অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மின்னணு பணப்பரிமாற்ற சேவைகள்

மின்னணு பணப்பரிமாற்ற சேவைகள்

மின்னணு பணப்பரிமாற்றத்தில் அனைவரையும் உள்ளடக்கிக் கொண்டு செயல்படுவது என்பது சமுதாயத்தில் பின் தங்கிய மக்களும் மின்னணு பரிமாற்றத்தை அணுகும் வாய்ப்பு, ஒழுங்கு முறை சார்ந்த நிதிச்சேவைகளைப்பயன்படுத்துவது ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சேவைகள் மின்னணு நிதிச்சேவைகள் (Digital Financial Services –DFS) எனப்படுகின்றன. இவை வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஏற்கத்தக்க செலவிலும் சேவை வழங்குவோர் தொடர்ச்சியாக சேவை வழங்கிட உதவும் விதத்திலும் பொறுப்புடன் வழங்கப்படுகின்றன. எந்த ஒரு மின்னணு பணப்பரிவர்த்தனையாக இருந்தாலும் அவற்றில் மூன்று முக்கியமான கூறுகள் இருக்கின்றன. மின்னணு பரிவர்த்தனைக்கான தளம், சில்லறை முகவர்கள், வாடிக்கையாளர்களும், முகவர்களும் பயன்படுத்துவதற்கான ஒரு கருவி ஆகியவை இவை. இந்தக்கருவி பொதுவாக கைபேசியாகவே இருக்கும். அதைப்பயன்படுத்தியே மின்னணு பணப்பரிமாற்றம் நிகழத்தப்படும்.

மின்னணு வழிமுறைகள், வங்கிகள், நுண்நிதிநிறுவனங்கள், கைபேசி சேவை வழங்குவோர், விற்பனை முனையக்கருவிகள் (POS), சிறு முகவர்களின் பின்னலமைப்பு ஆகியவற்றின் மூலம் அடிப்படை வங்கிச்சேவைகளை பாரம்பரிய வங்கிச் சேவையைக் காட்டிலும் குறைவான செலவில் வங்கியில் சேமிக்காத மக்களுக்கு சிறிது சிறிதாக வழங்கிட முடியும்.

மின்னணு நிதி சேவைகளின் வகைகள்

மின்னணு நிதி சேவைகளின் நான்கு முக்கியமான வகைகள் பற்றி இங்கே விரித்துரைக்கப்படுகிறது.

1. அட்டைகள் - CARDS

2. ஒழுங்குபடுத்தப்படாத சேவை இணைப்புத்தரவுகள் - USSD

3. ஆதார் எண் மூலம் பணப்பரிமாற்றம் - AEPS

4. ஓன்றிணைக்கப்பட்ட பணப்பரிமாற்ற இடைமுகப்பு – UPI

5. மின்னணு பணப்பை – e wallet

அட்டைகள் - CARDS

அட்டைகள் என்பவை என்ன?

வழக்கமாக வங்கிகளால் வழங்கப்படுபவை இவை. பயன்களின் அடிப்படையில் அவை 3 வகைகளாக இருக்கின்றன.

அட்டைகளின் விதங்கள்

  1. முன்கூட்டி பணம் செலுத்தும் அட்டை : வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் இருந்து இவை முன்கூட்டியே நிரப்படுகின்றன. இவற்றை ஒரு குறிப்பிட்ட அளவிலான பரிமாற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். கைபேசி Recharge போல இதனையும் Recharge செய்து கொள்ளலாம். பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது.
  2. பற்றுஅட்டை (Debit card) நீங்கள் கணக்கு வைத்து இருக்கக்கூடிய வங்கியிலிருந்து இந்த அட்டை வழங்கப்படும். உங்கள் வங்கிக்கணக்குடன் இது இணைக்கப்பட்டிருக்கும். வங்கியில் சேமிப்பு, நடப்பு, கூடுதல் கடன் கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு இந்த அட்டை தரப்படுகிறது. இதன் மூலம் செய்யப்படும் எந்தச் செலவும் அதனைப்பபயன்படுத்துவோரின் கணக்கில் இருந்து உடனடியாக கழித்துக்கொள்ளப்படும். இந்த அட்டையை பயன்படுத்துவர் தனது கணக்கில் இருந்து உடனடியாக கழித்துக்கொள்ளப்படும். இந்த அட்டையை பயன்படுத்துபவர் தனது கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். உள்நாட்டில் ஒருவருடைய கணக்கில் இருந்து இன்னொருவர் கணக்கிற்கு பணத்தை மாற்றித் தருவதற்கும் இதனைப்பயன்படுத்தலாம்.
  3. கடன் அட்டைகள் : இவை வங்கிகளாலும், ரிசர்வ் வங்கியாலும், அங்கீகரிக்கப்ட்ட பிற அமைப்புகளாலும் வழங்கப்படுபவை. இவற்றை உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பயன்படுத்தலாம் (பன்னாட்டுப்பயன்பாட்டிற்கு உகந்ததாக அவை வழங்கப்பட்டிருக்கும் பட்சத்தில்). பற்று அட்டைகளைப் போலன்றி கடன் அட்டைகளைப் பயன்படுத்தி தனது கணக்கிலிருக்கும் பணத்தை தாண்டியும் அதிகப் பணத்தை வாடிக்கையாளர் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் ஒவ்வொரு கடன் அட்டைக்கும் கூடுதலாக எவ்வளவு எடுக்கலாம் என்ற ஒரு உச்சவரம்புத்தொகை நிர்ணயிக்கப்பட்டு இருக்கும்.

இப்படி எடுக்கப்படும் கூடுதல் பணத்தை திரும்பச் செலுத்துவதற்கு கால அளவும் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கும் மேல் தாமதமானால், வங்கி நிர்ணயித்துள்ள வட்டித்தொகையுடன் சேர்த்து பணத்தை வங்கிக்கு திரும்பச் செலுத்த வேண்டும்.

பற்றட்டை / கடன் அட்டைகளை பயன்படுத்துவது எப்படி?

  1. தானியங்கி பணம்தரும் எந்திரம் (ATM)த்தின் மூலம் பணத்தை எடுப்பதற்கு அட்டைகளைப் பயன்படுத்துவோர் அவற்றை இயந்திரத்தில் அதற்கென உள்ள திறப்பில் செருக வேண்டும். பிறகு அவர்களுக்கு வங்கியால் தரப்பட்டிருக்கும் 4 இலக்க ரகசிய குறியீட்டு எண்களை (PIN Number) அழுத்தவேண்டும். ஒருநாளைக்கு அதிகபட்சமாக எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பது வங்கியால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.
  2. பற்று அட்டையைப்பயன்படுத்தி ATM கருவிகளில் பணம் எடுப்பது தவிர, காசோலைகளை செலுத்துவது, பணம் செலுத்துவது, குறுகிய காலத்திற்கு பணப்பரிவர்த்தனை விவரங்களைப் பெறுவது ஆகியவற்றையும் வங்கிக்கிளைக்குப் போகாமலேயே செய்து கொள்ளலாம்.
  3. சில்லறை விற்பனை செய்யும் பெரிய கடைகளில் அட்டையை பின்வரும் வகையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
1. பயன்படுத்துபவர் அட்டையை கடையில் உள்ள காசாளரிடம் தருகிறார்
2. வியாபாரி அந்த அட்டையை ஒரு சிறு கருவியில் தேய்க்கிறார்
3. எவ்வளவு பணத்தைற்கு பொருள் வாங்கப்படுள்ளது என்பதை கருவியில் உள்ளீடு செய்கிறார்
4. வாடிக்கையாளர் தனது தனி அடையாள எண்ணை (PIN number) அந்தக்கருவியில் பதிவிடுகிறார்
5. வாடிக்கையாளர் வங்கிக்கணக்குடன் பதிவு செய்திருக்கும் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வருகிறது
6. கையொப்பமிடப்பட்ட ரசீதை கடைக்காரர் வைத்துக் கொள்கிறார்
7. சிறிய POS தேய்ப்புக்கருவியில் இருந்து ரசீது வெளிப்படுகிறது
8. வாங்கிய பொருளுக்கான பணம் வங்கிக் கணக்கில் கழித்துக் கொள்ளப்படுகிறது.

நான் ஏன் இத்தகைய அட்டைகளைப் பயன்படுத்தவேண்டும்?

  • உங்கள் அட்டையை பயன்படுத்தி எங்கிருந்தபடியுமம் கடைகள், ATM கள், நுண் ATM கள், வாலட்டுகள், இணையவழி கொள்முதல்களை செய்துகொள்ள முடியும்.
  • பற்று அட்டை, கடன்அட்டை, இரண்டையுமே ATM கருவியில் பணம் எடுக்க பயன்படுத்திக்கொள்ளலாம். பொருள்கள், சேவைகள் ஆகியவற்றை POS கருவிகள், இணையம் ஆகியவற்றின் மூலம் பெற முடியும்.
  • நமது அனைத்துவகையான பயன்பாட்டுக்கட்டணங்களையும் செலுத்த முடியும்.
  • விமானம், ரயில், பேருந்து பயணங்களுக்கான பயணச்சீட்டுகளைப் பெற முடியும். தங்குமிடங்களை முன்பதிவு செய்து கொள்ளமுடியும். உணவங்களில் பணம் செலுத்த முடியும்.
  • உங்கள் அட்டையை பயன்படுத்திக்கொள்ளும் வசதிகள் உடைய எந்த இடத்திலும் நீங்கள் அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அட்டையை பெறுவது எப்படி?

  • வாடிக்கையாளர் பற்றுஅட்டை / ரூபே அட்டை / கடன்அட்டை ஆகியவற்றைக் கோரி பொதுத்துறை / தனியார் வங்கிகளில் விண்ணப்பம் செய்துகொள்ளலாம்.
  • குடிமக்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளையில் ஒரு விண்ணப்பத்தை கொடுத்து பற்று அட்டையைப் பெறலாம்.
  • குடிமக்கள் தங்களிடம் இப்போது இருக்கும் அட்டையை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக ரூபே அட்டையை பெற்றுக்கொள்ளவும் செய்யலாம்.
  • வங்கிகணக்கு இல்லாதவர்கள் முதலில் கணக்கை ஆரம்பிக்கவேண்டும்.
  • அரசானையின்படி ஜன்தன் கணக்கு ஆரம்பிக்கும் அனைவருக்கும் ரூபே அட்டைகள் வழங்கப்படும்.

USSD

USSD என்பது என்ன?

ஒழுங்குபடுத்தப்படாத இணைப்புச் சேவை தரவுகள் (Unstructural Supplementary Service Data) என்பது USSA என்பதன் விரிவாக்கமாகும். வங்கிச்சேவைகளை நாட்டிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் எடுத்துச்சென்று வழங்கும் ஒரு சேவையாகும் இது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒரே ஒரு குறிப்பிட்ட எண் மூலம் கைப்பேசியைக்கொண்டு வங்கிச் சேவையை அணுகமுடியும். இந்த சேவை தேசிய அளவிலான ஒருங்கிணைப்பட்ட தளத்தின் மூலம் வழஙகப்படுகிறது.

*99# என்ற மிகச்சிறிய குறியீட்டு எண்மூலம் இந்த சேவையைப்பெறலாம். ஒரு வாடிக்கையாளருக்கு ஒருநாளைக்கு ரூ. 5000 வரையிலான பரிமாற்றத்திற்கு இதனைப்பயன்படுத்தி கொள்ளமுடியும்.

உங்களுக்கு தேவைப்படுபவை எவை?

  • வங்கிகணக்கு
  • GSM இணைப்புடன் கூடிய கைபேசி
  • வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கு கைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

எப்படி பயன்படுத்துவது?

  1. உங்கள் வங்கிக்கிளையை அணுகி வங்கிக்கணக்குடன் கைப்பேசி எண்ணை இணைத்திருங்கள் (ATM கருவிகள் மூலமும் செய்து கொள்ள முடியும்)
  2. உங்களுக்கு கைப்பேசி பண அடையாளக்குறீயிடும் (MMID),  கைபேசி ரகசிய குறியீட்டு (MPIN) எண்ணும் தரப்படும்.
  3. கைப்பேசி ரகசிய குறியீட்டு எண் MPIN ணை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

USSD யின் பயன்கள் என்ன?

  • பயன்படுத்த எளிமையானது
  • அனைத்து ஜிஎஸ்எம் கைபேசிகளிலும் இயங்கக்கூடியது
  • ஜிபிஆர்எஸ் இணைப்பு (இணைய தரவு திட்டம்) தேவை இல்லை
  • நகர்வில் இருக்கும் போதும் இயங்கக்கூடியது
  • எஸ்எம்எஸ் வசதியை விட பாதுகாப்பானது

USSD வசதியைப் பயன்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகள்?

  • உங்கள் கைப்பேசியில் இன்னும் எவ்வளவு தொகை (Prepaid Balance) இருக்கிறது என்பதை பற்றி எளிதில் தெரிந்துகொள்ள முடியும். அதைப்போலவே இதுவும் எளிதானது. சாதாரண கைப்பேசியின் மூலமும் கூட பணம் பரிமாற்றங்களை செய்துகொள்ள முடியும்.
  • உங்கள் வங்கிக் கணக்குடன் உங்கள் கைப்பேசி எண்ணை இணையுங்கள்.
  • *99# என்ற எண்ணை டயல் செய்யுங்கள்
  • உங்கள் வங்கியின் பெயரின் முதல் மூன்று எழுத்துக்கள் அல்லது IFSC குறியீட்டு எண்ணை பதிவிடுங்கள்
  • பணப்பரிமாற்றம் MMID “Fund Transfer MMID” என்ற விருப்பத்தை தெரிவு செய்யுங்கள்.
  • பணம் பெற வேண்டியவரின் கைப்பேசி எண்ணையும் MMID குறியீட்டு எண்ணையும் பதிவிடுங்கள்.
  • எவ்வளவு பணம் தரப்படவேண்டும் என்பதையும், உங்களது கைபேசி ரகசிய குறியீட்டு எண்ணையும் உங்கள் வங்கிக்கணக்கின் கடைசி 4 எண்களையும் பதிவு செய்யுங்கள்.
  • படிப்படியான இத்தகையை வழிமுறைகள் மூலம் நீங்கள் பணப்பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.

கிடைக்ககூடிய சேவைகள்

நிதிபரிமாற்ற தவிர்த்த பிற சேவைகள் :

  • கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை கைப்பேசி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
  • குறுகிய கால வரவு செலவு பற்றிய விபரங்களை கைபேசி மூலம் பெறலாம்.
  • கைபேசி வங்கிப் பரிவார்த்தனையை வங்கிக்கிளையில் பதிவு செய்துகொள்ளும் போதே வாடிக்கையாளருக்கு MMID எண் வங்கியால் தரப்படும்.
  • MPIN உருவாக்கும் / மாற்றம் - பயன்படுத்துவோர் M-PIN எண்ணை உருவாக்கிகொள்ளவும், மாற்றிக்கொள்ளவும் செய்யலாம். கடவுச்சொல் (PIN) உருவாக்கிக்கொள்வதைப் போன்றதாகும் இச்செயல். வங்கிப் பரிவர்த்தனைகளை நம்பத்தகுந்ததாக ஆக்க இந்த எண் பயன்படுத்தப்படவேண்டும்.

நிதிசேவைகள்

  • கைப்பேசி எண்ணையும் MMID யையும் பயன்படுத்தி பணம் அனுப்புதல்
  • பணம் பெறுபவரின் IFSC குறியீட்டு எண், வங்கிக்கணக்கு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து பணம் அனுப்புதல்

மேலும் விவரங்களுக்கு அந்தந்த வங்கிகளின் இணையதளங்களை காணலாம்.

ஆதார் எண் மூலம் பணப்பரிமாற்றம் (AEPS - Aadhar Enable Payment System)

AEPS என்பது என்ன?

ஆதார் எண்ணைக்கொண்டு பணம் செலுத்தும் வழிமுறையே AEPS என்பதாகும். வங்கி, வாடிக்கையாளருக்கு அவரது ஆதார் எண்களை அடையாளமாகக் கொண்டு அவரது கணக்கிலிருந்து பணத்தை அனுப்புவதற்கு அதிகாரமளிக்கும் சேவையாகும் இது. அடிப்படையான பணப்பரிமாற்றங்களை இதன் மூலம் செய்து கொள்ளலாம். வங்கி முகவர்கள் மூலம் POS கருவியின் துணைகொண்டு ஒருவங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை மாற்றி அனுப்பவும் முடியும். இந்த வசதியை பயன்படுத்திக்கொள்வதற்கு வாடிக்கையாளர் தனது ஆதார் எண்ணை வங்கிக்கணக்கில் தாமாகவோ அல்லது வங்கி முகவரின் உதவியுடனோ இணைத்திருக்க வேண்டும். இந்தச் சேவையைப்பயன்படுத்த விரும்புவோர் எந்த ஒரு AEPS முனையிலிருந்தும் ரகசிய குறியீட்டு எண்ணோ, கடவுச் சொல்லோ ஏதும் இல்லாமல் ஆதார் எண்ணை மட்டும் கொண்டு எத்தனை பரிமாற்றம் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.

AEPS சேவையை பெற நான் என்ன செய்ய வேண்டும்?

  • வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கை அடையாளம் காணக்கூடிய IIN எண் தேவைப்படும்.
  • ஆதார் எண் வேண்டும்
  • ஆதார் எண்ணுக்காக பதிவு செய்து கொண்டபோது எடுக்கப்பட்ட கை விரல் ரேகைப்பதிவு

நான் ஏன் இதனைப் பயன்படுத்த வேண்டும்?

நீங்கள் இதனைப் பயன்படுத்தி,

  • உங்கள் கணக்கில் பண இருப்பு பற்றி அறியலாம்
  • பணம் எடுக்கலாம்
  • பணம் போடலாம்
  • ஒரு ஆதார் எண்ணிலிருந்து இன்னொரு ஆதார் எண்ணிற்கு பணத்தை பரிமாறிக்கொள்ளலாம்.
  • நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்கலாம்.

AEPS பரிமாற்றத்திற்கான முக்கியமான படிகள் :

  1. ஒரு நுண் ATM அல்லது வங்கி முகவரிடம் செல்லுங்கள்
  2. உங்கள் வங்கியின் பெயரையும் ஆதார் எண்ணையும் கொடுங்கள்
  3. என்ன வகையான பரிமாற்றம் தேவை என்பதை தேர்ந்தெடுங்கள்
  4. உங்கள் கைரேகையை ஸ்கேனரில் பதிவிடுங்கள்
  5. பரிமாற்றம் முடிந்தவுடன் ரசீது வரும்

நான் ஏன் இதனைப் பயன்படுத்த வேண்டும்?

  • பயன்படுத்த எளியது, பாதுகாப்பானது, பாதுகாவல் கொண்ட்து.
  • தனிநபரின் உடல் அடையாளங்கள் / கருவிழி அடையாளம் ஆகியவற்றின் அடிப்படையிலானது என்பதால் எந்த விதமான ஏமாற்று வேலையும் நடைபெற வாய்ப்பில்லை.
  • அரசு தரும் NREGA, சமூக பாதுகாப்பு ஓய்வூதியம், மாற்றுத்திறனாளி முதியோர் ஓய்வூதியம் ஆகியவற்ற ஆதார் எண் அடையாளத்தின் மூலம் பெற முடியும்.
  • வங்கிகளுக்கு இடையேயான பரிமாற்றத்தை பாதுகாப்புடன் செய்து கொள்ள வழி செய்கிறது.
  • வங்கிக் கிளைகளுக்கு நேரில் வர இயலாத நிலையில் தொலைவில் இருப்பவர்களுக்கு வங்கி முகவர்கள் மூலம் சேவை கிடைக்க வழிசெய்கிறது.
  • தற்போதைக்கு பரிமாற்றக்கட்டணங்கள் ஏதும் இல்லை.
  • வங்கிக் கணக்கு எண்ணை நினைவில் வைத்திருக்க தேவையில்லை
  • உடல் அடையாளக்கருவியை வைத்திருப்பவர்கள் வீட்டிலுள்ள கணினியை பயன்படுத்தியும், ஆண்ட்ராய்டு கைபேசி / பலகைக்கணினி மூலமூம், கைரேகையை அடையாளம் காணும் வசதியுடன் கூடிய கைபேசிகள் மூலமும் பண பரிமாற்றங்கள் செய்து கொள்ளலாம்.

ஓன்றிணைக்கப்பட்ட பணப்பரிமாற்ற இடைமுகப்பு (UPI)

UPI என்பது என்ன?

UPI என்பது Unified Payments Interface என அழைக்கப்படுகிறது. பயன்படுத்துவோரின் சீர்மிகு (ஸ்மார்ட்) கைபேசி மூலம் உடனடியாக மின்னணு பணப்பரிமாற்றம் செய்யும் வழிமுறையாகும் இது. IMPS உடனடி பணப்பரிமாற்ற சேவையின் மேம்பட்ட வடிவமாகும். இதனைப் பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கில் இருந்து இன்னொரு வங்கியின் கணக்கில் பணம் செலுத்த முடியும்.

  • IMPS போலவே UPI 24 மணிநேர பணப்பரிமாற்ற சேவையை அளிக்கிறது.
  • பயன்படுத்துவோரை பற்று அட்டை (டெபிட் கார்டு) மூலம் அடையாளம் காண்பதைப் போல கைபேசியின் மூலம் அடையாளம் காண்கிறது.
  • 24 மணி நேரமும் வருடம் முழுவதும் வேலை செய்கிறது.

உங்களுக்கு தேவைப்படுவை:

  • UPI செயலியுடன் கூடிய சீர்மிகு கைபேசி (ஸ்மார்ட் போன்)
  • வங்கிக்கணக்கு

இது எப்படி வேலை செய்கிறது?

UPI எளிய மூன்றடுக்கு வழிமுறைகளைக் கொண்டு இணையத்தின் மூலம் செயலாற்றுகிறது.

பதிவு

  • உங்கள் வங்கியின் UPI செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
  • உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களுடன் பதிவு செய்து கொண்டு உண்மை போல இருக்கத்தக்க (Virtual ID) ஒரு அடையாளத்தை உங்கள் பெயர் அல்லது கைபேசி எண்ணை வைத்து உருவாக்குங்கள்
  • ஒரு முறை இதனை செய்துகொண்டாலே போதுமானது.

இணையவழி கொள்முதல்

  • வாங்க விரும்பும் பொருளை உங்கள் Cartஇல் சேருங்கள்.
  • பணம் செலுத்தும் விருப்ப முறைகளில் UPIயை தேர்ந்தெடுங்கள்
  • உங்கள் Virtual IDயை மட்டும் வணிகர்களிடம் கூறுங்கள்

கைபேசி மூலம் உறுதிப்படுத்துவது

  • உங்கள் கைபேசியின் UPI செயலியில் ஒரு சட்டகம் (Pop-up) தோன்றும். அது உங்களது ஒப்புதலை கேட்கும்.
  • உங்களது ரகசிய குறியீட்டு எண்ணை அதில் பதிவிடுங்கள்
  • பணம் வெற்றிகரமாக பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான சான்று உங்கள் கைப்பேசிக்கு வந்து விடும்.

UPI இன் சிறப்பியல்புகளும் பயன்களும் என்னென்ன?

  • பயன்படுத்துபவரின் பெயர், வங்கி கணக்கு எண், IFSC குறியீடு, வங்கிக்கிளை போன்ற விவரங்களை தர வேண்டிய தேவையில்லை.
  • அட்டைகளை பயன்படுத்த வேண்டியதில்லை
  • இணைய வங்கி செயல்பாட்டில் இருப்பதைப்போல பல அடுக்கு செயல்முறைகள் இதில் இல்லை. இணைய வங்கியில் இருக்கும் ஃபிஷிங் (Phishing) ஆபத்து இல்லை.
  • எவராலும் பயன்படுத்தக்கூடிய மிக எளிய செயல்முறைகள்
  • உடனடியான பாதுகாப்பான அங்கீகாரத்தை தொடங்க முடியும்
  • முற்றிலும் பணப்பரிமாற்றமே இல்லாத மின்னணு பணப்பரிமாற்றப் பாதையை அமைக்கிறது.
  • ஒரு வேண்டுகோளை மட்டும் அனுப்பி பணம் கோரலாம்
  • பயன்பாட்டுக்கட்டணங்கள், பள்ளிக்கட்டணங்கள் ஆகியவற்றை இணையம் மூலம் செலுத்தலாம்.

e-wallet : மின்னணு பணப்பை

மின்னணு பணப்பை என்பது என்ன?

இது ஒருவகை மின்னணு அட்டை. இதன்மூலம் கணினி, சீர்மிகு கைபேசி ஆகியற்றை பயன்படுத்தி இணையத்தின் வழியாக பணப்பரிமாற்றங்கள் செய்யலாம். இதன் பயன்பாடு பற்று அட்டை, கடன் அட்டை போன்றதே ஆகும். மின்னணு பணப்பை தனி நபரின் வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டு பரிமாற்றங்கள் நிகழ்த்தப்பட வேண்டும். காகிதப்பணமில்லாத பரிவர்த்தனைகளை எளிதாக செய்வதுதான் இதன் முதன்மையான நோக்கமாகும்.

பணப்பையின் சிறப்பியல்புகள்

  • வங்கிக்கணக்கில் தேவையான பணத்தை இதில் போட்டுவைத்துக்கொண்டு இணையவழி பரிமாற்றங்களை செய்யலாம்
  • கடவுச்சொல் தரப்பட்டு பாதுக்காக்கப்படுகிறது

இது எப்படி வேலை செய்கிறது?

  • மின்னணு பணப்பையில் இரண்டு உள்ளமைப்புகள் உள்ளன, ஒன்று மென்பொருள் மற்றது தகவல்கள்
  • மென்பொருள் பகுதி உங்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாத்து வைத்திருக்கும். உங்கள் தரவுகளை குறியீடுகளாக மாற்றி சேமித்து வைத்திருக்கும்
  • தகவல்கள் உள்ள பகுதி பயன்படுத்துபவர் தரக்கூடிய பெயர், பொருள் வந்து சேர வேண்டிய முகவரி, பணம் செலுத்தும் வழிமுறை, செலுத்தப்பட வேண்டிய தொகை, கடன் அல்லது பற்று அட்டை விவரங்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கும்.

மின்னணு பணப்பையைப் பயன்படுத்துவது எப்படி?

நுகர்வோருக்கு:

  • உங்கள் கைபேசியில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
  • உள்நுழைந்து தேவைப்படும் விவரங்களை அறியுங்கள். உங்களுக்கு ஒரு கடவுச்சொல் வந்து சேரும்
  • உங்களுடைய பற்று அட்டை / கடன் அட்டை அல்லது இணைய வங்கிச்சேவை மூலம் மின்னணு பணப்பையில் பணத்தை நிரப்புங்கள்.
  • இணைய வழியாக பொருளை வாங்கிய பிறகு உங்களது மின்னணு பணப்பை தானாகவே விவரங்களை பணம் வழங்கல் படிவத்தில் நிரப்பிக்கொள்ளும்.
  • இணையவழியாக பணம் செலுத்தப்பட்ட பிறகு கொள்முதலுக்கான படிவத்தை எந்த ஒரு இணையதளத்திற்கும் சென்று நிரப்ப வேண்டியதில்லை. தேவையான தகவல்கள் தரவு தளத்திலேயே இருக்கும். அது தானாகவே புதுப்பித்துக்கொள்ளவும்படும்.

வணிகர்களுக்கு :

  • வணிகர்கள் இதற்கான செயலியை தங்கள் கருவியில் (எடு.,கைபேசி) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
  • உள்நுழைந்து தேவைப்படும் விவரங்களை தர வேண்டும். இவர்களுக்கு ஒரு கடவுச்சொல் வந்து சேரும்.
  • நீங்கள் ஒரு வணிகன் என்பதை நீங்களாகவே தெரிவித்துக்கொள்ளவும்.
  • இனி பணத்தை பெற் முடியும்.

மின்னணு பணப்பை தேவை எனில் என்ன செய்ய வேண்டும்?

  1. வங்கிக்கணக்கு
  2. சீர்மிகு கைபேசி
  3. 2G/3G/4G இணைப்பு
  4. மின்னணு பணப்பைச்செயலி (இலவசமாக தரவிறக்கம் செய்துக் கொள்ளக்கூடியது)

கட்டாயம் கைக்கொள்ள வேண்டிய பழக்கங்கள்

  • உங்கள் கைபேசி எண்ணை வங்கியில் பதிவுசெய்து கொண்டு ஒவ்வொரு பரிமாற்றத்தின் போதும் குறுஞ்செய்தி வரப்பெறுங்கள்.
  • உங்கள் ரகசிய குறியீட்டு எண்ணை (PIN) யாரிடமும் சொல்லாதீர்கள்.
  • நம்பகமான வணிகர்களுடன் மட்டுமே பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள்
  • ATMஇல் இருக்கும் போது உங்கள் ரகசிய குறியீட்டு எண்ணை யாரும் தெரிந்துகொள்ளும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம்.

ஆதாரம் : NITI Aayog

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate