நம் இந்திய நாடு பல்வேறு விஷயங்களுக்கு புகழ் பெற்றவையாகும். அப்படிப்பட்ட ஒன்று தான் மசாலாக்கள். மசாலா என்றாலே நம் நினைவில் முதலில் வருவது இந்தியாதான்.
நம் உணவுகள் காரசாரமாக, சுவைமிக்கதாக இருப்பதற்கு காரணமே நம்மிடம் உள்ள பல வகையான மசாலாக்கள்தானே. உணவுகளின் சுவைக்கு மட்டும் தான் இந்த மசாலாக்களா என்றால் கண்டிப்பாக இல்லை.
மசாலாவில் கூடுதலாக பலவித உடல் நல பயன்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
பல்வலி பல் துவாரங்கள், தொற்றுக்கள் மற்றும் ஈறு நோய்கள் போன்ற பல்வேறு காரணங்களால் தான் பல்வலி ஏற்படுகிறது. பல் மருத்துவரை அணுகுவது கட்டாயம் தான் என்றாலும் கூட, உடனடி இயற்கை தீர்வை அளிக்கும் சில வழிகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா?
அழற்சி எதிர்ப்பி மற்றும் வலி நிவாரணி குணங்களை கொண்டுள்ள இந்த மசாலா, பல்வலியுடன் போராடும் சிறந்த இயற்கையான நிவாரணியாகும். அதற்கு முழு கிராம்பு ஒன்றை பாதிக்கப்பட்ட பற்களின் இடையில் வைத்து சிறிது நேரத்திற்கு வாயை இறுக்கமாக மூடிக் கொள்ளுங்கள். இதனால் கிராம்பில் உள்ள ரசாயனம் வெளியேறி, வலிக்கு நிவாரணம் அளிக்கும்.
அழற்சி எதிர்ப்பி குணங்களுக்காக நன்கு அறியப்பட்ட ஜாதிக்காய், பல்வலிக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. வலி நீங்கும் பயன்களைப் பெறுவதற்கு ஜாதிக்காய் பொடியை வலி ஏற்படும் பல் மீது தடவிக் கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து வாயை கழுவிவிடுங்கள்.
ஈறுகளுக்கும், பற்களுக்கும் இந்த மசாலா மிகுந்த நன்மையை அளிக்கிறது. அதற்கு காரணம் அதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பி செயல்பாடு. உடனடி நிவாரணத்தைப் பெற, சிறிய அளவிலான லவங்கப்பட்டையை வாயில் போட்டு மென்று, மெதுவாக அதன் சாறை விழுங்கவும்.
பல பேர்களுக்கு, ஒருவருடனான உறவில், சுவாச துர்நாற்றம் பெரிய தடையாக விளங்குகிறது. இருப்பினும் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் மசாலாக்கள் இதற்கு தீர்வை அளிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஏலக்காய் திடமான வாசனையுடன் கூடிய ஏலக்காயில் இனிமையான வாசனையும் பாக்டீரியா எதிர்ப்பி குணங்களும் அடங்கியுள்ளதால், சுவாச துர்நாற்றத்திற்கு இது சிறந்த நிவாரணியாக விளங்கும். இதனை உங்கள் உணவிற்கு பிறகு அப்படியே மெல்லவும் செய்யலாம் அல்லது டீயில் கலந்து தினமும் காலையில் குடித்தால் உங்கள் பிரச்சனை நீங்கும்.
பொதுவாக உணவருந்திய பிறகு பயன்படுத்தப்படும் பெருஞ்சீரகம், வாய் நறுமணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இது எச்சில் ஊறுவதற்கு மட்டும் பயன்படாமல், வாயிலுள்ள பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு, வாய் துர்நாற்றத்தை போக்கவும் உதவும்.
முத்துப் போன்ற வெண்மையான பற்களை வைத்திருக்க யாருக்கு தான் ஆசை இருக்காது? வெண்மையான பற்களுக்கு வாய் சுகாதாரமும் பராமரிப்பும் மிகவும் முக்கியமாகும். இதனை அடைய சில மசாலாக்களும் உதவுகிறது.
எள்: பற்களில் உள்ள கறைகளை நீக்க எள் உதவும். பற்களை மற்றொரு வழியிலும் வெண்மையாக்கலாம். அது நல்லெண்ணெய்யை கொண்டு வாயை அலசுதல். இந்த எண்ணெயை கொண்டு 15 நிமிடங்களுக்கு வாயை கொப்பளித்து, பின் துப்பி விடவும். பின்னர் தண்ணீரை கொண்டு வாயை அலசவும். தினமும் காலை இதனை செய்தால் பளிச்சிடும் பற்களை பெறலாம்.
வியக்க வைக்கும் இந்த மசாலா வாயிலுள்ள பாக்டீரியாவால் கறைகள் வளராமல் தடுக்கும். ஜாதிக்காய் பொடியை ஒரு சிட்டிகை எடுத்து பற்களின் மீது தேய்க்கவும். பின் வாயை தண்ணீரை கொண்டு அலசவும். இப்படி செய்வதால், பற்களில் உள்ள கறைகள் நீங்கி, பற்கள் வெண்மையாகும்.
காய்ந்த இஞ்சி பொடியை வீங்கிய ஈறுகளின் மீது தடவினால் ஈறுகளில் ஏற்பட்டுள்ள வலி மற்றும் வீக்கத்தில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். இதில் அழற்சி எதிர்ப்பி பொருட்கள் அடங்கியுள்ளதால், ஈறு வலியை போக்கி நிவாரணத்தை அளிக்கும்.
உடலில் அளவுக்கு அதிகமாக வெப்பம் ஏறும் போது வாய் அல்சர் ஏற்படும். அதனால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் கசகசாவை பயன்படுத்தினால் அதற்கு நிவாரணம் கிடைக்கும். கசகசாவில் செய்யப்பட்ட சாக்லெட், துருவப்பட்ட தேங்காய் மற்றும் சர்க்கரையை கொண்டு வாய் அல்சருக்கு வலியில்லாத நிவாரணத்தை பெறலாம்.
மஞ்சள் என்பது மிகச்சிறந்த ஆன்டி-செப்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பியாக செயல்படுகிறது. வாய் அல்சரை எதிர்த்து போராடி, அது மீண்டும் வராமல் இருக்க உதவுவது இந்த குணங்களே. ஒரு சிட்டிகை மஞ்சளை தண்ணீரில் கலந்து, அந்த பேஸ்ட்டை வாயில் தடவினால், அல்சருக்கு நிவாரணம் கிடைக்கும்.
ஆதாரம் : போல்ட் ஸ்கை
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020
இத்தலைப்பில் மருத்துவம், காவல்துறை மற்றும் தீயணைப்...
பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள...
3 வகை உடல் 6 வகை பருமன் பற்றி இங்கு கொடுக்கப்பட்டு...
ரத்த அழுத்தத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை பற்றி இங்க...