ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோய். சுவாசக்குழல்கள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும். ஆஸ்துமா உள்ள நபர்களில், சுவாசக்குழாய்களின் உட்சுவர் வீக்கம் கண்டிருக்கும். இப்படிபட்ட வீக்கம் சுவாசக்குழாயில் அலர்ஜி எனப்படும் ஓவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ அல்லது மூச்சுக் குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ (உம். புகை, தூசி) செல்லும்போது சுவாசக்குழாய்கள் இப்படிப்பட்ட பொருட்களுக்கு எதிராக செயல்படும்.
இப்படி சுவாசக்குாழய்கள் எதிரிடையாக செயல்படும் போது சுவாசக் குழாய்களின் உள் சுற்றளவு குறைந்து, சாதாரண அளவைவிட மிக குறைந்தளவு காற்றே நுரையீரலின் காற்றுப் பரிமாணம் நடக்கும் இடத்திற்கு செல்கிறது. இதனால், நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது. இதன் விளைவாக, மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை (விசில் சத்தத்துடன்), இருமல், மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை உண்டாக்குகிறது. இவை அனைத்தும் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் காணப்படும்.
ஆஸ்துமா வியாதியை குணப்படுத்த முடியாது. ஆனால் ஆஸ்துமா நோய்கண்ட அநேகர் இந்த நோயினை கட்டுப்படுத்திக் கொள்கின்றனர். எனினும், ஒருசில நேரங்களில் நோயின் தாக்கம் இருப்பினும், அவர்களும் மற்றவர்களை போல சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்கின்றனர். ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும் போது சுவாசக்குழாய்களில் மிக அதிகமான அடைப்பு ஏற்பட்டு, உடலில் முக்கிய உறுப்புகளுக்கு போதிய பிராணவாயு கிடைப்பதில்லை. (உம். மூளை, ஈரல், சிறுநீரகங்கள்). இது போன்ற நேரங்களில் அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலை ஏற்படுகிறது. ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருப்பின் உயிர் இழப்பும் நேரிடுகிறது.
எனவே ஒருவர் ஆஸ்துமா வியாதியினால் பாதிக்கப்பட்டால், அந்த நபர் மருத்துவரை சந்தித்து, முறைப்படி மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும். எதனால் ஆஸ்துமா வருகிறது, அதனை எப்படி தவிர்க்கலாம் என்பதனையும், அறிந்து கொள்ள வேண்டும்.
நாம் இருக்கும் சுற்றுச்சூழலில் சில மாசுப்பட்டபொருட்கள் காணப்படுகிறது. அவை நம்மில் ஆஸ்துமா வியாதிக்கான அறிகுறிகள் மற்றும் பாதிப்புக்குளை கொண்டு வருகிறது. ஆஸ்துமா வருவதற்கான சில பொதுவான காரணங்களில் உடற்பயிற்சி, அலர்ஜின்ஸ் எனப்படும் ஒவ்வாமை பொருட்கள் எரிச்சலூட்டும் பொருட்கள் மற்றும் வைரஸ் நோய் தொற்று போன்றவையும் அடங்கும். சிலருக்கு உடற்பயிற்சி செய்யும் போதும் அல்லது வைரஸ் கிருமிகளால் தாக்கப்படும் போதும் மட்டும், ஆஸ்துமா வியாதி காணப்படுகிறது.
கேள்வி: ஆஸ்துமா நோயாளிகள் எல்லாவிதமான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளலாமா?
பதில்: ஸ்கூபா டைவிங்,தலைக்கு மேல் பளு தூக்குதல் ஆகியவற்றைத் தவிர மற்ற எல்லா உடற் பயிற்சிகளையும் செய்யலாம்.
கேள்வி: ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆபத்தானவை என்று எதைச் சொல்வீர்கள்.?
பதில் : கடல் மீன் உணவு, கொகோ சாக்கலேட்டுகள், உலர் பழங்கள் ஆகியவற்றால் ஏற்படும் ஒவ்வாமை, தேனி பூச்சி, கதண்டு ஆகியவை கடிக்க நேர்தல் ஆகியன மிகவும் ஆபத்தானவை.
கேள்வி: ஏசிக்கள் ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்றவையா?
பதில்: நிச்சயமாக. காரணம் அவற்றில் வரும் காற்று வடிகட்டப்படுகிறது. ஆனால் அதே நேரம் அந்த காற்று வடிகட்டிகள் அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். 27 முதல் 28 டிகிரி வெப்ப நிலையில் வைத்துக் கொள்வது நல்லது அத்துடன் காற்று முகத்தில் நேரடியாக படக்கூடாது.
கேள்வி: ஆஸ்துமா நோய் முற்றிலும் குணமடையக் கூடியதா? அதற்கு வழி இருக்கிறதா?
பதில்: இல்லை. ஆனால் கட்டுப்பட்டில் வைக்க முடியும். மருந்துகள் தற்காலிக நிவாரணம் தரக்கூடியவை மட்டுமே.வாழ்க்கை முறையை ஆஸ்த்துமாவிற்கு தக்கதாக மாற்றிக்கொள்வது மிக முக்கியமானது. மன அழுத்தம் தவிர்க்கப் பட வேண்டும். ஆஸ்துமா நோயாளிகளின் பெற்றோர்கள் வாழ்க்கைத்துணைகளுக்கு இதில் அதிக பொறுப்புணர்ச்சி தேவை.
ஆஸ்துமா பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும்(கிளிக் செய்யவும்)
கடைசியாக மாற்றப்பட்டது : 7/20/2020
இத்தலைப்பில் மருத்துவம், காவல்துறை மற்றும் தீயணைப்...
3 வகை உடல் 6 வகை பருமன் பற்றி இங்கு கொடுக்கப்பட்டு...
பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள...
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...