விவரங்கள் |
விரிவாக்கம் |
பரப்பளவு |
1672 சதுர.கி.மீ. sq.kms |
மக்கள் தொகை |
1,669,763 |
மாவட்ட தலைமையகம் |
நாகர்கோயில் |
மொழி |
தமிழ் |
வலைதளம் | http://www.kanyakumari.tn.nic.in/ |
கன்னியாகுமரியுடன் இருக்கும் இந்த மாவட்டம் தொடக்கத்தில் திருவாங்கூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே விளங்கிற்று. பின்னர் திருவாங்கூர் வடக்கு மற்றும் தெற்கு எனும் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, தெற்கு பகுதி திவான் பாசிர் அவர்களால் ஆளப்பட்டது. 1949ஆம் ஆண்டு திருவாங்கூர் மாநிலம் உருவாக்கப்பட்ட பின்பு, அகஸ்தீஸ்வரம் தோவலை, கல்குளம் மற்றும் விலவன்கோடு தாலுக்காக்கள் தெற்கு பகுதிகளோடு இணைக்கப்பட்டு தமிழர்கள் வாழும் பகுதிகளாக 1956ல் தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்டது.
கன்னியாகுமரி வருடம் முழுக்க சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் ஓர் முக்கிய சுற்றுலாத்தலம். நீர்வீழ்ச்சி, திருவள்ளுவர் சிலை, மகாத்மா காந்தி நினைவகம், காமராஜர் மணிமண்டபம், விவேகானந்தர் மண்டபம், விவேகானந்தர் பாறை, தொலைநோக்கி இல்லம், குகன்சுவாமி கோயில், அரசு அருங்காட்சியகம், சுசீந்தரம், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், மாத்தூர் தொங்கு பாலம், உதயகிரி கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, புனித சேவியர் தேவாலயம், பேச்சிப்பாறை நீர்த்தேக்கம், பீர் முகமது தர்கா, மருத்துவமலை, முட்டம் கடற்கரை, செங்குத்தர் கடற்கரை, கோதவிலை கடற்கரை போன்றவை சிறந்த சுற்றுலாத்தலங்களாக கன்னியாகுமரியில் விளங்குகிறது.
ஆதாரம் : தமிழ்நாடுஅரசு வலைதளம்
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020