অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

சர்க்கரை நோய் - நோயறிதல் மற்றும் சிகிச்சை

சர்க்கரை நோய் - நோயறிதல் மற்றும் சிகிச்சை

நோய் கண்டறியப்பட்ட பின் வாழ்க்கை முறை மற்றும் உணவு மாற்றங்கள் மட்டும் ஏற்படுவதில்லை. இது சிறுநீரக நோய், நரம்பு சேதம் வரை மற்ற பல்வேறு நோய்களுக்கும் வழிவகுக்கலாம்

நீரிழிவு என்றால் என்ன?

நீரிழிவு என்பது உயர் இரத்த சர்க்கரை அளவை வகைப்படுத்தப்படும் ஒரு வளர்சிதைமாற்ற நோய். இது இன்சுலின் பற்றாக்குறை (நீரிழிவு வகை 1) காரணமாக அல்லது உடலின் செல்கள்,  இன்சுலின் (நீரிழிவு வகை 2) உற்பத்திக்கு பதிலளிக்க தவறினால் ஏற்படுகிறது. கர்ப்பகால நீரிழிவு எனப்படும் கர்ப்பிணி பெண்களைப் பாதித்து வரும் மற்றொரு வடிவ நீரிழிவும் இருக்கிறது.

அறிகுறிகள்

சர்க்கரை நோயில், உடல் குளுகோசை உறிஞ்ச முடியாததால், நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன இங்கே சில நீரிழிவு நோயை உணர்த்தும் அறிகுறிகள் சொல்லப் பட்டிருக்கின்றன

  1. பசி அதிகரித்தல்
  2. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  3. மிகவும் தாகமாக உணருதல்
  4. எடை இழப்பு
  5. நாள் முழுவதும் களைப்பாக உணருதல்
  6. அடிக்கடி தொற்றுநோய்கள்
  7. காயங்கள் குணமாவது தாமதமடைதல்
  8. உயர் (அதிகமான) எரிச்சல் / மன அழுத்தம்
  9. மங்கலான பார்வை

நமது செரிமான அமைப்பு நாம் என்ன உணவு சாப்பிட்டாலும் அதை குளுக்கோஸாக உடைக்கிறது. இந்த குளுக்கோஸ் இன்சுலின் என்ற ஹார்மோன் உதவியுடன் இரத்தத்தின் மூலம் உறிஞ்சப்படுகிறது. உடலினால் இன்சுலின் உற்பத்தி செய்ய முடியவில்லை அல்லது அதை திறம்பட பயன்படுத்த முடியவில்லை எனும் போது நீரிழிவு ஏற்படுகிறது. இது ஏன் நடக்கிறது என்பதற்கான காரணங்கள் சில உள்ளன.

மரபணுக்கள்

மரபணுக்கள், வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவு ஏற்படுத்துவதற்கு பொறுப்பாக இருக்க முடியும். மரபணுக்களின் சிலவகை சேர்க்கைகள் நீரிழிவு ஆபத்தை அதிகரிக்கவும் அல்லது குறைக்கவும் செய்கின்றன.

உங்கள் பெற்றோர்கள் நீரிழிவு நோய் உள்ளவர்களென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும்.

பீட்டா செல்களின் நோய் எதிர்ப்பு தடுப்பாற்றல் அழிப்பு

சில சமயங்களில், நமது சொந்த உடற்காப்பு அமைப்பு, இன்சுலினை உற்பத்தி செய்யும் பீட்டா செல்களை நோய் எதிர்ப்பு அமைப்பாக அங்கீகரித்து, அவைகளை அழிக்க ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன. பெரும்பாலும் செல்கள் மிக அழிக்கப்பட்ட பிறகு, நீரிழிவு நோய் கண்டுபிடிக்கப்படுகின்றன மற்றும் நோயாளி உயிர் பிழைக்க தினசரி ஒரு இன்சுலின் டோஸ் தேவைப்படுகிறது..

உடல் செயல்பாடு குறைவாக இருத்தல், உடல் பருமன்

உடற்பயிற்சி பற்றாக்குறை மற்றும் உடல் பருமன், வகை 2 நீரிழிவுக்கு முக்கிய காரணங்களாக இருக்க முடியும் நுகரப்படும் கலோரி மற்றும் எரித்த கலோரிகளிடையே உள்ள ஏற்றத்தாழ்வு ஒழுங்காக இன்சுலினை நம் உடல் உறிஞ்சுவதற்கு இயலாததாகச் செய்யும். வெறும் 30  நிமிட உடல் செயல்பாடு 30 சதவீதம் உங்கள் நீரிழிவு வாய்ப்புகளைக் குறைக்கிறது. எனவே, நீங்கள் உங்கள் தினசரி கால அட்டவணையில் நடைபயிற்சி மற்றும் சைக்கிள் போன்ற நடவடிக்கைகள் அடங்கும்படி உறுதி செய்ய வேண்டும்.

முதுமையடைதல்

ஒரு நபருக்கு வயதாகும் போது, அவன் / அவள் உடலின் பல பகுதிகள் தங்கள் சிறந்த  மேலான செயல்பட்டை நிறுத்துகின்றன. இது  நீரிழிவுடன் பல நோய்களுக்கும் சேர்த்து, வழி வகுக்கிறது.

சில மருந்துகள்

நிகோடினிக் அமிலம், உளவியல் மருந்துகள், சிறுநீரிறக்கிகள், போன்ற குறிப்பிட்ட சில மருந்துகள் இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்களை அழிக்க அல்லது இன்சுலின் உறிஞ்சுதலைத் தகர்க்கின்றன.

கணைய நோய் அல்லது காயம்

பீட்டா செல்கள் கணையத்தில் உள்ளன என்பதால் - புற்றுநோய், கணைய அழற்சி, போன்ற எந்த காயம் அல்லது நோய் பீட்டா செல்களை செயல்பட்டிலிருந்து நிறுத்தி இறுதியில் நீரிழிவு ஏற்பட வழி செய்யலாம்.(படியுங்கள்: நான் 3 மாதங்களில்என்நீரிழிவுநோயை எப்படி மாற்றினேன்)

நோய் கண்டறிதல்

நீரிழிவு இரத்த பரிசோதனைகள் மூலம் கண்டறியப்படுகிறது, மற்றும் நீரிழிவு நோயைக் கண்டு பிடிக்க  மூன்று சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன;-

A1C சோதனை அல்லது கிளைகோ ஹீமோகுளோபின் பரிசோதனை

இந்த சோதனை வகை 2 நீரிழிவு நோயைக் க்ண்டுபிடுக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது கடந்த மூன்று மாதங்களில் ஒரு நபரின் சராசரி இரத்த குளுக்கோஸ் அளவை அளவிடும்.

ஒரு நபரின் A1C நிலை 5.7%க்கு கீழே இருந்தால், அது அவன் / அவள் சாதாரண நிலையில் தான் இருக்கிறார் என்று அர்த்தம். அது 6.4%, 5.7% இடையே இருந்தால், அதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து கொள்ளவில்லை என்றால் நீரிழிவுக்கு வழிவகுக்கும் என்ற் முந்தைய நீரிழிவு அறிகுறியைக் குறிக்கிறது.அவன் / அவளுக்கு 5.7% அல்லது அதற்கு மேல் ஒரு A1C நிலை உள்ளது என்றால் ஒரு நபருக்கு நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது.

உண்ணாவிரத பிளாஸ்மா குளூக்கோஸ் (FPG) சோதனை

  • உண்ணாவிரத பிளாஸ்மா குளூக்கோஸ் சோதனை நீரிழிவு நோயைக கண்டுபிடிக்க மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் சோதனை. அவன் / அவள் குறைந்தது 8 மணி நேரம் விரதம் இருந்த பிறகு, இது ஒரு நபரின் இரத்த சர்க்கரை அளவை அளவிட செய்யப்படுகிறது
  • ஒரு நபருக்கு 126 mg / dL அல்லது அதற்கு மேலே விரத குளுக்கோஸ் அளவு இருக்கிறதென்றால், அவன் அவளுக்கு நீரிழிவு உள்ளது. இதை உறுதி செய்ய மற்றொரு நாள் மீண்டும் சோதனை செய்ய ஆலோசனை வழங்கப் படுகிறது.

வாய்வழி குளூக்கோஸ் சகிப்புத்தன்மை சோதனை (OGTT)

ஒரு வாய்வழி குளூக்கோஸ் சகிப்புத்தன்மை சோதனையில், ஒரு நபர் குறைந்தது 8 மணி நேரமாவது விரதம் இருக்க வேண்டும்.அதன் பின் அவன்/அவள் ஒரு கோப்பை தண்ணீரை 75 கிராம் குளுகோசுடன் க்லந்து குடுக்க வண்டும்.

ஒரு நபரின் 2 மணி நேர இரத்த குளுக்கோஸ் அளவு 199 mg / dL -140க்கும் இடையே இருந்தால், சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீரிழிவுக்கு வழிவகுக்கும் நீரிழிவுக்கு முந்தைய நிலையாகும் .இரத்த குளுக்கோஸ் அளவு 200 mg / dL மேலே என்றால், அந்த நபருக்கு நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது.

சிகிச்சை

உங்கள் நீரிழிவை உணவு, உடற்பயிற்சி மற்றும் எடை கட்டுப்பாடுகளால் கட்டுப்படுத்த முடியாது என்றால், உங்கள் மருத்துவர் எதிர்ப்பு நீரிழிவு மருந்துகள் அல்லது இன்சுலினைப் பரிந்துரைக்கின்றனர். வகை 2 நீரிழிவிற்கு பெரும்பாலான மக்கள் வாய்வழி மருந்துகளில் ஆரம்பிக்கின்றனர். அவற்றில் சில இங்கே உள்ளன:

உங்கள் கணையத்தின் மீது செயல்படும் மருந்துகள்

சல்போனைல்யூரியாஸ் (டயாபேட்டா, க்ளூக்கோட்ரால், அமெரில்  முதலியன) கணையத்திலிருந்து இன்சுலின் வெளியீட்டை அதிகரித்து, இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது. இந்த மருந்துகள் விரைவாக இரத்த சர்க்கரையை குறைக்கின்றன ஆனால் வழக்கத்துக்கு மாறாக குறைந்த மற்றும் ஆபத்தான அளவிற்கு இரத்த சர்க்கரை (ஹைபோக்ளைக்கேமியா) குறைத்து மன குழப்பம், மற்றும் கோமா நிலை ஏற்படுத்தலாம். மெக்லிடினைய்டிஸ் (பிரான்டின், ஸ்டார்லிக்ஸ் முதலியன) இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் படி கணையத்தில் வேலை செய்கின்றன. அவற்றின் விளைவுகள் குளுக்கோஸ் அளவைப் பொறுத்துள்ளது. விக்டோஜா (ஹைராக்லுயுடைட்) ஒரு ஊசி மருந்து, ஒரு உணவு சாப்பிட்ட பிறகு, கணையம் மேலும் இன்சுலினை தயாரிக்க உதவுகிறது. உணவு மற்றும் உடற்பயிற்சி திட்டத்துடன் பயன்படுத்தும் போது அது, வகை 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு இரத்த சர்க்கரையை அதிகரிக்கிறது.

கல்லீரலிருந்து வெளிப்படும் குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் மருந்துகள்

பைகுவானியிஸ் (மெட்போர்மின்) கல்லீரலில் குளுக்கோஸ் உற்பத்தியைக் குறைக்கிறது,, குடலில் உள்ள குளுக்கோஸ் உறிஞ்சுதலைக் குறைக்கிறது, மற்றும் உடலில் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுததிகிறது. இது அதிக எடை கொண்ட நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும் படி பசியை, ஒடுக்குகிறது.

இன்சுலினுக்கு செல்களின் உணர்திறனை (செயலை) அதிகரிக்கும் மருந்துகள்

  • தைசோலிடினேடியோன்ஸ் (ஆக்டாஸ் மற்றும் அவன்டியா) இன்சுலினுக்கு தசை மற்றும் கொழுப்பு செல்கள் உணர்வை அதிகரித்து இரத்த குளுக்கோஸைக் குறைக்கிறது. இந்த மருந்துகளை மெட்ஃபோர்மின் மற்றும் / அல்லது  சல்பொநிலுரியாவுடன் எடுத்துக் கொள்ளலாம். அவைகள் லேசான கல்லீரல் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம் ஆனால் மருந்தை  இடையில் நிறுத்துவது இதைச் திருப்பச் செய்யத்தக்கதாக்க முடியும்.

குடலிலிருந்து  கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலைக் குறைக்கும் மருந்துகள்

  • ஆல்பா குளுக்கோசிடேஸ் சிறுகுடலிலுள்ள ஒரு நொதி ஆகும். இது கார்போஹைட்ரேட்டை குளுக்கோஸாக உடைக்கிறது அகார்போச என்ற மருந்து இந்த நொதியைத் தடுக்கிறது
  • கார்போஹைட்ரேட் திறமையாக உடைக்கப்படாமலும் மற்றும் குளுக்கோஸ் உறிஞ்சப்படுவது தாமதமாகவும் நடக்கிறது. இதனால் நீரிழிவு உள்ளவர்களுக்கு சாப்பிட்ட பிறகு உயர் குளுக்கோஸ் அளவை தடுக்கிறது.

மெதுவாக வயிற்றை காலியாக்கும் மருந்துகள்

எக்ஸ்னடைடு (பையெட்டா)என்பது குடல் ஹார்மோன் (GLP-1) போன்ற எளிதில் உடைக்க முடியாத ஒரு பொருளாகும். இது வயிறு காலியாதைத் மெதுவாகச் செய்யும், கல்லீரலிருந்து குளுக்கோஸ் வெளியீட்டு வேகத்தை குறைக்கிறது, மற்றும் பசியைக் கட்டுப்படுத்துகிறது.  ஒரு ஊசி வடிவில் செலுத்தப்படுகிற பையெட்டா எடை குறைப்பை ஏற்படுத்துகிறது. இதனால், மேலும் அதிக எடை கொண்ட வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது குறிப்பாக பொருத்தமான வகையில் இருக்கிறது.,  DPP-IV தடுப்பான்கள் (ஜானுவியா, ஓங்க்ளைசா, ட்ராஜென்டா), DPP-IV நொதிகள், குடல் ஹார்மோன்களை (GLP-1) உடைத்தலில் இருந்து தடுக்கும். இது இரத்தத்தில் ஏற்கனவே இருக்கும் ஹார்மோனை நீண்ட சுற்றலுக்கு அனுமதிக்கிறது அவை இரத்த சர்க்கரை அதிகமாக இருக்கும் போது இன்சுலின் சுரப்பு அதிகரிக்கவும் மற்றும் அதிகப்படியான சர்க்கரை உற்பத்தியை நிறுத்த கல்லீரலுக்கு அடையாளம்.காட்டுகின்றன.

இன்சுலின் ஊசிகள் : இன்சுலின் வகை 1 நீரிழிவு நோயாளிகளின் சிகிச்சைக்கு முதுகெலும்பாக இருக்கிறது. இரத்த குளுக்கோஸ் அளவை உணவு, எடை இழப்பு, உடற்பயிற்சி மற்றும் வாய்வழி மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியாத போது இன்சுலின் வகை 2 நீரிழிவுக்கு முக்கியமானது.

  1. வேகமாக செயல்படும் இன்சுலின் – 15 நிமிடங்களில் செயல்படத் தொடங்கி 3 முதல் 5 மணி நேரம் இருக்கிறது. விரைவான செயல்படும் இன்சுலின் 3 வகைகள் உள்ளன :இன்சுலின்லிஸ்ப்ரோ, இன்சுலின் ஆஸ்பார்ட் மற்றும் இன்சுலின் க்ளூலிசைன்
  2. குறுகிய நேரம் செயல்படும் இன்சுலின்  (வழக்கமான இன்சுலின்) – 30 முதல் 60 நிமிடங்களில் செயல்படத் தொடங்கி  5 மணி நேரம் முதல் 8 மணி நேரம்  இருக்கிறது
  3. இடைநிலை செயல்படும் இன்சுலின் (இன்சுலின் NPH) –1 முதல் 3  மனிகளில் செயல்படத் தொடங்கி  12 மணி நேரம் முதல் 16 மணி நேரம்  இருக்கிறது
  4. நீண்ட நேரம் செயல்படும் இன்சுலின்  ( இன்சுலின் க்ளார்ஜின் மற்றும் இன்சுலின் டிடமிர்) – ஒரு மணி நேரத்தில் செயல்பட ஆரம்பித்து 20 முத்ல் 26 மணி நேரம் வரை நீடிக்கிறது.
  5. முன்பே கலந்த இன்சுலின் - இன்சுலின் 2 வகையான கலவை (பொதுவாக ஒரு விரைவாக செயல்படும் அல்லது குறுகிய செயல்படும் இன்சுலின் மற்றும் ஒரு இடைநிலை செயல்படும் இன்சுலின்

இன்சுலின் செலுத்துவதற்கான பல்வேறு முறைகள்

முன்பே நிரப்பப்பட்ட இன்சுலின் பேனா – இது ஒரு நீரூற்று பேனாவில் ஒரு மை பொதியுறை போலவே உள்ளது.  இன்சுலின் கெட்டிரெஜ் ஒரு சிறிய பேனா அளவிலான சாதனத்தின் மூலம் பிடித்துக் கொள்ளப்படுகிறது.விநியோகிப்பதற்கு தேவையான அளவு இன்சுலின் அலகுகள், பேனாவைக் கீழே திருப்பி அத்ன் மூலம் எண் அளவை பார்க்கும் சாளரத்தில் தெரியும் வரை ஊசி போட வேண்டும். பேனாவின் முனை ஒரு ஊசியைக் கொணடுள்ளது, இது ஒவ்வொரு முறை ஊசி போட்ட பின்பும் அகற்றப் படுகிறது.

இன்சுலின் உந்திகள் (பம்ப்) – இந்த இன்சுலின் விநியோகம் மிக சமீபத்தில் கிடைக்கக் கூடிய முன்னேற்றமாகும். இது   இன்சுலின் கெட்டிரேஜை ஒத்த ஒரு பம்ப் நீர்த்தேக்கம், ஒரு பேட்டரியால் இயக்கப்படும் குழாய் மற்றும், இன்சுலின் சரியான அளவு வழங்கப்ப்டுவதைக் கட்டுப்படுத்த கணினி சிப்   ஆகிய்வற்றால் ஆனது. பம்ப் தொடர்ந்து இன்சுலின் விநியோகிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இன்சுலின் அளவு திட்டமிடப்பட்ட ஒரு நிலையான விகிதத்தில் செலுத்த்ப்ப்படுகிறது

உள்ளிழுப்புகள் – இன்சுலின் உள்ளிழுக்கப்படும் படிவத்தை இந்த நாட்களில் அதிகம் பயன்படுத்துவதில்லை. இன்சுலின் உலர் பெட்டிகளில் தொகுக்கப்படடு ஒரு உள்ளிழுக்கும் சாதனத்துடன் செருகப்படும்   இந்த சாதனம் இன்சுலினை ஒரு வாய் துண்டு உள்ள ஒரு அறையில் நுழைய அனுமதிக்கின்றது.இந்த வாய் துண்டு மூலம் பயனடைவோர் இன்சுலினை உள்ளிழுக்க முடியும்.

புதிய மருந்தேற்றும் ஊசி – சிம்லின்(ப்ரமிலின்டைடு)

இன்சுலின் சிகிச்சை அளித்தும் போதுமான சர்க்கரை கட்டுப்பாடு அடைய முடியாமல் இருக்கும் நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்த ஊசியால் செலுத்தும் மருந்து.அமிலின் கணையம் செயற்கையாக சுரக்கும் ஹார்மோன் ஆகும் மற்றும் இது சாப்பாட்டிற்க்கு பிறகு குளுக்கோஸை கட்டுப்படுத்த் உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு இல்லாமல் அல்லது குறைவாக இருக்கும். ப்ரமிலின்டைடு என்பது ஒரு செயற்கை வடிவ ம்னித அமிலினாகும்.இன்சுலினுடன் இதை உபயோகிக்கும் போது, சர்க்கரைக்  கட்டுப்பாட்டை மேம்படுத்தும்.கிம்லின், சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரை உச்சங்களை குறைக்கிறது நாள் முழுவதும் குளுக்கோஸ் ஏற்ற இறக்கங்களைக் குறைக்கிறது மற்றும் முழுதான் உணர்வை அதிகரிக்கிறது.

முன்கணிப்பு / சிக்கல்கள்

கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயினால் கொடிய சிக்கல்கள் ஏற்படலாம்,

கொழுப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தின் விளைவு (நீரிழிவு கீட்டோஅசிடோசன் )

குளுக்கோஸை உடைக்கிற ஹார்மோன் இன்சுலின் குறைவாக உள்ளது என்பதால், கட்டுப்பாடற்ற சந்தர்ப்பங்களில், உடல் எரிபொருள் ஆதாரமாக கொழுப்பைப் பயன்படுத்தத் தொடங்குகிறது. நீங்கள் இந்த வழி கொஞ்சம் கொழுப்பை இழக்க ஒரு மோசமான யோசனை இல்லை என்று நினைக்கின்ற, இது “கீடோன்ஸ்” என்ற   அழைக்கப்படும் கொழுப்பு செரிமானம் பொருட்கள்   கட்டியெழுப்புகிறது நீங்கள் தொடர்ந்து உங்கள் இன்சுலின் அளவை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், காய்ச்சல் / வயிற்றுப்போக்கு / வாந்தி எடுத்தல் மற்றும் / அல்லது மன அழுத்தம் நிறைய உள்ள்து அல்லது   மது அருந்துபவராக் இருந்தால், நீங்கள் 'கீட்டோஅசிடோசிசு' என்று இந்த நிலை உருவாவதைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும் உங்களுக்கு ஆழ்ந்த ஊசலாடி சுவாசம், வயிற்றில் கடுமையான வலி, மோசமான வறட்சி, பலவீனம் மற்றும் மயக்கம் வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால்,   நீங்கள் அதை  தீவிரமாக எடுத்துக் கொன்டு உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டிய நேரமாகும்..,

கண்களில் பாதிப்பு (நீரிழிவு விழித்திரை)

விழித்திரை (உங்கள் கண் உள்ளான அடுக்கு) பயனற்ற இரத்த குளுக்கோஸ் கட்டுப்பாடு பாதிக்கப்படும். விழித்திரையிலுள்ள சிறிய இரத்த நாளங்கள் சேதமடைய மற்றும் பலவீனமானதாகின்றன.நீரிழிவு தொடர்பான கண் சிக்கலின் ஆரம்ப அறிகுறி மங்கலான பார்வை மற்றும் இரட்டை பார்வை ஆகும்.இது ஒரு கடுமையான, நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தும். நீரிழிவு கண்புரை மற்றும் பசும்படலம் வளரும் ஆபத்தை அதிகரிக்கிறது. (படிக்கவும்: : நீரிழிவு விழித்திரை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்)

சிறுநீரகத்தில் பாதிப்பு (நீரிழிவு நெப்ரோபதி)

நீங்கள் உங்கள் பாதங்கள் மற்றும் கால்கள் அல்லது உங்கள் கண்களைச் சுற்றி வீக்கட்தை கவனித்தீர்களென்றால், உங்கள் சிறுநீரகங்கள், கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவினால் பாதிக்கப்பட்டக் கூடும். நீங்கள் உயர் இரத்த அழுத்தம் (அல்லது உயர் இரத்த அழுத்தம்) உள்ளவரென்றால், இது வளரும்   வாய்ப்புகள் கூட உங்களுக்கு அதிகமாக உள்ளது.

நரம்புகளில் பாதிப்பு

சில நரம்புகள். குறிப்பாக கால்கள் போன்றவற்றின் வெளிப்புற பகுதிகள் சில, முதலில் பாதிக்கப்பட்டு, பின்னர் உணர்ச்சி இழப்பிறகு வழிவகுத்து விடும். நீங்கள் ஒரு காயம் இருந்தது என்றால் அதைக் கண்டுபிடிக்க முடியாது மற்றும் அது தொற்று கொள்வதில் முடிவடைவதாக இருக்கலாம்  நீரிழிவு அழுகல் (கால் தொற்று, ஏற்பட்டு சதை சிதைவு  ) ஏற்படலாம் மற்றும் கால் துண்டிக்கப்பட வேண்டி இருக்கலாம். கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு கூட இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் நரம்புகளை பாதிக்கும். உங்கள் இதய துடிப்பு, இரத்த அழுத்தம், செரிமானம், உறுப்புகளுக்கு இரத்த ஒட்ட்ம் போன்றவை பாதிக்கப் பட்டு வயிற்றுப்போக்கு, விறைப்பு, சிறுநீர்ப்பை கட்டுப்பாடு, பார்வை மாற்றங்கள், மற்றும் மயக்கம் ஆகியவற்றிக்கு  வழிவகுக்கலாம்.(வாசிக்க: நீரிழிவு நரம்பு கோளாறு: காரணங்கள்,அறிகுறிகள்,தடுப்பு மற்றும் சிகிச்சை)

இதயத்தில் பாதிப்பு

நீங்கள் புகைபிடிப்பவர், உயர் இரத்த அழுத்தம், பெரிதும் அதிக எடை மற்றும் / அல்லது ஒரு நீரிழிவு குடும்ப வரலாறு மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர் என்று கண்டுபிடிக்க்ப்ப்ட்டவர் என்றால், உங்களுக்கு இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயம் மிகவும் உள்ளது.

நீங்கள் ஒரு நீரிழிவு வியாதியாளராக இருந்தால், நீங்கள் இப்போது   தொடர்ந்து உங்கள் மருந்துகளை எடுத்துக் கொள்ள்  மற்றும் / அல்லது வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்கு போகவில்லை என்றால் எழும்   சிக்கல்கள் பற்றி மேலும் தெரிந்து வைத்திருப்பீர்கள். நீங்கள் வியாதியாளர் இல்லை என்றால் (நீரிழிவு நோய் உங்களுக்கு இருக்கிறதா என்று அறிகுறிகள் சில கண்டுபிடிக்க இங்கே கிளிக் செய்யவும்). உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம், ஆகியவற்றை இவைகள் வராமல் தடுக்கும் படி அமைத்துக் கொள்ளுங்கள்.

ஆதாரம் : சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/24/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate