கருங்காய்ச்சல் ஒரு வட்டார நோயாகும். லெய்ஷ்மேனியா வகையைச் சார்ந்த ஓர் ஒரணு பாரசைட்டால் இந்நோய் உண்டாகிறது. இந்தியாவில் லெய்ஷ்மேனியா டோனோவனி என்ற பாரசைட் மட்டுமே இந்நோயை ஏற்படுத்துகிறது. இவை முக்கியமாகக் குருதியோட்ட மண்டலத்தையே தாக்குகின்றன. எலும்பு மச்சை, மண்ணீரல் மற்றும் கல்லீரலில் இவை அதிகமாகக் காணப்படும்.
பின் கருங்காய்ச்சல் தோல் புண்கள் (PKDL)
லெய்ஷ்மேனியா டோனோவனி பாரசைட்டுகள் தோல் உயிரணுக்களுக்குள் புகுகின்றன. அவை அங்கு தங்கி தோல் புண்களை உண்டாக்குகின்றன. கருங்காய்ச்சல் குணமாகி 1-2 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பாதிப்பு சில இந்திய நோயாளிகளிடம் காணப்படுகிறது. கருங்காய்ச்சல் இன்றியும் இந்நிலை அபூர்வமாகக் காணப்படலாம். உள்ளுறுப்புகளைப் பாதிக்காமலேயே கருங்காய்ச்சல் உண்டாகலாம் என்று தற்போது நம்பப்படுகிறது. ஆயினும் இதைப்பற்றிய போதுமான தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும்.
அடிக்கடி தொடர்ந்தும் விட்டுவிட்டும் வரும் காய்ச்சல். பல வேளை காய்ச்சல் இருமடங்கு அதிகரிக்கும்.
தோல்
இந்தியாவில், ஃபிளேபாட்டோமஸ் அர்ஜெண்டைப்ஸ் (Phlebotomus argentipes) என்ற மணல் ஈ மட்டுமே கருங்காய்ச்சலைக் கடத்துகிறது. கொசுவில் நான்கில் ஒரு பங்கு அளவே கொண்ட சிறு பூச்சியே மணல் ஈ. இதன் உடல் நீளம் 1.5 — 3.5 மி.மீ அளவே இருக்கும்.
அதிக ஒப்பீட்டு ஈரத்தன்மையும் (relative humidity), சூடான வெப்பநிலையும், உயர் நிலத்தடி நீரும், அதிக அளவில் பயிர்ப்பச்சைகளும் உள்ள இடங்களில் மணல் ஈ பெருகுகிறது. முட்டைப்புழுக்களுக்கு உணவாகக் கூடிய அங்ககப்பொருட்கள் செறிந்த சாதகமான நுண்-தட்ப வெப்ப சூழ்நிலைகளிலேயே இவை இனப்பெருக்கம் செய்கின்றன.
சுற்றுச்சூழல், நுண்ணிய இப்பூச்சிகளை அதிகமாக பாதிக்கும்.
அறிகுறிகளைக் கொண்டு
எதிர் மலேரியா மருந்துகள் மற்றும் நுண்ணுயிர்க் கொல்லிகளுக்குக் கட்டுப்படாத, இரண்டு வாரத்துக்கும் மேற்பட்ட காய்ச்சல் இதன் அறிகுறி ஆகும். ஆய்வகச் சோதனையில் இரத்தச்சோகை, வெள்ளணு-தட்டணுக் குறைவுபட்டு வருதல், அதிக அளவு காமோ குளோபுலின் ஆகியவை கண்டறியப்படலாம்.
ஆய்வகச்சோதனை
ஊனீர் சோதனை
கருங்காய்ச்சலைக் கண்டறிய பலவித சோதனைகள் உள்ளன. பரவலாக பயன்படுத்தப்படும் சோதனைகள் ஒப்பீட்டு உணர்திறனை அடிப்படையாகக் கொண்டவை. நேரடி திரட்சி சோதனை (DAT), rk39 தோய்குச்சி மற்றும் எலிசா போன்ற சோதனைகள், குறிப்பாக உணர்த்தும் திறன் கொண்டவையும் சாத்தியமானவைகளும் ஆகும். எனினும் இச் சோதனைகள் யாவும், ஒப்பீட்டளவில் நீடித்து நிலைத்து நிற்கும் IgG எதிர்பொருட்களைக் கண்டறிகின்றன. பொதுவாக ஆல்டிஹைட் சோதனை செய்யப்படுகிறது. ஆனால் இது குறிப்பான சோதனை அல்ல. IgG கண்டறியும் சோதனைகள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. தற்போது அவை களப்பரிசோதனைகளுக்கு பயன்பட்டில் இல்லை.
பாரசைட் இருப்பதை நிரூபித்தல்
எலும்பு மச்சை, மண்ணீரல், நிணநீர் முடிச்சுகள் ஆகியவற்றின் ஊசிமாதிரிகள் அல்லது திசுவளர்ச்சி கொண்டு பாரசைட்டுகள் இருப்பதை உறுதிப்படுத்துதல். ஆயினும் ஊசிமாதிரிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்புகளைப் பொறுத்து உணர்திறன் அமையும். மண்ணீரல் ஊசிமாதிரி ஆய்வு அதிக உணர்திறனும், குறிப்பாகக் கண்டறியும் திறனும் கொண்டதாகும். எனினும் வல்லுநர் ஒருவர் நல்ல மருத்துவ வசதிகள் உள்ள இடத்தில் முன்னெச்சரிக்கைகளுடன் செய்ய வேண்டும்.
இது குறிப்பான தகவல் மட்டுமே. நோய் கண்டறிதலுக்கும் மருத்துவத்திற்கும் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.
உள்ளுறுப்புகளைப் பாதிக்கும் கருங்காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்துகள் இல்லை. மணல் ஈ கடியில் இருந்து காத்துக் கொள்வதே சிறந்த தடுப்பு முறையாகும். கீழ்க்காணும் தடுப்பு முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன
வீட்டுக்கு வெளியே
வீட்டுக்குள்
கருங்காய்ச்சலைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது பல காரணங்களால் பிரச்சினைக்கு உரியதாகும். மருத்துவம் நீடித்ததும் அதிக செலவு பிடிப்பதுமாகும். ஏனெனில், கருங்காய்ச்சலைக் குறிப்பாகக் கண்டறிய நுண்காட்டி மூலம் சோதனை செய்யவேண்டும். இதற்குத் தேவையான திசு மாதிரிகளை ஓர் உறுப்பில் இருந்து ஊசிமாதிரி முறை மூலமாக எடுக்க வேண்டும். பின் நுண்ணுயிரின் இடைநிலை வடிவத்திற்கு (amastigote forms) நிறமேற்ற வேண்டும். தொற்று உள்ளது என்று சந்தேகப்படும் நோயாளிகளின் எலும்பு மச்சை, மண்ணீரல், மற்றும் நிணநீர் முடிச்சுகள் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்படும் திசுக்களே பெரும்பாலும் மாதிரிகளாக சோதிக்கப்படுகின்றன. மண்ணீரலில் இருந்து எடுக்கப்படும் ஊசி மாதிரிகளே அதிக உணர்திறன் கொண்டவை (95 — 98 %). ஆயினும் இம்முறையால் இரத்தக்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. எலும்பு மச்சை ஆய்வின் உணர்திறன் மிகக் குறைவு (53% - 95 %). உறுப்புகளில் இருந்து ஊசிமாதிரிகளை எடுப்பதற்கும் சாயமேற்றப்பட்டவைகளை நுட்பமாக சோதிப்பதற்கும் தொழில் நுட்பத் திறன் தேவை. இது கிராமப்புறத்தில் எல்லா இடங்களிலும் சீராகக் கிடைப்பதில்லை. ஊசிமாதிரிகளைத் திசுவளர்ச்சி அல்லது பாலிமரேஸ் தொடர்வினை சோதனை (PCR) மூலம் ஆயும் போது நுண்ணுயிர் வளர்ச்சி இருக்கும். ஆனால் ஆய்வகத்திற்கு வெளியே இச்சோதனைகளை நடத்துவது கடினம்.
கருங்காய்ச்சலுக்கு இந்தியாவில் கிடைக்கும் மருந்துகள்
இது குறிப்பான தகவல் மட்டுமே. நோய் கண்டறிதலுக்கும் மருத்துவத்திற்கும் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.
ஆதாரம் : தேசிய சுகாதார ஆணையம்
கடைசியாக மாற்றப்பட்டது : 6/16/2020
இத்தலைப்பில் மருத்துவம், காவல்துறை மற்றும் தீயணைப்...
ரத்த அழுத்தத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை பற்றி இங்க...
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...
பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள...