வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949, ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934 மற்றும் ஏனைய சட்டங்கள், வங்கியியல் செயல்முறை கொள்கைகள் ஆகியவற்றின்கீழ், இத் துறைக்கு வணிக வங்கிகளை ஒழுங்கீடு செய்யும் பொறுப்பு தரப்பட்டது. வங்கிகள் விதிகளின்படி பணம், சட்டபூர்வ தயார்நிலை ஒதுக்கீடுகள், தலைமைசெயல் அலுவலரை நியமித்தல் மற்றும் சில செயலாக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களும் இதில் அடங்கும்.
இத்துறை செம்மையான போட்டியுள்ள வங்கி முறைகளை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் உழைக்கிறது. இதற்காக போதுமான முதலீடு, வருவாயை கண்டுணர்தல், சொத்துக்களை இனம்பிரித்தல், கடன் மற்றும் இதர இழப்புகளுக்கு தொகை ஒதுக்குதல், முதலீட்டை மதிப்பீடு செய்தல், கணக்கியல்/வெளியே தெரிவித்தல் குறித்த நியமங்கள், சொத்து-பொறுப்பு மேலாண்மை, இடர் வரவு மேலாண்மை முறைகள் ஆகிய தொடர்பான விவேக ஒழுங்கீட்டு முறைகளை கொணர்கிறது. மற்ற முக்கிய பணிகளில் புது வங்கிகளுக்கு அனுமதி அளித்தல், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வங்கிகளின் விரிவாக்கம், துணை நிறுவனங்கள் அமைக்க மற்றும் புது நடவடிக்கைகள் மேற்கொள்ள வணிக வங்கிகளுக்கு அனுமதி அளித்தல், நலிந்த வங்கிகளை சீராக்க தொடர் நடவடிக்கை ஆகியவையும் அடங்கும்.
இத்துறை பின்வருவனவற்றை கவனிக்கிறது.
1. ரிசர்வ் வங்கியில் கணினிமயமாக்கல்
2. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பயன்பற்ற திட்டங்களை வடிவமைத்தல், வளர்த்தல்
3. வங்கிகளின் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்காணித்தல்
ரிசர்வ் வங்கியின் ஆண்டுக் கணக்கில் விளைவு ஏற்படுத்தும் வங்கித்துறை (வைப்பு கணக்குகள் துறை, பொது கணக்கு துறை, பொதுக்கடன் அலுவலகம், மத்திய கணக்குப்பிரிவு) மற்றும் பணம் வழங்கல்துறை (பணக் கருவூலங்கள் நிர்வாகம் மற்றும் கணக்குகள்) எல்லா நடவடிக்கைகளையும் கணிணி மயமாக்க DIT ஒருமுனைப்பட்டு இயங்கி வருகிறது.
தகவல் தொழில் நுட்பத்துறை
இத்துறைகள் வாடிக்கையாளர் சேவைகளையும் அளிக்கின்றன. ஆகையால் இந்த துறைகளை கணிணி மயமாக்கல் என்பது சிறந்த உள்ளக வேலைகள் (Housekeeping) மற்றும் திறனுள்ள வாடிக்கையாளர் சேவைகளையும் சிறப்புறச் செய்யும் நோக்குடன் உள்ளது. இத்துறை மேற்கொண்ட கடமைகள் வன்பொருள் வாங்குதல், மென்பொருள் தயாரித்தல், அவைகளின் பரிசோதனை மற்றும் அவைகளின் தரத்தினை உயர்த்துதல் என்பன ஆகும். இக்கடமைகள் கிட்டத்தட்ட முழுஅளவு நிறைவேற்றபட்டாலும் தரம் உயர்த்தும் நடைமுறைகள் இன்னும் செயல்படுத்தவிருக்கிறது. சிறப்புத்துறைகளுக்கு அமைப்பின் தேவை குறித்த திட்டவிவரங்கள் (SRS) தயாரித்தல், புதுச் செயல் திட்டம் அளிப்பதை வேண்டுதல் (RFP), வெற்றிகரமாக திட்டங்களை அமல்படுத்த தேவையான மென்பொருள் தயாரித்தல் அல்லது வெளியிலிருந்து பெறுதல் ஆகியவற்றில் உதவுகிறது.
செயலமைப்பை திறன்மிக்கதாக நேர்வழியில் உதவ ஏற்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்கள் கீழ்கண்டவையாகும்:
ஏற்கனவே ஏற்படுத்திய திட்டங்கள்
செயலாக்கத்தில் உள்ள திட்டங்கள்
ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி
கடைசியாக மாற்றப்பட்டது : 6/20/2020
ஜன்தன் திட்டத்தின் வளர்ச்சி மற்றும் நன்மைகள் குறித...
அந்நியச் செலாவணித்துறை பற்றி இங்கு விவரிக்கப்பட்டு...
ஆய்வுத் துறை (வங்கிக்குள்) பற்றிய தகவல்கள் இங்கு வ...
அங்கீகரிக்கப்பட்ட அன்னியச் செலாவனி வணிகர்களுக்கும்...