விவரங்கள் |
விரிவாக்கம் |
பரப்பளவு |
6,077 சதுர.கி.மீ. sq.kms |
மக்கள் தொகை |
3,482,970 |
மாவட்ட தலைமையகம் |
வேலூர் |
மொழி |
தமிழ் |
வலைதளம் | http://vellore.nic.in/ |
பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள், ஆற்காடு நவாப்கள் மற்றும் பைஜாபூர் சுல்தான் ஆகிய மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் வேலூர் ஆளப்பட்டுள்ளது. 17ஆம் நூற்றாண்டில் நடந்த கர்நாடக போரின் போது வேலூர் சிறந்த வலிமை மிகுந்த கோட்டையாக இருந்துள்ளது. 1806ல் அதிகாரிகளை எதிர்த்த யூரோப்பியன் வீரர்களை படுகொலை செய்த இடமாகவும் இருந்துள்ளது வேலூர் மாவட்டம். (12” 15”லிருந்து 13” 15”வரை) வடக்கு அட்சரேகை மற்றும் (78” 20”லிருந்து 79” 50”வரை) கிழக்கு நிலநிரைக்கும் இடையில் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.
13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோட்டை வேலூரின் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகின்றது. இந்த கோட்டையில் தேவாயலயங்களும், ஜெகதீஸ்வரர் கோயிலும் மற்றும் பல கட்டிடங்களும் உள்ளது. பல அரசு அலுவலகங்களும் இந்த கோட்டையில் உள்ளது. ஸ்ரீபுரத்தில் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட லக்ஷ்மி நாராயிணி கோயில் இங்கு சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு செய்யப்பட்ட வண்ண விளக்கு வேலைப்பாடுகளால் இந்த கோயில் இருளிலும் ஜொலிக்கும் வண்ணம் உள்ளது. வேலூர் கோட்டையிலுள்ள அரசு அருங்காட்சியகம், காவலூர் தொலை நோக்கி மையம், ஏலகிரி மலைத்தொடர், பாலாறு கரையில் அமைந்துள்ள முத்து மண்டபம், அமிர்தி வனப்பகுதி பாலாறு அணை, ரத்னகிரி கோயில் மற்றும் பல இடங்கள் வேலூரின் சிறந்த சுற்றுலாத்தலங்களாக உள்ளன.
ஆதாரம் : தமிழ்நாடு அரசு வலைதளம்
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020