கல்வி என்பது மனிதனை அனைத்து உயிரினங்களைவிட உயா்வான நிலையில் உருவாக்கும் கருவி ஆகும். கல்வி ஒரு சமூகத்தின் ஒருங்கிணைந்த அறிவு, திறன் மற்றும் மதிப்பீடுகளை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு கொண்டு செல்ல உதவும் ஒரு காரணி, கல்வி குழந்தைகளை சுயமாக சிந்திக்கவும், புதியனவற்றை உருவாக்கவும், கற்பனைத் திறனை வளா்க்கவும், கலைநயம் மிக்க சிந்தனைத் திறனை உருவாக்கும் அற்புதக் கருவி ஆகும். ஒரு குழந்தையின் படைப்புத் திறனை உருவாக்குவதற்கும், அழகியலை ஆராதிப்பதற்கும் வழிகளையும், வாய்ப்புகளையும் வழங்கும். கல்வி நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய உலகத்தைப் பற்றிய உலகளாவிய அறிவை வழங்குகிறது. குழந்தைகளுக்கு செயல்பாடுகள் குறித்த சரியான புரிதல்களை கல்வி வழங்குகிறது.
உயர்நிலைப் பள்ளி பட்டியல்[314 KB]
மேல்நிலைப் பள்ளி பட்டியல்[291 KB]
கடலூர் மாவட்டத்தில் கல்வித் துறையின் முதன்மை மற்றும் தலைமை அலுவலகமாக முதன்மைக் கல்வி அலுவலகம் செயல்படுகிறது. இவ்வலுவலகம் கடலூர், மஞ்சக்குப்பம் பெண்ணையாறு சாலையிலுள்ள மஞ்சக்குப்பம் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது. இவ்வலுவலகத்தின் முதன்மை அதிகாரியாக முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) அவர்கள் விளங்குகிறார்.
அலுவலகத்தின் தொலைபேசி எண் : 04142 286038
மேலும், 01.06.2018 முதல் நிர்வாக மேம்பாட்டு காரணமாக கடலூர் வருவாய் மாவட்டம் நான்கு கல்வி மாவட்டங்களாகப் பின்வருமாறு பிரிக்கப்பட்டு செயல்படுகிறது.
இவ்வலுவலகங்களின் தலைமை அலுவலராக மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) பொறுப்பு வகிக்கிறார்.
மாவட்டக் கல்வி அலுவலகம், கடலூர், 3 வட்டாரக் கல்வி அலுவலகங்களைக் கொண்டுள்ளது. அதன் அதிகாரிகளாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் (BEO) உள்ளனர்.
அவை,
மாவட்டக் கல்வி அலுவலகம், சிதம்பரம் 3 வட்டாரக் கல்வி அலுவலகங்களைக் கொண்டுள்ளது. அதன் அதிகாரிகளாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் உள்ளனர்.
அவை,
மாவட்டக் கல்வி அலுவலகம், வடலூர் 4 வட்டாரக் கல்வி அலுவலகங்களைக் கொண்டுள்ளது.அதன் அதிகாரிகளாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் உள்ளனர்.
அவை
மாவட்டக் கல்வி அலுவலகம், விருத்தாசலம் 4 வட்டாரக் கல்வி அலுவலகங்களைக் கொண்டுள்ளது. அதன் அதிகாரிகளாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் உள்ளனர்.
அவை,
கடலூர் மாவட்டத்தில் மேல்நிலை / உயர்நிலை / மெட்ரிக் / நடுநிலை / தொடக்க நிலை / மழலையர் பள்ளிகள் என மொத்தம் 2223 பள்ளிகள் உள்ளன.
மாவட்டத்திலுள்ள அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு அவர்களின் கல்வி கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாகவும் பின்வரும் அரசின் நலத்திட்ட உதவிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு மாணவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வ.எண் | நலத்திட்டங்கள் | பயனடையும் வகுப்பு மாணவர்கள் |
---|---|---|
1 | சீருடை | I to VIII |
2 | இடைநிற்றலை குறைப்பதற்கான சிறப்பு ஊக்கத்தொகை | X to XII |
3 | மடிக்கணினி | XII |
4 | காலணிகள் | I to VIII |
5 | புத்தகப்பை | I to XII |
6 | கணித உபகரணப் பெட்டி | VI to X |
7 | வண்ணப் பென்சில்கள் | III to V |
8 | வண்ணக் கிரையான்கள் | I to II |
9 | நிலவரைப் பட நூல் | VI to X |
10 | நோட்டுப் புத்தகங்கள் | I to X |
11 | பாட நூல்கள் | I to XII |
12 | மிதி வண்டி | XI |
13 | பேருந்து பயண அட்டை | I to XII |
14 | மதிய உணவுத் திட்டம் | I to X |
15 | வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான நிதியுதவி | I to XII |
அலுவலக முகவரி விபரம்
முதன்மை கல்வி அலுவலர்,
கடலூர் 607001,
தொலைபேசி – 04142 286038
மின்னஞ்சல் – ceocud[at]nic[dot]in
ஆதாரம் : https://cuddalore.nic.in/
கடைசியாக மாற்றப்பட்டது : 6/18/2020
நெல்லிக்குப்பம் நகராட்சி சார்ந்த தகவல்கள் இங்கு கொ...
கடலூர் பெருநகராட்சி சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்...
கடலூர் மாவட்டத்தின் சுகாதார துறை சார்ந்த தகவல்கள் ...
விழுப்புரம் மாவட்டத்தின் அலுவலக விலாசங்கள் இங்கு ...