ஆய்வுத்துறை, உயர் நிர்வாகத்தின் கண்களாகவும், காதுகளாகவும் செயல்படுகிறது. வங்கிப் பணிகளுக்கான உயரிய பண்புகளோடு சுதந்திரமாக தன் கடமைகளை நிறைவேற்றி வருகிறது. வங்கி செயல்பாட்டின் நோக்கக் கருத்துக்களின் பேரில் வங்கியின் செயல்பாடுகள் சிறப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதிப்படுத்த உயர் நிர்வாகம் அதிகாரமளித்துள்ளது.
ஆய்வுத்துறையும், ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்டபோதே 1935ல் அமைக்கப்பட்டது. இதன் நோக்கங்கள் பின்வருமாறு
வங்கி ஆய்வுத் துறையின் செயல்பாடுகள், முதன்மை பொதுமேலாளரின் நேரடி மேற்பார்வையில் செயல்படுகிறது. இவர் செயலாட்சி இயக்குநர் (ED) ஒருவருக்கு விவரம் அளிக்க வேண்டும் துறையின் செயல்பாடுகளுக்காக, கீழ்கண்ட உட்பிரிவுகள் உள்ளன.
ஆய்வுக் குழுக்கள்
திட்டமிடும் பிரிவு, ஆண்டுக்கான ஆய்வுத்திட்டத்தை வரைந்து அதை அமல்படுத்தும் பொறுப்பை ஏற்கிறது. தற்போதைய வழக்கத்தின்படி வட்டார அலுவலகங்களில் 15-18 மாதங்களுக்கு ஒரு முறையும் மத்திய அலுவல துறைகளில் 24-30 மாதங்களுக்கு ஒரு முறையும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்சமயம் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 24 ஆய்வுகள் நடத்தப்படுகிறது. பொதுவாக மூன்று குழுக்கள் ஒவ்வொன்றும், பொது மேலாளர் ஒருவரை தலைமையாகக் கொண்டு அமைக்கப்படுகிறது. இந்தப்பரிவின் செயல்பாடுகள் கீழ் காணுபவைகளை உள்ளடக்கியது.
1. ஆய்வுத் திட்டங்கள் மற்றும் செயலாக்கம் இவற்றிற்கான ஆண்டு நாட்காட்டியை தயார் செய்தல் – இவற்றிலிருந்து
(i) செயலாக்க இயக்குநர்களுக்கு செயலாக்க திட்டங்களை விவரமாக தெரிவித்தல் மற்றும் மேலாண்மை தணிக்கை அறிக்கை (MAR) செயலாக்க இயக்குநர், துனை ஆளுநர் இவர்களுக்கு அளித்தல்
(ii) தேவைப்படின் மேலாண்மை தணிக்கை அறிக்கையில், செயலாக்க இயக்குனர் / துனை ஆளுநர் செய்யும் பரிந்துரைகளின் பேரில் தொடர் நடவடிக்கை எடுத்தல்
2. ஆய்வுத் திட்டங்களின் அரையாண்டு மறுபார்வை
3. மாதத்திற்கு இரண்டுமுறை கிளை நிர்வாகக் குழு BLMC கூட்டங்கள்
4. துறையின் காலாண்டு நடவடிக்கை அறிக்கையை தயார் செய்தல்
5. ஆய்வுக் குழுக்களால் அளிக்கப்பட்ட சிறப்பு / இரகசிய குறிப்புகளின் பேரில் தொடர் நடவடிக்கை எடுத்தல்
6. ஆய்வு வழிகாட்டு முறைகளை காலத்திக்கேற்றவாறு புதிப்பித்தல்
7. வங்கியின் ஆண்டு அறிக்கைக்கு தேவையான உபகரணங்கள்/ தகவல்களை வழங்குதல்.
8. அணிவரிசையில் அமைக்கப்பட்ட பதிவேடுகளை பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல்
9. மத்திய அலுவலக துறைகள் மற்றும் ஆய்வுக்குழுக்களுக்கும் இணைப்பாக செயல்படுதல்
10. மற்றப் பிரிவுகளுக்கு சம்பந்தமில்லாத இதர நடவடிக்கைகளை கவனித்தல்
பல்வேறு ஆய்வு அறிக்கைகளின் உடன்பாட்டு நிலையை கவனிக்கும் செயலுக்குத் தொடர்செயல் பிரிவு பொறுப்பேற்கிறது.
நடப்பு முறைகளின்படி, ஆய்வு நடந்து முடிந்த 45 நாட்களுக்குள் தணிக்கை துறைகள் மற்றும் அலுவலகங்கள் தங்களது முதல் உடன்பாட்டை அனுப்பவேண்டும். பின் தொடர்ந்து வரும் உடன்பாடுகளை ஒவ்வொரு மாதமும் ஆய்வுத்துறைக்கு அனுப்பப்பட வேண்டும். நிறைவான மற்றும் இறுதியான உடன்பாடுகள் மூன்று மாதங்களுக்கு மிகாமல் செய்துமுடிக்கப்பட வேண்டும். நடப்பிலுள்ள நடைமுறைகளின்படி, முக்கியம் என்று அடையாளமிடப்பட்ட பத்திகளின் பேரில் பத்திவாரியான உடன்பாடுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பிற நடவடிக்கை என்று அடையாளமிடப்பட்ட பத்திகளின் உடன்பாடுகள் துறை தலைவர் / மண்டல இயக்குனருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். எல்லவற்றையும் உள்ளிட்ட உடன்பாடுகள் ஆய்வுத்துறைக்கு தெரிவிக்கப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இந்தப் பத்திகளின் (பாரா) உடன்பாடுகள், தணிக்கையிடப்பட்ட அலுவலகம் / துறை இவற்றின் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மற்றும் தீர்க்கப்பட்டதாயிருக்க வேண்டும். உடன்பாடுகள் பெறப்பட்டவுடன் தொடர் செயல் பிரிவு அதை மதிப்பீடு செய்து தலைமைப் பொது மேலாளரின் இறுதி ஒப்புதலுக்கு வைக்கிறது. உடன்பாடுகள் ஆராயப்பட்ட பின்பு, பின்பற்றப்பட்டது, பின்பற்றப்பட தேவையில்லை அல்லது நிலுவையில் இருப்பவை என்று தரம் பிரிக்கப்படுகிறது.
பின்பற்றப்பட தேவையில்லை என்று பிரிக்கப்பட்ட பத்திகள், பின்பற்றப்பட்டது என்று தரம் பிரிக்கப்பட்டவைகளுடன் சேர்த்து வழக்கமாக அடுத்துவரும் ஆய்வின்போது பரிசீலிக்கப்படும். தேவைப்படும் நடவடிக்கைகள் குறிப்பிட்ட குறைந்த காலத்திற்குள் செய்து முடிக்க முடியாதவையாக இருந்தால், அவைகளும் இதனுடன் சேர்க்கப்பட்டு தகுந்த ஆயலின்போது பரிசீலிக்கப்படும். உடன்பாடுகளை ஆராய்வதற்காக மேலாளர் நேரடியாக பொதுமேலாளரின் கவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். இந்தப் பிரிவில் உள்ளடங்கிய மற்ற நடவடிக்கைகள் :
உயர் மேலாண்மையின் தீர்மானத்திற்கு ஏற்ப, ஆய்வுத்துறையில், ஒரு தணிக்கை கண்காணிப்பு பிரிவு அமைக்கப்பட்டிருக்கிறது. 4 விரைவான தணிக்கையுடன் கூடிய கண்காணிப்பு குழுக்கள் (SNAM) அமைப்பதற்கு, கொள்கை அளவில் அனுமதிக்கப் பட்டிருக்கிறது. மேற்கண்ட அமைப்பின்படி மத்திய அலுவலக ஆய்வுத்துறை, உள்முக தணிக்கை நடவடிக்கைகளின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்கிறது. எல்லா வங்கி அலுவலகங்களின் இணக்கமான செயல்பாட்டை உறுதிசெய்வதற்காக, ஒருங்கிணைந்த தணிக்கை மற்றும் கட்டுப்பாடு சுய மதிப்பீடு தணிக்கை (CSAA) Control Self Assessment Audit இவைகளின் எல்லா நடவடிக்கைகளையும், ஒன்றாக்கவும் மற்றும் ஒத்த தரமுடையதாகவும் செய்வதற்காகவே இந்த மேற்பார்வை பணியை செய்கிறது. இந்த இலக்கை அடைவதற்கு இந்தத்துறை எங்கெல்லாம் அவசியப்படுகிறதோ அங்கெல்லாம் நேரடி ஆய்வுகளையும் மறைமுக கண்காணிப்புகளையும் செயல்படுத்துகிறது. அலுவலகங்களிலிருந்து நியமித்த கால இடையிவெளியில் பெறப்படும் விவர அறிக்கைகளின் மூலம் மறைமுக கண்காணிப்பு மேற்கொள்ளப் படுகிறது. இவைகளை ஆராய்ந்து தகுதியானவையென்று கருதப்படும் விவர அறிக்கைகளின் பேரில் தொடர் செயல் மேற்கொள்ளப்படும்.
வங்கிகளில் ஒருங்கிணைந்த தணிக்கை மற்றும் கட்டுப்பாடு சுயமதிப்பீடு தணிக்கை இவைகளின் நடைமுறை ஏற்பாடுகளை மேற்பார்வை செய்ய, நேரடி ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகிறது. எப்பொழுதெல்லாம் அவசியம் என்று கருதுகிறதோ அப்பொழுது விரைவான தணிக்கையுடன் கூடிய கண்காணிப்பு குழுக்கள் (SNAM) நியமித்த கால இடைவெளியில் அலுவலகங்களில் நேரடி ஆய்வு மேற்கொள்ளும்.
வங்கியில் முக்கிய தகவல் வசதிகளை நடைமுறைப்படுத்துவது குறித்து திட்டமிடுதல் மற்றும் செயலாக்கம் செய்வதே தகவல் ஒழுங்குமுறை தணிக்கைப் பிரிவின் முக்கிய பணியாகும். நேரடி ஆய்வுகள் தவிர, வழிகாட்டு நெறிமுறைகளை தயாரித்தல், தணிக்கைக்கான உபகரணங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை வழங்குதல் போன்ற பல்வேறு முன்னேற்றப் பணிகளையும் செய்வது அவசியமகிறது.
ஆய்வு, தணிக்கை உபகுழு மற்றும் செயலாக்க இயக்குநர் குழு இவற்றின் நியமித்த கால கூட்டங்களை, ஒன்றிணைத்தல் மற்றும் ஏற்பாடு செய்தல் இந்தப்பிரிவின் பொறுப்பாகும். தற்சமயம் இந்தக் கூட்டங்கள் தோராயமாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்தப் பிரிவு, செயலாக்க இயக்குநர் குழு மற்றும் ஆய்வு தணிக்கை உபகுழு இவற்றை கூட்டுவதற்கான செயலாண்மைத் துறை சார்ந்த எல்லாப் பணிகளையும் செயல்படுத்துகிறது. மேற்கண்ட கூட்டங்களுக்கான நினைவுக் குறிப்பேடு தயாரித்தல், கூட்ட நடவடிக்கைகளை பதிவு செய்தல் மற்றும் பதிவு செய்தவைகளில் நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு செயல்களை இப்பிரிவு செயல்படுத்துகிறது.
வருகை, விடுமுறை, பணிப்பதிவேடு, நியமனம், மாற்றல், பயிற்சி, ஒழுங்குமுறை, அனுப்புதல், கணக்குப் புத்தகங்களை பராமரித்தல், உள்ளூர் போக்குவரத்துப்படி, விடுமுறை பயணப்படி சலுகை கோரல்கள் (LFC Claims), செய்தித்தாள், புத்தக மானியம், தொலைபேசி போன்ற நிர்வாக விஷயங்களை கவனித்துக்கொள்கிறது. அலுவலக மொழிக் கொள்கையை இந்தத் துறையில் அமல்படுத்துவதை ஆட்சிமொழிப் பிரிவு கவனிக்கிறது.
பொதுமேலாளர் ஒருவரை தலைமையாகக் கொண்ட, மூன்று ஆய்வுக் குழுக்கள் ஆய்வுகளை மேற்கொள்ளுகிறது. தணிக்கையின் தன்மைக்கேற்ப குழுவின் அமைப்பு தீர்மானிக்கப்படும். ஒவ்வொரு குழுவும் பொதுவாக 2 உதவிப் பொது மேலாளர்களையும் 3 முதல் 5 மேலாளர்களையும் கொண்டதாக இருக்கும். குழுவின் அங்கத்தினர்கள், பணிக்கு வருவதை பொருத்தும் குழுவின் தகுதியை பொருத்தும் குழுக்களுக்கிடையே மாற்றம் செய்யப்படுவர்.
ஆய்வு மற்றும் தணிக்கை உபகுழு இவற்றின் உடன்பாடுகளை, குறித்த கால இடைவெளியில் மறுபார்வை செய்வதற்காக, மத்தியக் குழுவின், சிறுகுழு, 1992 ஜூன் 24ல் நடந்த இதன் கூட்டத்தில், ஆய்வு மற்றும் தணிக்கை உபகுழு ஒன்றை அமைக்க பரிந்துரை செய்தது. மேலும் உள்முக தணிக்கை மற்றும் ஆய்வுப் பயிற்சிகளின் திறனை மேம்படுத்தவும், செயல்பாட்டை சிறப்பானதாக்கவும், முக்கியத்துவம் அளிக்கும் நோக்கிலும் இக்குழு செயல்படுகிறது.
ஆய்வு மற்றும் தணிக்கை உபகுழுவில், கவர்னரால் நியமிக்கப்பட்ட மத்தியக் குழுவின் நான்கு இயக்குநர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். துணை ஆளுநர், ஆய்வுப் பொறுப்பை கவனிக்கும் செயல் இயக்குநர், நிர்வாகப் பொறுப்பை கவனிக்கும் செயல் இயக்குநர் ஆகியோர் இதன் உறுப்பினர்களாவர். ஆய்வுத்துறையின் முதன்மை பொது மேலாளர் இந்த உபகுழுவின் உறுப்புச் செயலாளராக செயல்படுகிறார். மற்ற துணை ஆளுநர்களும் / செயல் இயக்குனர்களும் ஆய்வு தணிக்கை உபகுழுவின் கூட்டங்களுக்கு அழைக்கப் படுவர். இந்த உபகுழு வருடத்திற்கு 5 முதல் 6 முறை கூடும்.
ஆய்வறிக்கையில் தீர்வு காணப்பெறாதவை என்ற பத்திகளும் (பாராக்கள்) செயல் இயக்குநர் குழுவால் நெருக்கடியான பகுதி என்று அடையாளம் காணப்பட்டவைகளும், கலந்தாய்வு மற்றும் வழிகாட்டலுக்காக ஆய்வு தணிக்கை உபகுழுவின் முன் வைக்கப்படும். மேலும் மத்திய அலுவலக கட்டுப்பாட்டுத் துறையால் (அதாவது அரசு மற்றும் வங்கிக் கணக்குத் துறை) அபிப்பிராயம் கூறப்பட்டதும் வங்கியின் ஆண்டுக் கணக்கின் பேரில், சட்டப்பூர்வ தணிக்கையாளரால் அளிக்கப் பட்டதுமான அறிக்கையை ஆய்வு தணிக்கை உபகுழு (IASC) ஆராயும். மேலும் வெளிநாடுகளில் முதலீடு மற்றும் செயலாக்கத்துறை (DEIO) யின் வாணிக பரிவர்த்தனை அறை செயல்பாடுகளின் பேரில் வெளிமுக தணிக்கையாளரால் அளிக்கப்படும் அறிக்கையும் ஆராயும்.
ஆய்வு மற்றும் தணிக்கையை உபகுழு எல்லா நோக்கிலும் பரிசீலனை செய்கிறது. இந்த அமைப்பை முன்னேற்றமடையச் செய்ய தேவையான வழிகாட்டுதலையும் வழங்குகிறது.
எல்லா ஆய்வு அறிக்கைகளும் முதலில் செயலாக்க இயக்குநர்களின் குழுவால் பரிசீலனை செய்யப்படும். ஆய்வு அறிக்கைகளின் உடன்பாட்டு நிலையை, ஆய்வு கணக்குப் பரிசோதனை உபகுழுவிடம் ஆராய்வதற்காக வைக்குமுன், செயலாக்க இயக்குநர்களின் குழு தொடர்புடைய மண்டல இயக்குநர்/துறைத் தலைகளின் முன்னிலையில் பரிசீலனை / கலந்து ஆலோசனை செய்யும்.
இதன்பின், வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தும் மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் முக்கிய ஒழுங்கீனங்கள், மீறப்பட்ட விதிமுறைகள், தீர்மானிக்கப்பட்ட விதிமுறைகளை நடைமுறைபடுத்தாமை மற்ற நெருக்கடியான பகுதிகள் என்று செயலாக்க இயக்குநர்களின் குழுவால் அடையாளம் காணப்பட்டவைகள் ஆய்வுக் தணிக்கை குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.
உள்முக ஆய்வின் செயல்களை மிக்கப் பயனுள்ளதாக உயர்த்தும் நோக்கில், குறிப்பிட்ட நோக்கங்களுடன் பல்வேறு வகையான ஆய்வுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தற்சமயம் கீழ்காணும் வகைகளில், ஆய்வுத் துறை மூலம் ஆய்வுகள் மேற்கொள்ள / ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வு முறையில் ஆய்வுக்குழுக்கள், ஏற்கனவே உள்ள ஒழுங்குமுறைகளின் நம்பகத்தன்மை, தகுதி இவைகளை கூர்ந்து ஆராய்ந்து, மதிப்பீடு செய்து விவரிக்கிறது. சட்டங்கள், ஒழுங்குமுறைகள், உள்முக கொள்கைகள், வழிமுறைகள், உன்னிப்பாக பின் பற்றப்படுவதை தொடர் செயலாக உறுதிசெய்கிறது. தீர்மானிக்கப்பட்ட வழிமுறைகள் மற்றும் மத்திய அலுவலக நெறிமுறைகளின்படி இப்பணிகள் மேற்கொள்ளப் படுகிறது. ஒழுங்கு முறை ஆய்வு நடத்துவதோடு அல்லாமல் ஆய்வுக்குழு மேலாண்மை தணிக்கை ஆய்வுகளையும் நடத்துகிறது. இதன்மூலம் வங்கியின் இலக்குகள் மிகப் பயனுள்ளதாகவும், அதிகாரப் பகிர்வு, துறைகள் / அலுவலகங்களில் வாடிக்கையாளர் சேவை, மேலாண்மைத் திறன் போன்றவற்றை சீர்தூக்கிப் பார்க்கிறது.
கீழ்க் காணுபவற்றை சரிபார்ப்பதே தகவல் ஒழுங்குமுறை தணிக்கையின் நோக்கம்.
தகவல் ஒழுங்குமுறை தணிக்கையின் நோக்கங்கள் பின்வருமாறு
பணிகளை மறு ஒழுங்குபடுத்துதல் / பணிகளை ஒன்றாக்குதல் – அமல்படுத்த பரிந்துரை செய்யும் குழு, இவற்றிற்கிடையில் மண்டல / மத்திய தணிக்கை பிரிவுகள் (RACs/CACs) மூடப்பட்டு, இவற்றின் பணிகள் ஆய்வு / கட்டுப்பாடு சுய மதிப்பு தணிக்கை / ஒருங்கிணைந்த தணிக்கை பிரிவுகளால் கவனிக்கப்படுகிறது. அதன் விளைவாக மண்டல தணிக்கை பிரிவு / மத்திய தணிக்கைப் பிரிவு ஆகியன 2004 ஜூலை 1 முதல் மூடப்பட்டு இவற்றின் பணிகள், மூன்றாகப் பிரிக்கப்பட்டது, அவையாவன
‘சர்மா செயற்குழு’ பரிந்துரையின் விளைவாக 1999 ஜூலை முதல் வங்கிகளில் கட்டுப்பாடு சுயமதிப்பு தணிக்கை (CSAA) அறிமுகப் படுத்தப்பட்டது. பல்வேறு துறைகள் ஒழுங்கான தற்பரிசோதனை மற்றும் பலவீனங்களை மதிப்பீடு செய்வதற்கு அதிகாரமளிப்பதே இதன் (CSAA) நோக்கமாகும். அதனால் சரியான நேரத்தில் மறுபரிசீலனை செய்யவும், திருத்தமான நடவடிக்கைகள் அறிமுகப் படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இதன் நோக்கமானது, குறுகிய கால இடைவெளிகளில் உள்முக கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்வதை எளிதாக்கவும் ஒழுங்கான ஆய்வின் முயற்சிகளையும் மற்றும் தணிக்கையின் அமைப்பையும் மேலும் வலுவூட்டுவதாகும். மண்டல / மத்திய தணிக்கை பிரிவுகள் (RACs/CACs) 2004 ஜூலை 1 முதல் மூடப்பட்ட பிறகு, கட்டுப்பாடு சுயமதிப்பு தணிக்கையின் நோக்கமும், பொறுப்புகளும், விசாலமாகப் பெரிதாக்கப்பட்டது.
வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிப்பிரிவுகள் / துறைகளுக்கு சர்வதேச தர அமைப்பின் 9001-2000 நற்சான்றுகளை பெற வங்கி தீர்மானித்திருக்கிறது. அதாவது பண நிர்வாகம், பொதுக்கடன் அலுவலகம், பொதுக் கணக்குத் துறை, வைப்புக் கணக்குத் துறை மற்றும் நிர்வாகம் மற்றும் ஊழியர் மேலாண்மை துறை, மனிதவள மேம்பாட்டு துறை ஆகியன. சர்வதேச தர அமைப்பு திட்டப் பணிகளை இணைக்கும் செயல் ஆய்வுத் துறையிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. இது சம்பந்தமான பணிகளை ஒருங்கிணைக்க, ஒருங்கிணைந்த குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பின்னர் பிரிட்டீஷ் தர நற்சான்று BS-7799 (தகவல் பாதுகாப்பு சார்ந்த) பெறவும் தீர்மானிக்கப்பட்டது. ஆகையால் நற்சான்று சம்பந்தமாக தேவையான நடவடிக்கைகளும் அந்த தரத்தின் கீழ் தொடங்கப்பட்டது. ஆரம்பமாக கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் மண்டல அலுவலகங்களிலும் பணம் வழங்கல் மற்றும் வங்கியியல் துறைகளிலும் மத்திய அலுவலக துறைகளான பணநிர்வாகத்துறை (DM) மற்றும் அரசு வங்கிக் கணக்குத் துறைக்கும் (DGBA), சர்வதேச தரசான்று 9001-2000 ஐ பெறவும், வெளிநாட்டு முதலீடு இயக்கத்துறை (DEIO) மற்றும் உள்முக கடன் நிர்வாகத்துறை (IDMD) இவற்றிற்கு பிரிட்டீஷ் தரச்சான்று 7799 பெறவும் தீர்மானிக்கப்பட்டது.
ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி
கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020
இண்டர்நெட் இல்லாமலேயே வங்கி சேவைகளை பயன்படுத்தும் ...
ஜன்தன் திட்டத்தின் வளர்ச்சி மற்றும் நன்மைகள் குறித...
அந்நிய நாட்டவர் மற்றும் அந்நிய சுற்றுலாப் பயணிகள் ...
அங்கீகரிக்கப்பட்ட அன்னியச் செலாவனி வணிகர்களுக்கும்...