অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்)

தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்)

முன்னுரை

தமிழ்நாடு மின்னணு நிறுவனம் இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ் 21.03.1977 அன்று நிறுவப்பட்ட, தமிழ்நாடு அரசுக்கு ழுழுவதும் சொந்தமான ஒரு தொழில் நிறுவனமாகும்.

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சேவை சார்ந்த நிறுவனங்களை உருவாக்குதல், அரசு துறைகளுக்கு வன்பொருள் கொள்முதல் செய்தல், மின்னாளுமை மற்றும் வன்பொருள் சேவைகள் ஆகியவற்றுக்குத் தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல் ஆகியன தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் முதன்மையான பணிகளாகும். மேலும், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் தகவல் தொழில்நுட்பவியல் பூங்காக்களை உருவாக்குதல், தமிழ்நாடு பெரும்பரப்பு வலையமைப்பு (TNSWAN),

தமிழ்நாடு மாநிலத் தரவு மையம் (TNSDC), பேரிடர் மீட்பு மையம் (DRC), அருகாமை பேரிடர் மீட்பு மையம் (NLDRC), மின்னஞ்சல் தீர்வு (e-mail Solution), மேகக்கணினியம் (Cloud Computing), தொழில் முனைவோர் மையங்களை ஏற்படுத்துதல், மடிக்கணினி வழங்குதல், இணையதளங்களை உருவாக்குதல், ஆதார் நிரந்தர பதிவு மையங்களை ஏற்படுத்துதல் போன்ற திட்டங்களை அமைத்து வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.

தமிழக அரசின் விருப்பம் கொள்முதல் முகமையாகவும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறையிடமிருந்து நிதியுதவி பெறும் பெரிய தகவல் தொழில்நுட்பவியல் திட்டங்களைச் செயல்படுத்தும் நிறுவனமாகவும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) விளங்குகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கான தகவல் தொழில்நுட்பவியல் மென்பொருள் ஏற்றுமதியில்  தகவல் தொழில்நுட்பவியல் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (எல்கோசெஸ்கள்) தமிழக அரசின் முன்முயற்சியின் படி, எல்காட் சென்னை , கோயம்புத்தூர், மதுரை (இரண்டு இடங்கள்), திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்றும் ஓசூரில் 8 தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவைகளுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கி உள்ளது.

மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் அவர்கள் எல்காட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவைகளுக்கான (IT/ITeS) சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு வியாபாரக் குறியாக 'எல்கோசெஸ்" என பெயரிட்டார். இவை தமிழ்நாட்டில் IT/ITeS முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒரு சிறந்த விருப்ப இடமாகவும் உருவாகியுள்ளது.

எல்கோசெஸ் - சோழிங்கநல்லூர், சென்னை

சென்னை சோழிங்கநல்லூரில், 377.08 ஏக்கர் நிலப்பரப்பில் எல்காட் நிறுவனம் ஒரு எல்கோசெஸ்ஸை உருவாக்கியுள்ளது. இந்த எல்கோசெஸ்சில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்வாக கட்டடம் கட்டுவதற்கான செலவையும் சேர்த்து எல்காட்டின் மொத்த முதலீடு (195.35 கோடி ஆகும். இந்த எல்கோசெஸ்சில் பின்வரும் 7 நிறுவனங்களுக்குக் குத்தகை அடிப்படையில் 259 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது:

இந்த நிறுவனங்கள் 95.30 இலட்ச சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப கட்டடத்தைக் கட்டி முடித்து 57,125 பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன.திருவாளர்கள் ஃபோர்ட் மோட்டார் பிரைவேட் லிட். 26.06 இலட்ச சதுர அடியில் தங்களுடைய குளோபல் டெக்னாலஜி மற்றும் வணிக வளாக கட்டடத்தைக் கட்டி வருகின்றது. திருவாளர்கள் விப்ரோ நிறுவனம் மேலும் 9.50 இலட்ச சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப கட்டட விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டுள்ளது.

எல்கோசெஸ் - விளாங்குறிச்சி, கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் விளாங்குறிச்சி கிராமத்தில் 62 ஏக்கர் நிலப்பரப்பில் எல்காட் ஒரு எல்கோசெஸ்ஸை உருவாக்கியுள்ளது. இந்த எல்கோசெஸ்சில் அனைத்து  உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்வாக கட்டடம் கட்டுவதற்கான செலவையும் சேர்த்து மொத்த முதலீடு (72.50 கோடி ஆகும்.

இந்த நிறுவனங்கள் 20.50 இலட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப கட்டடத்தைக் கட்டி முடித்து 13,500 பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன • இந்த எல்கோசெஸ்சில் திருவாளர்கள் விப்ரோ நிறுவனம் மேலும் 1.60 இலட்ச சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப கட்டட விரிவாக்க பணிகளை மேற்கொண்டுள்ளது.

எல்கோசெஸ் - இலந்தைகுளம், மதுரை

மதுரை இலந்தைகுளம் கிராமத்தில், 28.91 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு எல்கோசெஸ்ஸை எல்காட் உருவாக்கியுள்ளது. 60,205 சதுர அடி கொண்ட தகவல் தொழில்நுட்ப கட்டடம் மற்றும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைக் கட்டுவதற்காக எல்கோசெஸ்ஸில் 134.41கோடியை முதலீடு செய்துள்ளது.  இந்த எல்கோசெஸ்சில் பின்வரும் 5 நிறுவனங்களுக்குக் குத்தகை அடிப்படையில் 20.89 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் 2.30 இலட்ச சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப கட்டடத்தைக் கட்டி முடித்து 3,200 பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன.

இந்த எல்கோசெஸ்சில் திருவாளர்கள் எச்.சி.எல் இன்ஃபோசிஸ்டம்ஸ் லிட். நிறுவனம் 3.80 இலட்ச சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப கட்டட விரிவாக்க பணிகளை மேற்கொண்டுள்ளன.இந்த எல்கோசெஸ்சில் உள்ள 60,205 சதுர அடி கொண்ட தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தில் பின்வரும் 5 நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவை 630 பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன. இந்த எல்கோசெஸ்ஸில் நிலம் மற்றும் கட்டடத்தில் 100 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எல்கோசெஸ் - வடபழஞ்சி, மதுரை

மதுரை வடபழஞ்சி கிராமத்தில், 24517 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு எல்கோசெஸ்ஸை எல்காட் உருவாக்கியுள்ளது. 72,000 சதுர அடி கொண்ட தகவல் தொழில்நுட்ப நிர்வாக கட்டடம், இரயில்வே மேம்பாலம் கட்டுதல் மற்றும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்குதல், ஆகியவற்றிற்கு எல்கோசெஸ் 366.51 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்த இரயில்வே மேம்பாலம் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 04.01.2018 அன்று தொடங்கி வைத்தார்கள்.

இந்த எல்கோசெஸ்சில் பின்வரும் 7 நிறுவனங்களுக்குக் குத்தகை அடிப்படையில் 144 ஏக்கர் நிலம் ஒதுக்கீடும், 25 ஏக்கர் நிலம் சிறப்புப் பொருளாதார மண்டல அந்தஸ்து அல்லாத இடத்தில் ஒரு நிறுவனத்திற்கும் நிலம் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

எல்கோசெஸ் - நவல்பட்டு, திருச்சி

திருச்சி நவல்பட்டு கிராமத்தில், 147.61 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு எல்கோசெஸ் உருவாக்கப் பட்டுள்ளது. இதில் 123.23 ஏக்கர் பரப்பளவிற்குச் சிறப்புப் பொருளாதார மண்டல அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 60,000 சதுர அடி கொண்ட நிர்வாக மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டடம் மற்றும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை கட்டுவதற்காக 860.08 கோடியை எல்கோசெஸ் முதலீடு செய்துள்ளது.

