অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

கண் புரை நோய்

கண் புரை நோய்

நோக்கம்

கண்புரை (cataract) என்பது கண் வில்லையில் (lens) ஒளி ஊடுருவுதம் தன்மையைக் (transparency) குறைக்கும் ஒரு நிலைமை ஆகும். கண்ணில் திரை விழுந்துள்ளது என்றும் சொல்வதுண்டு. திரை என்றால், தோல் சுருக்கம் / கண்புரை, என்று இரு பொருள் கொள்ளலாம். கண்புரைகள் தன் இயல்பு-நிலையிலிருந்து மாற்றமடைந்த ஒருவித புரதத்தால் ஆனவை; இவை விழித்திரையில் (retina) விழும் ஒளியின் அளவை குறைக்கவோ அல்லது முழுமையாகத் தடுக்கவோ செய்கின்றன. இது பெரும்பாலும் முதிர்ந்த வயதில் ஏற்படக்கூடிய ஓர் நிலை ஆகும். அச்சமயத்தில் அவர்களின் கிட்டப்பார்வை கூடுதலாகி கண்வில்லை சற்றே மஞ்சளாக மாறி ஒளிபுகா வண்ணம் இருப்பதைக் காணவியலும். அவர்களுக்கு நீல நிறத்தை காண்கின்ற திறனும் குறையும். பல ஆண்டுகள் ஆன பின்பும் கண்புரை (பெரும்பாலும்) பெரியளவு தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும் புரை முற்றிய பின்பு விழித்திரையை அடையும் ஒளியின் அளவு வெகுவாகக் குறைந்து பார்வையில் குறைவோ பார்வை முற்றிலும் பறிபோகக்கூடிய நிலையோ ஏற்படலாம். இதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். பொதுவாக இது இரு கண்களிலும் ஏற்படுமாயினும் ஒரு கண்ணிற்கும் மற்றொன்றிற்கும் இடையே கால இடைவெளி இருக்கும்.

வயதானவர்களுக்கு ஏற்படும் கண்புரை (senile cataract) முதலில் சற்று ஒளிபுகாத்தன்மையுடன் துவங்கி, வில்லை பெருத்து பின்னர் முழுமையும் ஒளி புகாவண்ணம் சுருங்கும் தன்மையானது. தவிர மார்காக்னிய கண்புரை (Morgagnian cataract) கண்வில்லையின் புறப்பகுதி (cortex) பால் போன்ற திரவமாக வகையில் மாறி தடிப்பை உண்டாக்கும்; இதனால் கண்வில்லையின் உறை உடைபட்டு வழியலாம். சரியாக சிகிட்சை அளிக்கப்படாவிட்டால் குளுக்கோமா என்ற கண் நோய் உருவாகிட காரணமாக அமையும். சில முதிர்ந்த கண்புரையில் வில்லையை இணைத்திருக்கும் தசைநார்கள் உள்ளேயோ வெளியேயோ இடம் பெயரலாம்.

ஆங்கிலத்தில் இதன் பெயரான காடராக்ட் என்பது இலத்தீனில் நீர்வீழ்ச்சி என்பதற்கான சொல் cataracta என்பதிலிருந்து வந்தது. தெளிவான நீர் ஓர் அருவியிலிருந்து கொட்டும்போது வெண்மையாக காட்சியளிப்பது போன்று கண்பார்வை மங்கலை இது குறிக்கிறது. பேச்சுவழக்கில் ஆங்கிலத்தில் இது முத்து (pearl,pearl eyed) என்று அழைக்கப்படுகிறது.

அறிகுறிகளும் நோய்த்தன்மையும்

கண்புரை முதிர்ந்த நிலையில் பார்வை முற்றிலும் குறைபடுகிறது. துவக்க காலங்களில் கண்பார்வையில் சற்றே திறன் குறைந்து வெளிச்சமான பொருட்களைக் காண்கையில் கண் கூசும். இரவு நேரங்களில் வண்டி ஓட்டுபவர்கள் எதிர்வரும் வாகனங்களின் ஒளியால் அவதியுறுவர். ஒளிமாறுபாடுகளைக் கண்டறியும் திறன் பாதிக்கப்படும். இதனால் நிழல்கள், வண்ண மாற்றங்கள், வரிவடிவங்கள் காண்பது கடினமாகும். இந்த அறிகுறிகளைக் காணின் கண்மருத்துவர் ஒருவரை நாடுதல் வேண்டும்.

நகரப்பகுதிகளில், சர்க்கரைநோய் போன்ற காரணிகளால் புரை தோன்ற வாய்ப்புகள் உள்ளவர்கள் தெருவிளக்கினைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் கண்டால், அதிலும் ஒரு கண்ணில் மட்டும், கண்மருத்துவரை நாடுதல் மிகவும் தேவையாகும்.

காரணிகள்

கண்புரை நோய் பலவித காரணங்களால் வருகின்றன:

புற ஊதாக்கதிர்களுக்கு நெடுங்காலமாக கண்ணை வெளிப்படுத்துவது

  • சர்க்கரை நோயின் தாக்கம்
  • இரத்த அழுத்த நோயின் தாக்கம்

பயங்கரமான அடி

இவை கண்வில்லையின் புரதங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. பிறக்கும்போது அல்லது மிக இளமையில் கண்புரை ஏற்படுவது மரபுவழியினால் குடும்பத்தின் வரலாறு காரணமாக அமையும்.

தவிர கண்ணிற்கு ஏற்படும் காயங்களாலும் ஏற்படலாம். ஐசுலாந்து விமான ஓட்டிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி வணிக விமானங்களை ஓட்டுபவர்களிடம் கண்புரை வருவதற்கு மற்றவர்களை விட மூன்று மடங்கு வாய்ப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது வான்வெளியில் அவர்கள் கூடுதல் கதிர்வீச்சிற்கு எதிர்படுவதால் நிகழ்வதாக ஆய்வு கூறுகிறது.[6] இதேபோல அகச்சிவப்புக் கதிர்களுக்கு எதிர்பட்ட கண்ணாடி ஊதுபவர்கள் போன்றோரும் இதே போன்ற வாய்ப்பினைக் கொண்டுள்ளனர். நுண்ணலை கதிர்களும் கண்புரை வரக் காரணமாகும். ஒவ்வாமை நிலைகளும் சிறுவர்களிடையே புரைநோய் வரக் காரணமாக அமைந்துள்ளது.

கண் புரை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, வளர்ந்து கொண்டோ அல்லது நிலையாகவோ, மென்மையாகவோ அல்லது வலிதாகவோ இருக்கலாம்.

ஸ்டீராய்ட் போன்ற சில மருந்துகளும் கண்புரை தோன்றக் காரணிகளாக அமைகின்றன.

கண்புரை மையப்புரை (nuclear), புறத்துபுரை (cortical), முதிர்ந்த புரை (mature), மிகமுதிர்ந்த புரை (hypermature) என வகைப்படுத்தப்படுகின்றன. மேலும் அவற்றின் இடத்தைப் பொறுத்து வெளிப்புறப் புரை (பெரும்பாலும் மருந்துகளால்)[8][9]) மற்றும் உட்புறப் புரை (பெரும்பாலும் வயதானவர்களிடையே) எனவும் பிரிக்கப்படுகின்றன.

புரையின் வகைகள்

கண்ணில் ஏற்படும் புரை பல வகைப்படும். பெரும்பாலான புரைகள் லென்ஸில் ஏற்படும் இரசாயண மாற்றத்தினால் ஏற்படுகின்றன.

முதுமைப் புரை

பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இப்புரை ஏற்பட வாய்ப்புண்டு. புரைகளில் 80 சதவிகிதம் முதுமைப் புரையாகும்.

பிறவிப் புரை

குழந்தைகளுக்கு அபூர்வமாக இந்தப் புரை நோய் ஏற்படுகிறது. இது கர்ப்பமாக இருக்கும் தாய்க்கு உண்டாகும் நோயாலோ அல்லது பரம்பரை காரணமாகவோ வரலாம்.

கண்ணில் அடிபடுவதால் வரும் புரை

இந்தப்புரை எந்த வயதினருக்கும் வரலாம். பலமான அடி, ஊசி முனைக்காயம், வெட்டுக்காயம், அதிகமான வெப்பம், இரசாயனப் பொருட்கள் போன்ற காரணங்களால் லென்ஸ் பாதிக்கப்பட்டு புரை உண்டாகலாம்.

பிற நோய்களால் ஏற்படும் புரை

கண்நீர் அழுத்த நோய், கிருஷ்ணபடல அழற்சி, நீரழிவு நோய், கண்ணுக்குள் வளரும் கட்டி போன்ற காரணங்களாலும் புரை உண்டாகலாம்.

மருந்துகளால் ஏற்படும் புரை

நீண்ட நாட்கள் ஸ்டீராய்டு சொட்டு மருந்துகளை உபயோகிப்பதாலும், மாத்திரைகளாக உட்கொள்வதாலும் புரை ஏற்படும். குறிப்பாக ஆஸ்துமா மற்றும் மாற்று சிறுநீரக நோயாளிகளுக்கு இப்புரை வர வாய்ப்புகள் அதிகம்.

தடுப்பு

அறிவியல் முறையிலான தடுப்பு வழிகள் எதுவும் அறியப்படவில்லை எனினும் சூரிய ஒளியிலிருந்து காக்கும் குளிர்க்கண்ணாடிகள் புற ஊதாக்கதிர்களை வடிகட்டி புரை தோன்றும் வயதைத் தள்ளிப் போடலாம் எனக் கூறப்படுகிறது.[10][11] ஆக்சியேற்றிப்பகைகளான உயிர்சத்துகள் A, C மற்றும் E முதலியன அவை இயற்கையாக விளங்கும் உணவுப்பொருட்களை உண்பதனால் நோய்வரும்.

சிகிச்சை

பொதுவான சிகிட்சை முறை, கண்புரை அறுவை சிகிட்சை செய்யத்தகுந்த நிலைக்கு முதிர்ந்த பிறகு, கண்வில்லை வைக்கப்பட்டுள்ள உறையில் ஓர் கிழிசலை ஏற்படுத்தி மேகமூட்டமான வில்லையை நீக்குவதே ஆகும். இவ்வாறு கண்வில்லையை நீக்குவதில் இருவகை அறுவை முறைகள் உள்ளன:

  • உறையிலிருந்து வில்லையை நீக்குதல் (extracapsular cataract extraction, or ECCE)
  • உறையுடன் வில்லையை நீக்குதல் (intracapsular cataract extraction, or ICCE).

முதல்முறையில் கண்வில்லையை மட்டுமே அறுவை சிகிட்சை மூலம் நீக்கப்படும். பெரும்பாலான வில்லையுறை அப்படியே இருக்கும். மிக கூடுதலான அதிர்வெண் உடைய ஒலி அலைகளால் கண்வில்லை சிறுதுகள்களாக உடைக்கப்பட்டு (phacoemulsification) வெற்றிட உறிஞ்சி வழியாக உறிஞ்சப்படும்.

  • இரண்டாம்(ICCE) முறையில் கண்வில்லை அதன் உறையுடன் அறுவை சிகிட்சை மூலம் நீக்கப்படும். இது தற்போது பெரிதாக பயன்படுத்தப்படுவதில்லை.
  • இரண்டு முறைகளிலும் புரைவிழுந்த கண்வில்லை நீக்கப்பட்டு அதனிடத்தில் நெகிழ்வினால் ஆன வில்லையொன்று நிலையாகப் பொருத்தப்படுகிறது. நவீன வில்லை தொழில்நுட்பத்தில் முன்னதாக கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை குறை இருந்தவர்களுக்கு இந்த வில்லையில் அதற்கான திருத்த வடிவமைப்பும் மேற்கொள்ளப்படுவதால் அறுவை சிகிட்சைக்குப் பின்னர் தனியாக கண்ணாடி எதுவும் அணிய வேண்டியதில்லை.
  • கண்புரை அறுவைகள் உடலின் அப்பகுதியில் மட்டும் தாக்கமேற்படுத்தும் மயக்க மருந்துகளுடன் செய்யப்படுவதால் நோயாளி அன்றே வீடு திரும்பலாம்.
  • கண்வில்லையுறை நீக்கப்படும் இரண்டாம் முறையில் செயற்கை வில்லையை கண்ணினுள்ளே பொருத்த வியலாது. அவர்களுக்கு தடித்த கண்ணாடிகள் அணிய வேண்டியிருக்கும். அத்தகைய தடித்த கண்ணாடிகளின் ஒளிப்பண்புகளால் ஜாக் இன் தி பாக்ஸ் போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இந்தக் கண்ணாடிகளை பராமரிப்பதும் மிகவும் கடினமாகும். இக்காரணங்களால் கண்ணினுள் வில்லைகள் (IOL) பொருத்தவியலும் முதல் முறை நவீன மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது; நோயாளிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது.

நோய் வீச்சு

வயதினால் ஏற்படும் கண்புரையால் பாதிக்கப்பட்டவர்கள். பல நாடுகளில் அறுவை சிகிட்சைச் சேவைகள் போதுமானதாக இல்லையாதலால் பார்வை இழப்பவர் எண்ணிக்கைக் கூடி வருகிறது. மக்கள்தொகையின் வயது ஏற ஏற புரைநோயாளிகளின் எண்ணிக்கையும் கூடுகிறது. வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் பார்வை குறைகள் உள்ளவர்கள் எண்ணிக்கைக்கு முதன்மைக் காரணமாக கண்புரை உள்ளது. அறுவை சிகிட்சைக்கான காத்திருப்பு, அறுவை சிகிட்சை விலை, போதிய தகவலின்மை, போக்குவரத்து போன்ற காரணங்களால் அறுவை சிகிட்சை மேம்பட்ட வளரும் நாடுகளிலும் கண்புரையால் பார்வைத்திறன் குறைந்தவர்கள் இருக்கக்கூடும்.

பொதுவான நம்பிக்கைகள்

கண்புரை நோய் கண் மீது வளர்கிறது

உண்மை நிலை: விழி லென்ஸுகளில் மங்கல்தன்மை உண்டாவதையே கண்புரை நோய் என்கிறோம். லென்ஸ் கண்களுக்கு உள்ளே இருக்கிறது, கண்கள் மேலே அல்ல. கண் லென்ஸ் என்பது ஒளி ஊடுருவக்கூடிய வகையில் தெளிவாக இருக்குமாறு அமைக்கப்பட்ட நீர் மற்றும் புரத நார்ப்பொருள் அடுக்குகளால் ஆனது. வயதாவதால், சில பகுதிகளில் இந்த புரத நார்ப்பொருட்கள் ஒன்று சேர்ந்துகொள்வதால், தெளிவின்மை ஏற்படுகிறது. நாளடைவில் இந்த பகுதிகள் உறுதியாகி பார்வையை பாதிக்கிறது.

லேசர் கதிர்கள் மூலம் கண்புரையை நீக்க முடியும்

உண்மை நிலை: கண்கள் மீது கண்புரை வளர்கிறது என்பது போல, நிறைய மக்கள் அதை லேசர் கதிர்கள் மூலம் நீக்க முடியும் என்று நம்புகிறார்கள். கண்புரை பாதிப்பால் பார்வை தெளிவின்மை லென்ஸின் உட்பகுதிகளில் ஏற்படுவதால், இது சாத்தியமில்லை. கண்புரை அறுவை சிகிச்சையில், பாதிக்கப்பட்ட லென்ஸ் ‘பேக்கோ ப்ரோப்’ (phaco probe) என்ற கருவி மூலம் நீக்கப்பட்டு, IOL என்று கூறப்படும் புதிய செயற்கை லென்ஸ் பொருத்தப்படுகிறது.

கண்புரை மீண்டும் வளர்கிறது

உண்மை நிலை: இல்லை: அறுவை சிகிச்சைக்கு பின் நாளடைவில் கண்புரை நோயாளிகள் வேறுவித இரண்டாம் நிலை கண்புரையால் பாதிக்கப்படலாம். புதிய செயற்கை லென்ஸை தாங்கியிருக்கும் சதைப் பகுதியில் பாதிப்பு ஏற்படுவதால, பார்வை தெளிவின்மையை அதிகப்படுத்த வாய்ப்பு உண்டு. இதை லேசர் கதிர் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இந்த எளிய அறுவை சிகிச்சை மூலம், சிறிய குளையை சதைப்பகுதியில் ஏற்படுத்தி, ஒளி புகும் வண்ணம் மருத்துவர் மாற்றியமைப்பார். இந்த சிகிச்சை முறை வலியில்லாதது மற்றும் பதினைந்து நிமிடங்களில் முடியக்கூடியது.

முழுவதும் முற்றிய பிறகே கண்புரையை அகற்றமுடியும்

உண்மை நிலை: கடந்த காலங்களில் இது உண்மையாக இருந்தது. கண்புரையை முற்றிய நிலையில் இருந்தால் மட்டுமே அகற்ற் முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், நவீன அறுவை சிகிச்சை முறைகளில் கண்புரையை முற்றிய நிலையில் இருக்கத் தேவையில்லை. கண்புரையை பாதிப்பு தோன்றிய உடனே அதை நீக்கினால் பார்வைத் மற்றும் வாழ்க்கைத்தரம் விரைவாக மேம்படும்.

வயதானவர்களுக்கு மட்டுமே கண்புரை பாதிப்பு ஏற்படும்

உண்மை நிலை: பொதுவாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் காணப்பட்டாலும், கண்புரை நோய் வயது குறைந்தவர்களுக்கும் வரும் வாய்ப்பு உண்டு. நீரிழிவு, சில வகை மருத்துவமுறைகள், பிற கண் நோய்கள் போன்றவற்றால், கண்புரை நோய் ஏற்படக்கூடும். சில நேரங்களில், ‘கன்ஜெனிட்டல் கண்புரை (congenital cataracts) என்ற வகை பிறப்பிலேயே காணப்படும். மேலும் விபரங்கள் பெற, ‘கண்புரை 101: வகைகள் மற்றும் காரணங்கள்’ (Cataracts 101: Types and Causes) என்ற புத்தகத்தை பார்க்கவும்.

கண்புரை அறுவை சிகிச்சை ஆபத்தானது

உண்மை நிலை: கண்புரை அறுவை, தற்போது 95% வெற்றி வாய்ப்புள்ள மிகவும் பாதுகாப்பான சிகிச்சை முறையாக இருக்கிறது. எனினும், பிற முறைகள் போலவே இதிலுள்ள சில அபாயங்களை பற்றி உங்கள் மருத்துவரிடம் அறுவை சிகிச்சைக்கு முன் கண்டிபாக கலந்தாலோசிக்கவும்.

கண்புரை அறுவை சிகிச்சைக்கு பின் குணமாக மாதங்களாகும்

உண்மை நிலை: பல நோயாளிகள், அறுவை சிகிச்சை முடிந்த உடனே தங்கள் பார்வையில் மாற்றங்களை காண முடியுமென்றாலும், சிலருக்கு இந்த மாற்றங்கள் சில மாதங்களுக்குப் பிறகு காணப்படும். அறுவை சிச்சைக்குப்பிறகு, மூன்று வாரங்களுக்கு நீங்கள் கனமான பொருட்களை தூக்கவோ, வளைக்கவோ அல்லது கண்களை கசக்கவோ கூடாது. இவை தவிர பிற அன்றாட நடவடிக்கைகளை, கண்கள் மீது வைக்கப்பட்ட பட்டி நீக்கப்படும் மறு நாளிலேயே தொடரலாம். (கண்புரை அறுவை சிகிச்சையை பற்றி விவரமாக அறிய, ஆலிவெட் ஷாவின் கதையை வாசிக்கவும்).

கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு கண் கண்ணாடி அணியத் தேவையில்லை

உண்மை நிலை: கண்களுக்குள் பொருத்தப்படும் செயற்கை லென்ஸின் வகையை பொறுத்து இது மாறுபடும். மோனோஃபோகஸ் லென்ஸ்கள் (monofocal lens) பொருத்தப்பட்ட நோயாளிகளுக்கு, நடுத்தர தூரங்களில் உள்ளவற்றை படிக்க மற்றும் கண்-னியில் வேலை செய்ய கண்ணாடி தேவைப்படலாம். மல்டிஃபோகஸ் லென்ஸ்கள் பொருத்தப்பட்டவர்களுக்கு அனைத்து குறைகளும் நீக்கப்படுவதால், அவர்களுக்கு கண்ணாடி தேவைப்படாது. உங்களுக்கு இவை பொருந்துமா என்பதை பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள். லென்ஸ் தேர்வு பற்றி படித்து அறிந்து கொள்ளுங்கள்.

ஒரு கண்ணிலிருந்து மறு கண்ணிற்கு கண்புரை நோய் பரவும்

உண்மை நிலை: கண்புரை நோய் ஒரு கண் அல்லது இரண்டு கண்களிலும் தோன்றலாம். ஆனால் அது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு பரவாது

கூர்ந்து பார்க்குமாறு செய்யப்படும் வேலைகளால் கண்புரை நோய் அதிகப்படும்

உண்மை நிலை: இவ்வாறான பணிகளை செய்வதால் கண்புரை நோய் தோன்றவோ அல்லது தீவிரப்படவோ வாய்ப்பில்லை. கண்கள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதை பொறுத்து கண்புரை நோய் ஏற்படுவதில்லை. எனினும், கண்புரை நோய் பாதிப்பு ஏற்படுவதால் அதிக வெளிச்சம் தேவைப்படுமாதலால், இவ்வாறான பணிகளை மேற்கொள்வதில் சிரமம் இருக்கலாம்.

கண்புரை நோய் ஏற்பட்டால் அவற்றை சரி செய்துகொள்ள முடியும்

உண்மை நிலை: கண்ணிலுள்ள லென்ஸ் மங்கலாவது வயதாவதால் ஏற்படக்கூடிய இயற்கையான விளைவாகும். வாழ்க்கை முறை மாற்றங்களை மெற்கொள்வதன் மூலம் கண்புரை நோய் ஏற்படுவதை தாமதப்படுத்த அல்லது தவிர்க்க முடியும்.

  • நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால், அதை நிறுத்திவிட முயற்சிக்கவும்
  • நிறைய பழங்கள், காய்கறிகள் கொண்ட சம்ச்சீரான உணவு உட்கொள்ளவும்
  • 100% புற ஊதாகதிர்கள் A மற்றும் B ஆகியவற்றை தடுக்கும் குளிர் கண்ணாடிகளை (sunglasses with 100% UV A and B protection) அணியவும் மற்றும் அதிக வெயிலிலிருந்து காத்துக்கொள்ளவும்

ஆதாரம் : பார்வையிழப்பைத் தடுப்பதற்கான தேசிய திட்டம்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate