைப்பட்டியலின்படி வேலைக் கேட்பு அளித்த பயனாளிகளுக்கு பிரதி வியாழக்கிழமை முதல் புதன்கிழமை வரை பணி வழங்கப்படும். இதனால் பணிகள் எவ்வித பாரபட்சமும் இன்றி, எளிமையான முறையில் வெளிப்படையான முறையில் பணி கோருபவர்களுக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சீரிய முறையில் பணிகளை திறம்பட நிர்வகிக்கும் பொருட்டு “சீரிய நிர்வாகம்“ (Good Governance Activities) என்ற தலைப்பின் கீழ் இத்திட்டத்தில் தொடர்புடைய அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் பராமாpக்கப்படுகிறது.
ஒவ்வொரு பணித்தளத்திலும் பணி தொடர்பான தகவல் பலகை (Citizen Information Board) மற்றும் ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாக சுவர் விளம்பரம் (Wall Painting) ஊராட்சி மன்ற அலுவலகம் / கிராம சேவை கட்டிடத்தில் எழுதுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடைபெற்று வரும் பணிகளை பற்றி பொதுமக்கள் தொpந்து கொள்வதுடன் ஒளிவு மறைவற்ற நிர்வாகம் உறுதி செய்யப்படுகிறது. மேலும், விளம்பரங்களின் மூலமாக அனைத்து தரப்பு மக்களும் பயனடைய ஏதுவாக உள்ளது.
ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்தல் மற்றும் ஆதார் எண் அடிப்படையில் ஊதியத்தொகை வழங்குதல்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்துக்கள் அனைத்தும் கைபேசி செயலி மூலம் பணியின் விவரங்களை பூகோள குறியிடுதல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
2017-18-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் முக்கிய திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மின்னனு வருகை பட்டியல் முறையில் பயனாளிகள் (தனியாகவோ அல்லது குழுவாகவோ) பிரதி செவ்வாய்கிழமை தோறும் வேலை கேட்பு விண்ணப்பத்தின் அடிப்படையில் வேலை ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இணையத்திலிருந்து பெறப்படும் மின்னனு வருகைப்பட்டியலின்படி வேலைக் கேட்பு அளித்த பயனாளிகளுக்கு பிரதி வியாழக்கிழமை முதல் புதன்கிழமை வரை பணி வழங்கப்படும். இதனால் பணிகள் எவ்வித பாரபட்சமும் இன்றி எளிமையான முறையில் வெளிப்படையான முறையில் பணி கோருபவர்களுக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சீரிய முறையில் பணிகளை திறம்பட நிர்வகிக்கும் பொருட்டு “சீரிய நிர்வாகம்“ என்ற தலைப்பின் கீழ் இத்திட்டத்தில் தொடர்புடைய அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் பராமாpக்கப்படுகிறது.
ஒவ்வொரு பணித்தளத்திலும் பணி தொடர்பான தகவல் பலகை மற்றும் ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாக சுவர் விளம்பரம் ஊராட்சி மன்ற அலுவலகம் / கிராம சேவை கட்டிடத்தில் எழுதுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடைபெற்று வரும் பணிகளை பற்றி பொதுமக்கள் தொpந்து கொள்வதுடன் ஒளிவு மறைவற்ற நிர்வாகம் உறுதி செய்யப்படுகிறது. மேலும் விளம்பரங்களின் மூலமாக அனைத்து தரப்பு மக்களும் பயனடைய ஏதுவாக உள்ளது.
பணித்தளத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அசம்பாவிதத்தின் போது முதலுதவி மேற்கொள்ள முதலுதவி பெட்டிகள் மொத்தம் 672 எண்ணிக்கையில் வழங்கப்பட்டுள்ளது.
333 ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தூய்மை காவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திட்டத்தின் கீழ் பயன் பெற தேவையான தகுதிகள்
பயனாளிகளின் தகுதிகள்
23.12.1993 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் இத்திட்டம் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. முதலில் இத்திட்டமானது ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இத்திட்டத்தின் முதல் வழிகாட்டு நெறிமுறைகள் பிப்ரவாp 1994-ல் வெளியிடப்பட்டது. இதில் இத்திட்டத்தின் கருத்து செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியன தொpவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அக்டோபர் 1994-ல் புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது. இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைசியாக ஜுன் 2016-ல் திருத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கமானது பாராளுமன்ற உறுப்பினர் தங்களது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், ஆரம்பக்கல்வி, பொது சுகாதாரம், தூய்மைப் பணிகள், சாலைப்பணிகள் மற்றும் இதர பணிகளில் முக்கியமானவற்றை தேர்வு செய்து செயல்படுத்த பாpந்துரைக்க வேண்டும்.
இத்திட்ட ஆரம்ப காலமான 1993-94-இல் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ரூ.50.000 இலட்சமாக ஒதுக்கப்பட்ட தொகுதி நிதியானது 1994-95 இல் ரூ.1.000 கோடியாக உயர்த்தப்பட்டது. பின்னர் 1998-99-இல் ரூ.2.000 கோடியாக உயர்த்தப்பட்ட இத்தொகுதி நிதியானது 2011-12 நிதியாண்டு முதல் ரூ.5.000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ரூ.5.000 கோடியில் ரூ.10.000 இலட்சம் நிர்வாக செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
கட்டம் I
கிராமப்புற மக்களின் வறுமையை போக்கும் விதமாக “பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தினை” 25 டிசம்பர் 2000-ல் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது.
அனைத்து காலங்களிலும் ஆண்டு முழுவதும் உதவக்கூடிய வகையிலும் சிறுபாலங்கள் மற்றும் வடிகால் வசதியுடன் கூடிய சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மக்கள் தொகை 500 உள்ள அனைத்து குக்கிராமங்களிலும் சாலைகள் மூலம் இணைக்க இத்திட்டத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கட்டம் II
இத்திட்டம் மே-2013-ல் தொடங்கப்பட்டது. மக்களின் போக்குவரத்து மற்றும் சந்தை வசதிக்காக ஏற்கனவே உள்ள கிராம சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. மக்களின் பொருளாதாரம் மற்றும் ஊரக சந்தைகள் மேம்பாடு அடையும் வகையில் இத்திட்டத்தின் மூலம் சாலைகள் அமைக்கப்படுகின்றன.
தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) – முக்கிய நோக்கங்கள்
பயனாளிகளுக்கான தகுதிகள்
தூய்மை கிராம விருது
தூய்மை கிராமத்திற்கான விருதினை சட்டசபையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டு அரசாணை எண்: 30, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நாள்:13/01/2012-ன்படி அறிவிக்கப்பட்டது. கிராமப்புற மேம்பாட்டிற்காக மாவட்டத்தில் உள்ள தூய்மையான கிராமங்களுக்கு விருதுகள் வழங்கி, அதன் மூலமாக அக்கிராமத்தில் நல்ல சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடித்திட வழிவகை செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தூய்மையான கிராம ஊராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு அவ்வூராட்சிக்கு ரூ.5.00 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
திட்டத்தின் கீழ் பயன் பெற தேவையான தகுதிகள்
தூய்மையான கிராம ஊராட்சிக்கு வழங்கப்படும் ரூ. 5.00 இலட்சம் நிதியினை திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கும் மற்றும் சுகாதார மேம்பாட்டு பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும்.
மத்திய அமைச்சகத்தால் “ஷ்யாம் பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷன்” திட்டம் 16.09.2015 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு 06.11.2015 முதல் செயல்படுத்தி வருகிறது. மேலும் இத்திட்டம் தற்போது “நேஷனல் ரூர்பன் மிஷன்” என அழைக்கப்படுகிறது.
ஊரகப் பகுதிகளின் சமூக பொருளாதார வளர்ச்சியினை நகர்ப்புற பகுதிக்கு இணையாக உயர்த்தும் பொருட்டு இந்திய அரசு இத்திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் கிராம ஊராட்சிகள் தொகுப்பு கிராம ஊராட்சிகளாக செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் 300 கிராம ஊராட்சிகளின் சமூக பொருளாதார வளர்ச்சியினை நகர்ப்புற பகுதிக்கு இணையாக உயர்த்தி திட்டமிடப்பட்டு செயல்படுத்தி வருகிறது.
தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அலசப்பள்ளி பட்வாரப்பள்ளி தொகுப்பு கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு 2018 முதல் 2021 வரை 3 ஆண்டுகளுக்கு பணிகள் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அலசப்பள்ளி பட்வாரப்பள்ளி தொகுப்பு ஊராட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம ஊராட்சிகள்.
நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமத் திட்டம் 11.10.2014ல் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் http://saanjhi.gov.in வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் கிராமங்களில் அனைத்து துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து, ஒருமுகப்படுத்தி, மாதிரி கிராமங்களில் செயல்படுத்தி அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கிராம ஊராட்சியே இத்திட்டசெயலாக்கத்தின் அடிப்படை அலகாகும். சமவெளிப்பகுதிகளில் மக்கள் தொகை 3000 முதல் 5000 வரையும், மலைப்பகுதி மற்றும் பழங்குடி கிராமங்கள் எனில் மக்கள் தொகை 1000 முதல் 3000 வரையும் உள்ள கிராம ஊராட்சியை ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தேர்ந்தெடுக்க வேண்டும். மாவட்டங்களில் இந்த அலகு அளவுக்கு மக்கள் தொகை கிடைக்கவில்லை என்றால் ஏறக்குறைய இதே அளவுக்கு மக்கள் தொகை உள்ள கிராம ஊராட்சிகளை தேர்வு செய்யலாம்.
நாடாளுமன்ற உறுப்பினர் தனது (அ) தனது மனைவியின் / கணவனின் சொந்த கிராமத்தை தவிர்த்து இதர கிராமங்களிலிருந்து மாதிரி கிராமமாக உருவாக்க வேண்டிய கிராம ஊராட்சியை தங்கள் விருப்பப்படி கண்டறியலாம். மக்களவை உறுப்பினர் தனது தொகுதிக்குள்ளும், மாநிலங்களவை உறுப்பினர் தனது மாநிலத்திற்குள்ளும், நியமன உறுப்பினர் இந்திய அளவில் எந்த ஒரு மாநிலத்திலும், ஒரு கிராமத்தைதேர்ந்தெடுக்கலாம். நகர்ப்புற தொகுதியை பொறுத்தவரையில் கிராம ஊராட்சிகள் இல்லையெனில் சம்பந்தப்பட்ட மக்களவை உறுப்பினர் அருகிலுள்ள ஊரகத் தொகுதியிலிருந்து கிராமத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமமாக உருவாக்க வேண்டிய ஒரு கிராம ஊராட்சியை உடனடியாகவும் மற்ற இரண்டு கிராம ஊராட்சிகளை பின்னரும் தெரிவு செய்ய வேண்டும்.
முக்கியமாக, 2019 மார்ச் மாதத்திற்குள் மூன்று மாதிரி கிராமங்களை உருவாக்க வேண்டும், அதில் ஒன்று 2016க்குள் உருவாக்கப்படுதல் வேண்டும். இவ்வாறாக 2024-க்குள் 5 மாதிரி கிராம ஊராட்சிகளை (ஆண்டிற்கு ஒன்று வீதம்) தேர்வு செய்து மேம்படுத்த வேண்டும்.
அரசு தலைமை செயலாளரின் தலைமையிலான உறுப்பினர்கள் அடங்கிய மாநில அளவிலான அதிகாரம் அளிக்கப்பட்ட குழு அரசாணை நிலை எண்.23, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ம.அ.தி 2) துறை நாள் 13.02.2015ன்படி அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி கிராமங்களில் பல்வேறு துறைகளின் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு என தனியாக நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. மேலும், புதிய உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமானம் தொடர்புடைய திட்டங்களும் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து வளங்களும் ஒரே இலக்கினை நோக்கி ஒருங்கிணைந்த வகையில் அதிகபட்ச பயன்களை தரும் வகையில் உபயோகிக்கப்பட வேண்டும்.
மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களில் தொடர்புடைய அமைச்சகம், மத்திய அரசுத் துறைகள் / மத்திய அரசு நிதிப் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டங்களில் மாதிரி கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளில் தகுந்த மாற்றங்கள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தொடர்பு அலுவலர் விவரம்
பெயர் / பதவி |
தொடர்பு எண் |
மின்னஞ்சல் முகவரி |
முகவரி |
கண்காணிப்பாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கிருஷ்ணகிரி. |
04343-230022 |
drda[dot]tnkgi[at]nic[dot]in |
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கிருஷ்ணகிரி. |
துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கிருஷ்ணகிரி. |
04343-236128 |
Kgikgri[dot]tnkgi[at]nic[dot]in |
வட்டார வளர்ச்சி அலுவலகம்,கிருஷ்ணகிரி. |
வட்டார வளர்ச்சி அலுவலர், காவேரிப்பட்டிணம். |
04343-252026 |
kgikpnm[dot]tnkgi[at]nic[dot]in |
வட்டார வளர்ச்சி அலுவலகம், காவேரிப்பட்டிணம் |
வட்டார வளர்ச்சி அலுவலர், பர்கூர். |
04343-265951 |
kgibgur[dot]tnkgi[at]nic[dot]in |
வட்டார வளர்ச்சி அலுவலகம், பர்கூர் |
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மத்தூர் |
04341-256234 |
kgimthr[dot]tnkgi[at]nic[dot]in |
வட்டார வளர்ச்சி அலுவலகம், மத்தூர் |
துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊத்தங்கரை. |
04341-220002 |
kgiugri[dot]tnkgi[at]nic[dot]in |
வட்டார வளர்ச்சி அலுவலகம், ஊத்தங்கரை. |
துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வேப்பனப்பள்ளி. |
04343-260422 |
kgivnpi[dot]tnkgi[at]nic[dot]in |
வட்டார வளர்ச்சி அலுவலகம், வேப்பனப்பள்ளி. |
துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சூளகிரி. |
04344-252224 |
kgisgri[dot]tnkgi[at]nic[dot]in |
வட்டார வளர்ச்சி அலுவலகம், சூளகிரி. |
துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒசூர். |
04344-222478 |
kgihsur[dot]tnkgi[at]nic[dot]in |
வட்டார வளர்ச்சி அலுவலகம், ஒசூர். |
துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கெலமங்கலம். |
04347-232228 |
kgikmgm[dot]tnkgi[at]nic[dot]in |
வட்டார வளர்ச்சி அலுவலகம், கெலமங்கலம். |
துணை வட்டார வளர்ச்சி அலுவலர், தளி. |
04347-234226 |
kgithly[dot]tnkgi[at]nic[dot]in |
வட்டார வளர்ச்சி அலுவலகம், தளி. |
ஆதாரம் : https://krishnagiri.nic.in/
கடைசியாக மாற்றப்பட்டது : 7/7/2020
தொழில் துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள...
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாதலங்கள் பற்றிய...
பட்டு வளர்ச்சித்துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நிர்வாக அமைப்பு பற்றி இங்...