இந்த எல்கோசெஸ்சில் பின்வரும் 8 நிறுவனங்களுக்குக் குத்தகை அடிப்படையில் 34 ஏக்கர் நிலம் ஒதுக்கீடும் 2 ஏக்கர் நிலம் சிறப்புப் பொருளாதார மண்டல அந்தஸ்து அல்லாத இடத்தில் ஒரு நிறுவனத்திற்கும் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழில்முனைவோர் மையம்

சென்னை மற்றும் கோயம்புத்தூர் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவை வழங்கும் நிறுவனங்களில் மனித வள மேம்பாட்டினை உயர்த்த, எல்காட் நிறுவனம், சென்னையிலுள்ள டைடல் பார்க்கில் 90 இருக்கை வசதி கொண்ட தொழில்முனைவோர் மையத்தை அமைத்துள்ளது.

இதில் தற்போது 17 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன மற்றும் 13 நிறுவனங்கள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு தொடக்க நிலையிலிருந்து விடுபட்டு தொழில்முனைவோர் மையத்திலிருந்து வெளியேறி உள்ளன.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி 50 இருக்கை வசதி கொண்ட ஒரு தொழில்முனைவோர் மையம் (2.07 கோடி முதலீட்டில் டைடல் பார்க் கோயம்புத்தூர் லிட், கோயம்புத்தூரில் வாடகை அடிப்படையில் நிறுவப்பட உள்ளது. இந்த  தொழில்முனைவோர் மையத்திற்கு நாஸ்காம் நிறுவனம் ஒரு அறிவுசார் பங்குதாரராகச் செயல்படும்.

சோழிங்கநல்லூர் எல்கோசெஸ்ஸில் ஒரு தகவல்தொழில் நுட்ப கட்டடம் அமைத்தல் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி சோழிங்கநல்லூரில் உள்ள எல்கோசெஸ்ஸில் 2.33 இலட்ச சதுர அடியில் 884.42 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்ப கட்டடம் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதல், அரசு ஆணை எண் 18, தகவல் தொழில்நுட்பவியல் துறை, நாள் 9:10.2017ல் வெளியிடப்பட்டது. இதற்கான விரிவான திட்டம் மற்றும் ஒப்பந்தபுள்ளி படிவம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான ஒப்பந்தபுள்ளி விரைவில் கோரப்பட உள்ளது.

கிராமப்புற வணிக வெளிப்பணி மையங்கள் (RBPO)

  • மேம்படுத்தப்பட்ட வணிக வெளிப்பணிக் கொள்கை 2012, 01.06.2012 அன்று வெளியிடப்பட்டது. அதிக எண்ணிக்கையிலான தொழில்முனைவோர்களை ஈர்த்து கிராமப்புற பகுதிகளில் புதிய வணிக வெளிப்பணி மையங்கள் அமைத்து, அதன் முலம் தமிழ்நாட்டில் கிராமங்களின் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும். மேலும், நகரங்கள் மற்றும் கிராமங்கள் இடையே ஒரு இணைப்பு பாலமாக இருந்து கிராமப்புற முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது.
  • சமுதாய மற்றும் பொருளாதார வசதிகளில் பின்தங்கியுள்ள தகுதி வாய்ந்த கிராமப்புற இளைஞர்களுக்குப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கி அதன் மூலம்அவர்கள் நகரங்களுக்குக் குடிபெயராமல் இருக்க செய்வது இந்த கொள்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
  • வணிக வெளிப்பணி நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள், கிராம பஞ்சாயத்துகளில் அமைந்துள்ள சொந்த / வாடகை வளாகத்தில் அல்லது கல்வி நிறுவனங்களில் அவர்களது கிராமப்புற வணிக வெளிப்பணி மையங்களை நிறுவ இம்மையம் ஊக்கப்படுத்துகிறது.
  • ஒவ்வொரு கிராமப்புற வணிக வெளிப்பணி மையத்திற்கும் அதிகபட்சமாக 75 இலட்சத்திற்குட்பட்ட மூலதன மானியமும் (வன்பொருள் மற்றும் உபகரணங்கள் வாங்குதல்) *2.25 இலட்சத்திற்குட்பட்ட பயிற்சி மானியமும் அளிப்பதற்கு இக்கொள்கையில் வழிவகை உள்ளது.
  • இக்கொள்கையின்படி மானியம் பெற ஒவ்வொரு கிராமப்புற வணிக வெளிப்பணி மையமும் குறைந்தபட்சம் 50 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். எல்காட் நிறுவனத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஒத்துழைப்புடன் திருவாளர் சதர்லேண்ட் குளோபல்  சர்வீஸஸ், தங்களது கிராமப்புற வெளிப்பணி மைய நிறுவனத்தை நாவலூர் - குட்டப்பட்டு கிராமம், திருவரங்கம், திருச்சி மாவட்டத்தில் அமைத்து, அது முன்னாள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 03.06.2013-ல் திறந்து வைக்கப்பட்டது.

கொள்முதல் பிரிவு

  • அரசுத் துறைகளுக்குத் தகவல் தொழில்நுட்பப்பிரிவு சார்ந்த வன்பொருள்களைத் துறைகளுக்குக் கொள்முதல் செய்யவும் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவைகளை வழங்கவும், விருப்பம் கொள்முதல் முகமையாக எல்காட் நிறுவனத்தை தமிழக அரசு நியமித்துள்ளது. எல்காட் நிறுவனம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வன்பொருள்களை மூலக்கணினிகள் (Servers), மேசைக்கணினிகள் (Desktop Computers), மடிக்க ணினிகள் (Laptop Computers), அச்சுப்பொறிகள் (Printers), ஒளிஉணரி (Scanner) தடையில்லா மின்சாதனம் (UPS), படவீழ்த்தி (Projector), திறன்பேசி (Smart Phone), தகவல் தொழில்நுட்ப நுகர்வுப் பொருட்கள் (IT Consumables) மற்றும் அனைத்து வலையமைப்பு சார்ந்த கருவிகளை (Network Devices) மலிவான விலையில் கொள்முதல் செய்து பல துறைகளுக்கும் வழங்கி வருகிறது.
  • மேலும் எல்காட் நிறுவனம் இணைய நெறி முறை சார்ந்த ஒளிப்படக் கண்காணிப்புக் கருவி (IP Camera Surveillance System), மற்றும் சிறப்புப் பொருட்களான ஊர்தி கண்காணிப்பு முறை (Vehicle Monitoring System), தொலை மருத்துவ உபகரணங்கள் (Telemedicine Equipments) முதலியவற்றைக் கொள்முதல் செய்து வழங்கி வருகிறது.
  • எல்காட் நிறுவனம், அனைத்து தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த உற்பத்திப் பொருட்களை முக்கிய அரசுத் துறைகளான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நில அளவை மற்றும் நிலத்தீர்வைத் துறை, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை, போக்குவரத்துத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, வேளாண்மை துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, வணிகவரி மற்றும் பதிவுத் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி, அரசு கேபிள் டிவி நிறுவன ம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து நீதி மன்றங்கள், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை போன்ற நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.
  • மின் ஆளுமை திட்டத்தின் மூலம் அறிவிக்கப்படும் அரசின் அனைத்து திட்டங்களுக்கும் தேவையான மின்னணு உபகரணங்கள் (மின்னணு வருகைப் பதிவேடு மற்றும் ஆதார் இணைப்பு, ஆதார் வழி விரல் ரேகை பதிவு சாதனங்கள்) அனைத்தும் விலைப்புள்ளி ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்து வழங்கப்பட்டு வருகின்றன.

மடிக்கணினி வழங்கும் திட்டம்

மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்குச் சிறந்த திறன்களைப் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால், 15.09.2011-ல் தொடங்கி வைக்கப்பட்டது.

ஏழாவது கட்டமாக, 2017-18 கல்வி ஆண்டுக்காக, அரசு ஆணை வழங்கப்பட்டு, போட்டித் தேர்வுகள் எழுதுவதற்குப் பதிவு செய்தவர்கள் உட்பட 42,473 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. மேலும், 473 இலட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்ய உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் ஜூன் 2018-க்குள் கோரப்பட்டு, வழங்கும் பணி செப்டம்பர் 2018 முதல் தொடங்கும்.

மின் ஆளுமை

  • தமிழக அரசு துறைகள் மற்றும் தமிழக அரசு நிறுவனங்களில், மின்னணுச் சார்பு இடைவெளியைக் குறைப்பதிலும், தகவல் தொழில்நுட்பங்களை விரிவுபடுத்துவதிலும் முக்கிய ஊக்கியாக எல்காட் செயல்பட்டு வருகிறது. எல்காட், அரசு துறைகளுக்கு, தகவல் தொழில்நுட்ப தீர்வு மற்றும் ஆதரவு சேவைகள் வழங்குவதால் துறைகளுக்கு இடையேயும் மற்றும் துறைகளுக்கு உள்ளேயும் செயல்திறன் மேம்படுத்தப்பட்டு குறுகிய கால அளவில், குடிமக்களுக்குச் சேவைகள் சிறப்பாகக்  கிடைக்க வழி வகுக்கிறது. அரசு துறைகள் தடைகளற்ற சேவைகள் வழங்குவதற்கு ஏதுவாக எல்காட், திட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே, துறைகளின் வெவ்வேறு நடவடிக்கை தேவைகளை ஆய்வு செய்து திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தும் வரை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. வசதி மேலாண்மை சேவைகளையும் (FMS) வழங்கிவருகிறது
  • இம்முனையத்தின் செயல்பாட்டிற்காக, இரண்டு வருடங்களுக்கு, அரசாணை எண் 21, நாள் 24.1.2017 மூலமாக, தமிழக அரசு, 8212 கோடி நிர்வாக ஒப்புதல் வழங்கி, முதல் ஆண்டு செயல்பாட்டிற்கென 1.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
  • அரசுத் துறைகள் மற்றும் தமிழக அரசு நிறுவனங்களில் சேகரிக்கப்பட்ட தரவுத் தொகுப்புகள், ஆவணங்கள், சேவைகள், மென்பொருள் கருவிகள் மற்றும் செயலிகளைப் பொது மக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடுவதே இந்த வெளிப்படை அரசு தரவு முனையத்தின் சீரிய நோக்கமாகும். இந்த அரசு தரவு தளம் உருவாக்கப்பட்டு https://tn.data.gov.in/ என்னும் இணைய முகவரியில் (URL) இயங்கி வருகிறது.
  • ஆரம்பக்கட்டமாக 118 துறைகளிலிருந்து 240 அரசு அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு பணிமுகாம் சென்னையில் 11.10.2017 அன்று நடத்தப்பட்டது. 20.03.2018 அன்று வரை, 64 துறைகளிலிருந்து முதன்மை தரவு அலுவலர்கள் பதிவு செய்துள்ளனர். 17 அரசு துறைகளின் 486 வெவ்வேறு தரவுத் தொகுப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் அடுத்தடுத்த மறு ஆய்வு கூட்டங்கள், உடனடி பகிரப்படக்கூடிய தரவுகளைச் சேகரிப்பதற்காக நடத்தப்பட்டு வருகின்றன.

இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான மேகக்கணினி மற்றும் இணையப் பதிவேற்றச் சேவைகள்

தமிழக அரசு, இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் பயனடையும் பொருட்டு, கட்டணமின்றி சுயசேவை முறையில் இணையப் பதிவேற்றச்சேவைகளைச் செய்து கொள்ள மேகக்கணினி சேவையைச் செயல்படுத்தியுள்ளது.

மேகக்கணினி

வியத்தகு முறையில் எளிமைப்படுத்தப்பட்ட கட்டமைப்பு மற்றும் கணினி வளங்களைப் பகிர்ந்து கொள்ள, மேகக்கணினி சேவையானது உறுதி செய்கிறது.

இத்திட்டத்தின் இரண்டு முக்கிய நன்மைகள்:

  1. எளிய பயன்பாடு
  2. பயன்மிகு கட்டணம்

இத்திட்டமானது உட்கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கிய சேவையகம், சேமிப்பு செய்வதற்கான கணினி சேவைகள் ஆகியவற்றை வழங்குகிறது.

  • இந்தத் திறமூல இயங்குதளமானது திறமூல மென்பொருள்களான BOSS, Ubuntu மற்றும் CentOS ஐ வழங்குகிறது.
  • இந்த மேகக்கணினியானது திறந்த அடுக்குகள் அடிப்படையிலான மேகதூத் திறந்த வள் மேகக்கணினி சூழலில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய மென்பொருளை வழங்கப்பட்டுள்ள இந்த மேகக்கணினியில் நிறுவலாம்.
  • இந்தச் சேவைகளை www.tnstudentcloud.elcot.in என்ற வலைமுகவரி மூலம் பெற முடியும்.
  • 01.03.2018 இருந்து இதுவரை 100 மாணவர்கள் பதிவு செய்து, இந்த மேகக்கணினி சேவையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

மின்னணு (ஸ்மார்ட்) வகுப்பறை

இ - ஸ்மார்ட் வகுப்பறை தற்போதைய கற்பிக்கும் முறை பயிற்சிகள் மற்றும் கற்றுக் கொள்ளும் சூழல் ஆகியவற்றில் முன்னுதாரண மாற்றத்தை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இ - ஸ்மார்ட் வகுப்பறை ஆசிரியர்கள், மேம்படுத்தப்பட்ட கற்பிக்கும் முறைகளைப் பல்லூடக (Multimedia) துணை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தைச் சிறந்த முறையில் கற்றுக் கொடுக்கிறார்கள்.

இஸ்மார்ட் வகுப்பறை திட்டம், வன்பொருள், மென்பொருள், ஊடாடும் வெண்திரை, பல்லூடக தொகுப்பு ஆகியவற்றை வழங்கி நிர்மாணம் செய்து செயல்படுத்தப்படுகிறது. மேலும் உயர்நிலைப் பள்ளிகள் / மேல்நிலைப் பள்ளிகள் / உண்டு உறைவிடப்பள்ளிகள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி, மூன்று வருடத்திற்கும் அதற்கு மேற்பட்ட காலத்திற்கும் வன்பொருள் (Hardware) பராமரிப்பு மற்றும் அவ்வப்போது அரசு பரிந்துரைக்கும் பாடத் திட்டத்திற்கு ஏற்ப பல்லூடகத் தொகுப்புகளை மேம்படுத்துவது / மாற்றியமைப்பது ஆகியவை இத்திட்டத்தில் அடங்கியுள்ள செயல்முறைகள்.

எல்காட் e-Smart Class Room (e-SCR)

என்றழைக்கப்படும் இஸ்மார்ட் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் 231 பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குச் செயல்படுத்தியுள்ளது. இத்திட்டமானது கணினி சார்ந்த சேவைகள் பெறுதலில் நிலவிய பிளவுகளை வெற்றிகரமாக இணைத்துள்ளது.

மாணவர்களுக்கான பயன்கள்

  • புதிய மற்றும் புதுமையான வகையில் கற்றுக் கொள்ளும் சூழலை உருவாக்குவது
  • தொடுதிரை மற்றும் தொடுபலகை ஆகிய மேம்படுத்தப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்பங்களுடன் பணியாற்றுவது
  • மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான முறையில் கற்றுக்கொள்வது மேலும் பாடசம்மந்தமான அறிவை ஆழமாக மேம்படுத்திக் கொள்வது
  • முப்பரிமான படங்கள் மற்றும் அனிமேஷன்உதவியுடன் பாடத்திட்டத்தை எளிதாக புரிந்து கொள்வது
  • மாணவர்களின் நவீன தகவல் தொழில்நுட்பத் திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்திக் கொள்வது

ஆசிரியர்களுக்கான பயன்கள்:

  • பலவிதமான கற்பித்தல் முறைகளையும், சிக்கல் தீர்க்கும் திறன்களையும் பெறுவது மற்றும் புதுமையான தொழில்நுட்பத்திற்குப் பழகுவது தன்னியல்பான விநாடி வினா நடத்துவது மற்றும்
  • பல்லூடகங்கள் (Multimedia) மற்றும் படங்களுடன் கூடிய தேர்வுகளைத் திட்டமிடுவது
  • மாணவர்களுக்கேற்ற வகையில் கற்பிக்க உதவுவது
  • ஆசிரியர்கள் பாடத்திட்டத்தைப் பகிர்ந்து கொள்வது, பாடங்களைத் திட்டமிடுவது,
  • தேர்வுகள் மற்றும் அறிக்கைகளை உடனடியாக தயார் செய்வது

பயிற்சி

  • 2007 ஆம் ஆண்டிலிருந்து, தமிழக அரசின் துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குக் கணினி சார்ந்த பயிற்சி வழங்கி வருவதில் எல்காட் பெரும்பங்கு வகிக்கிறது. மேலும், இதற்காக எல்காட், பெருங்குடி, சென்னையில் 75 நபர் அமர்ந்து பயிற்சி பெரும் வகையிலும், மாவட்டங்களில் 15 நபர் அமர்ந்து பயிற்சி பெரும் வகையிலும், போதுமான கட்டமைப்பு வசதிகளைச் செய்துள்ளது.
  • பயிற்சியாளரைப் பயிற்றுவித்தல் திட்டத்தின் மூலமாக, windows மற்றும் Linux இயக்கிகள் (Suse Linux, BOSS, etc.) பயன்பாட்டு மென்பொருள் ஆகியவற்றிற்கு விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பயிற்றுநருக்குப் பயிற்சி திட்டத்தின் மூலமாகப் பயன்பாட்டு மென்பொருள் பயிற்சி வழங்கப்படுகிறது.  பயிற்சி நிறைவுறும் பொழுது, அப்பயிற்சியில் கலந்து கொண்டோருக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட பயன்பாட்டு மென்பொருள்களுக்குப் பயிற்சி வழங்குவதற்காக அந்தந்தத் துறைகளுக்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளையும் வழங்கி வருகிறது.
  • தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் பல்வேறு அரசுத் துறைகளிலிருந்து இதுவரை 1,17726 பேர் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள எல்காட் பயிற்சி மையத்தில், நகர மற்றும் ஊரகமைப்பு துறையினருக்கு பயிற்சி போன்றவையாகும்.
தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு
  • தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு என்பது தகவல் தொழில்நுட்ப சேவைகளையும், பராமரிப்பையும் வழங்கும் அடித்தளம் / கட்டமைப்பு ஆகும். இது அனைத்து வன்பொருள், மென்பொருள், வலையமைப்பு, பயன்பாடுகள் மற்றும் தரவுத்தளங்களின் ஒருங்கிணைந்த கட்டமைப்பு ஆகும். அதிகரித்து வரும் தகவல் தொழில்நுட்ப சூழ்நிலையில், பெரும்பாலான அரசு துறைகள் தங்கள் சேவைகளைத் தகவல் தொழில்நுட்ப செயல்முறைகளின்படி வழங்கி பராமரித்து வருகின்றன.
  • பல அரசு துறைகளின் டிஜிட்டல் முறை நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்து, தடையற்ற ஆன்லைன் சேவைகளை உறுதிப்படுத்துவதற்கான தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்புகளைத் தமிழக அரசு நிறுவியுள்ளது.

ஆதாரம் : தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் துறை

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate