காச நோய் என்பது ஆங்கிலத்தில் T.B (TUBERCULOSIS) என அழைக்கப்படுகிறது. காச நோய் மைக்ரோ பாக்டிரியம் டியுபர் குளோசிஸ் என்ற கிருமியினால் தொற்றக்கூடிய நோயாகும். இது ஏழை-பணக்காரன், ஆண், பெண், குழந்தைகள் என்ற அனைத்து வயதினரையும் தாக்கக்கூடிய ஒரு நோயாகும். காச நோய் உடலின் எந்த ஒரு பாகத்தையும் தாக்கலாம். காசநோய் முக்கியமாக நுரையீரல், மூளை மற்றும் தண்டுவடத்தை தாக்குகிறது. பெரும்பாலனவர்களிடம் காசநோய் கிருமி உடலில் இருந்தாலும் அது நோயாக மாறுவதில்லை. எச்.ஐ.வி உள்ளவர்களுக்கு காசநோய் தொற்றக்கூடிய வாய்ப்பு மிக அதிகமாகும்.
இது மைகோபாக்டீரியம் டியூபர்குளோஸிஸ் எனப்படும் பாக்டீரியாவால் தோற்றுவிக்கப்படுகிறது.
காசநோய் கண்ட நபரிலிருந்து காற்றின் மூலம் இந்நோய் மற்ற நபர்களுக்கு பரவுகிறது. இந்நோய் கண்ட நபர் மூலம், ஒரு வருடத்தில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபருக்கு இந்நோய் தொற்றும்.
மேற்கூறிய பரிசோதனைகள் அனைத்தும் அரசு காசநோய் தடுப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் தாலுக்கா மருத்துவமனைகளில் உள்ளன. சளி நுண்ணோக்கிப் (SPUTUM MEROSCOPIC) பரிசோதனை திருத்தப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாடு திட்ட (RNTCP) மையங்களில் செயல்படுகிறது.
மைக்ரோஸ்கோபிக் மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கு ஒரு மையம் என்ற விகிதத்தில் அமைக்கப்பட்டு செயல்படுகிறது. ஒவ்வொரு மையத்திலும் சளி (SPUTUM) பரிசோதனை செய்வதற்கு பயிற்சி பெற்ற ஆய்வக நுட்பநர் உள்ளார்.
இன்று எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர் இறப்பதற்கு காரணமான முக்கிய நோய் காச நோய். எச்.ஐ.வி கிருமி உள்ளவர்களது உடல் நிலை எந்த நோயாக இருந்தாலும் உடன் எவ்வித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக் கொள்ளும். எனவேதான் எச்.ஐ.வி உள்ளவர்களுக்கு எளிதில் காச நோய் தொற்றுகிறது. மேலும், காசநோய், எச்.ஐ.வி கிருமிகளின் உற்பத்தியை அதிகப்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. ஆகவே எச்.ஐ.வி கிருமிகள் பெருகும் நிகழ்வும் நடைபெறுகிறது. எனவே எச்.ஐ.வி உள்ளவர்கள் காச நோய் பற்றி எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியமாகும். காச நோய்க்கான அறிகுறிகள் இருப்பின் உடனடியாக தேவையான பரிசோதனைகளைச் செய்து காசநோய் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். காசநோய் இருந்தால் முறையாக டாட்ஸ் (DOTS) சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் படி சிகிச்சை முடியும்வரை தொடர வேண்டும். HIV உள்ளோர்க்கு வரும் காசநோயைத் தகுந்த சிகிச்சையின் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும்.
- காசநோயின் தாக்கம் அதிகம் உள்ள நபர்கள் வசிக்கும் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு.
- எச்.ஐ.வி அல்லது மற்ற நோய் தடுப்பு தன்மையை குறைக்கும் நோய்தொற்று கொண்ட சிறு பிள்ளைகள்
- மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள சமூக சூழ்நிலையில் உள்ள சிறு பிள்ளைகள்.
(எக்ஸ்ட்ரா பல்மோனரி டியூபர்குளோசிஸ்) எக்ஸ்ட்ரா பல்மோனரி காசநோய் என்பது நுரையீரல் அல்லாத மற்ற பகுதிகளில் ஏற்படும் காசநோயினைக் குறிக்கிறது.
அறிகுறிகள்
நோய்தொற்று கொண்ட குறிப்பிட்ட பகுதி (நிணநீர்ச்சுரப்பிக் கணுக்கள் - லிம்ஸ்ப்நோட்ஸில் காசநோய்) வீக்கமடைதல், நடமாடும் திறன் குறைதல் (முதுகெலும்பு கூர்முனை-ஸ்பைனில் காசநோய்) அல்லது கடுமையான தலைவலி மற்றும் நரம்பு சம்பந்தமான குறைசெயல்பாடு (டி.பி. மெனிஞ்ஜைடிஸ்) போன்றவையாகும். எக்ஸ்ட்ரா பல்மோனரி டிபி-யில் இருமல் இருக்காது ஏனெனில் இது நுரையீரலில் ஏற்படுவது இல்லை.
நோய் பரவும் முறை:
இந்நோய் தொற்று ஏற்படும் பொதுவான பகுதிகள்
காச நோய் ஏற்பட காரணம் என்ன?
காச நோய் ஒரு பரம்பரை வியாதி அல்ல. இது ஒரு தொற்று வியாதி. எந்த மனிதர் வேண்டுமானாலும் காச நோயால் பாதிக்கப்படலாம். காச நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் வாய்மூடாமல் தும்மினாலோ அல்லது இருமினாலோ காச நோய் ஏற்படுத்தும் கிருமிகள் காற்றில் வெளிப்படுகின்றன. இப்படி பாதிக்கப்பட்ட காற்றை சுவாசிக்கும் யாரை வேண்டுமானாலும் பாதிக்கும். ஒருவரின் உடலில் சென்ற காச நோய் கிருமி காச நோயை ஏற்படுத்தாது. உடலில் செயல் இழந்த காசநோய் கிருமி உள்ளோர் உடனே நோய்வாய்படுவதில்லை. அவர்களுக்கு காசநோய்க்கான அறிகுறிகள் எதுவும் இருக்காது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது செயலிழந்து இருக்கும் காசநோய் கிருமிகள் செயல்படத் தொடங்கிவிடும். ஆகவேதான் எச்.ஐ.வி உள்ளவர்களுக்கு காசநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
இந்த நோயின் அறிகுறிகள் என்ன?
காச நோயின் குறிப்பான அறிகுறிகள், மூன்று வாரத்திற்கு மேல் தொடரும் இருமல், சளியுடன் கூடிய இருமல், காய்ச்சல், எடை குறைவு அல்லது பசியின்மை போன்றவை ஆகும். மேற்கூறிய ஏதாவது அறிகுறி ஒருவருக்கு மூன்று வாரதிற்கு மேல் நீடித்தால், அவர் அருகிலிருக்கும் டாட்ஸ் காச நோய் மையம், அல்லது சுகாதார மையத்திற்கு சென்று சளியை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
காச நோயை கண்டு பிடிக்க எத்தகைய பரிசோதனைகள் செய்ய வேண்டும், மற்றும் அவை எங்கு செய்யப்படும்?
காச நோயை கண்டுபிடிக்க சளியில் காசநோய்க்கான கிருமி உள்ளதா என்று தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு பரிசோதிக்க வேண்டும். நாட்டின் பகுதிகளில் டாட்ஸ் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் அளிக்கப்படும் சேவைகள் அனைத்தும் முற்றிலும் இலவசம்.
நன்றாக இருமிய பின் வரும் சளியைதான் பரிசோதனைக்கு தரவேண்டும். முக்கியமாக சளிக்கு பதிலாக உமிழ் நீரை தரக்கூடாது. பரிசோதனைக்கு உமிழ் நீரை தந்தால் நோயை கண்டுபிடிக்க முடியாது.
காச நோய்க்கான சிகிச்சை என்ன?
காச நோய் எதிர்ப்பு மருந்துகளை தொடர்ந்து முழு சிகிச்சை காலத்திற்கு எடுத்துகொண்டால் இந்த நோய் முழுமையாக குணமடையக்கூடியது. காச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி, குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியாக மருந்து எடுத்துகொள்ள வேண்டும். சில நோயாளிகளுக்கு மருந்துகளை ஒரு வருடத்திற்கு கூட தொடர வேண்டிய நிலை வரலாம். முக்கியமாக மருத்துவரின் ஆலோசனைப்படி தான் மருந்துகளை நிறுத்த வேண்டும். முழுமையான அல்லது தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்து கொள்ளாத நோயாளிகளுக்கு இந்த நோய் உயிருக்கு ஆபத்தானதாகவோ அல்லது குணப்படுத்த முடியாததாகவோ மாறிவிடும்.
இந்த காச நோய் குணப்படுத்தகூடியதா?
தேவையான காலங்களுக்கு, முறையாகவும் மற்றும் தொடர்ச்சியாகவும் சிகிச்சையை எடுத்துகொண்டால் இந்த நோய் முழுமயாக குணமடையக்கூடியதே. காச நோய் கிருமிகளை முற்றிலுமாக கட்டுப்படுத்த பல்வேறு வகையான நுண்ணுயிர்க் கொல்லி / கட்டுப்படுத்தும் மருந்துகள் தேவைப்படுகிறது. காசநோய்க் கிருமிகள் படிப்படியாகத்தான் அழிக்கப்படுகிறது. எனவே குறிப்பிட்ட காலம் வரையிலும் கொடுக்கப்படும் மருந்துகளை உட்கொள்வது மிகவும் அவசியமாகும். மருந்து உட்கொண்ட சில வாரங்களில் உடல் நன்றாக குணமடைய தொடங்கும். அப்பொழுது இடையில் மருத்துவ சிகிச்சையை நிறுத்துவதால் உடலிலுள்ள காசநோய்க் கிருமிகள் முற்றிலும் அழிக்கப்படுவதில்லை. ஆகவே, மருத்துவ சிகிச்சை முழுமையாக மேற்கொள்வது மிகவும் அவசியம். எனவே நோயாளி தொடர்ந்து மருந்து உட்கொள்வதை மற்றவர் மேற்பார்வையிடும் ஒரு மருத்துவ சிகிச்சை முறை தற்பொழுது நடைமுறையில் உள்ளது. இது ஆங்கிலத்தில் டாட்ஸ் (DOTS) என்று அழைக்கப்படுகிறது. இந்த DOTS மருத்துவ சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது.
காச நோயை எவ்வாறு தவிர்க்கலாம்?
காச நோயாளி வாயை மூடாமல் இருமினாலோ அல்லது தும்மினாலோ, அல்லது அங்கங்கு துப்பினாலோ,அவர்களின் எச்சில் மூலம் காச நோய் பரவுகிறது. அதனால் நோயாளிகள் இருமும்பொழுதும் அல்லது தும்மும்போதும் எப்போதும் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும்.
நோயாளிகள் அங்கங்கு துப்பக்கூடாது மற்றும் இருமும் போது கைக்குள் ஸ்பிடூன் வைத்து கொள்ள வேண்டும். வீட்டிலும் நோயாளிகள் மூடி உள்ள தொட்டியில் தான் துப்பவேண்டும்.
காச நோயின் அறிகுறிகள் ஒருவருக்கு தோன்றினால், அதை கண்டு பயப்படாமல் இருப்பதும், நோயை மறைக்காமல் இருப்பதும் மிக முக்கியம். குறிப்பிட்ட நபர் தன்னை பரிசோதித்து கொள்வதும் தேவையான ஓய்வு எடுத்து கொள்வதும் அவசியம்.
காச நோயாளிக்கு தரவேண்டிய உணவு என்ன?
காச நோயாளிகள் தங்களுக்கு பிடித்த எந்த வகை உணவையும் சாப்பிடலாம். காச நோயாளிக்கு எவ்வித வித்தியாசமான உணவுகளும் தேவையில்லை. குறிப்பிட்ட நபருக்கு பிரச்சனை தரக்கூடிய எந்த உணவையும் தவிர்க்கவேண்டும்.
காசநோயாளிகள் தவிர்க்க வேண்டிய பொருள்கள் என்ன?
காச நோயாளி, பீடி, சிகரெட், புகையிலை, மதுபானம் அல்லது மற்ற போதை தரக்கூடிய பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும். குளிர்ச்சியான பொருட்களை தவிர்த்தல் வேண்டும்.
காச நோய் - செய்யவேண்டியதும் மற்றும் செய்யக்கூடாததும் யாவை?
செய்யவேண்டியது.
செய்யக்கூடாதவை
டாட்ஸ் என்றால் என்ன?
டாட்ஸ் என்பது குறுகிய கால நேரடி கவனிப்பு பரிசேதனையாகும். டி.பி.-யை கண்டுபிடிக்கவும் குணப்படுத்தவும் உலகெங்கும் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் இது சிறப்பான வழிமுறையாக பெயர் பெற்றது. இது ஐந்து உட்கூறுகளை உள்ளடக்கியது:
டாட்ஸ் முறையின் சிறப்புகள் என்ன?
மருந்து எதிர்ப்பு காசநோய் என்றால் என்ன?
சாதாரன காசநோய்க்கு கொடுக்கப்படும் வழக்கமான நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு குணம் அடையாமல் உருவாகும் ‘மருந்து எதிர்ப்பு காசநோய்’ தான், மிகவும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. நோயாளிகள் தொடர்ச்சியற்ற மற்றும் முழுமையடையாத சிகிச்சை முறைகள்தான் மருந்து எதிர்ப்பு ஏற்படுவதற்கான காரணமாக அமைகிறது. தொடர்ச்சியாகவும் முழுகால அளவும் காசநோய் எதிர்ப்பு மருந்தை சாப்பிடுவதன் மூலம் எம்.டி.ஆர். காசநோயை தவிர்க்கலாம். இந்த வகை காசநோய் மிகவும் செலவுமிக்கது. மேலும் இது பயனளிக்காமல் போவதுடன் சிகிச்சையின் காலகட்டம் 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கப்படலாம்.
டி.பி. மற்றும் ஹச். ஐ. வி. க்கான உறவுநிலை எப்படிபட்டது?
யாருக்கு வேண்டுமானாலும் காசநோய் தொற்று ஏற்படலாம். ஹச்.ஐ.வி உள்ள மனிதர்கள் காச நோயால் அவதிப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எச். ஐ. வி.-யால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது இந்த பாக்டீரியா வளர்ந்து பன்மடங்காகலாம். இது காச நோய் வியாதியாக மாற்றமடைகிறது.
கடைசியாக மாற்றப்பட்டது : 5/21/2020
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...
ரத்த அழுத்தத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை பற்றி இங்க...
3 வகை உடல் 6 வகை பருமன் பற்றி இங்கு கொடுக்கப்பட்டு...
பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள...