இலக்கமுறை (டிஜிட்டல்) கையெழுத்து, பாதுகாப்பு, மற்றும் திருட்டு செய்தல் (ஹேக்கிங்) உள்ளிட்ட இணைய பயன்பாடு மற்றும் வர்த்தகத்தை, கட்டுப்படுத்த ஒரு சட்ட கட்டமைப்பை அளிக்க ஜூன் 2000-ம் ஆண்டில் இந்திய பாராளுமன்றம் தகவல் தொழில்நுட்ப (IT) சட்டத்தை உருவாக்கியது.
சட்டம் மின்னணு ஆபாச தகவல்களை வெளியிட குற்ற நடவடிக்கையாக்குகிறது. மேலும் சட்டத்தை மீறும் தனிநபர்களை கைது செய்யவும் எவ்விடங்களையும் ஒரு ஆணை இல்லாமல் தேடவும் காவலர்களுக்கு (போலீஸுக்கு) அதிகாரங்களை வழங்குகிறது.
66 ஏ பிரிவு
தகவல் தொழில் நுட்ப சட்டம் 2008 ரொம்ப விரிவானது. சமூக வலைத்தளம் சார்ந்த குற்றங்களுக்கானது மட்டுமில்லை. தானியங்கி பணம் அளிக்கும் இயந்திரங்கள், வலைத்தள தகவல்திருட்டு, காப்புரிமை இதெல்லாமும் சேர்ந்தது. இணைய தளத்தில் தவறான, அவதூறான தகவல்களை பதிவதைப் பற்றியது தான் 66 ஏ பிரிவு. இந்த சட்டத்தின் 66 முதல் 69 வரையிலான எல்லா பிரிவுகளிலும் இணைய தளம் சார்ந்த குற்றங்களை விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
யாரேனும் ஒருவர் கணிணி சாதனத்தைப் பயன்படுத்தியோ அல்லது தொலைத்தொடர்பு சாதனத்தை பயன்படுத்தியோ :
பிரிவு 67
பாலுறவு தொடர்பான காட்சிகளை எலக்ட்ரானிக் வடிவத்தில் வெளியிடுவோரை முதல் தடவை தண்டிக்கும்போது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மறுமுறை இதே தவறை மீண்டும் செய்தால் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இவற்றோடு இரண்டு லட்ச ரூபாய்வரை அபராதமும் விதிக்கலாம்..
மத்திய அரசு, மாநில அரசு அல்லது அதன் அதிகாரிகள் இதற்கென சிறப்பாக அதிகாரம் அளிக்கப்பட்டு அவர்களின் விருப்ப அதிகாரத்திற்கு உட்பட்டு, இந்திய அரசின் இறையாண்மை அல்லது ஒருமைப்பாடு, பாதுகாப்பு , நட்பு நாடுகளின் நலன்கள் அல்லது பொது ஒழுங்கு ஆகியவற்றை காத்திட, மேற்குறித்தவைகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளக் கூடிய குற்றம் ஏதேனும் இழைப்பதை தடுத்திட, அக்குற்றங்கள் குறித்து புலன் ஆய்வு ஏதேனும் மேற்கொள்ள, எழுத்து மூலம் காரணங்கள் பதிவு செய்து, எந்த ஒருஅரசாங்கத்தையோ அல்லது ஒரு முகவாண்மையையோ, கணினி வழியாக அனுப்பப்படும் எந்த ஒரு தகவலையோ,கணினியில் காத்து வைக்கப்படும் தகவலையோ, இடையீடு செய்து கண் காணிக்க, மறித்திட, உத்தரவு அளித்து செயல்பட முடியும். இவ்வகை செயல்பாட்டிற்கு உகந்த வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதன்படி, காவல்துறைக்கு எல்லை மீறிய அதிகாரத்தை இச்சட்டம் அளிக்கிறது. அரசாங்கங்கள் உங்களின் மின்னஞ்சல், குறுந்தகவல், தொலைபேசி உரையாடல் போன்ற, அனைத்து தகவல் தொடர்பு நடவடிக்கைகளையும், கண்காணித்திட முடியும். நீதிமன்ற உத்தரவு ஏதும் இல்லமாலே, காவல்துறை ஆய்வாளர் ஒருவர், ஒரு இல்லத்தில் நுழைந்து தேடுதல் நடவடிக்கை செய்திடமுடியும், கணினியை கைப்பற்ற முடியும், புலன் விசாரணை நடவடிக்கையில் ஈடுபடமுடியும்.
ஆதாரம் : லாயர்ஸ் லைன் மாத நாளிதழ்
கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020
அந்நிய நாட்டவர் மற்றும் அந்நிய சுற்றுலாப் பயணிகள் ...
அருணாச்சல பிரதேசத்தில் மக்களுக்கு கிடைக்கும் சேவைக...
தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் அம்மா அழைப்பு மையம்...
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதியுத...