உலகில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும், புதிது புதிதாக நோய்கள் உருவாகுகின்றன. பல கொடிய நோய்களுக்கு சரியான மருந்தும் இல்லை. உதாரணத்திற்கு, சமீபத்தில் உலகை உலுக்கிய 'எபோலா' வைரஸ் பல உயிர்களை பறித்தது. பல நவீன மருத்துவ வசதிகள் இருந்தும், இந்நோய்க்கான மருந்து இன்னும் அர்ரய்சிக்குள் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், நமக்கு தெரிந்த சில காய்கறிகளில் உள்ள மருத்துவ குணத்தை பெரிதும் மதித்து அதை உன்ன வேண்டும் .
நாம் அன்றாடும் உட்கொள்ளும் தக்காளி, பெரும் ஆற்றலை கொண்டுள்ளது. ஆண்களைக் குறிவைத்து தாக்கும் புராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும் அபார சக்தியைக் கொண்டுள்ளது. சராசரியாக வாரத்திற்கு ஒன்றரை கிலோ தக்காளியை உட்கொண்டால், புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியத்தில் 20 சதவீதம் வரை குறைக்கலாம் என விஞ்ஞானிகல் கூறுகின்றனர்.
பொதுவாக புற்றுநோய் வராமல் தடுக்கவேண்டுமானால் உணவில் பச்சைகாய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்வதோடு, இறைச்சியின் அளவையும், கொழுப்பு மற்றும் உப்பின் அளவையும் குறைக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருந்து வருகிறது.
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுமார் 20,000 ஆண்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது 50 முதல் 69 வயதுவரையானதாக இருந்தது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆய்வுசெய்யப்பட்டன. இதில் வாரத்துக்கு குறைந்தது 1500 கிராம் தக்காளியை உணவில் சேர்த்துக்கொண்டவர்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் தோன்றுவதன் சாத்தியம் 18 சதவீதம் வீழ்ச்சியடைந்ததை இவர்கள் கண்டறிந்தனர்.
அத்துடன், சராசரியாக ஒரு நாளைக்கு தங்களின் மொத்த உணவில் குறைந்தது 500 கிராம் பச்சை காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிட்டவர்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் தாக்குவதற்கான சாத்தியம் 24 சதவீதம் அளவுக்கு குறைவதையும் இவர்கள் கண்டறிந்தனர்.
புராஸ்டேட் புற்றுநோய் தடுப்பில் தக்காளி முக்கிய பங்காற்றுவதாக தங்களின் ஆய்வு கண்டறிந்திருப்பதாக கூறும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறையைச் சேர்ந்த வல்லுனர் வனசா எர், அதேசமயம், இதை உறுதி செய்யவேண்டுமானால் இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
தக்காளிக்கு சிகப்பு நிறத்தை அளிக்கும் லைகோபீன் என்கிற இயற்கையான வேதிப்பொருள், மனித செல்களில் மரபணு மாற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக அந்த செல்கள் வேகமாக சிதைவுறுவதையோ அல்லது வேகமாக வளர்வதையோ தடுக்க வல்லது. அதன்மூலம் இந்த லைகோபீன் மனித செல்களின் வேகமான கட்டுப்படுத்தமுடியாத வளர்ச்சி புற்றுநோயாக உருவாவதை தடுக்கும் பணியை செய்வதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
தக்காளியில் இருக்கும் லைகோபீன் மட்டுமல்லாமல், நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளான கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்படும் ரொட்டி, பாஸ்தா போன்றவற்றில் இருக்கும் செலீனியம் என்கிற வேதிப்பொருளும், பாலிலும் அதிலிருந்து தயாராகும் அனைத்துவகையான உணவுப்பொருட்களிலும் இருக்கும் கால்சியமும் கூட ஆண்களுக்கு உருவாகும் புராஸ்டேட் புற்றுநோயை தடுக்கவல்லவை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே ஆண்கள், கணிசமான தக்காளியையும், மாவுப்பொருளில் இருந்து தயாராகும் உணவுகள் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளை கூடுதலாக தங்களின் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தங்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் வருவதை கணிசமான அளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்றும் இந்த ஆய்வாளர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
ஆதாரம்: சயின்ஸ் டெய்லி , பீபீசீ
கடைசியாக மாற்றப்பட்டது : 7/20/2020
3 வகை உடல் 6 வகை பருமன் பற்றி இங்கு கொடுக்கப்பட்டு...
இத்தலைப்பில் மருத்துவம், காவல்துறை மற்றும் தீயணைப்...
ரத்த அழுத்தத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை பற்றி இங்க...
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...