மரபுக் கோளாறு என்பது திடீர் மாற்றம் (மியுடேஷன்) எனப்படும் செயலினால், மாற்றி அமைக்கப்பட அல்லது மாறுபாடு அடைந்த மரபிகளால் (ஜீன்) ஏற்படும் ஒரு நோய் ஆகும். பல நோய்கள் மரபியல் நோக்குடையவைகள். பல புற்று நோய்கள் ஒருவருடைய செல்லில் உள்ள மரபி அல்லது மரபிகளில் ஏற்படும் திடீர் மாற்றத்தினால் ஏற்படுகிறது. இவ்வகை திடீர் மாற்றங்கள், இயல்பாக மற்றும் குறிப்பிட்ட சூழல்களால் (உ.ம்) சிகரட் புகையின் பாதிப்பினால் ஏற்படுகிறது. மற்ற மரபுவழிக்கோளாறுகள் பெற்றோரிடமிருந்து தலைமுறையாக பிள்ளைகளுக்கு ஏற்படுகிறது. இன்றும் பிற மரபுவழிக் கோளாறுகள் மரபிகளின் தொகுப்பான குரோமோ சொபம்களில் உள்ள பிரச்சினைகளினால் ஏற்படுகிறது. உ.ம். டவுன் சின்ட்ரோம்
டெளன் சின்ட்ரோம்
மனித உடலில், குரோமோசோம் 21 கூடுதலாக அமைவதால், உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் அறிகுறியே டெளன் சின்ட்ரோமாகும்
பெண்ணின் வயது அதிகரிக்கும் போது, டெளன் சின்ட்ரோமுடன் கூடிய குழந்தை பெறும் சாத்தியம் ஏற்படுகிறது.
நோய் கையாளும் யோசனைகள்
உதட்டுப் பிளவு
உதட்டுப் பிளவு என்பது மேல் உதட்டில் ஒரு பிரிவு ஏற்படுவதாகும். கர்ப காலத்தின் தொடக்க வாரங்களில், மூக்கு மற்றும் மேற்தாடையின் குறிப்பிட்ட சில பாகங்கள் சரிவர இணையாவிட்டால் உதட்டுப் பிளவு ஏற்படலாம். உதட்டில் V போன்ற ஒரு சிறிய வெட்டிலிருந்து மூக்கு மற்றும் முரசு வரிசையின் பின்பகுதிவரைச் செல்லும் ஒரு முழுமையான பிரிவு வரை உதட்டுப் பிளவின் கடுமை வேறுபடலாம்.
மேல்வாய்ப் பிளவு
மேல்வாய்ப் பிளவு என்பது மேல்வாயின் மத்தியில் ஏற்படும் ஒரு பிரிவு ஆகும். கர்ப்ப காலத் தொடக்கத்தில் வாயின் மேற்கூரைப் பகுதியும் மூக்குத் துவாரமும் சரிவர இணைக்கப்படாதிருந்தால், மேல்வாய்ப் பிளவு உண்டாகலாம். மேல்வாயின் பிற்பகுதியில் மிகவும் சிறிய ஒரு திறப்பிலிருந்து, வாயின் மேற்கூரையில் ஒரு பெரிய இடைவெளிவரை, மேல்வாய்ப் பிளவுவின் கடுமை வேறுபடலாம்.
பிளவுபட்ட உதடு மற்றும் அண்ணம்
இது பிறப்பின் போது இருக்கும் ஒரு நிலை. இதன்போது மேல் உதட்டில் இடது அல்லது வலதுபக்கத்தில் (அல்லது இரண்டிலும்) ஒரு பிளவு காணப்படும். இது மூக்குவரை நீழக்கூடும். பிளவுபட்ட அண்ணம் என்பது வாயின் கூறையில் ஒரு பிளவாகும். இது பிளவுபட்ட உதட்டோடு சேர்ந்தும் இருக்கலாம்.
உதட்டு மற்றும் மேல்வாய்ப் பிளவு பற்றிய கவலைகள்
உதடு மற்றும் மேல்வாய்ப் பிளவு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சமூகச் சவால்களை அளிக்கலாம் என்பது வெளிப்படை. இந்த நிலைமை சீர் செய்யாது விடப்பட்டால், குழந்தை வளர்ந்து வரும்போது அவளுக்கும் அவ்வாறிருக்கும். பெரும்பாலும் பெற்றோர்கள் ஒரு “பூரணமான” குழந்தையைக் கனவு காண்பார்கள். அவர்களின் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஒரு பிளவு இருக்கிறது என்பதை உணரும்போது ஏமாற்றமடைவார்கள். இறுதியாக என்ன சம்பவித்து என்பதை ஏற்றுக்கொள்ளும்வரை அதிர்ச்சி, மறுப்பு, துக்கம், மற்றும் கோபம் போன்ற அநேக உணர்ச்சிகளுக்குட்படுவார்கள். இந்த அசாதாரண நிலைமைகளை அறுவைச் சிகிச்சை எப்படி வெற்றிகரமாகச் சரிசெய்யும் என்பதை அநேக பெற்றோர்கள் உணருவதில்லை.
உதடு மற்றும் மேல்வாய்ப் பிளவுக்குச் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், குழந்தைக்குப் பாலூட்டுதல், காது கேட்டல், பற்களின் வளர்ச்சி, மற்றும் பேச்சு போன்ற பிரச்சினைகள் உட்பட வேறு சவால்களையும் உண்டாக்கலாம்.
பாலூட்டுதல்
உதடு மற்றும் மேல்வாய்ப் பிளவுள்ள ஓரு குழந்தைக்கு உறிஞ்சுவதில் அல்லது பால் குடிப்பதில் கஷ்டம் இருக்கலாம். பாலூட்டும் செயலை எப்படி இலகுவாகச் செய்யலாம் என்பதில் பெற்றோருக்குக் குறிப்புகள் வழங்குவதில், தொழில் ரீதியாகச் செய்முறை சிகிச்சையளிப்பவர் அல்லது பேச்சு மற்றும் மொழி பற்றிய நோய் மூலத்தை அறிந்த வல்லுனர் உதவி செய்யலாம்.
காது கேட்டல்
மேல்வாய்ப் பிளவு சில சமயங்களில் நடுக்காதைப் பாதிக்கலாம். அதனால் ஒரு குழந்தையின் கேட்கும் திறன் பாதிக்கப்படலாம். நடுக்காதில் திரவம் உண்டாகி, கேட்கும் திறனைத் தற்காலிகமாக இழக்கச் செய்யலாம். அல்லது காதுத் தொற்று நோயை ஏற்படுத்தலாம். சில வேளைகளில் காதிலிருந்து திரவத்தை வெளியேற்ற காதினுள் குழாய்களை உட்செலுத்தவேண்டி நேரிடலாம்.
பற்கள்
உதடு மற்றும் மேல்வாய்ப் பிளவு குழந்தையின் பற்களைப் பாதிக்கலாம். குழந்தை சில பற்களை இழக்கலாம் அல்லது மேலதிக பற்கள் முளைக்கலாம், சிறிய பற்கள் அல்லது உருக்குலைந்த பற்கள் முளைக்கலாம். சில பிள்ளைகளுக்கு மேற்தாடை, உதடுகள், மற்றும் மூக்கை மேம்பட்ட நிலைக்குக் கொண்டுவருவதற்காக பல் மருத்துவ சிகிச்சை தேவைப்படும். பிளவு அறுவைச் சிகிச்சையின் விளைவை முன்னேற்றுவிக்கப் பல் மருத்துவ சிகிச்சை உதவி செய்யும்.
பேச்சு
சாதாரண பேச்சு முன்னேற்றத்துக்கு மேல்வாய் மிகவும் முக்கியமானது. மேல்வாய்ப் பிளவு சரிசெய்யப்பட்டபின் அநேக பிள்ளைகளுக்கு பேச்சு சிகிச்சை முறை தேவைப்படும்.
உதட்டுப் பிளவு மற்றும் மேல்வாய்ப் பிளவுக்கு சிகிக்கை
உதடு அல்லது மேல்வாய்ப் பிளவுள்ள எல்லாக் குழந்தைகளும், பிறந்து ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் ஒரு பிளாஸ்ரிக் அறுவைச் சிகிச்சை மருத்துவரை சந்திக்கவேண்டும். ஒவ்வொரு புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பிளவுகள் வித்தியாசப்படுவதால், அறுவைச் சிகிச்சையும் பிள்ளைக்குப் பிள்ளை மாறுபடும்.
பிளவுக் குறைபாட்டுடன் பிறந்த குழந்தைக்கு பல வகையான உதவிகள் தேவைப்படுகிறது. உ.ம். அறுவை சிகிச்சை, பல்பராமரிப்பு, பேசுவதிற்கான மருத்துவ சிகிச்சை, காதுபராமரிப்பு மற்றும் பிற. தேவையான அனைத்து பராமரிப்புகளையும் ஒருங்கிணைந்த முறையில் பல ஆண்டுகள் கொடுக்கப்பட வேண்டும்.
ஆதாரம் : கிருஷ்ணா (பதிவர்)
கடைசியாக மாற்றப்பட்டது : 5/5/2020
அமுக்கிரா கிழங்கின் நன்மைகள் பற்றிய தகவல்கள் இங்கு...
மருத்துவக் காப்பீட்டின் அவசியம் மற்றும் பயன்கள் பற...
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக...
ஆயுர்வேத மருந்துகள் பற்றிய குறிப்புகள்