காவேரி டெல்டா பகுதியான கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 3,25,355 எக்டர் பரப்பளவில் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றில் 46,750 எக்டர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களான முந்திரி, வாழை, பலா, கொய்யா, மரவள்ளி, மிளகாய், கத்தரி மற்றும் இதர பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. முக்கனிகளில் ஒன்றான பலா கடலூரில் சாகுபடி செய்வது உலகளாவிய அளவில் பண்ருட்டி பலா எனவும் பெயா்போனதாகும் மற்றும் ஏற்றுமதி தரத்திற்கேற்ப முந்திரி அதிக அளவில் விளைவிக்கப்படுவதும் கடலூர் மாவட்டத்தில் சிறப்பாகும்.
மேலும், தோட்டக்கலை பயிர்களின் மகசூலைப் பெருக்கவும், அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை முன்னேற்றும் வகையில் தமிழக அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக பல வகையான திட்டங்களை செயல்படுத்துகிறது.
தோட்டக்கலைதுறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கத்திட்டம் (MIDH-NHM)
அ. பசுமைக்குடில்:
பசுமைக்குடில் அமைப்பதற்கு ஒரு சதுர மீட்டா் 50 சதவீதம் மான்யத்தில் ரூ.468/- வீதம் ஒரு பயனாளிகளுக்கு அதிகபட்சமாக 4000 சதுர மீட்டருக்கு பின்னேற்பு மான்யம் வழங்கப்படுகிறது.
ஆ. நிழல்வலைக்குடில்:
ஒரு சதுர மீட்டருக்கு 50 சதவீதம் மான்யத்தில் ரூ.355/- வீதம் ஒரு பயனாளிகளுக்கு அதிகபட்சமாக 2000 சதுரமீட்டருக்கு பின்னேற்பு மான்யம் வழங்கப்படும்.
இ. நிலப்போர்வை:
ஒரு எக்டருக்கு 50 சதவீதம ரூ.16,000/- மான்யம் வழங்கப்படும்.
ஈ. நீா் வளங்களை உருவாக்குதல்:
தனி நபா்களுக்கான நீா் சேகரிப்பு முறை ( Water Harvesting System for Individual) திட்ட இனத்தில் நீா் சேகரிப்பினை ஊக்குவிப்பதற்காக பண்ணைக்குட்டைகள், கிணறுகள் அமைப்பதற்கு அரசு மான்யமாக ஒரு எண்ணிற்கு ரூ.75,000/- மான்யத்தில் வழங்கப்படும்.
நுண்ணூட்ட சத்து இடுதலை ஊக்குவித்தல்
தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வயல்களில் நுண்ணூட்டசத்து இடுதலின் அவசியத்கை ஊக்குவிக்கும் வகையில் ஒரு எக்டருக்கு ரூ.500/- மதிப்பில் நுண்ணூட்ட சத்துக்கள் உயிர் உரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலை இயந்திரமயமாக்குதல்:
ஒருங்கிணைந்த அறுவடைக்கு பின்சார் மேலாண்மை
விவசாயிகளின் வயலில் விளைபொருட்களை அறுவடை செய்த பின்பு சேமிப்பு மற்றும் தரம் பிரிப்பதற்கு சிப்பம் கட்டும் அறை அமைக்க 50 சதவீதம் மான்யத்தில் ரூ.2.00 இலட்சம் பின்மான்யமாக வழங்கப்படுகிறது.
விவசாயிகளின் பயிற்சி:
கடலூா் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக, விவசாயிகளுக்கு உள் மாநிலம், வெளி மாநிலம் மற்றும் விவசாயிகள் கண்டுணா்வு சுற்றுலா ஆகிய பயிற்சிகள் வழங்கப்படும்.
1. தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம் (NADP)
2. புதிய பரப்பு அதிகரித்தல்:- புதிய பரப்பு விரிவாக்கத்தில் பழச்செடிகளான கொய்யா ஒரு எக்டருக்கு ரூ.902/- மற்றும் பலாவிற்கு ரூ.14400/- மான்யம் வழங்கப்படுகிறது.
3. வெங்காயம் அபிவிருத்தித் திட்டம் – வெங்காயம் சாகுபடிக்கு ஒரு எக்டருக்கு ரூ.20,000/- மான்யம் வழங்கப்படும்.
4. தோட்டக்கலை பயிர்களில் உற்பத்தியை அதிகரிக்க ஒரு எக்டருக்கு ரூ.20,000/- மதிப்பில் இடுபொருள் மான்யம் வழங்கப்படும்.
5. விவசாயம் சாராத நபா்களுக்கும் வீட்டுக் காய்கறி தோட்டம் அமைப்பதற்கு ஒரு சிறுதளை பாக்கெட் ரூ.10/- மான்யத்தில் வழங்கப்படுகிறது.
பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான நுண்ணீா் பாசன திட்டத்தின் கீழ் தோட்டக்கலை மற்றும் இதர பயிர்களுக்கு சொட்டு நீா் பாசனம் அமைக்க 3390 எக்டா் பொருள் மற்றும் ரூ.1150 கோடி நிதி ஓதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதில் பொது இன விவசாயிகளுக்கு 91.0 சதவீதமும், ஆதிதிராவிடா் விவசாயிகளுக்கு 7.5 சதவீதமும், பழங்குடியினா் விவசாயிகளுக்கு 1 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மான்யமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மான்யமும் வழங்கப்படுகிறது. கூடுதலாக தேவைப்படும் பொருட்களுக்கு சொட்டு நீா பாசன அமைப்பு பொருத்த ஆகும் தொகையை விவசாயிகள் செலுத்த வேண்டும்.
1. தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் (NMSA)
2. மானாவாரி பகுதி நில மேம்பாடு (RAD)
தோட்டக்கலை சார்நத பண்ணையம் அமைத்தல் – மரவள்ளி மற்றும் ஊடுபயிர் பயிறுவகை ஒரு எக்டருக்கு 50 சதவீதம் மானியத்தில் ரூ.25,000/- செடிகள் மற்றும் இடுபொருட்களுக்கு மான்யம் வழங்கப்படுகிறது.
மண்புழு உரம் தயாரித்தல்:
மண்புழு உரம் தயாரிக்கும் அலகு அமைத்திட ஒரு எண்ணிற்கு ரூ.25,000/- மான்யமாக வழங்கப்படுகிறது. மண்புழு உரப்படுக்கை அமைத்திட ஒரு எண்ணிற்கு ரூ.6000/- மான்யமாக வழங்கப்படுகிறது.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) கடலூா் மாவட்டத்தில் மாநில அரசின் மான்யத்துடன் ராபீ / காரீப் தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி மற்றும் வாழை பயிர்களுக்கு பயிர் சாகுபடியில் இணைப்பில் உள்ள கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது. திட்டத்தின் நோக்கம் PMFBY நிலையான உற்பத்திக்கு பின்வரும் வழிமுறைகளால் துணை நிற்பதே ஆகும்.
1. இயற்கை இடா்பாடுகளால் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படும்
2. விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கச் செய்து அவா்களை விவசாயத்தில் நிலைபெறச் செய்தல்
3. நவீன சாகுபடி தொழில் நுட்பங்களை கடைபிடிக்க விவசாயிகளை ஊக்குவித்தல்
4. விவசாய பெருமக்களுக்கு உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயத்திலிருந்து பாதுகாப்பதுடன் உணவு பாதுகாப்பிற்காக விவசாயிகளுடன் உதவி தொடா்ந்து கிடைப்பதை உறுதிப்படுத்தி பயிர் சாகுபடியை மேம்படுத்துதல்.
அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் அறிவி்க்கை செய்யப்பட்ட பயிர்களை பயிரிடும் விவசாயிகள் அனைவரும் (குத்தகை விவசாயிகள் உட்பட) இத்திட்டத்தில் சேர தகுதியானவா்கள்.
மேலும் தகவல் மற்றும் தொழில்நுட்பங்களை அறிந்திட கீழ்கண்ட அலுவலா்களை தொடா்பு கொள்ளவும். |
|||
வ. எண் |
பெயா் மற்றும் பதவி |
வட்டாரம் |
கைபேசி எண். |
தலைமையிட அலுவலா்கள் |
|||
1. |
ர.ராஜாமணி, தோட்டக்கலை துணை இயக்குநா் |
கடலூா் மாவட்டம் |
9442390717 |
2. |
தே.சுரேஷ், தோட்டக்கலை உதவி இயக்குநா் (பொ) (நடவுப்பொருள்) |
கடலூா் மாவட்டம் |
9489604087 |
3. |
த. அருள்தாசன், தோட்டக்கலை அலுவலா் (தொ.நு-1) |
கடலூா் மாவட்டம் |
9486155971 |
4. |
இரா.அலெக்ஸ், தோட்டக்கலை அலுவலா் (தொ.நு-2) |
கடலூா் மாவட்டம் |
9677632313 |
வட்டார தோட்டக்கலை அலுவலா்கள் |
|||
5. |
வெ.சிவக்குமார், தோட்டக்கலை உதவி இயக்குநா் |
கடலூா் |
9715189181 |
6. |
எஸ்.ஆனந்தி, தோட்டக்கலை உதவி இயக்குநா் (பொ) |
குறிஞ்சிப்பாடி |
9944593487 |
7. |
ஆா்.லட்சுமிதேவி, தோட்டக்கலை உதவி இயக்குநா (பொ) |
பண்ருட்டி |
9786723118 |
8. |
ப்பி.சுகந்தி, தோட்டக்கலை உதவி இயக்குநா் (பொ) |
அண்ணாகிராமம் |
9047121898 |
9. |
என்.டி.ரவிசேகா், தோட்டக்கலை உதவி இயக்குநா் (பொ) |
புவனகிரி |
8053673777 |
10. |
எம்.எஸ்.சங்கீதா, தோட்டக்கலை உதவி இயக்குநா் (பொ) |
பரங்கிப்பேட்டை |
9786867588 |
11. |
என்.டி.ரவிசேகா், தோட்டக்கலை உதவி இயக்குநா் (பொ) |
கீரப்பாளையம் |
8053673777 |
12. |
எம்.எஸ்.சங்கீதா, தோட்டக்கலை உதவி இயக்குநா் (பொ) |
குமராட்சி |
9786867588 |
13. |
எம்.எஸ்.சங்கீதா, தோட்டக்கலை உதவி இயக்குநா் (பொ) |
காட்டுமன்னார் கோவில் |
9786867588 |
14. |
ஜெ.புவனேஸ்வரி, தோட்டக்கலை உதவி இயக்குநா் (பொ) |
கம்மாபுரம் |
9786867588 |
15. |
ஜெ.புவனேஸ்வரி, தோட்டக்கலை உதவி இயக்குநா் (பொ) |
விருத்தாசலம் |
9786867588 |
16. |
ந.கலைவானி, தோட்டக்கலை உதவி இயக்குநா் (பொ) |
மங்களுா் |
9566981785 |
17. |
தே. சுரேஷ், தோட்டக்கலை உதவி இயக்குநா் (பொ) |
நல்லூா் |
9489604087 |
மாவட்ட ஒருங்கிணைப்பாளா்
தோட்டக்கலை துணை இயக்குநா்,
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை,
செம்மண்டலம், கடலூா் மாவட்டம்
தொலைபேசி 04142 – 291665, 291878
ஆதாரம் : https://cuddalore.nic.in/
கடைசியாக மாற்றப்பட்டது : 6/20/2020
கடலூர் மாவட்ட மின்னாளுமை செயலக்கங்கள் குறித்து இங்...
கடலூர் மாவட்டத்தின் புள்ளிவிபரங்கள் இங்கு கொடுக்கப...
கடலூர் மாவட்டத்தின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த ...
கடலூர் மாவட்ட நீதிமன்றங்கள் பற்றிய தகவல்கள் இங்கு...