தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (என்.சி.டி.சி) பாராளுமன்ற விதியின் கீழ், 1963 ஆம் ஆண்டு தனிப்பட்ட கழகமாக வேளாண் அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டது.
வேளாண் பொருட்கள் உற்பத்தி, பதப்படுத்துதல், விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி, உணவுப் பொருள், இதர குறிப்பிட்ட பொருட்கள் ஆகியவற்றிற்கு திட்டமிடல், ஊக்குவிப்பு மற்றும் நிதியளித்தல். எ.கா உரங்கள், பூச்சிக்கொல்லி, வேளாண் இயந்திரங்கள், மெழுகு, சோப்பு, மண்ணெண்ணெய், ஜவுளி, ரப்பர், நுகர்வோர் பொருட்கள் அனுப்புதல் மற்றும் சேகரிப்பு, பதப்படுத்துதல், விற்பனை, சேமிப்பு மற்றும் கூட்டுறவுகள் மூலம் வனங்களின் சிறு பொருட்களை ஏற்றுமதி செய்தல் மற்றும் இதர வருவாய் ஈட்டும் செயல்களான கோழிப் பண்ணை, பால் பண்ணை, மீன் வளர்ப்பு, பட்டுப்புழு, கைத்தறி ஆகியவை.
என்.சி.டி.சி விதி மேலும் சீரமைப்பு செய்து, அதன் கழகம் இயங்கும் பகுதிகளில் விரிவுப்படுத்தி, பல வகையான கூட்டுறவுகளுக்கு உதவி செய்தும், அதன் நிதி ஆதாரத்தை விரிவுபடுத்துதல், என்.சி.டி.சி தற்போது கிராமத் தொழில் கூட்டுறவு துறைகளில் திட்டங்களுக்கு நிதி செய்ய தகுதி பெற்றுள்ளது. கிராமப் பகுதிகளில் குறிப்பிட்ட சேவைகளாவன : நீர் பாதுகாப்பு, பாசனம், நுண்ணீர் பாசனம், விவசாயக் காப்பீடு, விவசாயக் கடன், கிராமப்புற சுகாதாரம், கால்நடை உடல்நலம்.
கடன்கள் மற்றும் வெளியீடுகளை மாநில அரசுகளுக்கு முன்பணமாக தொடக்க மற்றும் இரண்டாம் அளவில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி வழங்கவும் மற்றும் தேசிய அளவிலும் இதர கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி வழங்கவும் மற்றும் தேசிய அளவிலும், இதர கூட்டுறவுகள் பெற்றிருக்கும் பொருட்கள் ஒரு மாநிலத்திற்கு மேல் செல்லவும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, கழகம் தேவையான விதிக்கப்பட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்தால், அதன் பல்வேறு திட்டங்களின் உதவியை நேரடியாக நிதி வழங்கவும் உரிமையுள்ளது.
நிர்வாகம் 51 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் குழுவில் முன்னிறுத்தி அதன் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு உருவம் கொடுத்து, அதன் நிர்வாக அமைப்பு கொண்ட 12 உறுப்பினர்களுடன் தினசரி செயல்களைச் செய்து வருகிறது. அதன் தலைமை அலுவலகம் தவிர என்.சி.டி.சி 18 மண்டல / மாநில இயக்கங்களுடன் இயங்கி வருகிறது. இதன் நிர்வாக இயக்குநராக இருப்பவர் இதன் முதன்மை அதிகாரி. பல்வேறு செயற்கூறு பிரிவுகள் திட்டங்களை பார்த்துக் கொள்கிறது. அலுவலகம் திட்டத்தை தேர்வு செய்தல் / உருவாக்குதல் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றது மற்றும் இது திட்டம் நடைமுறைப் படுத்துவதையும் மேற்பார்வை செய்து கொள்கிறது.
தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகத்திற்குள் என்.சி.டி.சி தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக ஆற்றல்கள் ஒற்றுமை, அமைப்பு மற்றும் அதன் நிதி மேலாண்மை, விலை, பொருளாதார ஆய்வு, திட்டம், நிர்வாக தகவல் முறை, சர்க்கரை, எண்ணெய் விதைகள், ஜவுளித் துறை, உணவு, பழம் மற்றும் காய்கறிகள், பால் பண்ணை, கோழிப் பண்ணை, கால்நடை, மீன்வளர்ப்பு, கைத்தறித் தொழில்நுட்பங்கள், கட்டுமானப் பொறியியல், குளிர்விப்பான் மற்றும் பாதுகாத்தல் ஆகியவை தேர்வு செய்து / திட்டத்தை உருவாக்கி கூட்டுறவுகளுக்கு உதவி செய்தல் மற்றும் அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவும் உதவி செய்தல்.
நிதியின் ஆதாரம்
உள்ளே தானாகவே உயருதல், சந்தை கடன் பெறுதல் மற்றும் இந்திய அரசிடம் இருந்து ஒதுக்கீடுகள் சர்வதேச உதவியுடன் பெறுதல்.
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் உதவி தனிப்பட்ட நபருக்கு உதவி கிடைப்பவை அல்ல. இது கூட்டுறவுகளின் நிறுவன வளர்ச்சிக்கும் மற்றும் மாநில அரசின் முயற்சிகளுக்கும் உதவுபவை. மாநில அரசு தனிப்பட்ட சங்கத்தின் திட்டம் அல்லது வரைவுகளை குறிப்பிட்ட திட்ட வரைவுகளின் படி தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகத்திற்குப் பரிந்துரை செய்யும். சங்கம் திட்டத்திற்கு நேரடி நிதியைப் பல்வேறு திட்டங்களின் உதவிகள் குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பொழுது பெறலாம். திட்ட வரைவுகளை அந்த குறிப்பிட்ட செயற்கூறு உள்ள துறையில் பார்த்து, தேவைப்பட்டால் நேரடியாக களத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும். பின் முறையாக நிதிகள் அனைத்தும் மாநில அரசு / சங்கத்திற்கு வழங்கப்படும். நிதி வெளியீடு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அளவைப் பொருத்தும் மற்றும் பணத்தை செலவழித்து திரும்ப பெற்றுக் கொள்ளும் வகையில் இருக்கும். கடன் திருப்பிச் செலுத்தும் காலம் 3 முதல் 8 வருடங்கள் வரை வேறுபடும். இதன் வட்டி விகிதமும் நேரத்திற்குத் தகுந்தது போல் வேறுபடும்.
அனைத்து வகையான தொழிற்சாலை கூட்டுறவுகள், குடிசை மற்றும் கிராமப்புற தொழிற்சாலைகள், கைவினைப் பொருட்கள் / கிராமப்புற பொருட்கள் ஆகியவை.
குறிப்பிட்ட மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கூட்டுறவு மேம்பாட்டுத் திட்டங்கள் (ஐ.சி.டி.பி)
நலிவடைந்த பகுதியினருக்கு கூட்டுறவுகள்
விவசாய இடுபொருட்கள்
மண்டல தொழிற்சாலை மேம்பாட்டு கூட்டுறவு லிமிடெட், கன்னூர், கேரளா.
கணினிமயமாக்கல்
ஜவஹர் சேட்கரி சகாகரி சக்ஹர் கர்கனா லிமிடெட், கல்லப்பனா அவேடி நாகா கோல்காபூர், மஹாராஷ்டிரா
சேட்கரி சகாகரி சங் லிமிடெட், பழைய மாளிகை, கோளாப்பூர், மஹாராஷ்டிரா.
மீன் வளர்ப்பு
மீன் வளர்ப்பு மேம்பாட்டு லிமிடெட்டின் கேரள மாநில கூட்டுறவு பேரவை, கருவன்கோனம், திருவனந்தபுரம், கேரளா.
கரஞ்சா மச்சிமார் விவித் கர்யகரி சகாகரி சன்ஸ்தா லிமிடெட், கரஞ்சா, மஹாராஷ்டிரா.
கைத்தறி
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் லிமிடெட், எக்மோர், சென்னை-8.
நூற்பாலைகள்
சேட்கரி சகாகரி சூட் கிர்னி லிமிடெட், சோளாப்பூர் மாவட்டம், மஹாராஷ்டிரா.
குஜராத் மாநில கூட்டுறவு பருத்தி கூட்டமைப்பு லிமிடெட் அகமதாபாத்-9.
சர்க்கரை ஆலைகள்
சகாமத் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் லிமிடெட், குருச்சேத்திரா, ஹரியானா.
குளிர்பதன சேமிப்பு பழங்கள் மற்றும் காய்கறிகள்
என்சிடிசி தமிழ்நாட்டில் உள்ளக் கூட்டுறவுகள் மேம்பாட்டிற்கு அனைத்து திட்டங்கள் / துறைகளுக்கும் நிதி உதவிகளை வழங்குகிறது. கீழ்க்கண்டவை மாநிலத்தில் பெரிய செயல்களுக்கு நிதி பெறுபவை.
விற்பனை மற்றும் இடுபொருட்கள்
விற்பனைக் கூட்டுறவுகள், கூட்டமைப்பு மற்றும் விவசாய நுகர்வு வாடகை நிலையங்கள்
நுகர்வோர்
என்சிடிசி 202 கிராமப்புற நுகர்வோர் திட்டங்களை 4526 கிராம சங்கங்களில் ரூ. 17.81 கோடி நிதியில் உதவி செய்துள்ளது.
சர்க்கரை
கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை நவீனமயமாக்கி விரிவடையச் செய்வதற்கு கள்ளக்குறிச்சி, மதுராந்தகம், என்பிகேஆர்ஆர், திருத்தணி, சேலம் ஆகியவற்றிற்கு ரூ. 63.49 கோடி ரூபாய் என்சிடிசி வழங்கியுள்ளது. எஸ்டிஎப் உதவி மூலம் ரூ. 30.78 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. சேலம் மற்றும் அமராவதி ஆகிய இரண்டு வடிகட்டும் களனிற்கு என்சிடிசி 8.82 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. என்சிடிசி பங்கு முதலீட்டுத் தேவைகள் / மறுசீரமைப்பு / முதலீட்டுப் பணித் தேவைகள் ஆகியவற்றிற்கு உதவி செய்துள்ளது. சர்க்கரைத் துறையின் கீழ் மொத்தமாக ரூ. 318.34 கோடி ரூபாய் உதவி செய்யப்பட்டுள்ளது.
நூற்பாலைகள்
என்சிடிசி 14 கூட்டுறவு நூற்பாலைகளுக்கு முதலீடு மற்றும் நவீனமயமாக்கல் / விரிவாக்கம் ஆகியவற்றிற்கு ரூ. 8.22 கோடிகள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர என்சிடிசி அதிகபட்ச அளவுத் தொகையை நூற்பாலைகள் மற்றும் காற்று சக்திக் களன் தேவைக்கு வழங்கியுள்ளது. இத்துறையின் கீழ் மொத்த உதவி தொகையாக 13.134 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கைத்தறி
பதப்படுத்துதல் (8 களன்கள்), நவீனமயமாக்கல் / நேரடி விற்பனை நிலையம் (315) மற்றும் பங்கு முதலீடு (104) ஆகியவற்றிற்கு ரூ. 17.55 கோடி ரூபாய் உதவி அளிக்கப்பட்டுள்ளது.
மீன் வளர்ப்பு
ஒருங்கிணைந்த கடல் மீன் மேம்பாட்டுத் திட்டம் பகுதி 1ன் கீழ் 44 மீன் பிடிக்கும் கிராமங்கள், 4234 பயனாளர்கள் இதன் கீழ் வருகின்றனர். 14.50 கோடி ரூபாய் கடன் உதவி மற்றும் 0.31 கோடி ரூபாய் மானியங்கள் ஒன்றிய அளவில் 16.99 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ஐஸ் பெட்டிகள் வாங்குவதற்கு 50 மீன் பிடிக்கும் மகளிர் கூட்டுறவுகளுக்கு மேல் ரூ. 53.73 லட்சம் (இதில் MFP / 44.78 லட்ச ரூபாய் உதவியும் அடங்கும்) ரூபாய் வழங்கப்பட்டுள்ளது இதில் அனைத்தும் சேர்த்து மீன் வளர்ப்புத் துறைக்கு இது வரை 34.39 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
பால் பண்ணை
திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் சங்கம் மற்றும் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் சங்கம் ஆகியவற்றிற்கு தலா ரூ. 493.50 லட்சம் மற்றும் ரூ. 325.85 லட்சம் ரூபாய் ஒருங்கிணைந்த பால் பண்ணை மற்றும் 0.5 லட்சம் லிட்டர் பால் ஒன்றுக்கு பால் பதப்படுத்தும் களன் அமைப்பதற்கு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர 74.90 லட்சம் ரூபாய் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்திற்கு 74.90 லட்சம் ரூபாய் குளிர்பதன முறையை அமோரியா முறையில் மாற்றுவதற்கு உதவுகிறது.
தேயிலை கூட்டுறவுகள்
என்சிடிசி INCOSERVEவிற்கு 147.130 லட்சம் ரூபாய் உதவியை அளவுத் தொகை I சேமிப்புக் கிடங்கு மற்றும் தேயிலை சோதனைக் களன், தேயிலை அறைத்தல் மற்றும் சேமிப்புக் கோடோன் கொச்சின், வேலை செய்யும் இடம், கோடோன் மற்றும் குன்னூர் சேமிப்புக் கோடோன் என்சிடிசி 6 தேயிலை தொழிற்சாலைகளுக்கு முதலீட்டுத் தொகையாக 6.44 கோடி ரூபாய் உதவி வழங்கியுள்ளது. 13 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு நவீனமயமாக்கல் / விரிவாக்கம் ஆகியவற்றிற்கு 3.74 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. 11 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு ரூ. 17.655 லட்சம் கோடோன் வசதிகள் ஏற்படுத்த வழங்கியுள்ளது. மொத்த உதவித் தொகை இத்துறைக்கு ரூ. 11.22 கோடிகள் வழங்கப்பட்டுள்ளது.
முகவரி:
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழகம்
மாடியூல் எண் 34 மற்றும் 35
கார்மெண்ட் வளாகம்
2வது தளம்
கிண்டி, சென்னை - 600032.
ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்