ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் (பத்தாண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்டு) ஏற்படும் பூமியின் தட்பவெப்ப நிலையின் வேறுபாடே தட்பவெப்ப மாற்றம் எனப்படும். புவி மற்றும் மண்ணியல் ரீதியாக தட்பவெப்பமாற்றம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படுகிறது. புவி வரலாற்றில் உறைபனிக் காலங்கள், இடைக்காலங்கள் என மாறி மாறி பல்வேறுபட்ட தட்பவெப்ப நிலைகள் வந்து மறைந்துள்ளன.
இத்தகைய மாற்றங்கள் அனைத்தும் புவியியல் காரணிகள் மற்றும் சூரிய ஒளிக்காற்றை மாறுதலாலும் மாறுபடுகிறது. சமீப காலமாக புவி வெப்பமடைவது அதிகமாக இருப்பதால் புவிவாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. 1900ம் ஆண்டில் இருந்து இயற்கையின் செயல்பாடுகளை விட மனிதனின் இடையூறான நடவடிக்கைகள்தான் தட்பவெப்ப மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பூமியின் காலநிலையில் ஏற்படும் வெப்ப விளைவுகளுக்கு காரணம் மனிதனின் செயல்களே ஆகும். தொழிற்சாலை மற்றும் நிலக்கரி சார்ந்த தொழிற்கூடங்களிலிருந்து வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்களான மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு ஆகியவை காற்று மண்டலத்துடன் கலப்பதால் புவியின் வெப்பநிலையில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது.
கடந்த நூற்றாண்டுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் அதிக அளவில் பசுமை இல்ல வாயுக்கள் வெளிவிடப்பட்டுள்ளதால், வளி மண்டலம் அதிக வெப்பமடைவதோடு பூமியின் வெப்ப நிலையும் உயர்ந்து புவியில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.
பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு போன்ற கற்படி எரிசக்தி மூலாதாரங்கள் கண்டறியப்படுவது, எரிப்பது, காடழித்தல், ஈரநில விவசாயம், கால்நடைகள் போன்றவை பசுமை இல்ல வாயுக்களின் மூலாதாரங்கள்.
சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில், பூமியில் மட்டுமே உயிர்கள் வாழக்கூடிய ஆதாரம் உள்ளது. பூமியின் தனித்துவமான சூழல் காரணமாக படிப்படியான பரிணாம முன்னேற்றங்களைக் கண்டு உயிர் கோளம் உருவாக காரணமானது. நீர், வாயு மண்டலத்தில் பிராணவாயு மற்றும் பூமி மேற்பரப்பில் சரியான வெப்பநிலை ஆகியவை பூமியில் உயிர்கள் தோன்ற காரணமானது.
புவியின் வாயு மண்டலத்தில் 78 சதவிகிதம் நைட்ரஜனும், 21 சதவிகிதம் பிராணவாயுவும் மற்றும் 0.036 சதவிகிதம் கரியமிலவாயுவும் உள்ளது. இவ்வாயு மண்டலம் உயிர் வாழவும் தொடரவும் முக்கியமானது. பிராணவாயு சுவாசிப்பதற்கு பயன்படுகிறது. கரியமிலவாயு தாவரங்களை ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுத்துவது மட்டுமல்லாது பூமியின் வெதுவெதுப்பான சூழலை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
சூரியனில் இருந்து வரும் சக்தியில் 30 சதவிகிதம் மீண்டும் வானை நோக்கி பிரதிபளிக்கப்பட்டு எஞ்சியது பூமியை அடைந்து காற்றை, கடலை, நிலத்தை மற்றும் பூமியின் மேற்பரப்பை வெதுவெதுப்பாக்கி சராசரி வெப்பநிலையை 15 டிகிரியாக இருக்க உதவுகிறது. அதேபோல் கரியமில வாயு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை புவி பரப்பில் வெப்பத்தை மறு உமிழ்வு செய்து வெப்பநிலை உயர காரணமாகிறது.
இத்தகைய வாயுக்களை பசுமை இல்ல வாயு என்கிறோம். கரியமிலவாயு போன்ற பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிப்பால் வாயு மண்டலத்தில் வெப்ப நிலை அதிகரிக்கிறது. வாயு மண்டலத்தில் அதிகரிக்கும் வெப்பத்தால் உயிர் கோளத்திலும் உயிர்கள் மீதும் பல்வேறு பட்ட பாதிப்புகள் உண்டாகும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
கடல் மட்டம் உயர்விலிருந்து உயிர்களின் அழிவுவரை தட்பவெப்ப மாற்றம் மனித இனத்தை மட்டுமல்லாது பூமியின் சுற்றுச்சூழலையும் பலவழிகளில் பாதிக்கிறது. பெரும் வெள்ளம், கடும் வறட்சி, புயல், மற்றும் மோசமான தட்பவெப்ப நிலை இன்றைய உலகம் முழுவதும் காணப்படுகிறது.
சென்ற நூற்றாண்டிலேயே பூமியின் வெப்பம் 0.6முநீ மேல் உயர்ந்துள்ளது. எதிர்வரும் பத்து ஆண்டுகளில் இந்த நிலைமை மேலும் மாறலாம். எதிர்காலத்தில் பூமியின் வெப்பநிலை 1.4முநீ முதல் 5.8முநீ வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனித செயல்களால் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்கள் எண்ணற்கறிய அளவில் பருவமாற்றங்களையும் புவி மாற்றங்களையும் ஏற்படுத்தலாம். இத்தகைய விளைவுகள் சுற்றுச்சூழல், பொருளாதாரம், சமூகம் மற்றும் பல்வேறு காரணிகளையும் உட்கொண்ட கூட்டு விளைவாக மனித இனம் மற்றும் உயிர்களின் மீது தாக்கமாக விடியும் அபாய நிலை உள்ளது.
ஆதாரம் : சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்
கடைசியாக மாற்றப்பட்டது : 6/20/2020
பருவநிலை மாற்றத்தில் உலகத்தின் எதிர்காலம் பற்றிய த...
மாநிலத்தில் நகர்ப்புற குளிரூட்டும் திட்டத்தை செய...
நகர்ப்புறக் குடியிருப்புகளில் பருவநிலை மாற்றத்தின்...
பருவநிலை மாற்றம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட...