ரேஷன் கார்டில் ஆதார் எண்களை நாமே நமது ஸ்மார்ட் போன் மூலம் மிக எளிதாக பதிவு செய்யலாம்.
ஆதாரம் : தமிழ்நாடு பொது விநியோகத்திட்டம்
பயனரின் கட்டுரை
தெரிந்து கொள்ள வேண்டியவை
ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், ரேஷன் கடையில் பதிவு செய்ய முடியாது. மண்டல அலுவலகத்திற்க்கு செல்ல வேண்டும் என கடைக்காரர் கூறுவார். ஆனால் அது தேவையில்லை. 1967 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தமிழுக்கு ஒன்றை அழுத்தவும் அடுத்து குடும்ப அட்டை வைத்திருப்பவரா என்பதற்கு 2ஐ அழுத்தினால் சேவை அதிகாரி உங்களுடன் பேசுவார்.
அவர் உங்கள் ரேஷன் கார்டில் மேலே உள்ள எண்ணை கேட்பார். எ.கா. 005/w/ 33657778 என்ற எண்ணை சொல்லவும்.
பின்னர் குடும்ப அட்டையில் உள்ள ஒருவரின் ஆதார் எண்ணை கேட்பார். அதையும் தெரிவிக்க வேண்டும். நீங்கள் போன் செய்வதற்கு முன் ரேஷன் கார்டையும், ஆதார் கார்டையும் கையில் வைத்திருக்க வேண்டும்.
இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொன்னவுடன் நீங்கள் விரும்பிய மொபைல் நம்பரை பதிவு செய்யலாம். அல்லது நம்பரை மாற்றலாம். அடுத்த 2 நிமிடங்களில் உங்கள் மொபைல் எண் ஆக்டிவேட் ஆகிவிடும்.
இதற்காக வேகாத வெயிலில் மண்டல அலுவலகம் சென்று நிற்க வேண்டாம்.
இதேபோல, ரேஷன் கடையில் நீங்கள் ஆதார் அட்டை மட்டும்தான் பதிவு செய்திருப்பீர்கள். ஆனால் போட்டோ கொடுத்திருக்க மாட்டீர்கள். அதனால் உங்களுக்கு ஸ்மார் கார்டு வராது.
போட்டோவை மொபைல் ஆப் மூலமாகவோ அல்லது TNEPDS என்ற இணைதளம் மூலமாகவோ மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும். அதன் பிறகுதான் ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் செய்வார்கள்.
புதிதாகவும் ஸ்மார்ட் கார்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
சந்தேகங்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்:
க.பாபு,
கூட்டுறவுசார் பதிவாளர் / பொது விநியோகத் திட்ட அலுவலர்,
தொலைப்பேசி எண் : 9976510606
கடைசியாக மாற்றப்பட்டது : 7/15/2020
அந்நிய நாட்டவர் மற்றும் அந்நிய சுற்றுலாப் பயணிகள் ...
ஜன்தன் திட்டத்தின் வளர்ச்சி மற்றும் நன்மைகள் குறித...
தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் அம்மா அழைப்பு மையம்...
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதியுத...