অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

டிஜிட்டல் இந்தியா திட்டம்

டிஜிட்டல் இந்தியா திட்டம்

அறிமுகம்

டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்திய சமூகத்தை டிஜிட்டல் வழி அதிகாரமளிக்கப்பட்டதாகவும் பொருளாதார அறிவுமிக்கதாகவும் உருமாற்றும் தொலைநோக்குடன் கூடிய இந்திய அரசின் ஒரு முதன்மையான திட்டமாகும்.

இந்தியாவில் மின்-ஆளுகை (ஈ-கவர்னன்ஸ்) முன்னெடுப்புகளின் பயணம் குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகள் மீதான வலியுறுத்தலைக் கொண்ட பரந்த துறைசார் பயன்பாடுகளுக்காக (அப்ளிகேஷன்கள்) 90களின் மத்தியில் ஒரு பெரிய பரிமாணத்தை மேற்கொண்டது. பின்னர், பல மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பல்வேறு மின்-ஆளுகை திட்டங்களை தொடங்கின. இந்த மின்-ஆளுகை திட்டங்கள் குடிமக்களை மையமாகக் கொண்டவையாக இருந்தாலும், அவைகளால் விரும்பிய விளைவை விட குறைவானதையே உருவாக்க முடிந்தது. இந்திய அரசு 2006-ல் தேசிய மின்-ஆளுகை திட்டம் (NeGP)-ஐ அறிமுகம் செய்தது. பல்வேறு துறைகளை உள்ளடக்கும் 31 மிஷன் முறைமை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பல மின்-ஆளுகை திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியிருந்தாலும், மொத்தத்தில் மின்-ஆளுகை விரும்பிய விளைவை உண்டாக்கியிருக்கவில்லை மேலும் அதன் அனைத்து நோக்கங்களையும் பூர்த்தி செய்திருக்கவில்லை.

மின்னணு சேவைகள், தயாரிப்புகள், சாதனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்க நாட்டில் மின்-ஆளுகைக்கு நிறைய உந்துதல் தேவை என்று உணரப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் மின்னணு உற்பத்தியை இன்னும் பலப்படுத்தவேண்டும்.

தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொது சேவைகளின் முழு சுற்றுச்சூழலை மாற்றும் பொருட்டு, இந்திய அரசு துவக்கியுள்ளது டிஜிட்டல் இந்தியா திட்டம் ஒரு டிஜிட்டல் அதிகாரம் சமூகம் மற்றும் பொருளாதார அறிவால், இந்தியாவை மாற்றும் பார்வை.

தொலைநோக்குப் பகுதிகள்

  • டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் தொலைநோக்கு டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்திய சமூகத்தை டிஜிட்டல் வழி அதிகாரமளிக்கப்பட்டதாகவும் பொருளாதார அறிவுமிக்கதாகவும் உருமாற்றும் நோக்கத்துடன் கூடிய இந்திய அரசின் ஒரு முதன்மையான திட்டமாகும்.
  • டிஜிட்டல் இந்தியா திட்டம் மூன்று முக்கிய இலக்குப் பகுதிகளில் கவனம் செலுத்துகின்றது:

ஒவ்வொரு குடிமகனுக்குமான ஒரு மைய பயன்பாடாக டிஜிட்டல் உட்கட்டமைப்பு

  • குடிமக்களுக்கான சேவை விநியோகத்திற்கான ஒரு மைய பயன்பாடாக அதிவேக இணையத்தை கிடைக்க செய்தல்
  • ஒவ்வொரு குடிமகனுக்கும் தனிப்பட்ட, வாழ்நாள் முழுவதும் இருக்கும், டிஜிட்டல் அடையாளம்
  • டிஜிட்டல் மற்றும் நிதி விஷயத்தில் குடிமக்களின் பங்கேற்பை செயல்படுத்துவதற்காக மொபைல் போன் மற்றும் வங்கி கணக்கு
  • ஒரு பொது சேவை மையத்திற்கு எளிதாக அணுகல்
  • ஒரு பொது கிளவுடில் பகிரக்கூடிய தனியார் இடம்
  • பாதுகாப்பான மற்றும் சைபர்-விண்வெளி

ஆளுகை மற்றும் சேவைகள்

ஆளுகை மற்றும் கோரும்போது கிடைக்கும் சேவைகள்

  • துறைகள் அல்லது அதிகார வரம்புகளுக்கு இடையில் ஒருங்கிணைக்கப்பட்ட இடைவெளியில்லாத சேவைகள்
  • ஆன்லைன் மற்றும் மொபைல் தளங்களில் இருந்து உண்மை நேர சேவைகள் கிடைப்பது
  • அனைத்து குடிமகன் உரிமைகளும் கையடக்கமானதாக மற்றும் கிளவுடில் கிடைக்க வேண்டும்
  • தொழில் செய்வதை எளிதாக்கி மேம்படுத்த டிஜிட்டலில் உருமாற்றப்பட்ட சேவைகள்
  • நிதி பரிமாற்றங்களை செய்வது மின்னணு மற்றும் பணமில்லாதது
  • முடிவெடுத்தல் ஆதரவு அமைப்புகள் மற்றும் வளர்ச்சிக்காக புவியியல் சார் தகவல் அமைப்பின் (GIS) திறனை பயன்படுத்துவது

குடிமக்களின் டிஜிட்டல் அதிகாரமளிப்பு

  • யுனிவர்சல் டிஜிட்டல் எழுத்தறிவு
  • எல்லோரும் அணுகக்கூடிய டிஜிட்டல் வளங்கள்
  • டிஜிட்டல் வளங்கள் கிடைப்பது / இந்திய மொழிகளில் உள்ள சேவைகள்
  • பங்கேற்பு ஆட்சிக்காக கூட்டுமுயற்சி டிஜிட்டல் தளங்கள்
  • குடிமக்கள் பௌதிக வடிவில் அரசு ஆவணங்கள் / சான்றிதழ்களை சமர்ப்பிக்க தேவையில்லை

ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு பயன்பாடாக டிஜிட்டல் உள்கட்டமைப்பு

“ஒரு நன்கு இணைக்கப்பட்டுள்ள தேசம் ஒரு நன்கு சேவையளிக்கும் தேசத்திற்கான ஒரு முற்படு தேவையாகும். வசதியைப் பெறாத இந்திய கிராமவாசிகள் அகலக்கற்றை (பிராட்பேண்ட்) மற்றும் அதிவேக இணையம் மூலம் டிஜிட்டலாக இணைக்கப்பட்ட பிறகு, சமூகப் பலன்கள் மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட அரசு சேவைகளின் மின்னணுரீதியான விநியோகம் உண்மையில் ஒவ்வொரு குடிமகனையும் அடைய முடியும். டிஜிட்டல் இந்தியாவின் நோக்கத்தின் முக்கியப் பகுதிகளில் ஒன்று இதையே மையப்படுத்தியுள்ளது.

அனைத்து குடிமக்களுக்குமான ஒரு பயன்பாடாக டிஜிட்டல் உள்கட்டமைப்பு

இந்த நோக்கத்தின் முக்கியப் பகுதி அதிவேக இணையம் (ஹை ஸ்பீட் இண்டர்நெட்) ஆகும். ஏனெனில் அதுவே பல்வேறு சேவைகளின் ஆன்லைன் விநியோகத்தை ஊக்குவிக்கும் ஒரு மைய பயன்பாடு ஆகும். டிஜிட்டல் அடையாளம், நிதி உள்ளடக்கம் மற்றும் பொது சேவை மையங்களின் எளிதான இருப்பை உறுதிசெய்தல் ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்பை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பொது கிளவுடில் பகிர்ந்துகொள்ளக்கூடிய தனிப்பட்ட இடங்களாக இருக்கும் மேலும் அரசுத் துறைகள் மற்றும் ஏஜென்சிகள் மூலம் வழங்கப்படும் ஆவணங்களை எளிதான ஆன்லைன் அணுகலுக்காக சேமிக்கப்படக்கூடிய இடமான “டிஜிட்டல் பெட்டகங்களை” குடிமக்களுக்கு வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. இணையவெளி பாதுகாப்பானதாகவும் காவல்மிக்கதாகவும் ஆக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு மைய பயன்பாடாக அதிவேக இண்டர்நெட்

தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பங்கள் (ICTகள்) நாட்டில் உள்ள பெரிய டிஜிட்டல் பிளவை நீக்கும் ஆற்றலை (ICTகளை எளிதாக மற்றும் பயனுள்ள வகையில் அணுகும் அடிப்படையில்) மற்றும் நேர்மறையாக பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித் திறனின் வளர்ச்சியில் பங்களிக்கும் ஆற்றலும் உள்ளது.

வலியுறுத்துவது என்னவென்றால் ICT உள்கட்டமைப்பு, ஒளி இழை (ஆப்டிகல் ஃபைபர்) மற்றும் கம்பியில்லா (ஒயர்லெஸ்) தொழில்நுட்பங்களால் வழங்கப்படும் கடைசி-மைல் இணைப்புத்திறன் தேர்வுகள் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளத்தக்க விலையில், நம்பகமானதாக, திறனுள்ளதாக இருக்கும்படி செய்வதன் மூலம் நாடு முழுவதும் அதிவேக இணைய இணைப்பை வழங்குவதாகும்.

டிஜிட்டல் அடையாளம்

சிறந்த அடையாளம் என்பது தனித்துவமாக, நகல் மற்றும் போலி பதிவுகளை அனுமதிக்காமலிருக்க போதுமான வலுவுள்ளதாக, ஒரு விலைமலிவான முறையில் எளிமையாக மற்றும் டிஜிட்டல்ரீதியாக அதிகாரமளிக்கக்கூடியதாக மற்றும் நீண்ட ஆயுட்காலம் கொண்டதாக இருக்கும் ஒன்றாகும்.

இந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஒரு 12 இலக்க ஆதார் எண் இந்திய அரசின் சார்பாக இந்திய தனித்துவ அடையாளங்காணல் ஆணையத்தினால் (யுனிக் ஐடெண்டிஃபிகேஷன் அதாரிடி ஆஃப் இந்தியா) (யுஐடிஏஐ) வழங்கப்படுகின்றது. ஒரு குடியிருப்பாளர் தங்கள் வாழ்நாள் முழுமைக்கும் உள்ளடங்கும்படியாக வழங்கப்பட்ட காகிதமில்லாத ஆன்லைன் மூலம் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் கிடைக்கக்கூடிய ஒரு அடையாளத்தைப் பெற்றிருப்பது இன்றியமையாததாகும். அடையாளத்தை சரிபார்த்தல் UIDAI-யுஐடிஏஐ-ன் மைய அடையாள சேமிப்பகத்துடன் (செண்டரல் ஐடெண்டிடி ரெபோசிட்டரி) இணைந்துள்ள அடையாளம் காணும் சாதனங்களின் உதவியால் ஆன்லைன் மூலம் செய்யப்படும். மேலும் அதில் மக்கள்தொகை கணக்கு மற்றும் உயிர்ப்பண்பு தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில், “இந்த நபர்தான், இவர் குறிப்பிடும் நபரா?” எனும் அடிப்படைக் கேள்விக்கும் “ஆம்” அல்லது “இல்லை” எனும் பதிலே அடையாளங்காணுதல் செயல்முறையாக இருக்கும். ஆதாரை ஒரு குடியிருப்பாளரின் அடையாளத்தை நிறுவத் தேவைப்படும் எந்த ஒரு பயன்பாடு (அப்ளிகேஷன்) மூலம் பயன்படுத்த முடியும் மற்றும்/அல்லது ஆதார் மூலம் பயன்பாடு (அப்ளிகேஷன்) வழியாக வழங்கப்படும் சேவைகள்/பலன்கள்/தகுதிகள் ஆகியவற்றுக்கான பாதுகாப்பான அணுகலை குடியிருப்பாளருக்கு வழங்கவும் முடியும்.

மொபைல் ஃபோன்களை எப்படி தனிநபர்களின் அடையாளங்களின் மின்னணுரீதியான உறுதிப்படுத்தலுக்கான கருவிகளாக பயன்படுத்தப்படலாம் என்பதின் பல்வேறு அம்சங்களை விவாதிக்க அக்டோபர் 2014-ல் பல்வேறு பங்குதாரர்களுடன் ஒரு ஆலோசனை கருத்தரங்கை டெய்டி (DeitY) நடத்தியது. அந்த கருத்தரங்கின் முக்கிய வெளிப்பாடுகள் மற்றும் மேற்கொண்டு நடந்த வாதங்கள் ஆகியவை “டிஜிட்டல் அடையாளம்” என்பது ஒரு தனிநபரின் அடையாளத்தை நிறுவும் அதேசமயம் இடம்பெயரும் ஆற்றலையும் அனுமதிப்பதையும் செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தின. மொபைலை டிஜிட்டல் அடையாளத்திற்கான ஒரு கருவியாக பயன்படுத்துவதற்கு இந்த மூன்று சாத்தியமுள்ள மொபைல் அடையாளத் தீர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்:

(1) மொபைல் எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படுதல்;

(2) மொபைல் டிஜிட்டல் கையெழுத்துக்களுடன் இருத்தல்; மற்றும்

(3) மொபைல் குரல் உயிர்ப்பண்புகளுடன் இருத்தல் (தனியாகவோ அல்லது மொபைல் எண்ணுடன் இணைந்தோ).

மொபைல்கள் மற்றும் வங்கி மூலம் டிஜிட்டல் மற்றும் நிதி இடத்தில் பங்கேற்பு

  • இந்திய தொலைத் தொடர்புத் துறை உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் தொலைத் தொடர்புத் துறையாக இருக்கிறது. இந்தியாவில் பெரிய அளவில் வளர்ந்து வரும் மொபைல் போன்களின் ஊடுருவல், குறிப்பாக கிராமப் பகுதிகளில், மின்னணு மூலமாக பொது சேவைகளை அணுக மற்றும் விநியோகிக்க ஒரு தயாரான மற்றும் பரந்த தளத்தை வழங்குகிறது. மொபைல்கள் மூலம் தரவு அணுகல் தொடர்ந்து பிரபலமாகிறது, மற்றும் இன்றைய தேதியில், இந்தியாவில் இணைய இணைப்புள்ள 80 சதவீத பயனர்கள் மொபைல் சாதனங்கள் மூலம் இணையத்தை அணுகுகின்றனர். இது மின்-ஆளுகைக்கு பெரும் உறுதி மற்றும் ஆற்றலை, குறிப்பாக பொது மற்றும் டிஜிட்டல்-மற்றும்-நிதி சேர்க்கைக்கு வழங்குகிறது.
  • வங்கி மொபைல் விஷயத்தில், டெய்டி (DeitY) மொபைல் சேவா –ஐ துவக்கியுள்ளது, இது ஒரு புரட்சிகரமான முழு-அரசாங்க மொபைல் ஆளுகை முயற்சி. இதன் மூலம் தேசம் முழுவதும் உள்ள அரசு துறைகள் மற்றும் ஏஜன்சிகளின் பொது சேவைகள் மற்றும் வணிகங்களை SMS, மொபைல் சேவா, USSD, மொபைல் பயன்பாடுகள், மற்றும் குரல் / IVRS போன்ற பல்வேறு மொபைல் அடிப்படையிலான சேனல்கள் மூலம், குடிமக்களுக்கு மொபைல் சாதனங்கள் வழியாக வழங்கலாம்.
  • நிதி விஷயத்தில் டெய்டி (DeitY) NSDL, தரவுத்தள மேலாண்மை லிமிடெட் (NDML)-உடன் இணைந்து PayGov -ஐ வழங்கியுள்ளது, இதன் மூலம் அனைத்து அரசுத் துறைகள் மற்றும் சேவைகளும் ஒரு மையப்படுத்தப்பட்ட பணம் செலுத்தும் வாயில் (பேமெண்ட் கேட்வே) வழியாக குடிமக்களிடம் இருந்து ஆன்லைன் கட்டணங்களை வசூலிக்கும் வசதி கிடைக்கிறது. பேகவ் (PayGov) குடிமக்களுக்கு துவக்கத்தில் இருந்து முடிவு வரை கிடைக்கும் பரிவர்த்தனை அனுபவத்தை வழங்குகிறது. அவர்கள் நெட் பேங்கிங் (65+ வங்கிகள்), டெபிட் கார்டுகள், கடன் அட்டைகள், ரொக்க அட்டைகளை/ ப்ரீபெய்ட் அட்டைகள்/ பணப்பைகள், மற்றும் NEFT/ RTGS போன்ற மின்னணு பணப் பரிவர்த்தனைகள் போன்ற பல்வேறு கட்டண விருப்பங்களில் இருந்து தேர்வு செய்யலாம்.
  • ஒரு தேசிய திட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட ‘பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா’ நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் முழுமையான நிதி சேர்க்கையை கொண்டு வருவதற்கான ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையை கொண்டிருந்தது. இத்திட்டம் ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் ஒரு அடிப்படை வங்கிக் கணக்கு வழியாக வங்கி வசதிகளுக்கான உலகளாவிய அணுகல் மற்றும் கடன், காப்பீடு மற்றும் ஓய்வூதிய வசதியை அணுகுவதற்கான நிதிசார் கல்வி ஆகியவற்றை எதிர்நோக்குகின்றது. இது பலன் பெறுவோரின் வங்கிக் கணக்குகளுடன் அனைத்து அரசு பலன்களை இணைப்பதையும் எதிர்நோக்குகின்றது.
  • “மொபைல் ஒரு நிதியை உள்ளடக்கும் ஒரு கருவி” என்பது பற்றிய ஒரு சிறப்பு அடையாளம் அக்டோபர் 2014-ல் DeitY-ல் நடத்தப்பட்ட மொபைல் அடையாள ஆழ்சிந்தனை ஆலோசனை கருத்தரங்கில் உருவாக்கப்பட்டது. அந்த கருத்தரங்கு மற்றும் மேற்கொண்டு நடந்த ஆழ்ந்த ஆராய்வுகள் ஒரு விஷயத்தை முன்னால் கொண்டு வந்துள்ளது. அதாவது டெலிகாம் சேவை வழங்குநர்களின் விரிவான நெட்வொர்க் விநியோகங்கள் மற்றும் அவர்கள் வழங்கும் உண்மையான உள்ளடக்கம் மற்றும் இணைப்புத்திறன் ஆகியவை, கிராமப் பகுதிகளில் ஆற்றல் இருப்பு, ரொக்க நிர்வாகம், ரொக்கம் செலுத்தும்/பெறும் இடங்களின் பாதுகாப்பு மற்றும் போதுமான அளவு போன்ற வங்கி சேவைகளின் சீரான இயக்கத்தில் எதிர்கொள்லப்படும் சவால்களை முன்மொழியும் சாத்தியத்தை பெற்றுள்ளன.மொபைல்கள் நிதியை உள்ளடக்குவதற்கான ஒரு நிலைத்து நிற்கக்கூடிய மற்றும் பயனுள்ள துணை வழியாக செயல்பட முடியும்.

ஒரு பொது சேவை மையத்திற்கு எளிதாக அணுகல் (CSC)

  • டெய்டி (DeitY) -இன் கீழ் முறைப்படுத்தப்பட்ட NEGP-இன் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட CSCகள், விவசாயம், சுகாதாரம், கல்வி, பொழுதுபோக்கு, வங்கி, காப்புறுதி, ஓய்வூதியம், பயன்பாடு பணம் போன்ற பிரிவுகளில் அரசாங்கம், நிதி, சமூக மற்றும் தனியார் துறை வழங்கும் சேவைகளை கிராம நிலையில் வழங்கும் ICT-செயல்படுத்தப்பட்ட முன்-முனை விநியோக புள்ளிகளாக (கியோஸ்க்குகள்) உள்ளன.
  • CSCகள் ஒரு பொது-தனியார்-பங்குதாரர் (PPP) மாதிரிக்குள்ளும், மற்றும் CSC இயக்குபவர் (கிராம நிலை தொழில்முனைவர் (வில்லேஜ் லெவல் எண்டர்ப்ரெனர் அல்லது VLE என அறியப்படும்), ஒரு சில மாவட்டங்களைக் கொண்ட ஒரு மண்டலத்தில் CSCகளை நிறுவுவதற்கான சேவை மைய ஏஜென்சி (சர்வீஸ் செண்டர் ஏஜென்சி) (SCA), மற்றும் மாநிலத்தில் செயல்படுத்துதலை நிர்வகிப்பதற்கான ஒரு மாநில நியமிக்கப்பட்ட ஏஜென்சி (ஸ்டேட் டெசிக்னேட்டெட் ஏஜென்சி) (SDA) ஆகியவற்றைக் கொண்ட ஒரு 3-இணைப்பு (3-டையர்) கட்டமைப்புக்குள்ளும் செயல்படுகின்றது. CSCகள் ஐடி அடிப்படையிலான மற்றும் ஐடி அல்லாத அடிப்படையிலான சேவைகளின் இணைப்பு மூலம் நாட்டின் வசதியைப் பெற்றிராத கிராம மக்களின் அனுகூலத்திற்கான அரசு, தனியார் மற்றும் சமூக நல நிறுவனங்கள் ஆகியோரின் சமூக மற்றும் வர்த்தக இலக்குகளை ஒழுங்கமைக்க அனுமதிக்கின்றன.
  • ஆரம்ப இலக்கு ஒவ்வொரு 6 கிராமங்களுக்கும் ஒரு CSC எனும் விகிதத்தில் 6,00,000 கிராமங்களில் 1,00,000 CSCகளை நிறுவுவதாகும். இன்றையத் தேதிப்படி, நாடு முழுவதும் 1,37,000க்கும் மேற்பட்ட CSCகள் இயங்குகின்றன. முன்மொழியப்பட்ட CSC 2.0 திட்டத்தின் கீழ், குடிமக்களுக்காக CSCகளை எளிதாக அணுகுவதை ஊக்குவிக்க CSCகளின் எண்ணிக்கையை 2,50,000-ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குடிமக்களுக்காக இதில் என்ன இருக்கிறது?

தற்போதைய சூழ்நிலையில் ஒரு CSC-ஐ எளிதாக அணுக முடியாத ஒரு கிராமவாசி

  • அரசாங்க சேவைகள் மற்றும் இணையத்திற்கு போதுமான அணுகல் இல்லை.

மாறிய சூழல்

  • CSC மூலம் இணைய இணைப்பு கிடைக்கிறது.
  • அடுத்துள்ள CSC G2C சேவைகள், வங்கி சேவைகள் (கடன்கள் உள்ளிட்டு) ஆகியவற்றை அறிந்து பெறவும் மற்றும் பொருந்தமான விவசாய முறைகள் பற்றி கற்கவும் ஒரு வசதியான மற்றும் இனிமையான இடமாகும்.
  • பல B2C சேவைகள் CSC-இல் கிடைக்கின்றன.
  • குடும்ப உறுப்பினர்கள் CSC-இல் கணினி திறன்களை கற்றுக்கொள்ள முடியும் மேலும் சிறப்பாக குடும்ப வருமானத்தை பெருக்க தொழில் பயிற்சியை மேற்கொள்ள முடியும்.

ஒரு பொது கிளவுடில் பகிரக்கூடிய தனியார் இடம்

ஒரு டிஜிட்டல் லாக்கருக்கு எளிதான மற்றும் அங்கீகாரம்-சார்ந்த அணுகல், அதாவது ஒரு பொது கிளவுடில் பகிரக்கூடிய தனியார் இடம், காகிதமற்ற நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவும். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை குடிமக்கள் டிஜிட்டலாக சேமிக்கமுடியும் மற்றும் பௌதிக வடிவில் ஆவணங்கள் அல்லது பிரதிகளை சமர்ப்பிக்க அல்லது அனுப்ப தேவை இல்லாமல் பல்வேறு முகமைகளுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

குடிமக்களுக்கான டிஜிட்டல் பெட்டகம் (லாக்கர்) – ஒரு திருப்பு முனை

தற்போதைய சூழல்:

  • குடிமக்கள் அரசு சேவைகளைப் பெற காகித ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி தாக்கத்தை ஏற்படுத்தும் விதம்:

  • இந்திய அரசு டிஜிட்டல் தனியார் இடத்தை வழங்கும், அதாவது ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு டிஜிட்டல் லாக்கர்.
  • டிஜிட்டல் லாக்கர்' அனைத்து முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரச் சான்றுகளை பாதுகாப்பாக சேமிக்க குடிமக்களை செயல்படுத்த வேண்டும்.
  • மின்னணு ஆவணங்களை (எலக்ட்ரானிக் டாகுமெண்ட்கள்) அரசு ஏஜென்சிகள் அல்லது மற்றவர்களிடம் அவற்றை நேரில் சென்று சமர்ப்பிக்கத் தேவையில்லாமல் பகிர்ந்துகொள்ள முடியும்.
  • அத்தகைய 'டிஜிட்டல் லாக்கர்' குடிமகனின் வசதியை பெரிதும் மேம்படுத்திவிடும் மற்றும் பொது சேவைகளின் சுற்றுச்சூழல் முழுவதும் காகிதமற்ற பரிவர்த்தனைகளை கொண்டு வந்துவிடும்.
  • பேரழிவை உண்டாக்கும் ஒரு சூழ்நிலையில், எ.கா. வெள்ளம், புயல், தீ போன்றவை. இந்த சமயத்தில் குடிமக்கள் காகித ஆவணங்களை தொலைக்கலாம், அப்போது அரசு அல்லது தனியார் சேவைகளைப் பெற்று, அவர்களுக்கு டிஜிட்டல் களஞ்சியத்தில் உள்ள ஆவணங்களை எந்நேரத்திலும், எங்கும் ஆவணங்களின் அணுகல் இருக்க வேண்டும்.
  • டிஜிட்டல் லாக்கர் ஒரு நிலையான வடிவமைப்பில் தங்களின் ஆவணங்களை (மின் ஆவணம்) தரவேற்ற வழங்கல் அதிகாரிகளுக்கான (வழங்குபவர்) களஞ்சியங்களின் (டிஜிட்டல் களஞ்சியங்கள்) தொகுப்பு ஒன்றைப் பெற்றிருக்கும். களஞ்சியங்களிலிருந்து நேரடியாக ஆவணங்களை அணுகுவதற்காக இணைப்புகளை சேமிக்கும் ஒரு தளமாகவும் (ஆவண URI எனப் பெயரிடப்பட்டவை) குடிமக்களுக்கு வழங்கப்படும் தனிப்பட்ட லாக்கர் செயல்படலாம். இந்த தளம், குடிமக்கள் தங்கள் ஆவணங்களை வழங்குநர்களுடன் (சர்வீஸ் புரொவைடர்கள்) பாதுகாப்பாக பகிர்ந்துகொள்ள அனுமதித்து, அதை ஒரு அதிகாரமளிக்கப்பட்ட வழி மூலமாக வழங்கும் அதிகாரியிடமிருந்து பொது ஆவணங்களை நேரடியாக அணுகக்கூடிய சேவையை செயல்படுத்துகிறது.
  • கிளவுட் அடிப்படையிலான சேவைகளின் விநியோகத்தை வேகப்படுத்த, இந்திய அரசால் வெளியிடப்பட்ட பொது நெறிமுறைகள், வழிமுறைகள் மற்றும் தரநிர்ணயங்களின் தொகுப்பைத் தொடர்ந்து, டெய்டி (DeitY) மேக்ராஜ் கிளவுட் முன்னெடுப்பை அறிமுகம் செய்துள்ளது. இது ஏற்கனவே உள்ள அல்லது புதிய (பெருகிய) உள்கட்டமைப்பு மீது கட்டமைக்கப்பட்ட பல மத்திய மற்றும் மாநில கிளவுட்களை உள்ளடக்கும். டெய்டி (DeitY) கிளவுட் அடிப்படையிலான சேவைகளின் மேற்கொள்ளலை ஊக்குவிக்க “GI கிளவுட் நிலைத்திட்ட இயக்கத் தாள் (GI கிளவுட் ஸ்ட்ரேடஜிக் டைரக்‌ஷன் பேப்பர்)” மற்றும் “GI கிளவுட் மேற்கொள்ளல் மற்றும் செயல்படுத்தல் வழிகாட்டி (GI கிளவுட் அடாப்ஷன் மற்றும் இம்ப்ளிமெண்டேஷன் ரோட்மேப்)” ஆகிய இரண்டு கொள்கை அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பான மற்றும் சைபர்-விண்வெளி

  • அனைத்து ஆன்லைன் டிஜிட்டல் சொத்துக்கள், நெறிமுறைகள், அடையாளங்கள் முதலியன இருந்து மற்றும் தொடர்பு மற்றும் பரிவர்த்தனை செய்யும் இடமாக சைபர்ஸ்பேஸ் அதாவது இணையவெளி உள்ளது. அனைத்து நிறுவனங்கள் மற்றும் பயனர்களுக்காக சைபர்ஸ்பேஸை பத்திரமானதாக மற்றும் பாதுகாப்பானதாக செய்வது மிக அவசியம்.
  • தேசிய தகவல் பாதுகாப்புக் கொள்கை (நேஷனல் இன்ஃபர்மேஷன் செக்யூரிடி பாலிசி) இணையவெளியில் தகவல்கள் மற்றும் தகவல் உள்கட்டமைப்பை பாதுகாக்க, இணைய அபாயங்களைத் தடுக்க மற்றும் பதிலளிக்க திறன்களை கட்டுவிக்க, நிறுவன கட்டமைப்புகள், மக்கள், செயல்முறைகள், தொழில்நுட்பம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் இணைப்பின் மூலம் இணைய நிகழ்வுகளில் எளிதில் பாதிக்கப்படுவதை குறைக்க மற்றும் சேதத்தை மிகவும் குறைக்க பொருத்தமாக வைக்கப்பட்டுள்ளன.
  • டெய்டி (DeitY)-இன் இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்புக் குழு (இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (ICERT / CERT-In) ஒரு முழுமையான “உங்கள் கணினியை பாதுகாக்கவும்” போர்ட்டலை இங்கே வழங்குகின்றது (http://www.cert-in.org.in/secureyourpc.in/ (இணை வெளியிலிருந்து) SPC_colored_English/large/index.html). மேலும், ஒரு பாதுகாப்பான மற்றும் சைபர் இடத்தை வழங்க சைபர் பாதுகாப்பு பற்றிய தேசியக் ஒருங்கிணைப்பு மையம் டிஜிட்டல் இந்தியாவின்கீழ் முக்கிய திட்டங்களாக முன்மொழியப்பட்டுள்ளது.

தொலைநோக்கு பகுதி 2

ஆளுகை மற்றும் கோரும்போது (ஆன் டிமான்ட்) சேவைகள்

  • ஏராளமான முன்னெடுப்புகள் மின்-ஆளுகை (ஈ-கவர்னன்ஸ்) காலகட்டத்தில் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் மத்திய அமைச்சகங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீடித்த முயற்சிகள் பொது சேவைகளின் விநியோகத்தை மேம்படுத்தவும் மற்றும் அவற்றை அணுகும் செயல்முறையை எளிதாக்கவும் பல நிலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் மின்-ஆளுகை (ஈ-கவர்னன்ஸ்) அரசுத்துறைகளின் கணினிமயமாக்கல் முதல் குடிமக்களை மையப்படுத்துதல், சேவை ஒருங்கிணைப்பு மற்றும் வெளிப்படையான தன்மை போன்ற மின்-ஆளுகையின் (ஈ-கவர்னன்ஸ்) முக்கிய அம்சங்களை உள்ளடக்கும் முன்னெடுப்புகள் வரை சீராக படிப்படியாக தோற்றுவிக்கப்பட்டது.
  • தேசிய மின்-ஆளுகை திட்டம் (நேஷனல் ஈ-கவர்னன்ஸ் பிளான்-NeGP) நாடு முழுதும் மின்-ஆளுகை முன்னெடுப்புகளின் முழுமையான பார்வையை மேற்கொள்ளவும், அவைகளை ஒரு தொகுப்பு நோக்கமாக ஒருங்கிணைக்கவும் 2006-ல் அங்கீகரிக்கப்பட்டது. இந்த யோசனை மூலம், வசதி பெற்றிராத கிராமங்கள் ஒரு பெரும் நாடு முழுவதுமான உள்கட்டமைப்பை பெறுதல் உருவாக்கப்பட்டு வருகின்றது, மேலும் பதிவுகளின் பெரிய அளவிலான டிஜிட்டல்மயமாக்கல் இணையம் மூலம் எளிதான மற்றும் நம்பகமான அணுகலை அனுமதிக்க நடைபெறுகின்றது. முதன்மையான நோக்கம் அனைத்து அரசு சேவைகளும் பொதுமக்களால் தன் வட்டாரத்தில், பொது சேவை விநியோக மையங்கள் மூலம் அணுகும்படி உருவாக்குவதும் மற்றும் இம்மாதிரியான சேவைகளின் செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏற்றுக்கொள்ளக்கூடிய செலவுகளில் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வதுமாகும்".
  • ஆறு கூறுகள் ஆளுகையை உறுதி செய்ய அத்தியாவசியமானவை மற்றும் சேவைகள் நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் மற்றும் மற்ற பங்குதாரர்களுக்கும் கோரும்போது (on demand) கிடைக்கும்.

துறைகள் அல்லது அதிகார வரம்புகளுக்கு இடையில் ஒருங்கிணைக்கப்பட்ட இடைவெளியில்லாத சேவைகள்

  • சில சேவைகளை அணுகுவதற்கு பெரும்பாலும் துறை / அதிகார வரம்பிற்கு வெளியே சேவையை வழங்கும் அதிகாரிகளிடம் இருந்த ஆவணங்கள், அங்கீகாரம் மற்றும் அனுமதி தேவைப்படுகிறது. இன்று, சம்பந்தப்பட்ட பல துறைகள் அல்லது அதிகார வரம்புகளுக்கு இடையில் அலையாமல் குடிமக்கள் மற்றும் வர்த்தகங்களின் நேரத்தை சேமிக்க மற்றும் முயற்சிகளை குறைப்பதற்காக அச்சேவைகளுக்குப் ஒற்றை-சாளர அணுகலை வழங்குவதில் கவனம் உள்ளது. இது NEGP-இன்கீழ் ஈ-பிஸ் மற்றும் மின்-வர்த்தக திட்டங்களுக்காக வெளிவந்துள்ளது. ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கும் பொருட்டு, DeitY மின்-ஆளுமை தரங்களை அறிவித்துள்ளது (கிடைக்கின்ற இடம் https://egovstandards.gov.in/ (இணை வெளியிலிருந்து)).

ஆன்லைன் மற்றும் மொபைல் தளங்களில் இருந்து உண்மையான நேரத்தில் கிடைக்கும் சேவைகள்

  • இன்றைய கவனம் தொடர்பான தகவல்கள், சேவைகள் மற்றும் குறைதீர்க்கும் செயல்முறை ஆகியவை டெஸ்க்டாப் கணிப்பொறிகள், லேப்டாப்கள், டேப்லெட்கள், மொபைல்கள் போன்ற அனைத்து வகையான சாதனங்களிலும் அணுகும்படியும் மேலும் ஒரு உண்மைக்கு நிகரான நேரத்தில் ஆன்லைனில் அணுகும்படியும் இருக்கும்படியான மின்-ஆளுகையை வடிவமைப்பதாகும்.
  • அதிவேக அகலக்கற்றை (பிராட்பேண்ட்) இணைப்பை ஊராட்சி நிலைகளில் உறுதிசெய்ய, தேசிய ஒளி இழை வலையமைப்பு (நேஷனல் ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க் -NOFN) திட்டம் தகவல் தொழிற்நுட்பத் துறையால் (DoT) செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இது நாட்டில் உள்ள எல்லா ஊராட்சிகளும் ஜிகாபிட்டை பெறுவதன் மூலம் இணைப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
  • டெய்டி (DeitY)யின் மொபைல் சேவா திட்டம் மொபைல் அடிப்படையிலான சேவைகள் மற்றும் மொபைல் பயன்பாடுகளை வழங்குவதற்கான மத்திய, மாநில மற்றும் உள்ளூர் நிலைகளில் அனைத்து அரசுத்துறைகள் மற்றும் ஏஜென்சிகளுக்கு ஒரு பொதுவான தேசிய தளத்தை வழங்கும் ஒரு மிகுந்த வெற்றிகரமான திட்டமாகும். நாட்டிலுள்ள 1900க்கும் மேற்பட்ட அரசுத்துறைகள் மற்றும் ஏஜென்சிகள் மொபைல் அனுமதிக்கப்பட்ட சேவைகளுக்கான மொபைல் தளத்தை பயன்படுத்துகின்றன. இந்த முன்னெடுப்பு “2014 ஐக்கிய நாடுகள் பொது சேவை விருதை” வென்றுள்ளது. மொபைல் சேவா ”தகவல் யுகத்தில் முழுமையான அரசு அணுகுமுறைகளை முன்னேற்றுதல்” எனும் பிரிவின் கீழ் ஐக்கிய நாடுகள் பொது சேவை விருதை (2014) பெற்ற ஒரு வெற்றியாளராகும். இந்தியாவில் இருந்து இதற்கு மட்டுமே 2014-இல் விருது கிடைத்த்து.

இணையதளம் மற்றும் மொபைல் இணைப்பு மூலம் குடிமக்களின் வாழ்க்கையை மாற்றுதல்

தற்போதைய சூழல்:

  • இணைய இணைப்பு பற்றாக்குறையால் அரசு சேவைகள் கிடைப்பதில் பிரச்சினை.

மாறிய சூழல்:

  • மொபைல் ஃபோன் அல்லது மடிக்கணினியை பயன்படுத்துவது உரிமைத் தகுதிகள், வங்கி கணக்கு விவரங்கள் போன்றவற்றின் நிலைமையைப் சரிபார்த்துக்கொள்ள உதவும்.
  • இணைய அணுகல் மற்றும் டிஜிட்டல் எழுத்தறிவு மீது கவனம் செலுத்துவது குடிமக்கள் சிறந்த வேலை மற்றும் வாழ்க்கை தரத்திற்காக ஆசைப்பட உதவும்.
  • பாடப் புத்தகங்கள் மடிக்கணினிகளில் பதிவிறக்கம் செய்கிற வகையில் மின்-புத்தகங்களாக கிடைக்கும்.
  • குடிமக்கள் இணையதளம் மூலம் மென்பொருள் செயலிகளை அணுகுவதன் மூலம் வீட்டில் இருந்தே அரசு மற்றும் தனியார் சேவைகளை பெறலாம்.

அனைத்து குடிமகன் உரிமைகளும் கையடக்கமானதாக மற்றும் கிளவுடில் கிடைக்க வேண்டும்

  • கிளவுட் தொழில்நுட்பங்களில் வழங்கப்படும் இலகுதன்மை, விரைவுதிறன், செலவுதிறன் மற்றும் வெளிப்படையான தன்மை ஆகியவை பயன்பாடுகளை (அப்ளிகேஷன்கள்) வடிவமைத்து வழங்கப்படும்போது கருத்தில் கொள்ளப்பட வேண்டும். கிளவுட் கம்ப்யூடிங்கின் பலன்களால் ஆதாயமடையவும், பயன்பெறவும், இந்திய அரசு ‘மேக்ராஜ்’ எனப் பெயரிடப்பட்ட “GI கிளவுட்” எனும் ஒரு ஆவல்மிக்க முன்னெடுப்பை தொடங்கியுள்ளது. இந்த முன்னெடுப்பின் மைய நோக்கம் அரசின் ICT செலவீனத்தை மிகவும் அனுகூலமானதாக்கும், அதே சமயம் நாட்டில் உள்ள மின்-சேவைகளின் விநியோகத்தை அதிகரிக்கும்.
  • கிளவுட் தளம் அனைத்து சாத்தியமுள்ள தகுதியளிப்புகளுக்கும் ஆன்லைன் களஞ்சியங்களை நடத்தும், அதன் மூலம் ஒரு ஒற்றை உண்மை மூலத்தை வழங்கும். இது பொது விநியோக மையம், BPL தகுதியளிப்புகள், சமூகத் துறை பலன்கள், LPG மற்றும் மற்ற மானியங்கள் போன்ற பகுதிகளை உள்ளடக்கும். பல அரசுத் திட்டங்களின் கீழ் தானியக்கப் பதிவு, குடிமக்கள் தகுதியளிப்புகளின் பராமரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றை இந்த தளம் அனுமதிக்கும். இது இந்த தகுதியளிப்புகளுக்கான விநியோகத்தை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் எனும் அடிப்படையில் வழங்கும். ஒரு புதிய இடத்திற்கு குடியேறும் ஒரு குடிமகன் தன் தகுதியளிப்புகளை இழக்க மாட்டார் மேலும் பலன்களைத் தொடர்ந்து பெற புதிய ஆவணங்களின் பதிவு மற்றும் வழங்கலின் ஒரு நீண்ட செயல்முறையை மேற்கொள்ள வேண்டியதில்லை. இந்த திட்டம் நாடு முழுவதும் குடிமகன்களின் தகுதியளிப்பு தொடர்ந்தி கிடைப்பதை உறுதிசெய்ய எளிதில் மாற்றும் பிரச்சினையை முன்மொழிவதற்கான கிளவுட் தளத்தை இயக்குகின்றது.
  • உலகளாவிய கணக்கு எண் (யுனிவெர்சல் அக்கவுண்ட் நம்பர்) (UAN) மூலம் வைப்பு நிதியை மாற்றுவதின் அறிமுகத்துடன் ஒரு பெரிய திருப்புமுனை அக்டோபர் 2014-ல் ஏற்பட்டது. பணியாளர்கள் தங்களின் இருப்பிடங்களை மாற்றும்போது அவர்களின் வைப்பு நிதி கணக்குகளில் உள்ள நிதிகளை மாற்றுவது பற்றி இப்போது கவலைப்படத் தேவையில்லை.

தொழில் செய்வதை எளிதாக்கி மேம்படுத்த டிஜிட்டலில் உருமாற்றப்பட்ட சேவைகள்

ஒரு வணிகத்தை தொடங்குவது, கட்டுமான அனுமதிகளைப் கையாள்வது, மின்சாரம் பெறுவது, சொத்துக்களை பதிவு செய்வது, கடன் பெறுவது, முதலீட்டாளர்கள் பாதுகாப்பது, வரிகளை செலுத்துவது, எல்லைகளை கடந்து வர்த்தகம் செய்வது, ஒப்பந்தங்கள் செயல்படுத்துவது, நொடிப்பு மற்றும் பிற ஒப்புதல்களை பெறுவது போன்ற அனுபவங்கள், ஒரு நாட்டில் வர்த்தகம் செய்வது எவ்வளவு எளிது அல்லது கடினமானது என்பதை வரையறுக்கிறது. வர்த்தகங்களுக்கான அரசு சேவைகள் டிஜிட்டலாக மாற்றப்பட்டு, நாட்டில் வர்த்தகம் செய்வதை மேம்படுத்தும்.

  • NeGP-ன் கீழ் ஏற்கனவே உள்ள MMPகள் சமீபத்திய கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பலப்படுத்தப்படும்:
  • ஈ-பிஸ் (e-Biz) திட்டம் ஒரு வர்த்தக தொழில் முயற்சியை மேற்கொள்ள, அனைத்து வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒரு ஒற்றை சாளர செயல்பாட்டின் மூலம், பல்வேறு மத்திய மற்றும் மாநில துறைகள்/ஏஜென்சிகளின் வழியாக ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குகின்றது.
  • MCA21' MMP சட்டரீதியான தேவைகள் மற்றும் மற்ற வணிக தொடர்பான தேவைகளுக்கு மின்னணு சேவைகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
  • மின்-வர்த்தகம் (ஈ-ட்ரேட்) MMP வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு ஒழுங்குமுறை/ஊக்குவிப்பு ஏஜென்சிகளின் ஆன்லைன் சேவைகளை வணிகர்களுக்கு கிடைக்கச் செய்ய இந்த ஏஜென்சிகளால் திறனுள்ள மற்றும் பயனுள்ள சேவைகள் விநியோகத்தை முன்னேற்றுவதன் மூலம் இந்தியாவில் வெளிநாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கின்றது.

நிதி பரிமாற்றங்களை செய்வது மின்னணு மற்றும் பணமில்லாதது

  • மின்னணு மூலம் கட்டணங்கள் செலுத்துவது மற்றும் நிதி பரிமாற்றங்கள் மூலம் சிஸ்டத்தையே கவிழ்க்க கூடிய எந்த இடைத்தரகர்களின் தலையீடும் இல்லாமல் போகவேண்டிய இலக்கு பயனாளிகளுக்கு நேரடியாக பண விநியோகம் செய்யப்படுகிறது. இதேபோல், சில பொது சேவைகளுக்கு ஆன்லைன் வழிமுறைகள் மூலம் கட்டணத்தை செலுத்துவது, குடிமக்களுக்கு, வெளிப்படையான, நட்புமிக்க மற்றும் துரிதமான சேனல்களை வழங்குகின்றன. ஒரு வாயிலுக்கு மேலே அனைத்து நிதி நடவடிக்கைகளும் மின்னணு மற்றும் பணமில்லா சேனல்களாக ஆக்கப்பட வேண்டும்.
  • டெய்டி (DeitY) PayGov இந்தியாவை நாட்டில் உள்ள அனைத்து அரசுத் துறைகள் மற்றும் ஏஜென்சிகளுக்கான ஒரு மையப்படுத்தப்பட்ட பணம் செலுத்தும் வாயிலாக (பேமெண்ட் கேட்வே) உருவாக்கியுள்ளது. இது தேசிய பாதுகாப்புகள் சேமிப்பக நிறுவனம் (நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபசிட்டரி லிமிட்டெட்-(NSDL))-ன் ஒரு முழுமையாக உரிமைபெற்ற துணை நிறுவனமான என்எஸ்டிஎல் தரவுதள நிர்வாக நிறுவனம் (டேட்டாபேஸ் மேனேஜ்மெண்ட் லிட்-(NDML)) -ஆல் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றது.
  • பேகவ் (PayGov) இந்தியா திறன்மிக்க சேவை விநியோகத்திற்காக தரவுதளங்களில் தகவல்களை பகிர்வதை அனுமதிக்க தேசிய மற்றும் மாநில சேவை விநியோக வாயில்கள் (நேஷனல் அண்ட் ஸ்டேட் சர்வீஸ் டெலிவரி கேட்வேஸ்- NSDG மற்றும் SSDG) உடன், மற்றும் மொபைல் சேவாவின் கீழ் மொபைல் சேவை விநியோக நுழைவாயில் (மொபைல் சர்வீசஸ் டெலிவரி கேட்வே-MSDG) உடன் பாதுகாப்பாக ஒருங்கிணைந்துள்ளது.குடிமக்கள் நெட் பேங்கிங், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், ப்ரீபெய்ட்/கேஷ்கார்ட்/வாலட், இம்மீடியட் பேமெண்ட் சர்வீஸ் (IMPS) மற்றும் மொபைல் வாலட் போன்ற மின்-பணம் செலுத்தல் (ஈ-பேமெண்ட்) தேர்வுகளிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்

முடிவெடுத்தல் ஆதரவு அமைப்புகள் மற்றும் வளர்ச்சிக்காக புவியியல் சார் தகவல் அமைப்பின் (GIS) திறனை பயன்படுத்துவது

  • மின்-ஆளுகை பயன்பாடுகளில் GIS தொழிற்நுட்பத்தை முறையாக பயன்படுத்துவது மூலம் பல்வேறு அரசு சேவைகளை சிறந்த முறையில் வழங்கலாம். தேசிய புவியிடவியல் தகவல் அமைப்பு (நேஷனல் ஜியோஸ்பேஷியல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்) (NGIS) ஆனது மின்-ஆளுகை பயன்பாடுகள் (அப்ளிகேஷன்ஸ்) மூலம் ஒரு GIS தளத்தை உருவாக்க இந்திய கருத்துக்கணிப்பு அமைப்பு (சர்வே ஆஃப் இந்தியா), தேசிய தகவலியல் மையம் (நேஷனல் இன்ஃபார்மேடிக்ஸ் செண்டர்- NIC), NRSA மற்றும் புவி அறிவியல் அமைச்சகம் (MoES) போன்ற ஏராளமான மையங்களில் கிடைக்கும் புவியிடவியல் தரவுகளை ஒருங்கிணைக்க செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
  • இந்த GIS தளம் பல்வேறு மிஷன் முறைமை திட்டங்கள் மற்றும் மற்ற மின்-ஆளுகை ஆகியவற்றின் பலனுக்கான ஒரு சேவையாக இயக்கப்படும். NGIS திட்டங்களின் பௌதிக முன்னேற்றம், பேரழிவு நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு ஏஜென்சிகளின் சிறப்புத் தேவைகள் ஆகியவற்றைக் கண்காணிக்க இயக்கப்படலாம்.

தொலைநோக்கு பகுதி 3

குடிமக்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளித்தல்

டிஜிட்டல் இணைப்பு என்பது ஒரு சிறந்த சமத்துவ நிலையாகும். மக்கள்தொகை மற்றும் சமூக-பொருளாதார பிரிவுகள் ஆகியவைகளுக்கு மாறாக, இந்தியர்கள் ஒவ்வொருவரும் மொபைல் ஃபோன்கள் மற்றும் கணிப்பொறிகளில் டிஜிட்டல் நெட்வொர்க்குகளில் இயங்குவதன் மூலம் தங்களை மற்றவருடன் இணைந்து தகவல்தொடர்பு செய்வது அதிகரித்து வருகின்றது. டிஜிட்டல் இந்தியா பிரோகிராம் டிஜிட்டல் எழுத்தறிவு, டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் ஒருங்கிணைந்து செயல்படும் டிஜிட்டல் தளங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்தியாவை ஒரு டிஜிட்டல் மூலம் கட்டுப்படுத்தப்படும் சமூகமாக மாற்ற உறுதியளிக்கின்றது. இது உலகளாவிய டிஜிட்டல் எழுத்தறிவு மற்றும் இந்திய மொழிகளில் டிஜிட்டல் ஆதாரங்கள்/சேவைகள் கிடைப்பதையும் வலியுறுத்துகிறது.

யுனிவர்சல் டிஜிட்டல் எழுத்தறிவு

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை உண்மையாகவும் முழுமையாகவும் இயக்குவதற்கான ஒரு தனிப்பட்ட ஆற்றலைப் பெற்றிருப்பதில் முதன்மையான முக்கியத்துவம் இருப்பதாக டிஜிட்டல் எழுத்தறிவு கருதுகின்றது. இது குடிமக்கள் தங்களை கட்டுப்படுத்த டிஜிட்டல் தொழிற்நுட்பங்களை முழுமையாக வெளிப்படுத்தும் திறனை அவர்களுக்கு வழங்குகின்றது. இது அவர்களுக்கு சிறந்த பிழைப்பாதார வாய்ப்புகளை பெறவும் பொருளாதார நிலையில் பாதுகாப்பாக மாறவும் உதவுகின்றது.

இன்றைக்கு கவனம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு நபராவது மின்-கல்வி கற்றவராக இருக்கச் செய்வதாகும். CSCகள் போன்ற மத்திய மற்றும் மாநில அரசுகளால் அமைக்கப்பட்ட மைய ICT உள்கட்டமைப்பு, நாட்டின் வசதியைப் பெற்றிராத இடங்களில் டிஜிட்டல் கல்வியை மேற்கொள்வதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கலாம். நாட்டில் உள்ள எல்லா ஊராட்சிகளையும் அதிவேக இணைப்பை பெற்றிருப்பதை உறுதிசெய்ய, தொலைதொடர்பு துறை (டிபார்ட்மெண்ட் ஆஃப் டெலிகாம்) (DoT) தேசிய ஒளி இழை வலையமைப்பு (நேஷனல் ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க்) (NOFN)- ஐ பரவச் செய்ய பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிட்.-ஐ (BBNL) நிறுவியுள்ளது. BBNL நாட்டில் உள்ள 2,50,000 கிராம ஊராட்சிகள் ஒவ்வொன்றிலும் ஒளி இழை கம்பிவடத்தை (ஆப்டிக் ஃபைபர் கேபிள்) இணைக்க திட்டமிடும், நாடு முழுவதுமுள்ள அனைத்து கிராமங்களிலும் டிஜிட்டல் உள்ளடக்கம் அடைந்திருப்பதை உறுதிசெய்ய அனைத்து பங்குதாரர்களாலும் தகவல் நெடுஞ்சாலையாக பயன்படுத்தப்படக் கூடிய 100 Mbps இணைப்பை வழங்கும். இது ஊராட்சி அலுவலகம், பள்ளிகள், உடல்நல மையங்கள், நூலகங்கள் போன்ற உள்ளூர் மையங்களின் டிஜிட்டல்மயமாக்கம் மற்றும் இணைப்புத்திறனை உறுதி செய்யும். தொழிற்துறை தேசிய டிஜிட்டல் கல்வி திட்டம் மூலம் மின்-கல்வி (ஈ-லிட்ரசி) இலக்கை ஆதரிக்கவும் முன்னுக்கு வந்துள்ளது.

டெய்டி (DeitY) –இன் கீழுள்ள ஒரு தன்னாட்சி சமூகமான நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்டிரானிக்ஸ் அன்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (NIELIT) என்பது, மின்-ஆளுகை மூலம் பரிவர்த்தனைகளை செய்ய மற்றும் மின்னஞ்சல், இணைய உலாவுதல், போன்றவற்றில் ஒரு நபருக்கு பயற்சியளிக்கும் பாடத்திட்டங்களை வழங்க நாடு முழுவதும் 5000-க்கும் மேலான வசதியளிக்கும் மையங்களை அடையாளம் கண்டுள்ளது. டிஜிட்டல் கல்வியறிவில் பாடத்திட்டங்களை நடத்தி மற்றும் ஆன்லைன் தேர்வுகளை நடத்தும் தொழில்துறை பங்காளிகளுடன் இணைந்து பணியாற்ற MoU-களை NIELIT கையெழுத்திட்டுள்ளது.

எல்லோரும் அணுகக்கூடிய டிஜிட்டல் வளங்கள்

டிஜிட்டல் ஆதாரங்கள் எல்லா இடத்திலும் எல்லோருக்கும் எளிதாக கிடைக்கும்படியும் வலம் வரும்படியும் இருக்கும்போது அது உண்மையாகவே உலகளாவிய அளவில் அணுகும்படி இருக்கும். திறந்தநிலை ஆதாரங்கள் (ஓபன் ரிசோர்ஸ்கள்) பரவலாகவும் மலிவாகவும் கிடைக்கும் பலனையும் மற்றும் பரவலாக பயன்படுத்தப்படும் மற்றும் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைக்கப்படும் பலனையும் பெற்றுள்ளன. இந்த வழிகளுடன் உருவாக்கப்படும் செயல்படுத்தப்படும் டிஜிட்டல் ஆதாரங்கள் உரிமையாளர்க்குரிய அமைப்புகளிலிருந்து உருவாக்கப்பட்ட ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது எங்கிருந்து வேண்டுமானாலும் அணுகப்படும் வசதியைப் பெற்றுள்ளன. உரிமையாளர் துறைகள் மற்றும் ஏஜென்சிகள் ஆகியோருக்கு தங்கள் டிஜிட்டல் ஆதாரங்கள் உயர்தரத்தில் இருப்பதையும் அதனால் அணுகல் மற்றும் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைக்கப்படுதல் ஆகியவை பிரச்சினைக்குரியவையாக இருக்காது என்பதையும் உறுதிப்படுத்தும் பொறுப்புள்ளது.

எல்லோரும் அணுகக்கூடிய டிஜிட்டல் வளங்கள்: அரசு ஆவணங்களை எப்போதும், எங்கேயும் குடிமக்கள் அணுகுமாறு செய்தல்!

தற்போதைய சூழல்:

  • அரசு ஆவணங்களை எளிதாக அணுக முடியவில்லை.

மாறிய சூழல்:

  • குடியுரிமை தொடர்பான ஆவணங்கள் மின்னணு முறையில் கிடைக்க வேண்டும்.
  • இணை அரசாங்க ஏஜென்சிகள் மூலம் வழங்கப்படும் ஆவணங்களை அரசு துறைகள் அணுகலாம்.
  • அங்கீகரிக்கப்பட்ட அதிகாரத்துடன் பகிர்ந்து கொள்கிற மாதிரி ஒரு நிலையான வடிவத்தில், குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆவணங்கள் எந்த நேரத்திலும் எங்கும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
  • ஆவணங்கள் உள்ளூர் மொழியிலும் கிடைக்கலாம்.
  • ஆவணங்கள் வலை போர்டல்கள் மற்றும் மொபைல் பயன்பாடுகள் மூலம் குடிமக்கள் அணுக கிடைக்க வேண்டும்.

தேசிய தரவு பகிர்வு மற்றும் அணுகல்திறன் கொள்கை (நேஷனல் டேட்டா ஷேரிங் மற்றும் அசெசபிலிடி பாலிசி- NDSAP)-ன்படி ஒரு திறந்த வடிவமைப்பில் (ஓபன் ஃபார்மேட்) தரவுதொகுப்புகளை அரசாங்க நிறுவனங்கள் மிகவும் முனைப்புடன் வெளியிட வேண்டும் http://data.gov.in (இணை வெளியிலிருந்து))

மொபைல் போன்கள், டேப்லெட்கள், கணிப்பொறிகள் அல்லது மற்ற சாதனங்கள் என எந்த பயன்பாட்டாளர் சாதனங்களிலும் பெறப்படுவதால் டிஜிட்டல் ஆதாரங்கள் பயனுள்ளவையாக இருக்கின்றன. இந்த ஆதாரங்களால் பல்வேறு ஆதார நிலைகளின் அடிப்படையில் இருக்கக்கூடிய டிஜிட்டல் ஆதாரங்கள் இருக்கும் இணையதளங்களை அணுக முடியும் அதே சமயம், வேறுபட்ட வகையிலான உள்ளடக்க விவரிப்பு மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை ஆதரிக்காமலும் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், உள்ளடக்கம் எல்லா சாதனங்களிலும் பெறப்படாமல் போகலாம்.அவசியமான வடிவமைப்பு குறிப்புத்தாள்கள் (ஸ்டைல் ஷீட்கள்) மற்றும் மற்ற வழங்கி பக்க தீர்வுகள் (சர்வர் சைட் சொல்யூஷன்கள்) ஆகியவற்றின் அரசாங்க தரவு மற்றும் பயன்பாட்டிற்காக டெய்டி (DeitY)-குறிப்பிட்ட தரநிர்ணயங்களை உறுதிசெய்வது, அவர்களின் டிஜிட்டல் ஆதாரங்களின் இந்த எல்லோருக்குமான அணுகல்திறன் அம்சத்தை உரிமையாளர் துறைகள் மற்றும் ஏஜென்சிகள் அடைவதற்கு உதவும்.

டிஜிட்டல் இந்தியா பிரோகிராமின் கீழ், அரசு போன்கள், டேப்லெட்கள் மற்றும் கணிப்பொறிகள் போன்ற சாதனங்களின் எங்கும் நிறைந்திருக்கும் அணுகல் செயல்முறை தடைசெய்யும் பார்வை அல்லது காதுகேளாமை குறைபாடுகள் (பகுதி அல்லது முழுமையாக இருக்கக்கூடிய), கற்றல் அல்லது அறிவாற்றல் குறைபாடுகள், உடல் குறைபாடுகள் போன்றவைகளைப் பெற்றுள்ள சிறப்புத் தேவைகள் உள்ள குடிமக்களுக்காக டிஜிட்டல் ஆதாரங்களின் அணுகலை வழங்கவும் பொறுப்பேற்றுள்ளது.

அனைத்து ஆவணங்கள் சான்றிதழ்களும் கிளவுடில் கிடைக்க வேண்டும்

குடிமக்களை அரசு ஆவணங்கள் அல்லது சான்றிதழ்களை வழங்கும்படி கேட்கக்கூடாது, ஏனெனில் அவை ஏற்கனவே பௌதிக வடிவில், அரசின் வேறு துறை/மையத்தில் இருக்கும். அனைத்து மின்னணு ஆவணங்களையும் எடுத்துச்செல்லும் வசதியும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, கல்வி மையங்கள் தங்களின் எல்லா பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு, தகுந்த அணுகல் நெறிமுறைகளுடன் ஆன்லைன் சேமிப்பகத்தில் வைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். ஒரு குடிமகன் ஏதோ ஒரு விண்ணப்பப் படிவத்தை நிரப்பும்போது அவரின் கல்வி சான்றிதழ்களின் நகல்களை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படக் கூடாது, ஆனால் குடிமகனால் வழங்கப்படும் சுட்டியை (பாய்ண்டர்) பயன்படுத்து தகுந்த ஏஜென்சி மூலம் பார்க்கப்படக்கூடிய ஒரு ஆன்லைன் சேமிப்பகத்தில் உள்ள அந்த சான்றிதழ்களின் விவரங்களை வழங்க வேண்டும் இந்த அனைத்து அரசினால் வழங்கப்படும் ஆவணங்கள்/சான்றிதழ்களை பாதுகாக்கும் எல்லா சேமிப்பகங்களும் இந்த ஆவணங்கள்/சான்றிதழ்களுக்கான ஒரு ஒற்றை உண்மை மூலத்தை வழங்கும் ஒரு கிளவுட் தளத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த தரவுகள் போன்ற டிஜிட்டல்ரீதியாக கையொப்பமிடப்பட்ட கல்வி சான்றிதழ்கள், நிலப் பதிவுகள், ஓட்டுநர் உரிமங்கள், அனுமதிச்சீட்டுகள் போன்ற வகைப்பாடுகளை உள்ளடக்கலாம். கோரிக்கை செய்யும் துறைகள் அல்லது பயனாளர்களுக்கு கிளவுடில் கிடைக்கும் டிஜிட்டல் சேமிப்பகத்திற்கான அதிகாரமளிக்கப்பட்ட அணுகல் வழங்கப்படலாம்.

இந்திய மொழிகளில் உள்ள சேவைகள்

  • இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் எழுதப்படும் மற்றும் பேசப்படும் மொழிகளின் இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. 22 அதிகாரபூர்வ மொழிகள் மற்றும் 12 ஸ்கிரிப்டுகள் உள்ளன. ஆங்கில அறிவு, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஒரு சிறிய பிரிவுக்கு மட்டுமே உள்ளது. மற்றவர்களால் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டும் கிடைக்கின்ற டிஜிட்டல் வளங்களை அணுகவோ, புரிந்துகொள்ளவோ முடியாது.
  • டெய்டி (DeitY) மொழித் தடைகள் எதுவுமின்றி மனித-இயந்திர இடைசெயல்பாட்டை ஊக்குவிக்கவும், பல்மொழி அறிவு ஆதாரங்களை உருவாக்கி அணுகவும், மேலும் அவற்றை புதுமையான பயனர் தயாரிப்பு மற்றும் சேவைகளை உருவாக்குவதற்காக ஒருங்கிணக்கவும் தகவல் செயல்முறைப்படுத்தும் கருவிகள் மற்றும் நுட்பங்கள் ஆகியவற்றை உருவாகுவதற்கான இந்திய மொழிகள் (TDIL) திட்டத்திற்கான தொழிற்துறையைத் தொடங்கியுள்ளது. இத்திட்டம் ஏற்கனவே உள்ள மற்றும் எதிர்கால மொழி தொழிற்நுட்ப தரநிர்ணயங்களில் இந்திய மொழிகளை போதுமான அளவில் எடுத்துக்காட்டியிருப்பதை உறுதி செய்ய ஐஎஸ்ஓ, யூனிகோட், வோர்ல்ட்-வைட்-வெப் கன்சோர்டியம் (W3C) மற்றும் இந்திய தரநிர்ணயங்கள் செயலகம் (BIS) போன்ற சர்வதேச மற்றும் தேசிய தரநிர்ணய குழுக்களில் செயலியக்க பங்கேற்பு மூலம் மொழி தொழிற்நுட்ப தரநிர்ணயங்களையும் முன்னேற்றுகின்றது.
  • டெய்டி (DeitY) MMPகள் மற்றும் மற்ற அரசு பயன்பாடுகளின் (கீழ் பயன்பாடுகளை) இடம்சார்ந்து ஒருமுகப்படுத்த உதவுவதற்காக இடவமைவு திட்டங்கள் நிர்வாக கட்டமைப்பு (லோகலைசேஷன் புரோஜெக்ட்கள் மேனேஜ்மெண்ட் ஃபிரேம்வொர்க்- LPMF)-ஐயும் தொடங்கியுள்ளது. டெய்டி (DeitY) இந்தியாவின் பெருமளவு ஆங்கிலம் பேசாத மக்களுக்காக உள்ளூர் மொழிகளில் டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்கி பரப்ப உதவுவதற்காக ஈ-பாஷா எனப் பெயருள்ள ஒரு புதிய மிஷன் முறைமை திட்டத்தையும் உருவாக்கியுள்ளது. முடக்கப்பட்ட சாதகமான உள்ளடக்கம் மற்றும் அமைப்புகள் அணுகும்திறன் தரநிர்ணயங்களின்படி உருவாக்கப்பட்டு வருகின்றது.

பங்கேற்பு ஆட்சிக்காக கூட்டுமுயற்சி டிஜிட்டல் தளங்கள்

முன்பெல்லாம், டிஜிட்டல் தளங்கள் பயன்பாட்டாளர்களுக்கான தகவல் பரவல் மற்றும் சேவைகள் முன்னேற்பாடு ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த தளங்கள் மூலம், பெரும்பாலும் ஒரு-வழி தொடர்பாக இருந்தாலும், குடிமக்களுக்கான தகவல்தொடர்பை அரசால் நிறுவ முடியும். தொழிற்நுட்பம் மீதான அவசியமான வளர்ச்சி உந்துதலுடன் டிஜிட்டல் தளங்கள், மாற்றமடைந்துள்ளன, மேலும் அவற்றால் குடிமக்களுக்கான பயனுள்ள இருவழி தகவல்தொடர்பு மற்றும் இடைசெயல்பாட்டைப் பெற்றிருக்க அரசுத்துறைகளை இப்போது ஊக்குவிக்க முடியும். அதிகம் ஒருங்கிணைந்த தளங்கள் பயனர்களின் சிறந்த பங்கேற்பை ஊக்குவிக்கும். அவ்வப்போது குடிமக்களை அடைவதற்கு பதிலாக, அரசால் டிஜிட்டல் தளங்கள் மூலம் எந்த நேரத்திலும் தொடர்பில் இருக்க முடியும், இது பங்கேற்பு ஆளுகையையும் ஊக்குவிக்கும்.

இந்த தளம் புதுமையான தீர்வுகள் கிடைப்பதில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை விவாதிக்க, அரசுக்கு ஆலோசனைகள் கூற, ஆளுகைக்காக பதில் கருத்தை வழங்க, அரசு நடவடிக்கைகள்/ கொள்கைகள்/ முன்னெடுப்புகளை மதிப்பிட மற்றும் விரும்பிய வெளிப்பாடுகளை அடைய அரசுடன் முனைப்புடன் பங்கேற ஒரு செயல்முறையை வழங்கும்.

டெய்டி (DeitY) சமீபத்தில் “myGov” எனும் ஒரு தேசிய அளவிலான டிஜிட்டல் தளத்தை துவக்கியுள்ளது (www.mygov.in). இன்றைய தேதிவரை 1 லட்சத்திற்கும் மேலான பின்பற்றுபவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளனர்.

அணுகுமுறை மற்றும் செயல்முறை

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் அணுகுமுறை மற்றும் செயல்முறைகளாவன:

  1. அமைச்சகங்கள் / துறைகள் / மாநிலங்கள் இந்திய அரசால் நிறுவப்பட்ட பொது மற்றும் ஆதரவு ஐசிடீ உட்கட்டமைப்பை முழுமையாக இயக்கும். டெய்டி தரநிர்ணயங்கள் மற்றும் கொள்கை வழிகாட்டுதல்களைத் தோற்றுவிக்கும்/ ஒப்படைக்கும், தொழில்நுட்ப மற்றும் கையடக்க ஆதரவை வழங்கும், கொள்திறன் கட்டமைப்பு, ஆர்&டி, போன்றவைகளை மேற்கொள்ளும்.
  2. ஏற்கனவே உள்ள/ நடப்பிலிருக்கும் மின்-ஆளுகை (ஈ-கவர்னன்ஸ்) முன்னெடுப்புகள் டிஜிட்டல் இந்தியாவின் கோட்பாடுகளுடன் ஒழுங்குபடுத்த பொருந்துமாறு மீண்டும் செப்பனிடப்படும். குறிக்கோள் மேம்பாடு, செயல்முறை திட்டமிட்டு இயற்றுதல், ஒருங்கிணைந்த மற்றும் பரிமாற்றி பயன்படுத்தும் அமைப்புகளின் பயன்பாடு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் ஈடுபடுத்தல் மற்றும் கிளவுட் மற்றும் மொபைல் போன்ற தொழில்நுட்பங்களைப் புகுத்த தயாராக இருத்தல் ஆகியவை குடிமக்களுக்கான அரசு சேவைகளின் விநியோகத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்படும்.
  3. தங்களின் சமூக-பொருளாதார தேவைகளுக்குப் பொருத்தமான மாநிலம் சார்ந்த கூடுதலான திட்டங்களை உள்ளடக்குவதை அடையாளங்காண மாநிலங்களுக்கு இலகுதன்மையை வழங்கும்.
  4. குடிமக்கள் சார்ந்த சேவை ஒருங்கமைவு, பல்வேறு மின்-ஆளுகை பயன்பாடுகளை (அப்ளிகேஷன்கள்) பரிமாற்றிப் பயன்படுத்துதல் மற்றும் மையப்படுத்தாத நடைமுறைபடுத்தும் மாதிரியின் மூலம் ஐசிடீ உட்கட்டமைப்பு/ஆதாரங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கென மின்-ஆளுகை மிகப்பரந்த அவசியத்துடன் மையப்படுத்தப்பட்ட முன்னெடுப்பு மூலம் ஊக்குவிக்கப்படும்.
  5. வெற்றிகள் அடையாளங்காணப்படும் மேலும் அவற்றின் படியெடுப்பு தேவைப்படும் சமயத்தில் தேவையான தயாரிப்பு உருவாக்கம் மற்றும் திருத்தியமைத்தல் ஆகியவற்றுடன் உயிர்ப்புடன் முன்னேற்றப்படும்.
  6. பொது தனியார் கூட்டாண்மைகள் போதுமான நிர்வாகம் மற்றும் நிலைத்திட்ட கட்டுப்பாடுடன் மின்-ஆளுகை திட்டங்களைச் செயல்படுத்த சாத்தியமான சமயங்களில் தேர்வு செய்யப்படும்.
  7. தனித்துவமான அடையாளத்தை (ID) மேற்கொள்ளுதல் என்பது அடையாளங்காணுதல், உறுதிப்படுத்துதல் மற்றும் பலன்களை விநியோகித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்க முன்னேற்றப்படும்.
  8. ன்ஐசியை மீண்டும் கட்டமைப்பது மத்திய மற்றும் மாநில அளவுகளில் எல்லா அரசுத் துறைகளிலும் ஐடி ஆதரவை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்படும்.
  9. முதன்மை தகவல் அதிகாரிகளின் (சீஃப் இன்ஃபர்மேஷன் ஆஃபிசர்கள்) (சிஐஓ) பதவிகள் குறைந்தபட்சம் 10 முக்கிய அமைச்சரவைகளில் உருவாக்கப்படும், இதன் மூலம் பல்வேறு மின்-ஆளுகை (ஈ-கவர்னன்ஸ்) திட்டங்கள் வேகமாக வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட முடியும். சிஐஓ பதவிகள் அதனதன் அமைச்சரவையில் உள்ள ஐடியின் அதிகாரங்களுக்கு பதிலான கூடுதல் செயலாளர்/இணை செயலாளர் அளவிலான பதவியாக இருக்கும்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கான நிர்வாகக் கட்டமைப்பு

மத்திய அமைச்சகத்தால் ஆதரிக்கப்படும் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கான நிர்வாகக் கட்டமைப்பு பின்வருமாறு:

  • டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் சிறப்பான நிர்வாகத்திற்காக, திட்ட நிர்வாக அமைப்பு டிஜிட்டல் இந்தியாவில் பிரதம மந்திரியால் தலைமையேற்று நடத்தப்படும் ஒரு கண்காணிப்புக் குழு, தகவல் தொடர்பு மற்றும் ஐடி அமைச்சரால் தலைமையேற்று நடத்தப்படும் ஒரு டிஜிட்டல் இந்தியா ஆலோசனைக் குழு மற்றும் அமைச்சரவை செயலாளரால் தலைமையேற்று நடத்தப்படும் ஒரு தலைமைக் குழு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்த கட்டமைப்புக்கு துறைகள்/குழுக்களால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள்/பகுதிகளின் சிறப்பான செயல்பாட்டை உறுதிசெய்ய, செயலாளர் பணிரீதியான/ கண்காணிப்புரீதியான/ தொழிற்நுட்பரீதியான ஆதரவு மற்றும் தகுந்த மையநோக்கில்லாத அதிகாரம் மற்றும் பொறுப்பு ஆகியவை தேவைப்படுகின்றது.
திட்ட நிர்வாக கட்டமைப்பின் முக்கியப் பகுதிகள் பின்வருமாறு:
  • பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு பிரோகிராம் நிலை கொள்கை முடிவுகளுக்காக (CCEA).
  • ஒரு பிரதமரின் தலைமை பொறுப்பின்கீழ் டிஜிட்டல் இந்தியா பற்றிய கண்காணிப்பு குழு சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள்/ துறைகளில் இருந்து நியமித்த பிரதிநிதிகள் மூலம் அமைக்கப்பட்டு, தலைமையை வழங்க, அளித்தல்கள் மற்றும் மைல்கற்களை பரிந்துரைக்க, மற்றும் அவ்வப்போது டிஜிட்டல் இந்தியா பிரோகிராமின் செயல்படுத்தலை கண்காணிக்க.
  • ஒரு தகவல்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரால் தலைமை வகிக்கப்படும் டிஜிட்டல் இந்தியா ஆலோசனைக் குழு டிஜிட்டல் இந்தியா மீதான கண்காணிப்புக் குழுவின் உள்ளீடுகளை வழங்க மற்றும் வெளிப்புற பங்குதாரர்களின் கருத்துகளை வேண்டிக்கேட்க, மத்திய மற்றும் மாநில அமைச்சகம்/துறைகளில் டிஜிட்டல் இந்தியா பிரோகிராமின் செயல்படுத்துதலை வேகமாக்க அவசியமான கொள்கை பிரச்சினைகள் மற்றும் நிலைத்திட்ட இடையீடுகள் மீது அரசிற்கு ஆலோசனை அளிக்கின்றது. ஆலோசனை குழுவின் அமைப்பு திட்டக்குழுவின் பிரதிநிதி மற்றும் 8 முதல் 9 வரையான மாநில/யூனியன் பிரதேச பிரதிநிதிகள் மற்றும் மற்ற இணைப்பு அமைச்சகங்கள் / துறைகளின் பிரதிநிதிகள் ஆகியோரை ஒரு சுழற்சி முறையில் உள்ளடக்கும்.
  • ஒரு தலைமை குழு அமைச்சரவை செயலாளர் தலைமையின்கீழ் உள்ளது, அவர் திட்டத்தை கண்காணிப்பது அதன் செயல்படுத்துவதற்கான கொள்கை மற்றும் மூலோபாய திசைகளை வழங்குவார் மற்றும் அமைச்சகங்களுக்கு இடையேயான பிரச்சினைகளை தீர்த்து வைப்பார். கூடுதலாக,, தேவைப்படும் போது, டிஜிட்டல் இந்தியா பிரோகிராமின்கீழ், ஒருங்கிணைப்பு தொடர்பான பல்வேறு முயற்சிகள் மற்றும் அம்சங்களை ஒருங்கிணைப்பது, முனைக்கு-முனை கிடைக்கும் செயல்முறையின் மறுவடிவமைப்பு மற்றும் MMP-களின் சேவை அளவுகள் மற்றும் பிற முயற்சிகளை இசைவாக்கி இணைப்பது.
  • செலவினத்திற்கான நிதி குழு (EFC) / திட்டமில்லாத செலவினத்தை பற்றி குழு பிரித்து ஒப்படைக்கப்பட்ட நிதி அதிகாரங்களின்படி பிராஜக்டுகளை நிதிரீதியாக மதிப்பிட/ அனுமதிப்பதற்காக (CNE). செலவினங்கள் செயலாளரின் தலைமையின்கீழ் வரும் EFC/ CNE CCEA-விடம் MMPகள்/ மின்ஆளுகை முயற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விதத்தையும், அதே போல் மாநிலங்கள் பங்கேற்கும் நிதிசார்ந்த விதிமுறைகளையும் பரிந்துரைக்கின்றன. திட்டக் கமிஷனின் ஒரு பிரதிநிதியும் EFC மற்றும் CNE இரண்டிலுமே சேர்க்கப்படுவார்.
  • ஒருடிஜிட்டல் இந்தியாவில் மிஷன் தலைவர்களின் குழு செயலாளர் தலைமையின்கீழ் உள்ளது, பொதுவாக டிஜிட்டல் இந்தியாவின்கீழ் ஏற்கனவே உள்ள மற்றும் புதிய பல்வேறு eGov முயற்சிகளுக்கு டெய்டி (DeitY) -ஐ தளமாக நிறுவப்படும் மற்றும் டெய்டி (DeitY)-இன் ICT திட்டங்கள் பற்றி பல்வேறு அரசு துறைகள் இடையே உணர்த்தமுடியும். பல்வேறு துறைகள்-மத்தியில், ஒருங்கிணைப்பு மற்றும் ஒருங்கிணைந்த திட்டங்கள் மத்தியில் உள்ள ஒருங்கிணைந்த திட்டங்கள்/ மின்-ஆளுகை முயற்சிகளில் உள்ள சிக்கல்கள் டிஜிட்டல் இந்தியாவின் உச்ச குழு மூலம் தீர்க்கப்படும் போது, தொழில்நுட்ப பிரச்சினைகள் மிஷன் தலைவர்களின் குழு மூலம் தீர்க்கப்படும்.
  • மேலும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கம் மற்றும் ஒட்டுமொத்த தொழிற்நுட்ப கட்டமைப்பு, வடிவமைப்பு, தரநிர்ணயங்கள், பாதுகாப்புக் கொள்கை, நிதியளிப்பு செயல்திட்டம், சேவை விநியோக இயக்கம், பொதுவான கட்டமைப்பை பகிர்ந்துகொள்ளுதல் போன்ற பிரச்சினைகளை ஒரு திட்ட நிலையிலேயே கருத்தில் எடுத்துக்கொண்டு, EFC/ CNE -க்கு முன் ஒரு திட்டம் முன்வைக்கப்படும் முன்பாகவே, அனைத்து டிஜிட்டல் இந்தியா திட்டங்களின் தொழிற்நுட்ப மதிப்பீடும் டெய்டி (DeitY)-ஆல் செய்யப்படும் என முன்மொழியப்படுகின்றது. இந்த மதிப்பீடு தரநிர்ணயங்களை மேற்கொள்ளுதல், கிளவுட் மற்றும் மொபைல் தளங்களை பயன்படுத்துதல், பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் எடுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றை சேர்த்துக்கொள்வது தொடர்பான பிரச்சினைகளை உள்ளடக்கும். செயலாளர், டெய்டி (DeitY) அல்லது அவரின் பிரதிநிதியும் MMPகளால் மதிப்பிடப்படும்/அங்கீகரிக்கப்படும், அனைத்து EFC/CNE சந்திப்புகளில் ஒரு நிலையான சிறப்பு வரவேற்கப்படுபவராக சேர்த்துக்கொள்ளப்படலாம். டெய்டி (DeitY) ஏற்கனவே முறையேயான எம்எம்பிகள் / மின்-ஆளுகை (ஈ-கவர்னன்ஸ்) முன்னேடுப்புகளை திட்டமிடுவதிலும், உருவாக்குவதிலும், மதிப்பிடுவதிலும், செயல்படுத்துவதிலும் மற்றும் கண்காணிப்பதிலும் எல்லாத் துறைகளின் ஆதரவையும் வழங்க தேசிய மின்-ஆளுகை பிரிவு (நேஷனல் ஈ-கவர்னன்ஸ் டிவிஷன்) (NeGD) எனும் பெயருள்ள ஒரு திட்ட நிர்வாகப் பிரிவை உருவாக்கியுள்ளது.
  • மாநில அளவில் டிஜிட்டல் இந்தியா நிறுவனத்தின் அமைப்புரீதியான இயக்கமுறை டிஜிட்டல் இந்தியாவில் மாநில குழு முதலமைச்சர் மூலம். மாநில / UT டிஜிட்டல் இந்தியாவில் அபெக்ஸ் குழுக்கள் தேவையான வளங்களை ஒதுக்க, திட்டங்கள் மத்தியில் முன்னுரிமையை ஒதுக்க மற்றும் துறைகள் மத்தியில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க மாநில/ யூனியன் அளவில் தலைமை செயலாளர்கள் தலைமையில் அமைக்கப்பட வேண்டும்.
  • டிஜிட்டல் இந்தியாவின் சிறப்பான கண்காணிப்புக்காக, திட்ட நிர்வாக தகவல் அமைப்பின் பயன்பாடானது திட்டத்தின் முன்னேற்றம் பற்றிய உண்மையான அல்லது உண்மைக்கு நிகரான விவரங்களை சேகரிக்க ஒவ்வொரு புதிய மற்றும் ஏற்கனவே உள்ள மிஷன் முறைமை திட்டங்களில் (மிஷன் மோட் புரோஜெக்ட்கள்) கட்டாயமாக்கப்படுகின்றது. இந்த கருவி திட்டமிடல் மற்றும் உருவாக்கம், செயல்படுத்துதல் மற்றும் பின்-செயல்படுத்துதல் ஆகிய திட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும் பண்பளவுகளை சேகரிக்க போதுமான திறனுடன் இருக்க வேண்டும். இந்த பண்பளவுகள் பல்வேறு இணைப்பு அமைச்சகங்கள் / அரசுத்துறைகள் மற்றும் டெய்டி (DeitY)-யின் ஆலோசனையுடன் முடிவு செய்யப்படக் கூடும்.
  • ஈ-கிராந்தி தொடங்கியதில் இருந்து : தேசிய மின்-ஆளுமை திட்டம் 2.0" ஏற்கனவே டிஜிட்டல் இந்தியா பிரோகிராமுடன் ஒருங்கிணைக்கப்பட்டுவிட்டது, தேசிய மற்றும் மாநில அளவில், தேசிய மின்-ஆளுகை திட்டத்தில் ஏற்கனவே நிறுவப்பட்ட மேலாண்மை அமைப்பையும் பிரோகிராம் மேலாண்மை அமைப்புடன் உரிய முறையில் மாநில/ யூனியன் பிரதேச அளவில் டிஜிட்டல் இந்தியா பிரோகிராமிற்காக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : “திட்டம்” மாத இதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 6/4/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate