இயக்கத்தின் அரசியல் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள், இயக்கத்தின் சட்டம் மற்றும் விதிமுறைகள், பொதுப் பேரவையின் முடிவுகள் உள்ளிட்ட அனைத்தையும் நடைமுறைப்படுத்தவும், அவ்வப்போது எழும் அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகள் எடுக்கவும், இயக்கத்தை வழிநடத்தவும், முழுமையான அதிகாரம் கொண்டப்பேரவையே மையப் பேரவையாகும்.
இப்பேரவை ஆறு திங்களுக்கொருமுறை பொதுச் செயலாளரின் தலைமையில் கூடும். தேவையையொட்டி, பொதுச் செயலாளரோ அல்லது மையப்பேரவையின் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கையெழுத்திட்டு கேட்டுக் கொள்வதன் அடிப்படையிலோ இடைப்பட்டக் காலங்களில் கூட்டப்படும்
பிரிவு 1
பிரிவு 2
பிரிவு 3
இயக்கத்தின் சொத்துக்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இயக்கத்திற்கென அறக்கட்டளையை நிறுவ மையப்பேரவை ஒப்புதல் வழங்கும். பொறுப்பினடிப்படையில் இயக்கத்தின் பொதுச் செயலாளர், அறக்கட்டளையின் நிலையானத் தலைவராகவும், பொருளாளர் அறக்கட்டளையின் நிலையான உறுப்பினராகவும் இருப்பர்.
அறக்கட்டளையின் தலைவரே, தேவையான மற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை முடிவு செய்வார். அவர்களை நியமனம் செய்யவும், நீக்கவும் தலைவருக்கு அதிகாரம் உண்டு. நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களின் பொறுப்புக்காலம் மூன்றாண்டுகளாகும்.
விதி 1
மையப்பேரவையின் விதி 1
மையப்பேரவையை நடத்துவதற்கு மையப்பேரவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க வேண்டும்.
இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாக இருப்பின், பேரவையை நடத்தக்கூடாது.
விதி 2
மையப்பேரவையின் விதி 2
மையப்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றவோ அல்லது வேறு ஏதேனும் முடிவுகளை எடுக்கவோ, மையப்பேரவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பங்கேற்க வேண்டும்.
இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாக இருப்பின், பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றவோ, முடிவுகளை எடுக்கவோ கூடாது.
விதி 3
மையப்பேரவையின் விதி 3
பொதுச்செயலாளரோ அல்லது பொதுச்செயலாளரின் வழிகாட்டுதலின் படியோ, வழக்கமாகக் கூட்டப்படும் மையப்பேரவையின் கூட்டத்திற்கான அறிவிப்பைப் பதினைந்து நாட்களுக்கு முன்னதாகவும், இன்றியமையாதச் சூழல்களில் கூட்டப்படும்.
மையப்பேரவையின் கூட்டத்திற்கான அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன்னதாகவும் பேரவை உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
விதி 4
மையப்பேரவையின் விதி 4
தவிர்க்கமுடியாதக் காரணங்களால் மையப்பேரவையில் கலந்து கொள்ள இயலாதவர்கள் அதற்கானத் தகவலைப் பேரவையின் கூட்டத்திற்கு முன்னதாகவோ அல்லது கூட்டத்தின்போதோ பொதுச்செயலாளரிடம் அல்லது தலைமைச் செயலகத்தில் தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு தகவல் கொடுக்க இயலாதவர்கள் அதற்கான விளக்கத்தை மையப்பேரவைக் கூட்டம் நடைபெற்ற ஏழு நாட்களுக்குள் எழுத்தில் வழங்க வேண்டும்.
விதி 5
மையப்பேரவையின் விதி 5
மையப்பேரவைக் கூட்டத்தில் தொடர்ந்து மூன்று முறை பங்கேற்காதவர்கள் மையப்பேரவை உறுப்பினர் தகுதியைத் தானாகவே இழந்து விடுவர். அத்துடன் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கான நடைமுறைகளுக்கும் ஆளாக்கப்படுவர்.
மையப்பேரவைக் கூட்டத்திற்குக் குறித்த நேரத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக்கப்படுவர்.
விதி 6
மையப்பேரவையின் விதி 6
மையப்பேரவையின் நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக ‘நிகழ்க் குறிப்பேட்டில்’ பதிவு செய்யப்பட வேண்டும்.
மையப் பேரவையில் பங்கேற்போர் கையொப்பமிடும் ‘வருகைப் பதிவேட்டையும்’ உறுப்பினர்கள் ஒப்படைக்கும் செயலறிக்கைகளுக்கான ‘கோப்புகளையும்’ மையப்பேரவைக் கையாள வேண்டும்.
விதி 7
மையப்பேரவையின் விதி 7
மையப்பேரவை கூடும் ஒவ்வொரு முறையும், அதற்கு முன்னதாக நடைபெற்ற மையப்பேரவையின் நடவடிக்கைகளையும், முடிவுகளையும் பொதுச் செயலாளர் அறிக்கையாக முன் வைக்க வேண்டும்.
பொதுச் செயலாளர் உட்பட மையப்பேரவையின் உறுப்பினர்கள் அனைவரும், வழக்கமாகக் கூட்டப்படும் ஒவ்வொரு மையப்பேரவையிலும், இரண்டு மையப்பேரவைக் கூட்டங்களுக்கு இடைப்பட்டக் காலத்திற்குரிய முறையான செயலறிக்கைகளையும், வரவு-செலவு அறிக்கைகளையும் மையப்பேரவையில் ஒப்படைக்க வேண்டும். தவறினால், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக்கப்படுவர்.
மையப்பேரவையின் வழிகாட்டுதலின்படி, மாநில அளவில் ஒருங்கிணைக்கப்படும் மாநாடுகள், கருத்தரங்குகள், பேரணிகள், போராட்டங்கள் மற்றும் பிற பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான வரவு – செலவு அறிக்கைகளை தொடர்புடைய பொறுப்பாளர்கள் மையப்பேரவையில் ஒப்படைக்க வேண்டும்.
இயக்கத்தின் மையப்பேரவை, பொதுப்பேரவை, சிறப்பு அமர்வுகள் ஆகியவற்றுக்கான வரவு – செலவு அறிக்கைகளை அதற்கடுத்துக் கூடுகிற மையப்பேரவையில் பொருளாளர் ஒப்படைக்க வேண்டும்
ஆதாரம் : தமிழ்நாடு சட்டமன்ற பேரவை
கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020
ஜன்தன் திட்டத்தின் வளர்ச்சி மற்றும் நன்மைகள் குறித...
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதியுத...
அந்நிய நாட்டவர் மற்றும் அந்நிய சுற்றுலாப் பயணிகள் ...
தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் அம்மா அழைப்பு மையம்...