2000 ஜுன் 1 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டம் 1999 (FEMA) ன் விளைவாக அந்நியச்செலாவணித் துறையின் நோக்கமாகிய அந்நியச் செலாவணியை பாதுகாத்து வைத்தல் என்ற நிலையிலிருந்து, “வெளிநாட்டு வாணிகத்தை முன்னேற்றச் செய்தல், பணவழங்கல் மற்றும் இந்தியாவில் அந்நியச் செலாவணிச் சந்தையை முறையாக மேம்படுத்துதல், மற்றும் நிர்வகித்தல் என்ற நிலைக்கு மாற்றிக்கொண்டது.
அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் அமைப்பை மாற்றுவதற்காக இந்தப் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. பல்வேறு விதமான பரிவர்த்தனை முறைகளை நிர்வகிக்க விதிமுறைகள் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு நிகழ்வுக்குமான அனுமதி என்ற விதி மாறி, ஒளிவுமறையு இல்லா தெள்ளத் தெளிவான ஒழுங்குமுறைகளாக இது விளங்குகிறது.
எல்லா நடப்பு கணக்கு பரிவர்த்தனைகளுக்கும் கட்டுப்பாடு நீக்கப்படுகிறது (கீழ்க்கண்டவைகள் நீங்கலாக).
இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட 8 பரிவர்த்தனைகள், இந்திய அரசின் முன் அனுமதி தேவைப்படும் 11 பரிவர்த்தனைகள் மற்றும் இந்திய அரசால் அளவு குறிக்கப்பட்ட மற்றும் அந்த அளவுக்கும் மேல் அந்நியச் செலாவணியை விடுவிக்க ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவைப்படும் 16 பரிவர்த்தனைகள். எல்லா வட்டார அலுவலகங்களின் துறைகளும் (FED) இந்த பரிவர்த்தனைக்கு தேவைப்படும் அந்நியச் செலாவணியை வழங்க அதிகாரமளிக்கப் பட்டுள்ளது.
மூலதன கணக்கு பரிவர்த்தனைகளுக்கு, ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறைகள் மூலம் பொது அனுமதிகளும் / வெளிநாடுவாழ் இந்தியரால் செய்யப்படும் முதலீடுகளுக்கு தானியங்கு வழிகளும் வழங்கப்படுகிறது.
இந்த சட்டத்தை கருத்திற்கொண்டு, பல்வேறு வாணிக நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி அமைப்புகள் அளிக்கும் ஆலோசனைகள் ஏற்ப ஏற்றுமதி வருவாய்கள் குறித்த நேரத்திற்கு வந்துசேர்வதை (பொருள் அனுப்புதல், பணம் வாங்குதல்) உறுதிசெய்கிறது. தொடர் அடிப்படையில் மறுபார்வையும் செய்கிறது.
இந்தத்துறை அந்நியச் செலாவணி விலை நிர்ணய மேலாண்மைக்காக (exchange rate management) அனுமதிக்கப்பட்ட வாணிகர்களிடமிருந்து தினந்தோறும் அந்நியச் செலாவணி பரிவர்த்தனை சம்பந்தமான புள்ளிவிவரங்களை சேகரிக்கிறது. மேலும் ஏற்றுமதி-இறக்குமதி நிலுவையை (Balance of Payment) மாதாந்திர விரைவு தோராய மதிப்பீடு செய்யவும், காலாண்டு ஏற்றுமதி இறக்குமதி நிலுவை தொகுப்புக்காகவும், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையும் புள்ளிவிவரங்களை சேகரிக்கிறது.
வங்கிகளின் அன்னியச் செலாவணி பரிவர்த்தனையில் ஏற்படும் இடர்வரவு (Risk) நிர்வாகத்திற்காக இந்தத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திருக்கிறது.
இந்தத்துறை அந்நியச் செலாவணியை நிர்வகிக்க உரிமம் பெற்ற வங்கிகள் வெளிநாட்டு பணம் மாற்றல் செய்வோர் இவர்களின் பொறுப்புகளையும் உறுதிசெய்கிறது. மேலும் ஆய்வும் செய்கிறது.
பல்வேறு வாணிக அமைப்புகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட வாணிகர்கள் இவர்களை அங்கத்தினர்களாக கொண்ட “அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டு, நிரந்தர ஆலோசனை குழு” என்ற ஒன்று செயல்படுகிறது. இது ஆண்டுக்கு இரண்டு முறை கூடி நெறிமுறைகள் அமைக்கப் பரிந்துரை செய்கிறது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வசதிகளை மேலும் மேம்படுத்தவும் கடினமான விதிகளை அகற்றவும், நடைமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களை எளிமையாக்கவும் மற்றும் மறுபரிசீலனை செய்யும் செயலிலும் இந்தத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி
கடைசியாக மாற்றப்பட்டது : 6/20/2020
அங்கீகரிக்கப்பட்ட அன்னியச் செலாவனி வணிகர்களுக்கும்...
ஆய்வுத் துறை (வங்கிக்குள்) பற்றிய தகவல்கள் இங்கு வ...
அந்நிய நாட்டவர் மற்றும் அந்நிய சுற்றுலாப் பயணிகள் ...
இண்டர்நெட் இல்லாமலேயே வங்கி சேவைகளை பயன்படுத்தும் ...