கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பாகும். செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும். கல்லீரல் வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. நாம் உண்ணும் கொழுப்பு சத்துள்ள உணவுப்பொருட்கள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்தநீரை உற்பத்தி செய்வது கல்லீரல்தான்.
பொதுவாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை செரிக்காமல் ஆங்காங்கே படிந்து ரத்தத்தின் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சென்றடைந்து விடும். இதில் முக்கியமாக கொழுப்பு இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் இதயத்திற்கு தேவையான ரத்தம் செல்வதில்லை. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த கொழுப்பை கல்லீரலில் சுரக்கும் பித்த நீரானது கரைத்து விடுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரலில் கொழுப்பு தேங்குவதால், இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்துவதாகவும், அதிக அளவு கொழுப்பு காணப்படுவதால் சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களை உருவாக்குகிறது.
அதீதமாக மது பாவிக்கும் அனைவருக்கும் (90%-100%) ஈரலில் கொழுப்பு வருவது நிச்சயம். தொடர்ந்து அதிகமாக மது அருந்துபவர்களில் மட்டுமின்றி குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கு அதீதமாக மது அருந்துபவர்களிலும் ஈரலில் கொழுப்பு ஏற்படக் கூடும். மதுவைத் தவிர்ப்பது மட்டுமே இவர்கள் அனைவருக்கும் அவசியமானதாகும்.
ஒரே குடும்ப அங்கத்தவர்களிலும் பரம்பரையாகவும் ஈரல் கொழுப்பு பிரச்சனை அதிகம் காணப்படுகிறது. குடும்பத்தில் நிலவும் மதுப் பழக்கமும், அதிகமாக அருந்துகின்ற பழக்கமும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என எண்ணப்படுகிறது.
இந்த ட்ரான்ஸ் கொழுப்பு என்பது என்ன?
தாவரக் கொழுப்புகளை (எண்ணெய்கள்) திடமானதாக ஆக்குவதற்காக ஹைரஜனை தயாரிப்பாளர்கள் சேர்க்கும்போதே Trans fats உருவாகிறது.
ட்ரான்ஸ் கொழுப்பை எதற்காகப் பயன்படுத்துகிறார்கள்?
விலை குறைவாக இருப்பதுடன் இதைக் கொண்டு செய்யப்படும் உணவுகள் சுவையாக இருக்கும். அத்துடன் அச்சுவையானது வாயில் நீண்ட நேரம் நீடிக்கும். எண்ணெயில் பொரிக்கும் வதக்கும் வறுக்கும் உணவுகளில் இது அதிகம் உண்டு. உதாரணமாக ப்ரன்ஜ் ப்ரை, லோனட், பேஸ்ரி, பிட்ஸா, குக்கி, பிஸ்கற், நமது உணவு வகைகளில் பொரியல்கள், வடை, ரோல்ஸ், போண்டா, மிக்சர், போன்ற பலவும் அடங்கும்.
அப்படியானால் நாம் அத்தகைய உணவுகளை உண்ணவே கூடாதா? கூடும்! மிகக் குறைந்த அளவில் உண்ணலாம்.
ஆனால் நாம் ஒரு நாளில் உள்ளெடுக்கும் கலோரியின் அளவு 2000 எனில் அதில் 20 மட்டுமே ட்ரான்ஸ் கொழுப்பாக இருக்க வேண்டும். ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பால் போன்றவற்றில் இந்த ட்ரான்ஸ் கொழுப்பு சிறியளவு இருக்கிறது. இது மட்டுமே அந்த 20 தைக் கொடுத்துவிடுவதால் ஏனைய ட்ரான்ஸ் கொழுப்பு உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
ஈரலில் கொழுப்பு உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன?;
ஈரலில் கொழுப்பு என்று சொன்னவுடன் மருந்துகளை நாடி ஓடக் கூடாது. எமது உணவு உடற் பயிற்சி அடங்கலான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதே முக்கியமானது
எடை குறைப்பு
ஈரலில் கொழுப்பு இருப்பதான ஸ்கான் அறிக்கை கிடைத்ததும் உங்கள் மருத்துவர் நீரிழிவு, நீரிழிவின் முன்நிலை போன்றவை இருக்கிறதா எனக் கண்டறிவார். மதுப் பாவனை பற்றிக் கேட்டறிவார். பெரும்பாலும் வேறு பரிசோதனைகளைச் செய்வதில்லை. இருந்தபோதும் ஈரலில் கொழுப்பு இருக்கிறதா என்பதை மட்டும் அறிவதற்காக எவரையும் ஸ்கான் பரிசோதனை செய்வது அவசியமல்ல. அதேபோல ஒருவருக்கு இருந்தால் அவரது ஏனைய குடும்ப அங்கத்தவர்களையும் ஸ்கான் செய்து பார்க்க வேண்டியதும் இல்லை.
வீட்டில் தயாரித்த உணவுகளை கொடுப்பது நல்லது. உணவில் காய்கறிகள் அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் ஏதாவது சில பழங்களை உண்ணலாம். குழம்பு போன்றவற்றை சமைத்த அன்று மட்டும்தான் சாப்பிட வேண்டும், அதை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிடக் கூடாது. ரசாயண குளிர்பானங்களை அருந்த கூடாது. கல்லீரல் நோயாளிகள் அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது. சோடா உப்பு கலந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகாத உணவுகள் வேர்கடலை மற்றும் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும். உணவில் அதிக அளவில் கீரைகள் சேர்த்துக் கொள்ளவேண்டும். இளநீர், கரும்புச்சாறு, தேங்காய் பால் அருந்தலாம். கல்லீரல் அழற்சி உள்ளவர்களுக்கு சைவ உணவே சிறந்தது. கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் திராட்சை ஜுஸ், கேரட் ஜுஸ், போன்றவைகளை தினசரி சாப்பிடுவதன் மூலம் சிறுநீர் சுலபமாக பிரியும். வெள்ளை பூசணிக்காய் சாறு ரத்தத்திலுள்ள கொழுப்பை அகற்றும். தினமும் சாப்பிட்ட பின்பும் இரவு தூங்க போகும் முன்பும் சுடு தண்ணீர் குடித்தால் உணவிலுள்ள கொழுப்பு உணவுப் பாதையிலுள்ள கொழுப்புகள் கரைந்துவிடும். மிளகும் எலுமிச்சை சாறும் சேர்த்த நீரை அதிகமாக எடுத்துக் கொண்டால் கல்லீரலின் செல்கள் பலமடையும். மஞ்சள் காமாலைக்கு நல்லது. சத்துள்ள ஆகாரத்தால் கல்லீரலை புதுப்பிக்க முடியும். பூண்டை தினசரி சமையலில் சேர்ப்பது நல்லது. சீரகப்பொடி கலந்த மோர் ஜீரணத்தை மேம்படுத்தும். எனவே உங்களுக்கு ஈரலில் கொழுப்பு என்று சொன்னவுடன் கதி கலங்காதீர்கள். உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி நலமாக வாழுவதற்கான வழிகளைத் தேடுங்கள். அது போதுமானது.
ஆதாரம் : சிம்ஸ் மருத்துவமனை வடபழனி
கடைசியாக மாற்றப்பட்டது : 7/22/2020
தெரிந்துக் கொள்ள வேண்டிய அடிப்படை பொது அறிவுத் தகவ...
உங்கள் குழந்தையின் கல்வித்திறன் (Learning Ability)...
குழந்தைகளுக்கான உணவு உண்ணுதல் முறை பற்றிய தகவல்கள்...
அதிக கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் மார்பக புற்றுநோ...