மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய ஆட்சி பணி அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கபட்டு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துகிறார். அவரே மாவட்ட மாவட்ட நிர்வாக நடுவராக இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறார். அவர் மாவட்டத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள், சட்டம், ஒழுங்கு நிர்வாகம், பொது தேர்தல், துப்பாக்கி உரிமம் போன்ற பல முக்கிய பணிகளையும் செயல்படுத்துகிறார்.கூடுதல் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் துறையின் நேரடி நிர்வாகத் தலைவராகயிருந்து மாவட்டத்தில் வருவாய்த்துறை சட்டங்களின் செயல்பாட்டினை உறுதி செய்கிறார். அவர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். குடிமை பொருட்கள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் கனிமப்பொருட்கள் சட்டங்கள், கிராம நிர்வாகம் போன்றவை அவரது முக்கிய பணிகளாகும். வருவாய் துறையின் அனைத்து பிரிவுகளையும் நிர்வகித்து, தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் இவரது பணியாகும். உதவி ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் வேலைகளை நிர்வகித்து மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.இந்திய ஆட்சிப்பணி அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மட்டத்தில், நியமிக்கப்படும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் , மற்றும் துணை ஆட்சியர் மட்டத்தில் நியமிக்கப்படும் அலுவலர்கள் ஊரக உள்ளாட்சித்துறையின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளை செயல் படுத்துவதில் ஆட்சியருக்கு உறுதுணையாக உள்ளனர். நகராட்சிகளின் கமிஷனர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் நகர்புற உள்ளாட்சிதுறை நிர்வாகத்தினை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக உள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் – இது நாள் வரை
வருவாய் கோட்டங்கள் – 3
விருதுநகர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக மூன்று வருவாய் கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வருவாய் கோட்டம் சார் ஆட்சியர்/துணை ஆட்சியரின் தலைமையின் கீழ் இயங்குகிறது. இவர் கோட்ட நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். வட்டாட்சியர் மட்டத்தில் ஒரு தலைமை உதவியாளர் மற்றும் பணியாளர்களும் நிர்வாகத்தில் கோட்டாட்சியருக்கு உறுதுணையாக செயல்படுகிறார்கள். பணிகளை பொருத்த வரை வருவாய் கோட்ட அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியரகத்தின் ஒரு பிரதிபலிப்பாக இருந்து நிர்வாகத்தில் ஒரு இடைநிலை அலுவலகமாக செயல்படுகிறது. ஒவ்வொரு வருவாய் கோட்டமும் ஒரு சில வட்டங்களை உள்ளடக்கி அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறது.
வருவாய் கோட்டங்கள் பல வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
வருவாய் வட்டங்கள் – 9
ஒவ்வொரு வட்டமும் வட்டாட்சியர் தலைமையில் இயங்குகிறது. அவர் வட்ட நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். ஒவ்வொரு வட்டமும் பல உள் வட்டங்களாகவும், அதன் கீழ் பல வருவாய் கிராமங்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது. நிலம், சட்டம் ஒழுங்கு, தேர்தல், துயர்துடைப்பு பணிகள், நில பரிமாற்றங்கள், வரி வசூல், நில ஆக்கிரமிப்பு அகற்றம், வீட்டு மனை பட்டா வழங்கல், மற்றும் சாதி, வருவாய், இருப்பிடம்,விதவை, வாரிசு,சொத்து மதிப்பு போன்ற பல சான்றிதழ்கள் வழங்குதல் வட்டாட்சியரின் முக்கிய பணிகளாகும்.
தலைமையிடத்து துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் சிறப்பு வட்டாட்சியர்கள் வட்ட நிர்வாகத்தில் வட்டாட்சியருக்கு உறுதுணையாக உள்ளனர்.
உள்வட்டங்கள் – 39
வருவாய் கிராமங்கள் – 600
வரிசை எண் | வட்டத்தின் பெயர் | வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை |
---|---|---|
1. | இராஜபாளையம் | 35 |
2. | ஸ்ரீவில்லிபுத்தூர் | 49 |
3. | சாத்தூர் | 53 |
4. | சிவகாசி | 36 |
5. | விருதுநகர் | 53 |
6. | அருப்புக்கோட்டை | 83 |
7. | திருச்சுழி | 150 |
8. | காரியாபட்டி | 107 |
9. | வெம்பக்கோட்டை | 37 |
விருதுநகர் மாவட்டம் ஏழு நகராட்சிகளையும், ஒன்பது பேரூராட்சிகளையும், பதினொன்று ஊராட்சி ஒன்றியங்களையும் மற்றும் நானூற்று ஐம்பது கிராம ஊராட்சிகளையும் கொண்டது.
ஆதாரம் : https://virudhunagar.nic.in
கடைசியாக மாற்றப்பட்டது : 12/17/2019
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்ந்த தகவல...
விருதுநகர் மாவட்ட சமூக நலத்துறை சார்ந்த தகவல்கள் இ...
விருதுநகர் மாவட்டத்தின் பொருளியல் மற்றும் புள்ளியல...