நோக்கம்
வாக்காளர் வாக்களிப்பைச் சரிபாக்க வாக்குசீட்டு விவிபிஏடி முறையின் மூலம் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் முறையாகும். இதன்மூலம் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்வதுடன் இயந்திரத்தின் உதவியுடன் வாக்கு யாருக்காவது மாற்றப்படுகிறதா என்பதுடன் வாக்குகள் அழிக்கப்படுவதை தடுக்கவும் முடியும்.
வாக்குச்சீட்டு இல்லாமல் வாக்குப்பதிவு செய்யும் வாக்காளர்களுக்கு அளிக்கப்படும் பின் தகவல் முறை என்று இதைக் குறிப்பிடலாம். "விவிபிஎடி" முறை என்பது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டுத் தன்மையை சுயேச்சையாக சரிபார்ப்பதை நோக்கமாகக் கொண்டது. இம்முறையினால் வாக்காளர்கள், தங்களது வாக்குகள் தாங்கள் தெரிவு செய்த வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்ததுக் கொள்ள இயலும். மேலும் வாக்குகள் மாற்றப்படுவதையும் அழிப்பதையும் தடுக்கும் கூடுதல் வழி முறையாகவும் அமைகிறது.
இந்த விவிபிஎடி முறையில், அச்சிடும் கருவி போன்றதொரு உபகரணம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்படுகிறது. ஒரு வாக்குப்பதிவு செய்யப்படும்பொழுது, வரிசை எண், வேட்பாளரின் பெயர், சின்னம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் ஒரு ரசீது கிடைக்கிறது. வாக்குப்பதிவை உறுதி செய்யும் இந்த ரசீது, விவரங்களை வாக்காளர் சரி பார்த்துக் கொள்ள உதவுகிறது. இந்த ரசீது பார்க்கப்பட்டபின், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட சிறிய பெட்டிக்குள் செல்லுகிறது. இந்த ரசீதை தேர்தல் அலுவலர் தேவை ஏற்படும் சமயங்களில் மட்டுமே பார்க்க இயலும்.
இந்த காகித ரசீதின் அடிப்படையில் முதல்முறையாக ஒரு வாக்காளர் தனது வாக்குப்பதிவிற்கு எதிராக எதிர்ப்பைத் தெரிவிக்க இம்முறை அனுமதிக்கிறது. புதிய விதி ஒன்றின்படி, அந்தச் சாவடியின் தலைமை அலுவலர். அந்த வாக்காளரின் எதிர்ப்பை பதிவு செய்து கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கையின்போது இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த "விவிபிஎடி" முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதான ஐயப்பாடு காரணமாக, தயாரிக்கப்படவில்லை. மாறாக, இந்த முறைமையின் மேம்பாட்டுப் பணியில் அடங்கும்.
"விவிபிஎடி" பயன்பாட்டிற்கு வழி வகுத்த நிகழ்வுகள்:
- 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகளிடையே விரிவான பொதுக்கருத்து காணப்பட்டது. எனினும், பல கட்சிகள், வாக்காளர்கள், தங்களது வாக்கைச் சரிபார்ததுக் கொள்ள உதவும் காகித முறையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து பரிசீலிக்கப்பட வேண்டுமென்று யோசனை தெரிவித்தனர்.
- இந்த முறையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு வல்லுநர் குழுவை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. மேலும், இந்த "விவிபிஎடி" முறைக்கான மாதிரி வடிவம் ஒன்றை உருவாக்குமாறு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயாரிக்கும், பாரத் மின்னணு நிறுவனமும், இந்திய மின்னணுக் கழகமும் கேட்டுக் கொள்ளப்பட்டன.
- தொழில்நுட்ப வல்லுநர் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப, திருவனந்தபுரம், தில்லி ஜெய்சல்மார், சிரப்புஞ்சி, லே ஆகிய இடங்களில் 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் களப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பொது வாக்காளர்கள், தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள், சமூக அமைப்புகள், ஊடகங்கள் போன்ற சம்பந்தப்பட்ட அனைவரின் முன்னிலையிலும், பங்களிப்புடனும் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
- முதலாவது களச் சோதனைக்குப்பிறகு பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டபின், "விவிபிஎடி" அமைப்பின் மாதிரி வடிவம் இரண்டாவது கள சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த சோதனை தில்லி, திருவனந்தபுரம், லே ஜெய் சல்மார், சிரப்புஞ்சி ஆகிய இடங்களில் 2012-ம் ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்டது. வல்லுநர் தொழில் நுட்பக் குழு "விவிபிஎடி" பிரிவின் இறுதி வடிவமைப்பிற்கு 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியது.
- 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியிடப்பட்ட இந்திய அரசின் அறிவிக்கையின்படி 1961-ம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் "விவிபிஎடி" முறையை பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி கிடைத்தது.
- 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாகாலாந்தின் Ôடியூசாங்Õ மாவட்டத்தில் உள்ள நாக்சென் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் "விவிபிஎடி" முறை, முதல் முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பயன்படுத்தப்பட்டது.
- தேர்தல் ஆணையத்திற்கும் இடையிலான வழக்கு ஒன்றில், 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், நியாயமான நேர்மையான தேர்தலுக்கு "விவிபிஎடி" முறை இன்றியமையாதது என்று கூறியது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் "விவிபிஎடி" முறமை இணைக்குமாறும் இந்த முறமையின் துல்லியத் தன்மையை உறுதி செய்யும் என்றும் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தைப் பணித்தது.
- மின்னணு இயந்திரங்களில் இந்த காகித பரிசோதனைத் திட்டத்தை 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் படிப்படியாக அறிமுகம் செய்யுமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. இது நியாயமான நேர்மையான தேர்தலை உறுதி செய்யும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. வாக்காளர்கள் சரிபார்க்க உதவும் "விவிபிஎடி" முறமையை அறிமுகப்படுத்த நிதி உதவி வழங்குமாறும் மத்திய அரசை தேர்தல் ஆணையம் பணித்துள்ளது.
- உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு ஏற்ப, தேர்தல் ஆணையம், வரும் சட்டப்பேரவை தேர்தலில் புது தில்லி சட்டப்பேரவையில் "விவிபிஎடி" முறமையை பயன்படுத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு இட்டுள்ளது. முன்னோடித் திட்டம் 186 வாக்குச்சாவடிகளில் நடைமுறைப்படுத்தப்படும். இதனால் 1,18,596 வாக்காளர்கள் இந்த முறையை பயன்படுத்துவார்கள்.
- 2014-ம் ஆண்டு 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் அனைத்திலும், "விவிபிஎடி" முறமையை அறிமுகம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு 14 லட்சம் "விவிபிஎடி" இயந்திரங்கள் தேவைப்படும். எனினும், இப்பொழுதுள்ள குறைந்த கால அளவில் இத்தனை எண்ணிக்கையிலான இயந்திரங்களைத் தயாரித்து, சோதனை செய்வது குறித்து ஆணையம், ஐயப்பாடு கொண்டுள்ளது. 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன், எல்லா நாடாளுமன்ற தொகுதிகளிலும் இந்த முறமையைப் பயன்படுத்துவது சாத்யமில்லை என்று ஆணையம் கருதுகிறது. "விவிபிஎடி" இயந்திரங்களை கொள்முதல் செய்து, அவற்றை நாட்டிலுள்ள எல்லா வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்துவதற்கு சுமார் ரூ.1500 கோடி தேவைப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆதாரம் : இந்திய தேர்தல் ஆணையம்