சில வகை சிறுநீரக வியாதிகள் உடலிற்குள்ளேயே ஏற்படும் சில எதிர்மறை விளைவுகள் சிறுநீரகங்களை பாதிப்பதால் ஏற்படுகின்றன. இது ஒரு வகை ஒவ்வாமையாகும். அதாவது நம் இரத்தத்தில் உள்ள நோய்க் கிருமி எதிர்ப்பு அணுக்களான வெள்ளை அணுக்கள் அவை உண்டாக்கும் ஆன்டிபாடி (Antibody) எனப்படும் எதிர் சத்துக்கள் என்பவை சில சமயம் நம் உடலின் சில உறுப்புகளையே கிருமி போல பாவித்து சேதப்படுத்துவதால் சில வகை நோய்கள் உண்டாகின்றன. இவைகளை ஆங்கிலத்தில் ஆட்டோ இம்யூன் (Autoimmune) வியாதிகள் என்பர். தமிழில் இவற்றை தன்திசு எதிர்ப்பு வியாதி எனலாம். இவ்வகை வியாதிகள் பல வகைப்படும். இவை உடலில் எந்த உறுப்பையும் பாதிக்காமல். சிறுநீரகங்களை பாதிக்கும் சில வியாதிகள் லூப்பஸ் சிறுநீரக வியாதி (Lupus Nephritis) வாஸ்குலைடிஸ் - இரத்தக் குழாய் அழற்சி(Vasculities) IgA சிறுநீரக பாதிப்பு (IgA Nephropathy) என்பன இவற்றில் சில. இவ்வகை வியாதிகளுக்கு சிகிச்சை செய்ய உபயோகப்படுத்தப்படும் மருந்துகள் பொதுவாக இரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்களான வெள்ளை அணுக்களின் வீரியத்தையும், எண்ணிக்கையையும் அவை உண்டாக்கும் எதிர்சத்துக்களின் அளவை கட்டுப்படுத்தும் மருந்துகளாகும். இவைகளிலும் பல வகை மருந்துகள் உள்ளன. சைக்ளோபாஸ்பமைட் எனப்படும் மருந்து இவற்றில் சில வகை சிறுநீரக பாதிப்புக்களுக்கு நல்ல மருந்தாகும்.
உதாரணமாக லூப்பஸ் சிறுநீரக வியாதி வாஸ்குலைடிஸ் சிறுநீரக பாதிப்பு ஆகியன. குழந்தைகளுக்கு வரும் நெப்ராடிக் சிண்ட்ரோம் எனப்படும் சிறுநீரக பாதிப்பிற்கும் சில சமயம் உபயோகமானவை. பெரும்பாலும் மாத்திரைகளாகவே இவை கொடுக்கப்படும். சில பிரத்யேக சமயங்களில் இவை நரம்பு வழியாக ஊசிமருந்தாக கொடுக்கப்படும். இதைப் பற்றி இங்கு இனிக் காண்போம்.
இந்த மருந்து வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையையும் அவை உண்டாக்கும் வீரியம் மிக்க எதிர்ப்பு சத்துக்களையும் குறைக்கின்றன. இதனால் சிறுநீரகங்கள் பாதிப்பிலிருந்து தப்பிக்கின்றன. அதே சமயம் இதனால் பக்க விளைவுகளும் உண்டாகலாம்.
மாத்திரைகளாக கொடுக்கப்படும் போது இதை நீங்கள் வெளி நோயாளியாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் வாரம் 2 முறை இரத்தத்தில் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை பரிசோதித்து அவை மிகவும் குறைந்து விடாமல் உள்ளனவா என்பதை உங்கள் சிறுநீரக மருத்துவரிடமோ அல்லது குடும்ப மருத்துவரிடமோ பார்த்துக் கொள்ள வேண்டும். நரம்பு வழி ஊசி மருந்தாக கொடுக்கப்படும்போது பொதுவாக 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவமனையில் வைத்து கொடுக்கப்படும்.
மருத்துவமனைக்கு வரும் போதே நீங்கள் நன்கு நீர் குடித்து விட்டு வர வேண்டும். இந்த மருந்து க்ளுக்கோஸ் எனப்படும் மருத்துவ திரவத்தில் கலந்து நரம்பு எனப்படும் இரத்த தமனி வழியாக ஊசி பொறுத்தப்பட்டு கொடுக்கப்படும் இதற்கு 1 – 2 மணி நேரம் ஆகும். இம்மருந்து உள்ளே செல்லும் போது ஏதேனும் வலி எரிச்சல் ஊசி உள்ள இடத்தில் உண்டானால் உடனே மருத்துவரிடம் தெரிவிக்கவும். அது முடிந்தவுடன் நீங்கள் வீடு திரும்பலாம். இம்மருந்து செலுத்தியபின் ஒருவாரம் கழித்து இரத்த பரிசோதனைகளுக்காக நீங்கள் மீண்டும் ஒரு முறை மருத்துவமணை வரவேண்டியிருக்கும்.
இவ்வளவு பக்க விளைவுகள் மருந்தை எதற்காக எனக்கு தர வேண்டும்? என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளாவிட்டால் உங்கள் நோயினால் சிறுநீரகங்கள் முழுவதும் செயலிழந்து அடுத்து சிறுநீரக மாற்று சிகிச்சையோ அல்லது ஆயுட்காலம் முழுக்க டயாலிசிஸ் சிகிச்சை தான் மாற்று எனும்போது இந்த பக்க விளைவுகள் பெரிதல்ல என்று அறியலாம். மேலும் எல்லோருக்கும் இந்த பக்க விளைவுகள் வருவதில்லை. சிலருக்கு மட்டுமே வர வாயப்பு உண்டு. எனவே இந்த மருந்தை முறையாக அனுபவம் மிக்க சிறுநீராக மருத்துவரின் கண்காணிப்பில் எடுத்துக் கொள்ளும் போது பக்க விளைவுகள் வரும் வாய்ப்பும் குறைவு. வந்தாலும் ஆரம்பத்திலே கண்டுபிடிக்கப்பட்டு எளிதில் சரி செய்து கொள்ளலாம். எனவே இந்த உயிர் காக்கும் மருந்தை எடுத்துக் கொள்வது முக்கியம் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
ஆதாரம் : பத்மா கிட்னி சென்டர், ஈரோடு
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020
இத்தலைப்பில் மருத்துவம், காவல்துறை மற்றும் தீயணைப்...
3 வகை உடல் 6 வகை பருமன் பற்றி இங்கு கொடுக்கப்பட்டு...
பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள...
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...