অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

கடலூர் மாவட்ட வரலாறு

கடலூர் மாவட்ட வரலாறு

கடலூர் மாவட்டம் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது பண்டைய, வரலாற்று மாவட்டங்களில் ஒன்றாகும். தற்போது கடலூர் மாவட்டம் தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து 1993 செப்டெம்பர் 30 அன்று பிரிக்கப்பட்டது. கடலூர் நகரம், மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கிறது. இந்த மாவட்டத்திற்கு இன்நகரத்தின் பெயரினையே பெயரிடப்பட்டுள்ளது. புராணத்தில் இந்த மாவட்டம் ஸ்ரீராமபகுதியாக குறிப்பிடபட்டுள்ளது. 1801 ஆம் ஆண்டில், கேப்டன் கிரஹாம், பாலார் மற்றும் போர்டோநோவோ ஆறுகளுக்கு இடையில் உள்ள மாவட்டத்தின் பொறுப்பாளராகவும், முதல் கலெக்டராக தென் ஆற்காடு மாவட்டத்திற்காகவும் பொறுப்பேற்றார். வரலாற்று சான்றாக 1962 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மதராஸ் மாவட்ட வர்த்தமானியர்களான அரசு இதழில், தென்னாற்காடு பெயர் காரணம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆறு முனிவர்கள் வாழ்ந்த ஆற்று பகுதியாகவும், தென்னாற்காட்டிலிருந்து கிடைத்த வரலாற்று சான்றுகளில் இருந்து பெறப்பட்டுள்ளன.

இப்போது கடலூர் மாவட்டத்தில் மூன்று பிரிவுகளும், பத்து தாலுக்காக்களும், முப்பது இரண்டு உரசல்களும், 905 வருவாய் கிராமங்களும் வருவாய் நிர்வாகத்தில் உள்ளன. இந்த மாவட்டத்தில் 13 பஞ்சாயத்து சங்கங்கள் மற்றும் 683 கிராம பஞ்சாயத்துகள் கிராமப்புற மேம்பாட்டு நிர்வாகத்தில் உள்ளன. நகர்ப்புறத்தில் ஐந்து நகராட்சிகள் மற்றும் 18 நகர பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த மாவட்டத்தில் ஒன்பது சட்டமன்ற மற்றும் இரண்டு பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு பரப்பளவு 3678 சதுர கிலோ மீட்டர். இந்த மாவட்டத்தில் ஐந்து பெரிய ஆறுகள் இயங்குகின்றன. மின்சாரம் உற்பத்திக்கு உதவுவதற்காக லிங்கைட் சில சிறிய சுரங்கங்களை மாவட்டத்தில் கொண்டுள்ளது. இம்மாவட்டம், தமிழ்நாட்டின் மிகவும் வலுவான மீன்பிடித் துறைகளில் ஒன்றாகும், மேலும் பெருமளவிலான மீனவர்களின் மக்கள்தொகையை கொண்டுள்ளது. இந்த மாவட்ட மக்களுக்கு வேளாண்மை மற்றும் தொழிற்துறைகளும் முக்கிய தொழிலாகும். மிகுந்த சுவையான பலாப்பழங்களும் மற்றும் உயறியதரம் வாய்ந்த முந்திரி பருப்புககளும் இந்த மாவட்டத்தில் விளைவிக்கப்படுகின்றன அவைகள் மிகவும் பிரபலமாக உள்ளன. உலகின் பிரபலமான சர்க்கரை மற்றும் சாக்லேட் மிட்டாய்கள் இந்த மாவட்டத்தில் தயாரிக்கப்படுகின்றன.

கோடைகாலம் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் வரை நீடிக்கும். இந்த மாதங்களில் வெப்பநிலை 23°C முதல் 40°C வரையும், ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் மழைக்காலமும் நிலவுகிறது. இந்த பருவத்தில் கன மழை உள்ளது. நவம்பர் மாதம் கடலூரில் குளிர்காலம் துவங்கும். 12°C முதல் 30°C வரை வெப்பநிலை நிலவுகிறது. கடைசியாக ஜனவரி மாதத்தில் குளிர்காலம். கடலூருக்கு வருகை தரும் சிறந்த பருவங்களில் இதுவும் ஒன்றாகும். பிப்ரவரியில் குளிர்காலம் நீடிக்கும், மார்ச் மாதத்தின் பின்னர் வெப்பமான வானிலை தொடங்குகிறது.

கடலூர் மாவட்டம் இயற்கை இடர்பாடுகள் அதிகம் விளையும் மாவட்டமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நீண்ட கடற்கரை உள்ளது, எனவே மாவட்டத்தில் ஆறுகள், ஏரிகள் அதிகம் உள்ளதால் அதிக வெள்ளம் ஏற்படுகின்றது. சூறாவளிக் குறைபாடுகள் விளைவாக மழைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த சில நூற்றாண்டுகளில் சூறாவளிகக்காற்றினாலும், வெள்ளங்களாலும் பல முறை மாவட்டத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. 2008 ஆம் ஆண்டில் சூறாவளி “நிஷா” மற்றும் டிசம்பர் 2011 இல் “தானே” புயல் போன்று பல மாவட்டங்களில் பல ஆண்டுகளாக கடுமையாக சேதம் அடைந்தன.

ஆதாரம் : https://cuddalore.nic.in/

கடைசியாக மாற்றப்பட்டது : 7/7/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate