অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

நச்சுணவு நோய்

நச்சுணவு நோய்

அறிமுகம்

இது நோயுண்டாக்கும் பாக்டீரியாக்கள், வைரசுகள், ஒட்டுண்ணிகள் ஆகிய கிருமிகளைக் கொண்ட அசுத்தமான உணவை உண்பதால் உண்டாகும் உடல்நலக் கோளாறாகும். பெரும்பாலோனார் எந்தவித மருத்துவமும் இன்றியே நலம் பெறுவர். சல்மோநெல்லா அல்லது ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களும், நோரோவைரஸ் போன்ற வைரசுகளும் உள்ள உணவாலேயே பொதுவாக இந்நோய் உண்டாகிறது. வளர்ச்சி, பதப்படுத்துதல், எடுத்துச்செல்லுதல் ஆகிய எந்நிலையிலும் உணவில் கிருமி கலக்கலாம். தகுந்த முறையில் உணவை சமைக்காததும் ஒரு காரணம். நோய்க்கிருமிகள் ஒரு பரப்பில் இருந்து இன்னொரு பரப்புக்குப் பரவுவதும் இன்னொரு காரணம். உதாரணமாக சமைத்து வைத்த அல்லது சமைக்காது உண்ணும் உணவு போன்றவை. உண்ணுவதற்கு முன் சமைக்காததால் கிருமிகள் கொல்லப்படாமல் உள்ளெடுக்கப்பட்டு உணவு நச்சு நோயை உண்டாக்குகின்றன. இதனை அசுத்தக் கலப்பு எனலாம்.

நோயறிகுறிகள்

அசுத்த உணவை உண்டு ஒன்றில் இருந்து மூன்று நாட்களுக்குப் பின் அறிகுறிகள் தோன்றுகின்றன. அவையாவன:

  • சுகவீன உணர்வு
  • வாந்தி
  • வயிற்றுப்போக்கு
  • வயிற்றுப்பிடிப்பு

பிற அறிகுறிகள்

  • வயிற்று வலி
  • பசியின்மை
  • அதிகக் காய்ச்சல் 38C (100.4F) அல்லது மேலும்
  • தசை வலி
  • குளிர்

காரணங்கள்

உணவை தகுந்த முறையில் தயாரித்து, கையாண்டு, சேமிக்காதபோது உணவால் ஏற்படும் நோய்கள் உண்டாகின்றன. குறிப்பாக தயாரித்து வைக்கப்பட்ட அல்லது சமைக்காத உணவுகள் போன்றவற்றில் நுண்ணுயிர்கள் ஒன்றிலிருந்து இருந்து இன்னொன்றிற்கு மாற்றப்படுகின்றன.

புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப்போகும் தன்மை கொண்டவை. வேர்க்கடலை, பால், அசைவ உணவு வகைகள், எண்ணெய் எல்லாம் சீக்கிரமே கெட்டுப் போகும். எண்ணெயில் பொரித்த உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் ஆபத்தும் சேர்ந்து வரும். மழை, பனிக்காலத்தில்  உணவுகள் கெட்டுப் போகக் காரணமாக இருப்பவை பூஞ்சைகள். அரிசி, பருப்பு போன்ற கிச்சனுக்குள் இருக்கும் பொருட்களுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் இந்தப் பூஞ்சைகள் பொருளையும் கெடுத்து, நோய்களையும் கொடுத்துவிட்டுப் போகும்.

அசுத்தக் கலப்பு

சமைத்த உணவையே திரும்பத்திரும்ப சமைக்கும் போது பெரும்பாலும் அசுத்தக் கலப்பு ஏற்படுகிறது. உணவு, இடம், கருவி ஆகிய ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு ஆபத்தான பாக்டீரியாக்கள் பரவுகின்றன. பொதுவாக நோய் நச்சை ஏற்படுத்தும் உயிரிகள் வருமாறு:

  • கேம்பிலோபேக்டர் ஜெஜுனி
  • கிளாஸ்ட்ரிடியம் பெர்ஃப்ரிஞ்சென்ஸ்
  • சல்மோநெல்லா எஸ்பிபி.- எஸ்.டைஃபிமுரியம் தொற்று
  • எஸ்செரிக்கியா கோலி (ஈ-கோலி)
  • வைரஸ் (நோரோ வைரஸ்)
  • ஒட்டுண்ணிகள் (டாக்சோபிளாஸ்மோசிஸ்)

காளான்கள்

பல காளான் வகைகளில் மஸ்காரின் நஞ்சு காணப்படுகிறது. இது நடு நரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்குப் பகுதி அல்லது முழு பக்கவாதம் ஏற்படலாம்.

மீன்

ஊதுமீன் (பஃபர்) போன்ற சிலமீன் வகைகள் இயற்கையாகவே நச்சுத்தன்மை உள்ளவை. இது போன்ற நஞ்சு காரிபியன் மற்றும் பசிபிக் கடலில் உள்ள உண்ணும் மீன் வகைகளிலும் உள்ளன. இவ்வகை சிகுயேட்டரா நஞ்சு என அழைக்கப்படுகிறது. அடினோஃபிளாகுலேட் எனப்படும் கடல் ஒட்டுண்ணிகளால் இது உண்டாக்கப்படுகிறது. இந்நஞ்சு நரம்புமண்டலத்தைத் தாக்குகிறது.

பூச்சிக்கொல்லிகள்

பூச்சிக்கொல்லிகளில் பல வகையான நச்சுப்பொருட்கள் உள்ளன. ஆனால் பூச்சிகளின் நரம்பு வாயுவான ஆர்கனோஃபாஸ்ஃபேட்டுகள் மிகவும் ஆபத்தான வகையாகும். இவ்வகை பூச்சுகொல்லிகள், பூச்சிகளை விட மனிதர்களுக்கு குறைவான அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டாலும் தகுந்த முறையில் அவற்றைக் கையாளவில்லையானால் அவை மனிதர்களுக்கும் ஆபத்தனவையே.

உணவு நஞ்சாவதற்கு மேலும் பல காரணங்கள் உள்ளன. நச்சுக் கொட்டைகள், இலைகள், பூக்கள், பழங்கள், முற்றாத கிழங்குகள், பாட்சுலிசம் பாரசைட், கொள்கலன்களில் உள்ள காட்மியம், அமிலங்கள், பானைகளில் உள்ள காரீயம் போன்றவை இதில் அடங்கும்.

நோய்கண்டறிதல்

  • உணவு நச்சு நோயைக் கண்டறிய அறிகுறிகள் உதவுகின்றன. இதில் வலி அல்லது நீர்ச்சத்துக் குறைவு அறிகுறிகள் அடங்கும்.
  • மலச்சோதனை: பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணிகள் உள்ளனவா என அறிய சில வேளைகளில் சோதனை செய்யப்படுகிறது.

நோய்மேலாண்மை

மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் வீட்டிலேயே பொதுவாக இதற்குத் தீர்வு காணப்படுகிறது.

வாய்வழி நீர்ச்சத்தேற்றும் உப்பு:  வயிற்றுப்போக்கு நீடித்தால் நீர்ச்சத்திழப்பை ஈடுகட்ட நீர்ச்சத்து உப்புகள் அளிக்கப்படுகின்றன.

ஏராளமாக நீர் அருந்தவும்: நீர்ச்சத்திழப்பை இது ஈடுகட்டும்

நிலைமை நீடித்தால் மருத்துவரை அணுகவும்.

தடுப்புமுறை

  • உணவைச் சமைக்கும் அல்லது உண்ணும் முன் இதமான சோப்பு நீரால் கைகளை 15 நொடிகள் கழுவவும்.
  • பாத்திரங்களையும் வெட்டும் கட்டைகளையும் இளம் வெந்நீராலும் பூச்சிக்கொல்லிகளாலும் கழுவவும்.
  • கிருமிகளைத் தவிர்க்கப், பச்சை உணவுகளையும் (கறி, மீன்), சமைத்த உணவுகளையும் தனித்தனியே வைக்கவும்.
  • உணவுகளைப் போதுமான அளவுக்கு வேக வைக்கவும். உணவின் அனைத்து பகுதிகளையும்  75 டிகிரி C வரை மறுபடியும் சூடேற்றவும். மீனையும் கறியையும் 145 - 165 டிகிரி F வெப்பத்தில் சமைக்கவும்.
  • உணவின் தரமோ தூய்மையோ திருப்தி அளிக்காவிட்டல் அதைக் களைந்துவிடவும்.

மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஃப்ரிட்ஜுக்குள்தானே இருக்கிறது என்கிற நினைப்பு வேண்டாம். ஃப்ரிட்ஜில்  ஒரு பொருளில் இருக்கும் பூஞ்சை மற்ற உணவுப் பொருட்களுக்கும் பரவிவிடும். கிச்சன் பொருள்களில் பூச்சிகள், பூஞ்சைகள் இருப்பது தெரிந்தால் அதை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன்படுத்துவார்கள். வெயிலில் காய வைப்பதால் பூஞ்சைகள் மறைந்துவிடாது.

அவற்றை உடனடியாக கொட்டிவிடுவது நல்லது. எக்ஸ்பயரி ஆன பொருள்களைப் பயன்படுத்தினாலும் ஃபுட் பாய்சன் ஏற்படும். சிப்ஸ் வகைகளை  வாங்கும்போது கவனமாக இருங்கள். எண்ணெயில் இருந்து கெட்டுப்போன வாசனை வந்தால் அதைச் சாப்பிடுவது ஆபத்து. கெட்டுப்போன பழங்களுக்கும் இதே கதிதான். காய்கறிகள், பழங்களை ஃப்ரெஷ்ஷாக வாங்கி பயன்படுத்த வேண்டும்.

உணவு நச்சால் துன்பப்பட்டால்

  • வயிற்றுப் போக்கை அதிகரிக்கும் பால் பொருட்களைத் தவிர்க்கவும்
  • கட்டியான பொருட்களை உண்ண வேண்டாம்
  • மது, புகை, கொழுப்பு உணவுகளைத் தவிர்க்கவும்
  • வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீர்ச்சத்திழப்பை ஈடுகட்ட பால், கொக்கைன் உள்ளவற்றைத் தவிர்த்துப் பிற நீராகாரங்களை உட்கொள்ளவும்.
  • மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் நுண்ணுயிர்க்கொல்லிகள் அல்லது வயிற்றுப்போக்கு மருந்துகளை எடுக்கவேண்டாம். சில வகையான உணவு நச்சு நோய்களுக்கு (உ-ம். லிஸ்டீரியோசிஸ்) நரம்புவழி நுண்ணுயிர்க்கொல்லிகளால் மருத்துவம் அளிக்கப்படுகிறது.
  • வயிற்றுப்போக்கு ஐந்து நாட்களில் (சிறுவர் 3 நாட்கள்) நிற்கவில்லை எனில் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

தவிர்க்க வேண்டியவை

ஃப்ரிட்ஜில் உணவுகளை அடைத்து வைக்காமல், கொஞ்சமாக சமைத்துச் சாப்பிடப் பழகுங்கள். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு முடிந்தவரை ஸ்நாக்ஸை நீங்களே தயாரித்து அனுப்புங்கள். கடையில் வாங்கிச் சாப்பிடுவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக்  கூடாது, சிக்கன் சாப்பிட்டதும் பால் சாப்பிடக் கூடாது

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/5/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate