ஒவ்வொரு பல்லிலும் இரண்டு பாகம் உள்ளது – கிரீடம் மற்றும் வேர். கிரீடம் தான் நீங்கள் பார்க்ககூடிய பல்லின் பாகம், வேர் என்பது ஈறுகளின் அடியில் ஒளிந்திருக்கும். பல்லின் மொத்த நீளத்தில் 2/3 பாகம் வேர் தான். பெரியவர்ககளுக்கு
ஒவ்வொரு பல்லும் நான்கு வேவ்வேறு விதமான திசுக்களால் உருவாக்கப்பட்டது.
பற்களின் பயன்கள் என்ன?
தாடை எலும்புகளின் பிடிமானத்தில் தான் பற்கள் உள்ளன. பற்கள் இருந்தால் தான், பேசும் சொற்களை நன்கு உச்சரிக்க முடியும். பற்களால் தான், உணவை நன்றாக மென்று சாப்பிட முடியும். முகத்தில் பற்கள் இருந்தால் தான், அழகாக தெரிவோம்.
செயற்கை பற்கள் யாருக்கெல்லாம் கட்டப்படுகின்றன?
மிகவும் பாதிக்கப்பட்ட பல்லை எடுத்துவிட்டு செயற்கை பற்கள் கட்டப்படுகின்றன. புற்றுநோய் அறுவை சிகிச்சையால் தாடையை இழந்தோருக்கு, செயற்கை பற்களைக் கொண்ட பிளாஸ்டிக் தாடைகள் பொருத்தப்பட்டு, செயற்கை பற்கள் கட்டப்படுகின்றன. செயற்கை பற்களை உபயோகிப்பவர்களுக்கு
மருத்துவரின் அறிவரைகள் என்ன?
செயற்கை பற்கள் பொருத்தியவுடன், பிறரோடு பேசும் போது, சிரமமாக இருக்கும். இப்பற்கள் பழகும் வரை, இரவிலும் அணிய வேண்டும்; பழகியவுடன் இரவில் தவிர்த்துவிடலாம். சிகிச்சைக்கு பின், தொடக்க காலத்தில் மென்மையான உணவுகளையே உண்ண வேண்டும். அதே போல் முன்பற்களால் உணவை கடித்து உண்ணும் பழக்கம் கூடாது. காரணம், அப்பற்கள் இடம் மாறி பிடிப்பை இழக்க நேரிடும்.
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020
பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள...
3 வகை உடல் 6 வகை பருமன் பற்றி இங்கு கொடுக்கப்பட்டு...
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...
இத்தலைப்பில் மருத்துவம், காவல்துறை மற்றும் தீயணைப்...