அராபிகா காப்பி இரகங்கள்: இரகத்தேர்வுகள் 7,9,10,காவேரி மற்றும் எச்.ஆர்.சி
ரொபஸ்டா காப்பி இரகங்கள்:இரகத்தேர்வுகள் 274, 270, 3
காப்பி தோட்டங்களின் மண் 4.5 முதல் 6.5 கார அமில நிலை கொண்டதாகவும், அதிக ஆழமுடையதாகவும், அதிக அங்கக பொருள் நிறைந்ததாகவும் இருத்தல் நல்லது.
இரகங்கள் |
உயரம் (மீ) |
மழையளவு (மி.மீ) |
பரவல் |
ரோபஸ்டா |
500 - 1000 |
1000 - 2000 |
பூக்கும் பருவம் : பிப்ரவரி - மார்ச் |
அராபிகா |
1000 - 1500 |
1600 - 2500 |
பூக்கும் பருவம் : மார்ச் - ஏப்ரல் |
ஏப்ரல் - மே மாதங்களில் ஆதரவு மழை இரு இரகங்களுக்கும் அவசியமானது
இப்பயிரினை விதை மூலம் உற்பத்தி செய்யலாம். நோயற்ற நன்கு முதிர்ந்த பழங்களை விதைக்கென்று தனியாக அறுவடை செய்யவேண்டும். தண்ணீரில் மிதக்கும் வெற்று விதைகளை நீக்கிவிடவேண்டும். நல்ல பழங்களிலிருந்து சதைப்பற்றினை நீக்கி விதையினை தனியே பிரித்தெடுக்கவேண்டும். பின்பு மரத்தூள் கலந்து நிழலில் உலர வைக்கவேண்டும். நன்கு திரண்ட விதைகளை பிரித்தெடுத்து அக்ரோசான் என்றும் மருந்துடன் நேர்த்தி செய்வதால் பூஞ்சாணநோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
நல்ல வடிகால் வசதி, இருபொறை, மண்ணில் அதிக அளவிலான அங்கக சத்துக்களுடைய மண்வகைகளை தண்ணீர் மற்றும் நிழல் பகுதியில் தேர்வு செய்யவேண்டும். மேட்டு / மேடை பாத்திகள் தேவையான அளவு நீளமும் 1 மீட்டர்அகலமும் 15 நெ.மீ உயரம் கொண்டிருக்குமாறு அமைக்கவேண்டும். 1 x 6 பரப்பளவு உள்ள பாத்திகளுக்கு 30-40 கிலோ மக்கிய தொழு உரம், 2 கிலோ சலித்த சுண்ணாம்பு மற்றும் 400 கிராம் ராக்பாஸ்பேட் ( பாறை உப்பு) இடவேண்டும். களிமண் மற்றும் இதர மண்வகைகளுக்கு மணல் சேர்ப்பதன் மூலம் நல்ல வடிகால் மற்றும் காற்றோட்ட வசதி கிடைக்கும். நாற்றாங்காலில் விதைக்கும் முன்னர் விதைகளை அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியம் நேர்த்தி செய்தல்வேண்டும்.
விதைகளை டிசம்பர் - ஜனவரி மாதங்களில் 1 அங்குல இடைவெளியில் விதையின் தட்டையான பகுதி கீழ்நோக்கி இருக்குமாறு விதைக்கவேண்டும். அதன் பின்னர் மெர்ரிய அடுக்குகளான மணல் / கலவை இட்டு பின் வைக்கோலை மூடவேண்டும். பாத்திகளுக்கு தினசரி தண்ணீர் தெளிக்கவேண்டும். மேலும் நேரடியான சூரிய ஒளியினைக் கட்டுப்படுத்த பந்தலிட்டு ஒளியினைக் கட்டுப்படுத்தவேண்டும். விதைத்த 45வது நாளில் விதைகள் முளைத்துவிடும். பின் அவற்றினை இரண்டாம் நிலை நாற்றாங்கால் (அ) பாலித்தீன் பைகளில் நடவு செய்யவேண்டும்.
பொதுவாக காப்பிப் பயிரானது மானாவாரிப் பயிராக சாகுபடி செய்யப்பட்டு வரகின்றது. மேலும் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் தெளிப்பு நீர் (ஸ்பிரிங்ளர்) மூலம் நீர் செலுத்துவதன் மூலம் பூக்கள் மலர ஆரம்பிக்கும்
தேவையின் போது களை எடுத்தல்வேண்டும். மேலும், காய்ந்த இலைகளை நிலப்போர்வையாக இடவேண்டும். பருவமழை முடியும் தருணத்தில் (அக்டோபர் – நவம்பர்) ஒரு அடி ஆழத்திற்கு கொத்திவிடவேண்டும். இவ்வாறு செய்யும் போது இலை மற்றும் களையினை மண்ணில் புதையச் செய்து அதன் பின் மக்கச் செய்து அங்கக சத்துக்களை செடிகளுக்கு கிடைக்கச் செய்கின்றது. நோய் தாக்கப்பட்ட மற்றும் காய்ந்த கிளைகளை அவ்வப்போது வெட்டி நீக்குதல் வேண்டும்.
அரபிக்கா காப்பியில் குறைந்த அளவிலான நிழல் இருக்கும் பொழுது இப்பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த ஒரு எக்டருக்குத் தேவையான லிண்டேன் பவுடரை (2 கிலோ) 180 லிட்டர் தண்ணீரில் கலந்த தண்டுப்பகுதியில் படுமாறு தடவுதல் வேண்டும். மேலும் துளைப்பகுதியில் மோனோக்குரோட்டோபாஸ் நனைந்த பஞ்சு கொண்டு மூடவேண்டும்.
சரியான தருணத்தில் அனைத்து காய்களையும் பறித்துவிடவேண்டும். அதிகமான நிழல் பகுதியினைக் குறைத்து விடுதல்வேண்டும். என்டோசல்பான் 35இசி மருந்தினை 3340 மிலி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். மலர்ந்த 120-150 நாளில் அறுவடை செய்யலாம். எனவே பூச்சிக்கொல்லி பயன்பாட்டினை அதற்கேற்றவாறு செய்யவேண்டும்.
மாவுப்பூச்சியினைக் கட்டுப்படுத்த குயினால் பாஸ் 35 இசி 2 மில்லி லிட்டர் (அ) பென்தியான் 1 மிலி (லிட்டர்) (அ) பெனிட்ரோதையான் 1 மிலி x லிட்டர் என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
பூச்சிக்கொல்லி |
அளவு |
மோனோகுரோடோபாஸ் 36 % SL |
1.5 மிலி/லி. |
ஆக்ஸிடெமடான் – மிதைல் 25 % EC |
2.5 மிலி/லி. |
குயினல்பாஸ் 25 % EC |
2.5 மிலி/லி. |
அறுவடை நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை இருக்கும். காப்பி பழங்களை பழுத்த உடன் அறுவடை செய்யவெண்டும். சதைப்பற்ளினை நீக்குவதற்கு முன் பழுக்காத காய்களைப் பிரித்து எடுக்கவேண்டும். இதனைத் தனியாக உலர வைத்து செர்ரி காப்பியாக பயன்படுத்தலாம்.
தேர்ந்தெடுத்து பறித்தல் : அக்டோபர் பிப்ரவரி மாதங்களில் பழுத்த பழங்களை பறிக்கவும்.
முக்கிய அறுவடை: டிசம்பர் மாதங்களில் நன்கு முதிர்ந்த பழங்களை பறிக்கவும் அதிக மகசூல் இவ்வறுடையில் கிடைக்கும்.
உருவுதல்: மீதம் உள்ள காய் மற்றும் பழங்களை அறுவடை செய்யவும்.
சுத்தப்படுத்துதல் : கீழே உதிர்ந்துள்ள காய் பழங்களை சேகரிக்கவும்.
சதைப்பகுதியினை நீக்குவதற்கு முன் பழுக்காத காய்களைப் பிரித்து எடுக்கவேண்டும். இதனைத் தனியாக உலர வைத்து செர்ரி காப்பியாக பயன்படுத்தலாம்.
மகசூல் : ஒரு எக்டரிலிருந்து 750-1000 கிலோ மகசூல் அறுவடை செய்யலாம்.
காப்பி பயிரைத் தாக்கும் நோய்கள் யாவை?
பழுப்பு இலைப் புள்ளி நோயின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறை என்ன ?
அறிகுறிகள்
கட்டுப்பாடு
போர்டியாக்ஸ் கலவை 0.5% தெளிக்கவும்.
நாற்றழுகல் நோயை எப்படி கட்டுப்படுத்துவது?
காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25% கொண்டு மண் நனைத்தல் செய்ய வேண்டும்.
கடைசியாக மாற்றப்பட்டது : 7/17/2020