மெய்போமியன் நீர்க்கட்டி
மெய்போமியன் சுரப்பியின் துளைகள் அடைபட்டு சுரப்புகள் தேங்குவதால் நீடித்த குருணைத்திசுக் கட்டி அழற்சி ஏற்படுவதே கண்ணிமை வீக்கமாகும்.
மெய்போமியன் சுரப்பிகள் என்பது உருமாறிய தோல்மெழுகுச் சுரப்பிகள் ஆகும். இவை மேல்கீழ் இமைகளின் தகடுகளில் காணப்படுகின்றன. மேல் இமைத் தகட்டில் ஏறத்தாழ 30-40 சுரப்பிகளும், கீழ் இமைத் தகட்டில் சுமாராக 20-30 சுரப்பிகளும் உள்ளன. விழிக்கோளத்தின் முன் பரப்பை மூடி இருக்கும் கண்ணீர்த் திரையின் வெளிப்புறக் கொழுப்பு அடுக்கை இந்த சுரப்பிகள் சுரக்கின்றன. இச்சுரப்பிகளின் நாளங்கள் செங்குத்தாக அமைந்துள்ளன. இவை கண் இரப்பைகளின் பின் விளிம்பிடைப் பகுதியில் (முன்புறப் பின்புற இமை விளிம்புகளுக்கு இடையில்) திறக்கின்றன. கண் இரப்பை நுண்னறைகளோடு தொடர்புடைய இதுபோன்ற உருமாறிய தோல்மெழுகு சுரப்பிகள் செயிஸ் சுரப்பிகள் என அழைக்கப்படும்.
கண்ணிமை வீக்கத்தில் சுரப்புகளின் கடும் தொற்றால் இமை உள் கட்டி என்னும் சிறு சீழ்ப்புண்கள் உருவாகும். அதுபோல செயிஸ் சுரப்பிகளில் கடும் தொற்று ஏற்பட்டு இமை வெளிக் கட்டிகள் தோன்றும்.
ஒரு நோயாளிக்கு பல நாட்கள் அல்லது மாதங்களுக்கு இமைகளில் வலியற்ற வீக்கம் இருக்கலாம். அவர் அதைச் சீர்படுத்த விழையலாம். ஒன்று அல்லது பல வீக்கங்கள் உண்டாகக் கூடும். இது போன்ற வீக்கங்கள் முன்பும் அடிக்கடி ஏற்பட்டிருக்கலாம். மேல் இமையின் நடுவில் பெரிய இமைவீக்கம் ஏற்பட்டு விழிவெண்படலத்தை அழுத்துவதால் நோயாளிக்கு கண் பார்வையும் குறையக் கூடும். இது, விதிப்படி பெறப்பட்ட சிதறல் பார்வைக்கோ அல்லது பெறப்பட்ட தூரப்பார்வைக்கோ இட்டுச்செல்லும்.
இது வலியுள்ள அழற்சி வீக்கமாகவும், தொற்று ஏற்பட்டதாகவும் காணப்படலாம். கடுமையான அழற்சியால் இமை முற்றிலும் வீங்கலாம். ஒரே இடத்தில் திரும்பத் திரும்ப வரும் இமைவீக்கம் தீங்குள்ள தாக மாற வாய்ப்புள்ளதா என்று அறிய சோதனை செய்ய வேண்டும்.
சோதிக்கும் போது உறுதியான, சிவப்பாகாத, நிலையான, மென்மையற்ற வீக்கம் காணப்படும். இமைக்கு அடியில் இருக்கும் விழியிணைப்படலப் பரப்பு ஊதிய மெய்போமியன் சுரப்பியைக் காட்டும். சுற்றி இருக்கும் சுரப்பிகளை மென்மையாக பிதுக்கும் போது இறுகிய பற்பசை போன்ற தெளிவான எண்ணெய்ப் பசையுள்ள ஒரு பொருள் வெளிப்படுகிறது. ஊதிய மெய்போமியன் சுரப்பியை அடுத்திருக்கும் விழியிணைப்படலம் நெருக்கமடையலாம். வடியும் காதுமடலுக்குரிய நிணநீர் முடிச்சுகள் இமைவீக்கத்தின் இரண்டாம் நிலை தொற்று ஏற்படாத போது வீங்காது.
செம்முகப்பரு, எண்ணெய் மிகைச்சுரப்பு அல்லது நீடித்த கண்ணிமை அழற்சி போன்ற தொடர்புடைய அம்சங்களும் காணப்படலாம். முகச்சிவப்பு, சிலந்தி மச்சக்கட்டி, இரத்தக் கிளைக்குழல் விரிவு, அல்லது தொடர்புடைய மூக்குமுனைக் கட்டிகளும் செம்பருக்களின் தன்மையாகும். தோலின் அதிக எண்ணெய்ச் சுரப்பால் எண்ணெய் மிகைச்சுரப்பு உண்டாகிறது. நீடித்த கண்ணிமை அழற்சியால் இமை விளிம்புகளில் செதில்கள் அல்லது புண் வெடிப்புகள் காணப்படலாம்.
கீழ்க்காணும் தன்மைகளில் இருந்து இமைவீக்கத்தை வேறுபடுத்திக் காணவேண்டும்:
இமைவீக்கம் தொடர்ந்து வருமானால் நுண்ணூசி உறிஞ்சல் உயிரணுவியல் சோதனை நடத்துவதன் மூலம் புற்றுக் கட்டியா என்பதைக் கண்டறிய முடியும்.
மடித்த இமையில் இருக்கும் மெல்போமியன் சுரப்பிகளை அகச்சிவப்பு நிழற்பட பிம்பம் ஆக்கும்போது மெல்போமியன் சுரப்பி உப்பி இருப்பதை அது காட்டும். பிம்பத்தில் காணப்படும் அடுத்திருக்கும் சுரப்பிகள் இறுகிய சுரப்பிகளைக் காட்டும்.
சிறு, தெளிவற்ற, அறிகுறிகளற்ற இமைவீக்கம் சிகிச்சை எதுவும் இல்லாமல் தானாகவே சரியாகிவிடும். கண்ணிமை வீக்கத்துக்கு மரபான முறைகளிலும் அறுவையினாலும் சிகிச்சை அளிக்கலாம்.
மரபான சிகிச்சை
அறுவை மருத்துவம்
ஆதாரம் : தேசிய சுகாதார தகவல் மையம்
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020
கணினி வேலையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கான முக்கிய தக...
நெல்லிக்காயை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தினால் ...
கண்ணில் ஏற்படும் கோளாறுகள் பற்றி இங்கு விவரிக்கப்ப...
அதிக வெப்பத்தால் ஏற்படும் கண் பிரச்சனைகளைப் போக்க ...