தமிழ்நாடு மின்னணு நிறுவனம் இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ் 21.03.1977 அன்று நிறுவப்பட்ட, தமிழ்நாடு அரசுக்கு ழுழுவதும் சொந்தமான ஒரு தொழில் நிறுவனமாகும்.
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சேவை சார்ந்த நிறுவனங்களை உருவாக்குதல், அரசு துறைகளுக்கு வன்பொருள் கொள்முதல் செய்தல், மின்னாளுமை மற்றும் வன்பொருள் சேவைகள் ஆகியவற்றுக்குத் தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல் ஆகியன தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் முதன்மையான பணிகளாகும். மேலும், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் தகவல் தொழில்நுட்பவியல் பூங்காக்களை உருவாக்குதல், தமிழ்நாடு பெரும்பரப்பு வலையமைப்பு (TNSWAN),
தமிழ்நாடு மாநிலத் தரவு மையம் (TNSDC), பேரிடர் மீட்பு மையம் (DRC), அருகாமை பேரிடர் மீட்பு மையம் (NLDRC), மின்னஞ்சல் தீர்வு (e-mail Solution), மேகக்கணினியம் (Cloud Computing), தொழில் முனைவோர் மையங்களை ஏற்படுத்துதல், மடிக்கணினி வழங்குதல், இணையதளங்களை உருவாக்குதல், ஆதார் நிரந்தர பதிவு மையங்களை ஏற்படுத்துதல் போன்ற திட்டங்களை அமைத்து வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.
தமிழக அரசின் விருப்பம் கொள்முதல் முகமையாகவும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறையிடமிருந்து நிதியுதவி பெறும் பெரிய தகவல் தொழில்நுட்பவியல் திட்டங்களைச் செயல்படுத்தும் நிறுவனமாகவும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) விளங்குகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கான தகவல் தொழில்நுட்பவியல் மென்பொருள் ஏற்றுமதியில் தகவல் தொழில்நுட்பவியல் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (எல்கோசெஸ்கள்) தமிழக அரசின் முன்முயற்சியின் படி, எல்காட் சென்னை , கோயம்புத்தூர், மதுரை (இரண்டு இடங்கள்), திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்றும் ஓசூரில் 8 தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவைகளுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கி உள்ளது.
மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் அவர்கள் எல்காட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவைகளுக்கான (IT/ITeS) சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு வியாபாரக் குறியாக 'எல்கோசெஸ்" என பெயரிட்டார். இவை தமிழ்நாட்டில் IT/ITeS முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒரு சிறந்த விருப்ப இடமாகவும் உருவாகியுள்ளது.
எல்கோசெஸ் - சோழிங்கநல்லூர், சென்னை
சென்னை சோழிங்கநல்லூரில், 377.08 ஏக்கர் நிலப்பரப்பில் எல்காட் நிறுவனம் ஒரு எல்கோசெஸ்ஸை உருவாக்கியுள்ளது. இந்த எல்கோசெஸ்சில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்வாக கட்டடம் கட்டுவதற்கான செலவையும் சேர்த்து எல்காட்டின் மொத்த முதலீடு (195.35 கோடி ஆகும். இந்த எல்கோசெஸ்சில் பின்வரும் 7 நிறுவனங்களுக்குக் குத்தகை அடிப்படையில் 259 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது:
இந்த நிறுவனங்கள் 95.30 இலட்ச சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப கட்டடத்தைக் கட்டி முடித்து 57,125 பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன.திருவாளர்கள் ஃபோர்ட் மோட்டார் பிரைவேட் லிட். 26.06 இலட்ச சதுர அடியில் தங்களுடைய குளோபல் டெக்னாலஜி மற்றும் வணிக வளாக கட்டடத்தைக் கட்டி வருகின்றது. திருவாளர்கள் விப்ரோ நிறுவனம் மேலும் 9.50 இலட்ச சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப கட்டட விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
எல்கோசெஸ் - விளாங்குறிச்சி, கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் விளாங்குறிச்சி கிராமத்தில் 62 ஏக்கர் நிலப்பரப்பில் எல்காட் ஒரு எல்கோசெஸ்ஸை உருவாக்கியுள்ளது. இந்த எல்கோசெஸ்சில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்வாக கட்டடம் கட்டுவதற்கான செலவையும் சேர்த்து மொத்த முதலீடு (72.50 கோடி ஆகும்.
இந்த நிறுவனங்கள் 20.50 இலட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப கட்டடத்தைக் கட்டி முடித்து 13,500 பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன • இந்த எல்கோசெஸ்சில் திருவாளர்கள் விப்ரோ நிறுவனம் மேலும் 1.60 இலட்ச சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப கட்டட விரிவாக்க பணிகளை மேற்கொண்டுள்ளது.
எல்கோசெஸ் - இலந்தைகுளம், மதுரை
மதுரை இலந்தைகுளம் கிராமத்தில், 28.91 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு எல்கோசெஸ்ஸை எல்காட் உருவாக்கியுள்ளது. 60,205 சதுர அடி கொண்ட தகவல் தொழில்நுட்ப கட்டடம் மற்றும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைக் கட்டுவதற்காக எல்கோசெஸ்ஸில் 134.41கோடியை முதலீடு செய்துள்ளது. இந்த எல்கோசெஸ்சில் பின்வரும் 5 நிறுவனங்களுக்குக் குத்தகை அடிப்படையில் 20.89 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் 2.30 இலட்ச சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப கட்டடத்தைக் கட்டி முடித்து 3,200 பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன.
இந்த எல்கோசெஸ்சில் திருவாளர்கள் எச்.சி.எல் இன்ஃபோசிஸ்டம்ஸ் லிட். நிறுவனம் 3.80 இலட்ச சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப கட்டட விரிவாக்க பணிகளை மேற்கொண்டுள்ளன.இந்த எல்கோசெஸ்சில் உள்ள 60,205 சதுர அடி கொண்ட தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தில் பின்வரும் 5 நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவை 630 பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன. இந்த எல்கோசெஸ்ஸில் நிலம் மற்றும் கட்டடத்தில் 100 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எல்கோசெஸ் - வடபழஞ்சி, மதுரை
மதுரை வடபழஞ்சி கிராமத்தில், 24517 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு எல்கோசெஸ்ஸை எல்காட் உருவாக்கியுள்ளது. 72,000 சதுர அடி கொண்ட தகவல் தொழில்நுட்ப நிர்வாக கட்டடம், இரயில்வே மேம்பாலம் கட்டுதல் மற்றும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்குதல், ஆகியவற்றிற்கு எல்கோசெஸ் 366.51 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்த இரயில்வே மேம்பாலம் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 04.01.2018 அன்று தொடங்கி வைத்தார்கள்.
இந்த எல்கோசெஸ்சில் பின்வரும் 7 நிறுவனங்களுக்குக் குத்தகை அடிப்படையில் 144 ஏக்கர் நிலம் ஒதுக்கீடும், 25 ஏக்கர் நிலம் சிறப்புப் பொருளாதார மண்டல அந்தஸ்து அல்லாத இடத்தில் ஒரு நிறுவனத்திற்கும் நிலம் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
எல்கோசெஸ் - நவல்பட்டு, திருச்சி
திருச்சி நவல்பட்டு கிராமத்தில், 147.61 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு எல்கோசெஸ் உருவாக்கப் பட்டுள்ளது. இதில் 123.23 ஏக்கர் பரப்பளவிற்குச் சிறப்புப் பொருளாதார மண்டல அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 60,000 சதுர அடி கொண்ட நிர்வாக மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டடம் மற்றும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை கட்டுவதற்காக 860.08 கோடியை எல்கோசெஸ் முதலீடு செய்துள்ளது.
இந்த எல்கோசெஸ்சில் பின்வரும் 8 நிறுவனங்களுக்குக் குத்தகை அடிப்படையில் 34 ஏக்கர் நிலம் ஒதுக்கீடும் 2 ஏக்கர் நிலம் சிறப்புப் பொருளாதார மண்டல அந்தஸ்து அல்லாத இடத்தில் ஒரு நிறுவனத்திற்கும் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் கோயம்புத்தூர் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவை வழங்கும் நிறுவனங்களில் மனித வள மேம்பாட்டினை உயர்த்த, எல்காட் நிறுவனம், சென்னையிலுள்ள டைடல் பார்க்கில் 90 இருக்கை வசதி கொண்ட தொழில்முனைவோர் மையத்தை அமைத்துள்ளது.
இதில் தற்போது 17 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன மற்றும் 13 நிறுவனங்கள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு தொடக்க நிலையிலிருந்து விடுபட்டு தொழில்முனைவோர் மையத்திலிருந்து வெளியேறி உள்ளன.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி 50 இருக்கை வசதி கொண்ட ஒரு தொழில்முனைவோர் மையம் (2.07 கோடி முதலீட்டில் டைடல் பார்க் கோயம்புத்தூர் லிட், கோயம்புத்தூரில் வாடகை அடிப்படையில் நிறுவப்பட உள்ளது. இந்த தொழில்முனைவோர் மையத்திற்கு நாஸ்காம் நிறுவனம் ஒரு அறிவுசார் பங்குதாரராகச் செயல்படும்.
சோழிங்கநல்லூர் எல்கோசெஸ்ஸில் ஒரு தகவல்தொழில் நுட்ப கட்டடம் அமைத்தல் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி சோழிங்கநல்லூரில் உள்ள எல்கோசெஸ்ஸில் 2.33 இலட்ச சதுர அடியில் 884.42 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்ப கட்டடம் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதல், அரசு ஆணை எண் 18, தகவல் தொழில்நுட்பவியல் துறை, நாள் 9:10.2017ல் வெளியிடப்பட்டது. இதற்கான விரிவான திட்டம் மற்றும் ஒப்பந்தபுள்ளி படிவம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான ஒப்பந்தபுள்ளி விரைவில் கோரப்பட உள்ளது.
மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்குச் சிறந்த திறன்களைப் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால், 15.09.2011-ல் தொடங்கி வைக்கப்பட்டது.
ஏழாவது கட்டமாக, 2017-18 கல்வி ஆண்டுக்காக, அரசு ஆணை வழங்கப்பட்டு, போட்டித் தேர்வுகள் எழுதுவதற்குப் பதிவு செய்தவர்கள் உட்பட 42,473 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. மேலும், 473 இலட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்ய உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் ஜூன் 2018-க்குள் கோரப்பட்டு, வழங்கும் பணி செப்டம்பர் 2018 முதல் தொடங்கும்.
இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான மேகக்கணினி மற்றும் இணையப் பதிவேற்றச் சேவைகள்
தமிழக அரசு, இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் பயனடையும் பொருட்டு, கட்டணமின்றி சுயசேவை முறையில் இணையப் பதிவேற்றச்சேவைகளைச் செய்து கொள்ள மேகக்கணினி சேவையைச் செயல்படுத்தியுள்ளது.
மேகக்கணினி
வியத்தகு முறையில் எளிமைப்படுத்தப்பட்ட கட்டமைப்பு மற்றும் கணினி வளங்களைப் பகிர்ந்து கொள்ள, மேகக்கணினி சேவையானது உறுதி செய்கிறது.
இத்திட்டத்தின் இரண்டு முக்கிய நன்மைகள்:
இத்திட்டமானது உட்கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கிய சேவையகம், சேமிப்பு செய்வதற்கான கணினி சேவைகள் ஆகியவற்றை வழங்குகிறது.
இ - ஸ்மார்ட் வகுப்பறை தற்போதைய கற்பிக்கும் முறை பயிற்சிகள் மற்றும் கற்றுக் கொள்ளும் சூழல் ஆகியவற்றில் முன்னுதாரண மாற்றத்தை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இ - ஸ்மார்ட் வகுப்பறை ஆசிரியர்கள், மேம்படுத்தப்பட்ட கற்பிக்கும் முறைகளைப் பல்லூடக (Multimedia) துணை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தைச் சிறந்த முறையில் கற்றுக் கொடுக்கிறார்கள்.
இஸ்மார்ட் வகுப்பறை திட்டம், வன்பொருள், மென்பொருள், ஊடாடும் வெண்திரை, பல்லூடக தொகுப்பு ஆகியவற்றை வழங்கி நிர்மாணம் செய்து செயல்படுத்தப்படுகிறது. மேலும் உயர்நிலைப் பள்ளிகள் / மேல்நிலைப் பள்ளிகள் / உண்டு உறைவிடப்பள்ளிகள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி, மூன்று வருடத்திற்கும் அதற்கு மேற்பட்ட காலத்திற்கும் வன்பொருள் (Hardware) பராமரிப்பு மற்றும் அவ்வப்போது அரசு பரிந்துரைக்கும் பாடத் திட்டத்திற்கு ஏற்ப பல்லூடகத் தொகுப்புகளை மேம்படுத்துவது / மாற்றியமைப்பது ஆகியவை இத்திட்டத்தில் அடங்கியுள்ள செயல்முறைகள்.
எல்காட் e-Smart Class Room (e-SCR)
என்றழைக்கப்படும் இஸ்மார்ட் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் 231 பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குச் செயல்படுத்தியுள்ளது. இத்திட்டமானது கணினி சார்ந்த சேவைகள் பெறுதலில் நிலவிய பிளவுகளை வெற்றிகரமாக இணைத்துள்ளது.
மாணவர்களுக்கான பயன்கள்
ஆசிரியர்களுக்கான பயன்கள்:
பயிற்சி
ஆதாரம் : தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் துறை
கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020