தமிழகத்தில் மின்னாட்சி
உங்களின் புகார்களை/குறைபாடுகளைத் தெரிவிக்க இங்கே க்ளிக் செய்க
சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்கு நிலவரப்பட்டியல்
வழக்கு நிலவரப் பட்டியலைக் காண இங்கே க்ளிக் செய்க
ஆன்லைனில் வாக்காளர் பட்டியல்ஆன்லைனில் மக்கள் சாசனம் (சிட்டிசன் சார்ட்டர்)
ஆன்லைனில் மின் கட்டணக் கணக்கீடு
சமீபத்திய டெண்டர் அறிவிப்பினை அறிய http://www.tenders.tn.gov.in/
இணையதள டைரக்டரி (தொகுப்பகம்)வில்லங்கச் சான்றிதழ் (இ.சி) விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரரால் சமர்ப்பிக்கப்படும் தகவல் மீது சேவை மையத்தில் செயல்முறை நடவடிக்கை எடுக்கப்பட்டுச் சான்றிதழ் தயாராக வைக்கப்படும். விண்ணப்பதாரர், தேவைப்படும் கட்டணத்தைச் செலுத்தி நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது கூரியர் சேவை மூலம் வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும். ஆனால், சான்றிதழுக்கான கட்டணம், அனுப்புவதற்கான கட்டணமும் வசூலிக்கப்படும். பதிவுசெய்யப்பட்டுள்ள சொசைட்டிகள் பற்றிய விவரங்கள் மற்றும் அதனுடைய தகுதியைக் கிளிக் செய்வதன் மூலம் கண்டறியலாம். பொதுமக்கள் சீட்டு விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம், மேலும், அவர்கள் சேர விரும்பும் சீட்டு நிறுவனம் பதிவு பெற்ற ஒன்றுதானா என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
எக்ஸ்க்ளூசிவ் ரெஜீநெட் அமைப்பு பின்வரும் ஐ.டி. சேவைகளை வழங்குகிறது.
(பதிவுகளின் எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் வெளிப்படையான நிர்வாகம்) உயர் தர ஐ.டி. சேவைகூட பதிவுத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கணினி மூலம் இயக்கப்படுவதன் சிறப்பம்சங்கள்சேவை அளவுகள் வலைதளத்தில் கைடுலைன் மதிப்புகள் -https://tnreginet.gov.in/portal/
செயல்பாடு |
கணினிமயமாக்கலுக்கு முன்பு |
கணினிமயமான பின்பு |
இ.சி வழங்குதல் (சாதாரண) |
8 நாள்கள் |
5 நிமிடங்கள் |
இ.சி வழங்குதல் (அவசரம்) |
1 நாள் |
5 நிமிடங்கள் |
சொத்து மதிப்பீடு |
30 நிமிடங்கள் |
5 நிமிடங்கள் |
கைடுலைன் வேல்யூ |
- |
வலைதளத்தில் |
சான்றுப் பிரதிகள் |
4 நாள்கள் |
5 நிமிடங்கள் |
பதிவு |
4 நாள்கள் |
60 நிமிடங்கள் |
திருமணச் சான்றிதழ் |
1 நாள் |
15 நிமிடங்கள் |
வலைதளம், பதிவு செயல்முறைகளில், வெளிப்படையான தன்மை வேண்டுமென்பதை நோக்கியே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளுக்கான கைடுலைன் மதிப்பைக் கணக்கிடுதல், இதனால் பொதுமக்கள் எந்த ஒரு இடத்திற்கான, கைடுலைன் மதிப்பையும் பதிவுத் துறை அலுவலர்களின் உதவியின்றி எந்தநேரமும் தெரிந்து கொள்ளலாம். தற்பொழுது, இது அதிகப் பேர் பயன்படுத்தும் அரசாங்கத்தின் முக்கியமான வலைதளமாகக் கருதப்படுகிறது.
பதிவுத் துறை பற்றிய பொதுவான தகவல்கள் மட்டுமல்ல, பதிவு செயல்முறை மற்றும் பொதுமக்கள் யூட்டிலிட்டி படிவங்கள் கூட டவுன்லோடு செய்யும் வகையில் கிடைக்கிறது. பதிவுசெய்ய விண்ணப்பிப்பதற்கான, நிலைநிறுத்தப்பட்ட மாதிரி ஆவணங்கள், வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒருவர் பதிவு செயல்முறைகளை நன்கு அறிந்துகொண்டு, தானாகவே ஆவணங்களை எழுதிப் பதிவு செய்யக் கொடுக்கலாம். இந்த வலைதளம் இதற்கெனத் தனியாக மெயில் சேவை கொண்டுள்ளதால், பொதுமக்கள் பதிவுத் துறைக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு, தங்கள் புகார்களைச் சரிசெய்து கொள்ளலாம்.
ஆதாரம் http://www.tnreginet.net/english/star.asp
இணையம் மூலம் கிராமப்புறச் சேவைகள்
ராசி மையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் தெரிவிப்பது மற்றும் தகவல் தொடர்புக்கான வழிமுறையை ஏற்படுத்துவதை நோக்கமாக் கொண்டு தொடங்கப்பட்டது. பஞ்சாயத்து அலுவலகங்களை இணைப்பதன் மூலம், தகவல் பரிமாற்றம், விவசாயத்தில் சிறந்த வழிமுறைகள் போன்ற தகவல் தளங்களை உருவாக்குவது போன்றவை மிக்கிய சேவைகளாக இருக்கும்.
ராசி மையங்கள், இணைய நிர்வாகத்தினால் அமைக்கப்பட்ட தகவல் மையங்கள். இது பல்வேறு சேவைகளை வழங்குகிறது. உதாரணமாக, கிராமத் தகவல் தளம், மாவட்டம், பிளாக் மட்ட துறைகளுடன் நெட்வொர்க், ஆன்லைனில் புகார் மனுவைச் சமர்ப்பித்தல், எஸ்.எச்.ஜி. தகவல் தளம், வேலை மேம்பாடு பிளாக் அளவில், தகவல் தளத்தை வாங்குவது விற்பது, சந்தை விலைகள், நிலப்பதிவு சிட்டா போன்ற சேவைகள் தரப்படுகின்றன. மேலும், இது மாவட்ட நிர்வாகத்தை நடத்துவதற்கான சிறந்த முன்மாதிரியாகவும் இருக்கிறது. ராசி நெட்வொர்க்கை, என்.ஜி.ஓ., மாவட்டத்திலுள்ள தொழில் முனைவோர் மற்றும் சுய உதவி குழுக்கள் இயக்குகின்றன. சிறந்த விவசாய முறைகள் கொண்ட குறுந்தகட்டை இந்த அமைப்பு உருவாக்கி உள்ளது. இது உள்ளூர் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது.
விடியல் - தகவல் சேவை அளிப்போர்
நோக்கம்
கிராமப்புறச் சமுதாயத்தின் பலவீனமான பகுதிகளை ஐ.சி.டி. உதவியின் மூலம் அதிகாரம் பெறச் செய்வது. வி.ஐ.எஸ்.பி மையம், ஐ.சி.டி.யின் மூலம் எளிதில் கிடைக்கத்தக்க பல சேவைகளை வழங்குகிறது, முக்கியமாக விவசாயப் பொருள்களின் விலை, ஜோதிடம் பற்றிய தகவல், கிராமப்புற சந்தை இடங்கள், திருமணச் சேவைகள், கல்விச் சேவைகள், சுகாதார நலச் சேவைகள், குறைகள் களைதல், அரசாங்க விண்ணப்பங்களை ஏற்பாடு செய்தல் போன்றவை. பயனாளருக்குத் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவ மனைகளில் பயன்படுத்தும்படியாகத் தள்ளுபடிக் கூப்பன்கள் தரப்படுகின்றன. இன்னும் பிற சேவைகள், இணையத்திலிருந்து தொலைபேசி மற்றும் அடிப்படைக் கணினிக் கல்வி வி.ஐ.எஸ்.பி. சமுதாய மறுமலர்ச்சித் தொண்டர்களால் முதல்கட்டமாக திருச்சி மாவட்டத்தில் ஆறு கிராமங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
பொருள்
ஏழைப் பெண்கள் பொருளாதார வலிமையைப் பெறுவதை நோக்கமாக் கொண்டு ஏ.எஸ்.ஏ. கிராம விடியல் வருவாய் சார்ந்த பொருள்களின் கலவையைத் தருகிறது. எதையும் அடமானமாகக் கோராமல் கடன் பொருள்கள், குறிப்பிட்ட இடைவெளியில் உறுப்பினர்களுக்குத் தரப்படுகிறது. ஒவ்வொரு கடன் சுழற்சிக்குப் பிறகு, கடன் தொகை அதிகரிக்கப்படுகிறது. ஏ.எஸ்.ஏ - ஜி.வி. தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, உறுப்பினர்களுக்கு ஆயுள் காப்பீட்டைத் தருகிறது. நிதிப் பொருள்கள் தவிர்த்த ஏ.எஸ்.ஏ - ஜி.வி ஏழைகளின் சமூக நலத்தை முன்னிட்டு, பல்வேறு கடன்கள் மற்றும் கடன்கள் தாண்டிய சேவைகள் தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடன்கள்
பொதுக் கடன் - ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், தொடக்கத்தில் செய்ய வேண்டிய முதலீட்டிற்கான பணத்தைச் சம்பாதிக்கும் வகையில் ஏழைப் பெண் தொழில் முனைவோர்க்கு ஏ.எஸ்.வி - ஜி.வி. சிறிய கடன் தொகைகளை எதையும் அடமானமாகக் கோராமல் கடன்களைத் தருகிறது. இந்தக் கடன்கள் ஐந்து உறுப்பினர் குழுவில் இருக்கும் ஒரு பெண்ணுக்குத் தரப்படுகிறது. பிற நான்கு உறுப்பினர்களும், கடன் வாங்கியவருக்கு உத்தரவாதம் அளிப்பவர்களாகச் செயல்படுவார்கள். கடன் திரும்பிச் செலுத்துதல், வாரவாரம் நடக்கும் மையச் சந்திப்புகளில் வசூலிக்கப்படும் இந்தச் சந்திப்பை ஏ.எஸ்.ஏ - ஜி.வி யின் கள மேலாளர்கள் நடத்துவார்கள்.
பருவ காலக் கடன்-. ஃபோகஸ் குரூப் விவாதத்திற்குப் பிறகு தொடங்கப்பட்டது. தொழில் முனைவோர் கற்றுக்கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளரிடம் திருப்தி பற்றிய சர்வே எடுக்கப்பட்டது. இத்திட்டம், ஏ.எஸ்.ஏ - ஜி.வி உறுப்பினர்களுக்கு, முக்கியத் தருணங்களின்போது, அதாவது முக்கியமான பண்டிகைகளின்போது (தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல்) பணம் கடனாகப் பெறுவதற்கான வழிமுறை இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியது. பண்டிகைகள் தவிர்த்த, அவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படும் சமயங்களில் இந்த வசதி செய்யப்பட வேண்டும்.
பருவக்காலக் கடன், தீபாவளி, கிறிஸ்துஸ், பொங்கல் போன்ற சமயத்தில் முந்தைய கடனைச் சரியாகத் திரும்பிச் செலுத்துபவருக்கும் மையச் சந்திப்புகளுக்குச் சரியாக வருபவர்களுக்கும் தரப்படுகிறது. அத்தகைய உறுப்பினர்களுக்கு இன்னும் பிற முக்கியமான பண்டிகைகளின்போதும் மற்றும் பள்ளி அட்மிஷன்களின்போதும் பண்டிகைகளில் போதும் மற்றும் பள்ளி அட்மிஷன்களின் போதும் தொடர்ந்து கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நோக்கம் : பல்வேறு வகையான சேவைகளை வழங்குவது.
இந்த ஐ.எஸ்.ஆர்.ஓ. - எம்.எஸ்.எஸ்.ஆர்.எப். - வி.ஆர்.சி. திட்டம் வி.எஸ்.ஒ.டி அடிப்படையாகக் கொண்ட நெட்வொர்க் மூலம், அனைத்து விஷயங்களைப் பற்றிய தகவல்களை, குறிப்பாக, தொலை மருத்துவம், தொலைதூரக் கல்வி, விவசாயிகளுக்கு ஆலோசனை சேவைகள், இணைய நிர்வாகச் சேவைகள், வானிலை சேவைகள், தண்ணீர் மேலாண்மைப் பயன்முறைகள், எந்தவிதச் செலவுமின்றி தருவதற்குப் பாடுபடுகிறது.
இந்த நெட்வொர்க்கின் ஒரு பகுதியில் இருப்பவர், மற்றொரு பகுதியில் இருப்பவருடன் வீடியோ மற்றும் ஆடியோ இணைப்புகள் மூலம் உரையாட முடியும். ஒவ்வொரு மையத்திற்கும் 20 கணினிகள் தரப்பட்டுள்ளன. டாட்டா டெலி சர்வீசஸ், பி.சி.ஓ. பூத்துகளைத் தந்துள்ளது. இதன் மூலம் தகவல் பரிமாற்றம் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, வானிலை, சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் கிராமப்புற மக்கள் சவால்களைச் சந்திக்கும் வகையிலான தகவல் மற்றும் பயிற்சிகள் கிடைக்கின்றன. இப்பொழுது தமிழ்நாட்டில், 10 கிராம வள மையங்கள் இருக்கின்றன. அன்னவாசல், சென்னை, சிதம்பரம், மணமேல்குடி, நாகப்பட்டினம், நாகர்கோவில், செம்பட்டி, தங்கச்சிமடம், திருவையாறு மற்றும் வயநாடு மேலும் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் ஒன்றுள்ளது.
திட்டத்தின் நோக்கம் :
குடிமக்களை மையமாகக் கொண்ட, நிலம் சம்பந்தமான அனைத்து இணைய சேவைகளையும் வழங்குதல்.
குடிமக்களுக்கு சிட்டா எக்ஸ்ட்ராட்/ பதிவு எக்ஸ்ட்ராட்/ அடங்கல் எக்ஸ்ட்ராட் வழங்குதல். எல்லா விவரங்களும் அடங்கிய தகவல் தளம் ஒன்றை உருவாக்கி பிளாட்வாரியான, உரிமையாளர் வாரியான நில விவரங்களைச் சேகரித்து வைத்தல், இத்யாதி கணினி முறையின் மூலம் காலவரிசைப்பட்ட அறிக்கைகளைத் தயாரித்தல். மேம்படுத்தப்பட்ட மற்றும் திறன்பட்ட சேவை, எளிதான பராமரிப்பு மற்றும் நிலப் பதிவுகளின் அப்டேட்டுகள், ஒளிவு மறைவற்ற நிர்வாகம் போன்ற சேவைகளையும் செய்கிறது. மேலும், பொதுமக்களுக்கு தொடுதிரை கணினிச் சாவடிகள் மூலம் தகவல் கிடைக்கச் செய்வது பிற துறைகளுடன் தகவல்களைப் பரிமாறுதல், அதாவது சப் ரிஜிஸ்டர் அலுவலகம், விவசாயத் துறை. இத்யாதி போன்ற சேவைகளையும் தருகிறது.
தொடுதிரைச் சாவடி, குடிமக்கள் சார்ந்த சேவைகளைத் தருவதற்காக, தமிழ்நாட்டின் வருவாய்த் துறை மாநிலத்தில் உள்ள 127 தாலுகாக்களில் தொடுதிரைச் சாவடிகளை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் தொடுதிரைச் சாவடி, 29 மாதிரி தாலுகாக்களில் பொருத்தப்பட்டது. தொடுதிரைச் சாவடிக்கான வரவேற்பு மிகச் சிறப்பானதாக இருந்ததால் அதைத் தொடர்ந்து 98 தாலுக்காக்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
தொடுதிரைச் சாவடி மூலம் குடிக்களுக்குச் சேவைஇதில் நில உரிமையாளர்கள், தங்களின் உரிமை பற்றிய விபரங்களைப் பார்வையிடலாம், உரிமைப் பதிவு பிரதியையும்கூடப் பெற்றுக்கொள்ளலாம். நில கைடுலைன் மதிப்பு, சப்-ரெஜிஸ்டர் அலுவலகத்தில் செய்யப்படும் சொத்துப் பதிவுக்குப் பொருத்தமானதாக இருக்கும். தொடுதிரையில் பெருவாரியான சர்வே எண்வாரியான டிஸ்பிளேக்கள் பார்க்கக் கிடைக்கும். கொடுக்கப்பட்ட சர்வேக்கான
அமலாக்க நிலைகள்தமிழ் நிலம் மென்பொருள் பின்வரும் நிரந்தரமான, அடிப்படைப் பதிவுகளை நிர்வகித்து வருகிறது. ‘ஏ’ பதிவு, சிட்டா பதிவு, மற்றும் அடங்கிலினுடைய நான்-ஸ்பேசியல் தகவல்கள்.
1. தாலுகாவின் பெயர்
2. கிராமத்தின் பெயர்
3. சர்வே எண்
4. சப்-டிவிஷன் எண்
5. பழைய சர்வே எண்
6. பார்ட் இண்டிகேட்டர்
7. அரசாங்கம்/தனியார்
8. நிலத்தின் வகை
9. பாசன ஆதாரம்
10. வரி விலை
11. மண்ணின் வகை / முதன்மையாக
12. மண்ணின் வகை / இரண்டாவதாக
13. மண் தரம்
14. ஹெக்டேர் ஒன்றுக்கான வரி
15. விரிவாக்கப்பட்ட ஹெக்டேர்
16. விரிவாக்கப்பட்ட ஏக்கர்கள்
17. மொத்த வரி
18. பட்டா எண்
19. குறிப்புகள்
20. புறம்போக்கு வகை எண்
சிட்டா விவரங்கள்
1. தாலுகா கோட்
2. கிராம கோட்
3. பட்டா எண்
4. உரிமையாளர் எண்
5. உறவினர் பெயர்
6. உறவுமுறை கோட்
தமிழ் நிலம் மென்பெருள் கையாளும் சேவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. முழு களப் பட்டா மாற்றல்
2. இணைப் பட்டா மாற்றல்
3. சப்-டிவிஷன்
4. சப் டிவிஷன்களை இணைத்தல்
5. வகைப்பாட்டை மாற்றுதல்
6. அடங்கல்
7. அசைன்மென்ட்
8. உடைமை மாற்றுதல்
9. நிலம் கைப்பற்றுதல்
10. ஆக்ரமிப்பு
11. நில வருவாய்
12. செட்டில்மெண்ட்
கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020
அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம் ப...
தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் அம்மா அழைப்பு மையம்...
அம்மா கைப்பேசி திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக...
அம்மா சிறு வணிகக் கடன் திட்டம் பற்றிய தகவல்கள் இங்...