சமூக நலத்துறையின் கீழ் ஐந்து வகையான திருமண நிதியுதவி திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
திட்டத்தின் நோக்கம் பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதல் மற்றும் ஏழை பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நிதி உதவி வழங்குதல்.
திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1989
17.05.2011 க்கு முன்பாக ரூ25000/- மற்றும் ரூ50000/- காசோலை மட்டும் வழங்கப்பட்டது. (17.05.2011 முதல் ரூ25,000/ ரூ50,000 நிதியுதவியுடன் 4கிராம் 22காரட் தங்க நாணயம் வழங்கப்படுகிறது)
திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்
மணப்பெண்ணின் கல்வித்தகுதி
திட்டம்-1
மணப்பெண் 10-ஆம் வகுப்பு வரை பள்ளியில் படித்து (தேர்ச்சி அல்லது தோல்வி) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தொலை தூரக்கல்வி மூலம் படித்திருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் இருத்தல் வேண்டும்.
பழங்குடியினராக இருந்தால் 5ம் வகுப்பு வரை படித்திருத்தல் வேண்டும்.
திட்டம்-2
பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
பட்டயப்படிப்பு சான்றிதழ் பெற்றவர்கள், தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
இணையதளத்தில் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்படவேண்டிய சான்றுகள்
நிதி உதவியின் அளவு(17.05.2011முதல்)
திட்டம்-1
ரூ.25,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்க நாணயம், 23.05.2016முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம்
திட்டம்-2
ரூ.50,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம் 23.05.2016முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம்
விண்ணப்பிக்க வேண்டிய காலஅளவு
திருமணத்திற்கு 40நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு நேர்வுகளில், தக்ககாரணங்கள் இருந்தால், திருமணத்திற்கு முதல்நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒரு சான்றுகள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
திட்டத்தின் நோக்கம் : விதவைகளுக்கு மறுமணத்திற்கு நிதியுதவி அளித்தல்.
திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1975
திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள்
இணைய தளத்தில் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்படவேண்டிய சான்றுகள்
நிதியுதவியின் அளவு
திட்டம் 1
ரூ.25,000 வழங்கப்படுகிறது. (இதில் ரூ.15,000 காசோலையாகவும், ரூ.10,000 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்க நாணயம்) 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம் வழங்கப்படும். இதற்கு கல்வித்தகுதி நிபந்தனையில்லை.
திட்டம்-2
பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு சான்றிதழ் பெற்ற பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. (இதில் ரூ.30,000 காசோலையாகவும், ரூ.20,000 தேசிய சேமிப்புப்பத்திரமாகவும் வழங்கப்படும்) இதனுடன் சேர்த்து திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம் 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய காலஅளவு
மறுமண நாளிலிருந்து 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பு மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒரு சான்றுகள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
திட்டத்தின் நோக்கம் : ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்த உதவுதல்.
திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு : 1981
திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் :
இணையதளத்தில் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்
நிதி உதவியின் அளவு :
திட்டம்-1
ரூ.25,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்க நாணயம். 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம் வழங்கப்படும். கல்வித்தகுதி நிபந்தனையில்லை.
திட்டம்-2
பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைதூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிபல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர் எனில் தமிழக அரசின் தொழில்நுட்பகல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
ரூ.50,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம். 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய காலஅளவு
திருமணத்திற்கு 40நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு நேர்வுகளில் தக்ககாரணங்கள் இருந்தால், திருமணத்திற்கு முதல் நாள் வரை விண்ணப்பிக்கலாம்
குறிப்பு மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒருசான்றுகள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
திட்டத்தின் நோக்கம் : ஆதரவற்ற பெண்கள் திருமணத்திற்கு நிதி உதவி அளித்தல்.
திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு : 1985-1986
திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் :
இணையதளத்தில் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்
நிதியுதவியின் அளவு :
திட்டம்-1
குறைந்தபட்ச கல்வித்தகுதி நிபந்தனையின்றி ரூ.25,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு 4கிராம் 22காரட் தங்கநாணயம். 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும்
திட்டம்-2
பட்டதாரிகள் கல்லுாரியிலோ அல்லது தொலைதுாரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிபல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பட்டயப்படிப்பு(DiplomaHolders) எனில் தமிழக அரசின் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
ரூ.50,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம். 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும்
விண்ணப்பிக்க வேண்டிய காலஅளவு
திருமணத்திற்கு 40நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு நேர்வுகளில், தக்ககாரணங்கள் இருந்தால், திருமணத்திற்கு முதல்நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒருசான்றுகள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
திட்டத்தின் நோக்கம் : பிறப்பு அடிப்படையிலான சாதியின வேறுபாட்டை அகற்றி, கலப்பு திருமணங்களை ஊக்கப்படுத்துதல்.
திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு : 1967
(8.07.2011 முதல் இத்திட்டம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)
திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் :
இணையதளத்தில் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்
நிதியுதவியின் அளவு
திட்டம்-1
கல்வித்தகுதி இல்லை
ரூ.25,000ம் (ரூ.15,000 காசோலையாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்புப்பத்திரமாகவும்) மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும். 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம் வழங்கப்படும்
திட்டம்2
பட்டதாரிகள் கல்லூரியிலோ / தொலைதூரகல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிபல்கலைகழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப்படிப்பு (DiplomaHolders) எனில் தமிழக அரசின் தொழில்நுட்பகல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
ரூ.50,000 (ரூ.30,000 காசோலையாகவும், ரூ.20,000 தேசிய சேமிப்புப்பத்திரமாகவும்) மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும் 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும்
விண்ணப்பிக்க வேண்டிய காலஅளவு
திருமணமாகி இரண்டாண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பு மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒருசான்றுகள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
ஆதாரம் : https://virudhunagar.nic.in
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020
விருதுநகர் மாவட்டத்தின் பொருளியல் மற்றும் புள்ளியல...
விருதுநகர் மாவட்ட நிர்வாக அமைப்பு பற்றிய தகவல்கள் ...
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்ந்த தகவல...