நம் பாரத தேசத்தில் தேர்தல்கள் என்றாலே அது ஜனநாயக முறையில்தான் என்பது அந்தக் காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வரும் வழிமுறை. அத்தகைய தேர்தல்களுக்கு நம் தமிழகம் முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறது என்பது ஆச்சரியமான ஒன்று.
நம் தமிழகத்துக்கு, அதாவது ஒரு மாநிலத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயரிட்டவர் முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை. அவர் வாழ்ந்த காஞ்சிபுரம் அருகே நமக்குக் கிடைத்த கல்வெட்டு, அந்தக் காலத்தில் தேர்தல் நடைமுறைகள் குறித்து என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
- எனச் சிறப்பாக இயங்கிய ஊராட்சி முறை பற்றி அந்தக் கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன.
முதலாவது கல்வெட்டு, முதலாம் பராந்தகனின் 12-வது ஆட்சி ஆண்டையும் (கி.பி. 917), மற்றொன்று 14-வது ஆட்சி ஆண்டையும் (கி.பி. 919) சேர்ந்தது.
(உத்திரமேரூர், இரண்டாம் நந்திவர்மன் காலத்திலேயே (கி.பி. 750), உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டது).
குடவோலை முறை பற்றிப் பேசும் முதல் கல்வெட்டு 12 வரிகளைக் கொண்டது. இரண்டாவது கல்வெட்டில் 18 வரிகள் உள்ளன. கல்வெட்டுப் பாடத்திலிருந்து முதல் 5 வரிகள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வரி 1.
ஸ்வஸ்திஸ்ரீ(;) மதிரை கொண்ட கோப்பரகேசரிவர்மர்க்கு யாண்டு பனிரண்டு ஆவது(;) உத்திரமேருச்சதுர்வேதிமங்கலத்து சபையோம் இவ்வாண்டுமுதல் எங்களூர் ஸ்ரீமுகப்படி ஆஞை
வரி 2.
யினால் தத்தனூர் மூவேந்த வேளான் இருந்து வாரியமாக ஆட்டொருக்காலும் ஸம்வத்ஸர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரிவாரியமும் இடுவதற்கு வ்யவஸ்தை செய்த
வரி 3.
பரிசாவது (;) குடும்பு முப்பதாய் முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலாரேய் கூடி காநிலத்துக்கு மேல் இறை நிலமுனையான் தன் மனையிலே அகம்
வரி 4.
எடுத்துக்கொண்டு இருப்பானை அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார் வேதத்திலும் சாஸ்திரத்திலும் காரியத்திலும் நிபுணரென்னப்பட்டி
வரி 5.
ருப்பாரை அர்த்தசௌசமும் ஆத்ம சௌசமும் உடையராய் மூவாட்டின் இப்புறம் வாரியஞ் செய்திலாத்தார் வாரியஞ் செய்தொழிந்த பெருமக்களுக்கு...
மதுரையைக் கைப்பற்றிய பரகேசரிவர்மனான முதலாம் பராந்தகனின் 12-ம் ஆட்சி ஆண்டிலும் (கி.பி. 917), 14-வது ஆட்சி ஆண்டிலும் (கி.பி. 919) உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலத்தின் சபை, கிராம நிர்வாகத்துக்குத் தேவையான குழுக்களை அரசாணையின்படி அமைக்கிறது.
அந்த அமைப்பின்படி, அரசு அதிகாரி ஒருவரும் உடன் இருக்க, ஒவ்வொரு ஆண்டும் சம்வத்ஸர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், பஞ்சவார வாரியம் போன்ற வாரியங்கள் அமைக்கப்பட்டு, அதன் செயல்பாட்டுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களுக்கான தகுதிகள் என்ன? அவர்களது பதவிக்காலம் என்ன? என்பது போன்ற தகவல்களும் இக்கல்வெட்டில் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன.
உத்திரமேரூர் சபையில் 30 குடும்புகளும், 12 சேரிகளும் உள்ளன. எனவே, அவை அனைத்துக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில், தேர்தலானது நடத்தப்பட வேண்டும். அவ்விதம் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் தகுதிகள், தேர்வு முறைகள், தேர்வுக்குப் பின் நடைபெற வேண்டிய நடைமுறைகள் ஆகியவை, கல்வெட்டுகளில் தெளிவுற விளக்கப்பட்டுள்ளன.
முதல் கல்வெட்டில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில விதிமுறைகளின்படி ஊராட்சித் தேர்வு நடைபெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், மீண்டும் 14-ம் ஆண்டு மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, இடைப்பட்ட ஆண்டில் ஏதோ சிக்கல் ஏற்பட்டிருப்பதுபோல் தோன்றுகிறது. மேலும், உத்திரமேரூர் ஊராட்சித் தேர்தலை நாகசாமி போன்ற வரலாற்று ஆய்வாளர்கள், இது மக்களாட்சி முறையிலான ஊராட்சித் தேர்தல் என்று குறிப்பிடுகின்றனர்.
மேலும், இக்கல்வெட்டில் உறுப்பினர்களின் தகுதிகள் என்று குறிப்பிடப்படும்போது, சாஸ்திரத்தில் வல்லுநர்களாக இருப்பவர்கள் மட்டுமே இதில் உறுப்பினராகத் தகுதி படைத்தவர்கள் என சொல்லப்பட்டுள்ளது.
இதுபோன்ற தேர்தல் முறை (குடவோலை முறையிலான ஊராட்சித் தேர்தல்) வேறு எங்கும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. பாண்டிய மன்னன் மாறன் சடையனின் காலத்தைச் சேர்ந்த மானூர் (திருநெல்வேலி மாவட்டம்) கல்வெட்டும், பிரம்மதேய ஊர்களுக்கான சபைத் தேர்வுமுறை பற்றிப் பேசுகிறது.
நடனகாசிநாதன் அவர்கள், ஒட்டுமொத்தமாக கல்வெட்டுச்செய்திகள் பற்றிச் சொல்லும்போது, தமிழ்நாடு முழுவதுமே குடவோலை முறையிலான ஊராட்சித் தேர்தலே நடைபெற்றதாகக் குறிப்பிடுகிறார். எனவே, இதை மக்களாட்சி முறையிலான ஊராட்சித் தேர்தல் என்பதற்குப் பதிலாக ஊர்களின் சபைத் தேர்தல் என உரைப்பது சிறப்பாக இருக்கும்.
இனி கல்வெட்டுச் செய்திகளைக் காண்போம்.
சம்வத்ஸர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், பஞ்சவார வாரியம் என்று பிரிக்கப்பட்டிருந்தாலும், உறுப்பினர்களின் பணி என்ன என்பது நேரடியாகக் கொடுக்கப்படவில்லை. அதன் பெயர் கொண்டு ஸம்வத்ஸர வாரியம் - ஆண்டுக்கு ஒருமுறை கூடும் மேற்பார்வைக் குழு என்றும், தோட்ட வாரியம் – தோட்டப் பணிகளைக் கண்காணிப்பது என்றும், ஏரி வாரியம் - நீர் நிலைகளை நிர்வகிப்பது என்றும், பொன் வாரியம் - பொன்னின் மாற்றை காண்பதற்கும், பஞ்சவார வாரியம் - நில வரி வாரியம் (ஐந்தில் ஒரு பங்கு நில வருவாய் பெறும் குழு) என்றும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதன்மூலம் உறுப்பினர்களுக்கான தகுதிகள் கடுமையாக இருந்துள்ளது தெளிவாகிறது.
அமைவிடம் - உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டம்
அரசன் - முதலாம் பராந்தகன் (பொ.ஆ. 907 - 856)
ஆட்சி ஆண்டு - 12 மற்றும் 14
பொ.ஆ. - 919, 923
மொழி – தமிழ்
எழுத்து – 10-ம் நூற்றாண்டு தமிழும் கிரந்தமும்
இது 1000 வருடங்களுக்கு முன் இருந்த நிலை. தற்போதைய வேட்பாளர்களோ வாக்காளர்களோ பயமோ கவலையோ கொள்ளத் தேவையில்லை.
ஆதாரம் : தமிழ்நாட்டு வரலாற்றுக் குழு, தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை.
கடைசியாக மாற்றப்பட்டது : 7/16/2020
‘இ–பெட் ரோல்’ திட்டம் பற்றிய குறிப்புகள் இங்கு கொட...
தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் அம்மா அழைப்பு மையம்...
அம்மா கைப்பேசி திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக...
அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம் ப...