অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

வங்கி மேற்பார்வை துறை

வங்கி மேற்பார்வை துறை

வங்கியியல் ஓழுங்குமுறை சட்டம் 1949 மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934ல் வழங்கப்பட்டுள்ள பல்வேறு வழிவகைகளை பயன்படுத்தி இந்திய வங்கிகளின் ஒழுங்குமுறையை மேற்பார்வை செய்யும் பொறுப்பு இந்திய ரிசர்வ வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. வணிக வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களை மேற்பார்வை செய்யும் இந்தப் பொறுப்புகள் வங்கியில் மேற்பார்வை துறையின் மூலம் நிறைவேற்றப்படுகிறது. இத்துறை இதனுடைய 16 மண்டல அலுவலகங்களின் மூலம் 92 வணிக வங்கிகளையும் 9 குறிப்பிட்ட நிதி நிறுவனங்களையும் மேற்பார்வை செய்கிறது.

முக்கிய செயல்பாடுகள்

வங்கியில் மேற்பார்வை துறை, தற்சமயம், வணிக வங்கிகள் மற்றும் குறிப்பிட்ட நிதிநிறுவனங்களை மேற்பார்வை செய்யும் பணிகளை கீழ்க்காணும் வகையில் செயல்படுத்துகிறது.

1. வங்கிகளில் பட்டியலிடப்பட்ட மற்றும் சிறப்பு நேரடி ஆய்வுகளை மறைமுக கடும்கண்காணிப்பு, ஆய்வுக்குப்பின் உடன்பாடுகளை தொடர் செயலாக செய்தல் போன்றவற்றிற்கு உத்தரவாதம் கொடுக்கிறது.

2.  நிதியியல் மேற்பார்வை மன்றக்குழுவின் [BFS] செயலகமாக செயல்படுதல்.

3. சட்டப்பூர்வ கணக்குப் பரிசோதகர்கள் மற்றும் சிறப்புக்கணக்குப் பரிசோதகர்களை நியமிப்பதற்கான அடிப்படை தகுதிகளை தீர்மானித்தல், மேலும் தணிக்கை செயலாக்கத்தை மதிப்பீடு செய்தல் மற்றும் தெரிவிக்க வேண்டிய தரம் இவற்றை தீர்மானித்தல்.

4. நிதியியல் துறையின் மோசடிகள் தொடர்பான நடவடிக்கைகளையும், பொதுமக்கள், வங்கிகள், அரசு, இவர்களிடமிருந்து வங்கிகள் மற்றும் நிதியியல் நிறுவனங்களின் பேரில் பெறப்படும் புகார்களையும் கவனிக்கிறது.

5. ஒழுங்குமுறைகளை அமல்படுத்தும் போது, மேற்பார்வைக்குரிய தலையீடுகளை கீழ்க்காணும் பணிகளில் கையாளுதல் – அவையானவை – நிர்வாக மற்றும் பிற நபர்களை நீக்குவதற்கு பரிந்துறை செய்தல், வாணிகத்தை தற்காலிகமாக நிறுத்துதல், இணைத்தல், பெரிய நிறுவனத்துடன் இணைத்தல் / மூடிவிடுதல், வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குதல் மற்றும் அபராதங்களை அமல்படுத்துதல்.

அங்கீகரிக்கப்பட்ட வாணிகர்களை பற்றிய ஆய்வு, அந்நியச் செலாவணி துறையில் நடத்தப்பட்டது. இந்தப்பணி 2004 முதல் வங்கியில் மேற்பார்வை துறைக்கு மாற்றப்பட்டது.

மேற்பார்வை நடைமுறைகள்

நிதியியல் மேற்பார்வைக்காக, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரை தலைவராகவும், ஒரு துணை ஆளுநரை உபதலைவராகவும், மற்ற துணை ஆளுநர்கள் மற்றும் ரிசர்வ் வங்கி மத்திய குழுவின் நான்கு இயக்குனர்களை அங்கத்தினர்களாகவும் கொண்ட உயர் அதிகார மன்றக்குழு ஒன்று 1994 நவம்பரில் ஏற்படுத்தப்பட்டது. வங்கிக் குழுமங்கள், (Companies) நிதிநிறுவனங்கள், வங்கியல்லாத நிதி குழுமங்கள் இவற்றை மேற்பார்வை ஆய்வும் செய்வதற்கான அதிகாரத்தை பயன்படுத்தும் உரிமை இதற்கு அளிக்கப்பட்டது.

தற்சமயம், நிதியியல் மேற்பார்வை மன்றக்குழு [BFS] வங்கிகளை மேற்பார்வை செய்வதோடு மட்டுமல்லாமல் குறிப்பிட்ட, முன்னேற்ற நிதிநிறுவனங்கள் [DFIs], வங்கியல்லாத நிதிகுழுமங்கள் [NBFCs], முதன்மை வணிகர்கள் [PDs] மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் [UCBs] ஆகியவற்றையும் மேற்பார்வை செய்கிறது.

மேற்பார்வையின் திறன்

வங்கியியல் மேற்பார்வைத் துறை, மேற்பார்வைக்குரிய திறனை வடிவமைத்து, அதோடுகூட நேரடி ஆய்வின் முக்கியத்துவத்தை தக்கவைத்துக் கொள்கிறது. அது வங்கியியல் மேற்பார்வையின் முக்கிய கொள்கைத்திட்டமாக இருக்கிறது. மேலும் மற்ற மூன்று பகுதிகளையும் முக்கியப்படுத்துகிறது.

  • விவரத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தியதின் மூலம் மறைமுக கண்காணிப்பு செய்தல்.
  • உள்முக கட்டுப்பாடு ஒழுங்குமுறைகளை வங்கிகளில் பலப் படுத்துதல்.
  • மற்றும் வங்கியியல் மேற்பார்வையில் வெளிமுக கணக்குப் பரிசோதகர்களின் பயன்பாட்டை உயர்த்துதல்.

நடப்பு முக்கியத்துவம்

1.  சட்டப்பூர்வ கட்டளைகளான, கடன் தீர்க்கும் திறன், பணத்தை தயாராக வைத்தல் மற்றும் வங்கிகளின் செயல்பாட்டை நலமுடன் காத்தல் ஆகிய இவைகளை ஆண்டு நிதியில் நேரடி ஆய்வு ஒழுங்குமுறை முக்கியப்படுத்துகிறது. இவைகள் சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாதிரி [Camel Model] [போதிய மூலதனம், சொத்துக்களின் தரம், மேலாண்மை, வருவாய்கள், பணமாக வைத்தல்], ஆகியன CAMELS [ஒழுங்குமுறைகள் மற்றும் கட்டுப்பாடு] என இந்திய வங்கி அமைப்புகளின் தேவைகளுக்கு பொருந்துமாறு மாற்றப்பட்டது.

2.  CAMELS [ அயல்நாட்டு வங்கிகளுக்கு CALCS ] இன் அடிப்படையில் மேற்பார்வை மதிப்பீடுகள், தரம் சார்ந்த மற்றும் அளவு சார்ந்த கூறுகளை இணைத்து, வங்கிகளின் தனிப்பட்ட செயல்பாடுகளை மொத்தமாக தொகுக்கவும், மேலும் வங்கி அமைப்புகளின் ஒட்டு மொத்த பலத்தையும், நிறைநலத்தன்மையையும் மதிப்பிடுவதுமாகும்.

3.  1995ல் மறைமுக மற்றும் கடும்கண்காணிப்பு [OSMOS] அமைப்பு அமைக்கப்பட்டது. இரண்டு நேரடி ஆய்வுகளுக்கிடையே, வங்கிகளின் நிதிநிலையை பகுப்பாய்வு செய்வதே இதன் முதன்மை நோக்கமாகும். வங்கிகளால் பெறப்படும் விபர அறிக்கைகள் விரிவான தகவல் பகுதிகளை கொண்டதாகும். அதாவது சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் இருப்பு நிலை ஏட்டின் இடம் பெறாத திறந்த நிலை எளிதில் பிரச்சனைக்குள்ளாகும் பகுதிகளின் திறந்த நிலை, வட்டி வீதம் மற்றும் பணத்தை தயாராக வைக்க முடியாத இடர்கள் [உள்நாட்டு மற்றும் அயல் நாட்டு நாணயங்கள்], சார்பு வங்கிகளின் செயல்படுத்துதல் போன்றவை. இவை ஒழுங்குமுறைகள் மற்றும் பணவியல் செயல்முறை கொள்கைகளின் ஒழுங்குகளை நேர்த்தியானதாக செய்ய செயல்முறை திட்டம் வகுப்போர்க்கு உதவுகிறது. மேலும் இதன் மூலம் வளர்ச்சி மற்றும் நிதியியல் திடநிலை இவை இரண்டிற்கும் இடையில் தரமான சமநிலை இலக்கை அடையவும் உதவுகிறது.

4.  பேரளவு விவேக சுட்டிக்காட்டுதல்கள் [MPIS] மார்ச் 2000 முதல் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நிதியியல் ஸ்திரத்தன்மையை மேற்பார்வையிடும் பணியில் சிறப்பான சர்வதேச நடைமுறைகளை ஏற்று அமல்படுத்திடும் இந்திய ரிசர்வ் வங்கியின் முனைப்பான முயற்சியின் அம்சமாக இந்த சுட்டிக்காட்டுதல்கள் தொகுக்கப்பட்டன. தனிப்பட்ட நிதியியல் நிறுவனங்களின் நலன் சார்ந்த மொத்தமான நுண்ணிய விவேக சுட்டிக்காட்டுதல்கள் [AMPIS] மற்றும் நிதியில் ஒழுங்குமுறையின் பழுதற்றநிலை சம்பந்தமான பேரளவு பொருளாதார சுட்டிக்காட்டுதல்கள் [MEIS] இவை இரண்டும் உள்ளடங்கியதே பேரளவு விவேக சுட்டிக்காட்டுதல்கள் [MPIS ].

5.  ஆய்வில் இடர்வரவை அடிப்படையில் கொண்ட மேற்பார்வை அணுகுமுறை, மேற்பார்வை ஆதாரங்களை ஒதுக்கீடு செய்யவும் மற்றும் ஒவ்வொரு நிறுவனத்தின் இடர்வரவின் தோற்றத்தின்படி, மேற்பார்வைக்குரிய கவனத்தை முக்கியப்படுத்துவதின் மூலம் வங்கிகளை கண்காணிக்க மேற்கண்ட அணுகுமுறை உதவுகிறது. இந்த நடைமுறையில், இடர் வரவு மேலாண்மை ஒழுங்குமுறைகளின் பொருத்தம் அதாவது தொடர் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவை சம்பந்தப்பட்டிருக்கிறது. மேலும் மேற்பார்வை செய்த நிறுவனத்தின் சூழலை கட்டுப்படுத்துதல், அதாவது அதன் வியாபாரத்திறன் மற்றும் படு நிலை இவற்றை அதன் அபாயமிக்க தன்மையை மதிப்பிடும் நோக்கில் செய்ய வேண்டும்.

6.  காலந்தவறாது திருத்தும் நடவடிக்கை ஒழுங்குமுறை [PLA] முன் தீர்மானிக்கப்பட்ட விதி அடிப்படையிலான, சரியான நேரத்தில் தலையிடும் விதத்தில் அமைக்கப்பட்ட அமைப்பு - ஏற்கனவே இருக்கும் மேற்பார்வைக்குரிய கட்டமைப்பு இவற்றை சரியான இடத்தில் தீவிரமாக்குதல். காலந்தவறாது திருத்தும் நடவடிக்கையின் கீழ், நிச்சயமான அமைப்பு நடவடிக்கை இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் துவங்கப்பட்டது. வங்கிகளைக் குறித்து, அவைகள் நிச்சயமாக குறித்த மூன்று தனித்தன்மையின் வரையறைகளை விரைவில் தாக்கும். அவையாவன: இடர்வரவு மதிப்பிடப்பட்ட சொத்துக்கள் விகிதத்துக்கு மூலதனநிதி [CRAR], நிகர செயல்படா சொத்துக்கள் [NPAS ] மற்றும் சொத்துக்களில் மீள்வரவு [ROA ].

7.  வங்கித்துறையின் மோசடிகளை தடுப்பதற்காகவும், மோசடிக்கு சாதகமான மிகமுக்கிய பகுதிகள் மற்றும் மோசடிகளை தடுக்கும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் வங்கிகள் அவ்வப்போது அறிவுறுத்தப்படுகின்றன. 2004 ஜுன் மாதத்தில் மோசடி எச்சரிக்கை பிரிவு இத்துறையில் கீழ்க்கண்ட பணிகளுக்காக துவங்கப்பட்டது. [i] வங்கித் துறையில் ஒழுங்குமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்தல் [ii] வெளிப்படும் மோசடிகளின் போக்கினை தெளிவாக கண்டுணர்ந்து அவைகளை மிண்ணணு ஊடகங்கள் மூலம் சுற்றறிக்கையாக வங்கிகளுக்கு தெரியப்படுத்துதல் [iii] நமது தேவைக்கேற்ப, நமது நடைமுறைகளை சர்வ தேச சிறந்த நடைமுறைகளோடு ஒத்திருக்க செய்தல் [iv] மோசடிகள் தடுப்பு மற்றும் புலன்விசாரணை தொடர்புடைய, மத்திய விழிப்புணர்வு ஆணையம் [CVC] மத்திய புலனாய்வுத்துறை போன்ற பல்வேறு வெளிமுக முகமைகள் இவற்றுடன் இணைந்து செயல்பட இணைப்பு முகமையாக செயல்படுதல் [v] நிதித்துறையில் நடக்கும் மோசடிக்குறித்த மத்திய செய்தி களஞ்சியமாக செயல்படுதல் மற்றும் மோசடிகளை தடுக்கும் சிந்தனைக் களமாகவும் செயல்படுதல்.

8.  இடர்வரவு மற்றும் விவேக ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படுதலை தொகுப்பு முறையில் மதிப்பிட ஒன்றுபட்ட கணக்குகள் மற்றும் மேற்பார்வை பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் 2003 மார்ச் 31ம் முடிந்த வருடத்திலிருந்து பின்பற்றப்பட வெளியிடப்பட்டது. இது குறித்த ஒன்றுபட்ட விவேக அறிக்கைகளை [CPR] தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டுமென வங்கிகள் அறிவுறுத்தப்பட்டன. இந்த அறிக்கைகள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் ரிசர்வ் வங்கியினால் பரிசீலனை செய்யப்படுகிறது.

9.  இந்திய ரிசர்வ் வங்கி [RBI ] இந்திய பத்திரப் பங்கு பரிவர்த்தனை குழு [SEBI], இந்திய காப்பீடுகள் ஒழுங்கீடு மற்றும் வளர்ச்சிக்கான ஆணையம் [IRDA] போன்ற நிதியியல் ஒழுங்கு படுத்தும் அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒருவரை அங்கித்தினராக கொண்ட பணிக்குழு மிகப்பெரிய நிதி நிறுவனங்கள் பற்றி ஆராய அமைக்கப்பட்டது. மிகப்பெரிய நிதி நிறுவனங்களை அடையாளம் காண சில தகுதிகளையும், நிதிநிறுவன தொகுப்புக்குட்பட்ட பரிவர்த்தனை மற்றும் அந்த நிறுவனங்களுக்கிடையேயான கொடுக்கல் வாங்கல் ஆகிய விவரங்களை சேகரிக்கும் கண்காணிப்பு அமைப்பு, மற்றும் நிறுவனங்களைப் பற்றி தகவல்களை பரிமாறிக் கொள்ளும் அமைப்பு இவைகளைப் பற்றி இக்குழு ஆலோசனை தெரிவித்துள்ளது.

10.  பேசல் II [BASEL II]ன் கீழ் அழுத்தமாய் கூறப்பட்ட சந்தை ஒழுங்குகளின் முக்கியம் மற்றும் ஒளிவு மறைவில்லா நிலையை உயர்த்த வங்கிகள், ரிசர்வ் வங்கியினால் சுமத்தப்பட்ட அபராதங்கள் குறிப்பிட்ட விவரங்கள் மீது கூறப்பட்ட கண்டனங்கள் / அறிவுரைகள், ஆய்வின் மூலம் வெளிவருவன உட்பட்டவற்றை பகிரங்கமாக வைக்க வேண்டும் என்று வங்கிகள் அறிவறுத்தப்பட்டன.

11.இத்துறையின் மேற்பார்வை திறம் கீழ்கண்டவைகளையும் உட்கொண்டுள்ளது.

ஜிலானி கமிட்டி பரிந்துரைகள்படி வங்கிகளின் உள்முக கட்டுப்பாடுகளை பலமுறச் செய்தல் மற்றும், இடர்வரவு சார்ந்த உள்முக ஆய்வை [RBIA] அமல்படுத்துதல்

சட்டப்படி தேவையான நிதியைப் பணமாக வைத்திருத்தல், வருவாயை தெளிவாய் அறிந்து கொள்ள உதவும் விவேக சுட்டிக்காட்டுதல்கள், சொத்துக்களை வகைப்படுத்துதல் மற்றும் ஒதுக்கீடு செய்தல், வங்கியின் மதிப்பிடப்பட்ட போதுமான முதலீட்டு விகிதம் [CAR], வருடக்கணக்குகளின் விளக்ககுறிப்பில் தெரிவிக்கப்படவேண்டிய ஏனைய விகிதங்களை உறுதிப்படுத்துதல், நீள்படிவ தணிக்கை அறிக்கையில் கூறப்படும் செயல்பாடுகள் குறித்த விளக்கவுரைகள் போன்றவைகளை வங்கிகள் பின்பற்றுவதை சரிபார்த்து நற்சான்றுமிக்க சட்டபூர்வ கணக்குப் பரிசோதகர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அவர்களை உபயோகப்படுத்துதல்.

குறைந்தது 50 சதம் வணிகத்தை உட்கொணட வங்கிப் பரிவர்த்தனைகளை, உடனுக்குடனான தணிக்கை மூலம், அந்நியச் செலவாணி, முதலீடு சம்பந்தப்பட்ட, இடர்வரவுள்ள துறை சார்ந்த முதலீடுகள் ஆகியவற்றை 100% தணிக்கை செய்தல் ஆகியன நடைமுறையில் உள்ளன என்பதை உறுதி செய்யும் முறை.

கடைசியாக நடத்தப்பட்ட ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டவைகளைத் தெரிவிக்கும் முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டியவை. அது குறித்த முன்னேற்றங்கள் ஆகியன பற்றி விவாதிக்க ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரிகள், வங்கிகளின் முதன்மை செயல் அலுவலர்கள் / தலைவர், நிர்வாக இயக்குனர்கள் இடையேயான காலாண்டு கூட்டங்கள் என்னும் நடைமுறை 2000ம் ஆண்டிலிருந்து அமல்படுத்தப்பட்டது. நிதிநிலையை பலப்படுத்தல் பற்றிய வங்கிகளின் திறன் வாய்ந்த திட்டங்கள், அத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எடுத்த முயற்சிகள், அதனால் அடைந்த பயன்கள் ஆகியவையையும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் கொள்கை சார்ந்த விஷயங்களில், வங்கியாளர்களுக்குத் தேவையான விளக்கங்களை எழுப்பும் இடமாகவும் இந்தக் கூட்டங்கள் இருக்கிறது.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate