பொது மக்கள் மின் ஆளுமை சேவைகளை பெறுவதற்காக அரசு சேவை மையங்கள் நிறுவப்பட உள்ளன.
குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு வழங்கும் உயரிய நோக்கத்துடன் கேபிள் டிவியின் சேவையினை மாதம் ரூ. 70 என்ற கட்டணத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கும். தற்போது இச்சேவையை கேபிள் டிவி நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை புனரமைத்து, அதன் ஒளிபரப்பு சேவையை தமிழகத்தில் பிற மாவட்டங்களில் சேவையை தொடங்கியுள்ளது.
இந்நிறுவனம் தற்போது 75 கட்டுப்பாட்டு அறைகளிலிருந்து 26 ஆயிரத்து 910 கேபிள் ஆபரர்டடர்கள் மூலம் 70.52 லட்சம் சந்தாரர்களுக்கு கேபிள் டி.வி. சேவையை வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தற்போது தமிழகத்தில் உள்ள 254 மாவட்டகளிலும் பொது சேவை மையங்களை அமைத்து வருகிறது. பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை பொதுசேவை மையங்கள் மூலம் நேர்த்தியாகவும், வெளிப்படையாகவும் அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே அளிப்பது இதன் நோக்கம் ஆகும்.
இச்சேவை மைங்கள் மூலம் குடும்பத்தில் பட்டதாரி இல்லை, என்பதற்கான சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ், வருமானச்சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம். மூவலூர் ராமா மிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம், டாக்டர் முத்துலட்சுமி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம், ஈ.வே.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையார் மகள் திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் ஆகிய மின் ஆளுமை அரசு சேவைகள் வழங்கப்படுகிறது.
ஆதாரம் : தினத்தந்தி
கடைசியாக மாற்றப்பட்டது : 7/17/2020