Accessibility options
Accessibility options
இந்திய அரசு
பங்களிப்பாளர்கள் : Mariyappan06/09/2023
நீண்ட வாசிப்பைத் தவிர்க்கவும். விகாஸ் AI வழங்கும் சுருக்கமான சுருக்கத்திற்கு 'தகவலை சுருக்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.
யுனெஸ்கோ இளைஞர் என்ற சொல்லுக்கான அர்த்தத்தை - “குழந்தைப் பருவத்தின் சார்புத்தன்மையில் இருந்து பருவ வயதின் சுதந்திரத் தன்மைக்கு மாறுகின்ற காலகட்டம் என வரையறை செய்துள்ளது. மேலும் சமுதாயத்தின் உறுப்பினர்களாக உணர்ந்து நமது சுதந்திரம் குறித்து அறியும் பருவம் இதுவாகும். நிர்ணயிக்கப்பட்ட வயதுப் பிரிவினர் எனப் பார்ப்பதைவிட இளைஞர் என்பதை மிகவும் நெகிழ்ச்சியான வகைப்பாட்டினராகப் பார்க்கப்பட வேண்டும்.”
இளைஞர் உறவுகள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் (இளைஞர் உறவுகள் துறை) 2016 -17ஆம் ஆண்டு அறிக்கையின்படி, ஆளுகைக்கான எந்த ஒரு நிறுவனத்திலும் மிகவும் துடிப்புமிக்க பிரிவினராக இளைஞர்களே இருக்கின்றனர். அவர்களது உற்சாகமான மற்றும் சுறுசுறுப்பான அணுகுமுறையில், “இந்தியா” ஒரு இளைமையான நாடாகத் திகழ்கிறது. அதாவது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 65% நபர்கள் “35 வயதுக்குக் குறைவானவர்கள்” என்ற வகைப்பாட்டின் கீழ் தோராயமாக அடங்கி விடுகின்றது. இதுதான் இந்தியாவை அதிக அளவில் இளைஞர்கள் நிரம்பிய நாடாக ஆக்குகிறது. அமைச்சகத்தின் 2016 - 17ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டில், தெற்கு ஆசிய நாடுகள் மற்றும் சீனாவின் சராசரி வயது 38 ஆண்டுகள் என இருக்கும். அப்போது இந்தியாவின் சராசரி வயதாக 28 ஆண்டுகள் என்பது இருக்கும். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 15-29 என்ற வயதுப் பிரிவின் பங்கு 27.5 சதவிகிதமாக இருக்கும். இதுவே இந்தியாவுக்குச் சாதகமான குடிமையியல் விவரத் தோற்றத்தைத் தருகின்றது.
இந்தக் குடிமையியல் வகைப்பாட்டின் பயனை அதன் அளவில் முழுமையாகப் பெறுவதற்கு, இளைஞர்கள் இலாபகரமான வெளியீடுகளை உற்பத்தி செய்தல் மற்றும் ஆக்கப்பூர்வமான உள்ளிடுகளைச் செய்தல் என்ற சுழற்சியில் ஈடுபட வேண்டியது முக்கியமானதாகும். எதிர்கால, உருவாகிவரும் ஆற்றலாக இளைஞர்கள் இந்தியாவுக்கு சர்வதேச அளவில் உதவ வேண்டுமானால் அவர்களுக்கு அடிப்படை கொள்கை ரீதியான அரவணைப்பும் உதவியும் தரப்பட வேண்டும். அரசு இயந்திரத்தின் இறுதிநிலை துணை உற்பத்திப் பொருட்களைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கான ஆயத்த ஆய்வுக் கூடங்களாக இளைஞர்கள் இல்லை. இதற்குப் பதிலாக, தற்காலத்துக்குப் பொருத்தமான தொழில்திறன்கள் அடிப்படையில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய மாறிலிகளாக இளைஞர்கள் உள்ளனர்.
“சமூக மாற்றத்துக்கான செயலூக்கமான ஏஜென்ட்டுகளாக இளைஞர்” என்ற தனது நூலில் மைக்கேல் கிரீனெ இவ்வாறு கூறுகிறார்: சாதகமான இளைஞர் மேம்பாடு என்பது எப்போதும் விரிவடைந்து கொண்டும் செல்வாக்கான இயக்கமாகவும் இருக்கிறது. இதன் கவனம் விமோசனம் என்பதைவிட பலம் மற்றும் நலன்கள் சார்ந்ததாகவும் மற்றும் போதாமைகளை எதிர்கொள்வதாகவும் அமைகிறது. பிரச்சனைகளை மையமாகக் கொண்ட அணுகுமுறையில் இருந்து பிரச்சனைகளைத் தீர்த்தல் என்ற அணுகுமுறைக்கு முக்கியத்துவம் தரப்படுகின்றது.
சமூக, அரசியல், சிவில் சமூக இயக்கங்களின் படையெடுப்புகளுக்கு இடையில், இளைஞர்கள் நடவடிக்கைகளின் மையமாக இருக்கின்றனர். எல்.ஜி.பி.டி.கியூ இயக்கம் முதல் “பெண்களுக்கான சமஉரிமை இயக்கம்” வரை சுற்றுச்சூழல் பிரச்சனைகள் முதல் மனித உரிமைகள் வரை அனைத்திலும் இளைஞர்கள் செயல்பாடுகளின் மையமாகத் திகழ்கின்றனர். பொதுவாழ்வில் பலதரப்பட்ட செயல் களங்களால் இளைஞர்கள் சூழப்பட்டுள்ளனர். பெரும்பாலும் இவர்கள் செயலூக்கமான பொதுவான குறிக்கோள் கொண்ட குழுவாகச் செயல்படுகின்றனர். அவர்களது விரிவடைகின்ற ஆர்வத்தையும் கரிசனங்களையும் ஒருங்கிணைக்க, ஊடகங்கள் / சமூகஊடகங்கள் தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் பயன்படுத்திக் கொள்ளப்படவேண்டும். விவாதங்களும் பிரபலமான அபிப் பிராயங்களும் இவற்றில் முன்வைக்கப்பட வேண்டும். புதிய ஊடகக் கருவிகள் யோசனைகளை உருவாக்குவதற்கு மட்டுமே பயன்படவில்லை. அவை ஒரு யோசனையை ஒருங்கிணைக்கவும் பலருக்கும் தொடர்புபடுத்தவும்கூட உதவுகின்றன. இந்த யோசனையை அல்லது விவாதத்தை பொதுமக்கள் ஒப்புதலுடன் உறுதிப்படுத்தவும் இந்த ஊடகக் கருவிகள் உதவுகின்றன. பொருளாதார/சமூக அளவிலான செயல்பாடுகளின் மையத்தில் இளைஞர்கள் இருக்க வேண்டும் என்பதற்கான காரணம் என்பது எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் சமூக இயக்கவியலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் இயல்பான உள்ளுறைந்த திறன் அவர்களுக்கு இருப்பதே ஆகும்.
இரண்டு தலைமுறைகளுக்கு இடையிலான பாலமாக இளைஞர்கள் செயலாற்ற வாய்ப்பு உள்ளது. முறையாக இதனை விளக்கிக் கூறினால், இவர்கள் ஒத்த வயதுடைய குழுவினராவர். இக்குழுவினரின் சொந்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க நெகிழ்ச்சித் தன்மை இருந்தாக வேண்டும் என்ற தேவையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கருத்தியல் இறுக்கத்தன்மைகள் மற்றும் கண்மூடித்தனமாக மேற்கு உலக கலாச்சாரத்தைக் கடைப்பிடித்தல் போன்ற தீவிர நிலைகள் நாட்டுக்கு நெடுங்கால ஓட்டத்தில் எந்தவிதமான சாதக நல்விளைவுகளையும் ஏற்படுத்தாது. இன்றைய இளைஞர்கள் முற்றுரிமை அல்லது தன்னாட்சி மட்டுமே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வாகாது என புரிந்து கொண்டுள்ளனர். ஒருங்கிணைந்து முழுமையாகச் செயல்படும் வகையில் உட்பிரிவான அலகுகள் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படும் போதுதான் தீர்வுகள் கிடைக்கும். புதிய சமுதாயச் சிந்தனை, பொருளாதார மேம்பாடு மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இளைஞர்கள் அடிப்படை ஊக்கிகளாக உள்ளனர்.
இன்றைய இளைஞர்கள் மிகச் சிறந்த அனுபவத்தைப் பெறும் நிலையில் உள்ளனர். ஆன்மாவின் பரிசோதனைக் களமாக அவர்கள் உள்ளனர். இந்திய ஜனநாயக அமைப்பு முறைக்குள் பலவகைப்பட்ட விலக்குதல் நடைமுறைகள் உள்ள பின்னணிக்கு எதிராக அர்த்தமுள்ள நோக்கத்துடன் இவை பின்னிப் பிணைந்து இருக்க வேண்டும்.
இளைஞர்கள் பயன்படுத்தும் தர்க்க நியாயம், மதிப்பு கூட்டுதல் மற்றும் ஆய்வுத் தேடல் ஆகியன இறுக்கமான சமூக அமைப்பு என்ற சுவரை அடித்து உடைப்பதற்கான சுத்தியலாக இருக்கின்றன. இன்றைய இளைஞர்கள் பலதரப்பட்ட சமுதாயத்தினருடன் இணைந்து உணவு உட்கொள்ளுதல், சமுதாயம் மாறி திருமணம் செய்து கொள்ளுதல் ஆகிய விஷயங்களில் அந்த அளவிற்கு இறுக்கமான மனநிலையில் இல்லை. சக மனிதர்களிடம் காட்டப்படும் பிற்போக்குத்தனமான கூர் உணர்வு இல்லாத அணுகுமுறையை அதாவது ஜாதி, வர்க்கம், இனம் அல்லது பாலினம் ஆகியவற்றின் அடிப்படையை ஒதுக்கிவிட்டு இளைஞர்கள் கேள்வி கேட்கின்றனர்.
இது பெரிய அளவில் நிகழ வில்லை என்றாலும்கூட, சரியான திசையில் உறுதியான சிறுசிறு அடிகள் எடுத்து வைக்கப்பட்டே வருகின்றன. தங்களது பாரம்பரிய வேர்களை இளைஞர்கள் கண்டறிய உதவியாக இருக்கும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் தருவதும் உள்ளது. ரொக்கப் பணம் இல்லாத பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற கருத்தாக்கங்கள், செயல்பாடுகள் மூலம் மின்னணு மயமாதலுக்காக அரசு எடுத்து வரும் முயற்சிகளில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் உருவாகி வரும் தொழில்நுட்பமே திறன்மிக்கத் தேர்வாக அமைகிறது. நமக்குத் தெரிந்த வரையில், அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொண்டு வரும் விதத்தில் தொழில்நுட்பம் என்பது முன்னேற்றத்துக்கான சாதகமான வழியாகவே உள்ளது. அடைய முடியாத அரும் செயல்கள் என்று பார்க்கப்பட்டவற்றை தற்போது மனித இனம் அடைவதற்கு தொழில்நுட்பம் உதவியாக உள்ளது.
ஒவ்வொரு நாளும் நாம் புதிய புதிய சாதனைகளை வென்று எடுத்து வருவதைப் பார்க்கின்றோம். வாழ்க்கை வளமாக இருப்பதற்கும் தொழில்நுட்பம் பயன்படுகிறது - குறிப்பாக வளரும் நாடுகளில் வளமான வாழ்க்கைக்கு தொழில்நுட்பமானது அதிக அளவில் பயன்படுகிறது.
இந்தியாவில் உள்ள மின்னணுச் சூழல் வலுவான முறையில் உலக அளவில் இளைஞர்கள் காலூன்றி நிற்பதற்கான அதிகாரத்தை வழங்கி உள்ளது. இது வேகமான தகவல் தொடர்பியல், விரைவான கற்றல் ஆகியவற்றுக்கு வழி வகுத்துத் தந்தது. மேலும் ஒரு பொதுவான அடித்தளத்தின் மீது தூர தூரமான இரண்டு இடங்களை இணைக்கவும் செய்தது. இந்த டிஜிட்டல் சூழல் ஒரே சிந்தனை உடையவர்களின் கருத்துகளைத் தொகுத்து தரும் இடமாகவும் செயல்படுகிறது. பிறகு சாத்தியமான தீர்வுகள் மற்றும் விளைவுகள் குறித்து செயலாற்றுகின்றது. ஒரு பொத்தானை அழுத்துவதன் வழியாகவே, நாம் கருத்துகளைப் பகிர்ந்துக் கொள்ளலாம்; ஆலோசிக்கலாம்; இணைந்து செயலாற்றலாம்; மற்றும் சிந்தனைகளையும் செயல்களையும் தூண்டலாம். கண்ணால் பார்க்கும் யதார்த்தத்தைவிட தொழில்நுட்பம் மேலும் மேலானதாக இருக்கிறது. ஒரு மாணவருக்கு படிப்பு சார்ந்த விஷயங்கள் தகவல் பெருவழி மூலம் கிடைக்கலாம். படிப்பு மையங்களில் கவனம் செலுத்துகின்ற கல்வி நிலையங்களுக்கு அந்த மாணவர் விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்பம் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றது. குறைந்த பட்சம் அணுகுதல் என்ற அம்சத்தில் இவ்வாறு நிகழ்கின்றது. புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் குறித்து கற்பதிலும் அவற்றை ஏற்றுக் கொள்வதிலும் இளைஞர்கள் முன்னோடிகளாக உள்ளனர்
இளைஞர் மற்றும் தொழில்நுட்பம் இரண்டின் கூட்டிணைவின் மிகப் பெரிய சாதனை என சவாலை எதிர்கொள்ளும் துடிப்பு மற்றும் ஸ்டார்ட்அப் தொழில்கள் அதிகரிப்பு ஆகியவற்றைக் கூறலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கான திறன்கள் மற்றும் குறிப்பிட்ட திறன்களை மெருகேற்றுதல் ஆகிய தொடக்க நடவடிக்கைகள் மூலம் ஸ்டார்ட்அப் என்ற தொழில் முனைவு இயக்கம் குறிப்பிட்ட மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டுமே தொழில்களைத் தொடங்கி சேவைகளை வழங்க முடியும் என்ற மேலாதிக்க தன்மையை தற்போது தகர்த்து விட்டது. இளைஞர் படை தொழில்நுட்பத்துடன் இணைந்தது என்பது அனைவருக்கும் தொழில்முனைவு சாத்தியத்தை உருவாக்கி உள்ளது. அரசானது தனது விசேஷமான இளைஞர் உறவுகள் மற்றும் விளையாட்டுகள் அமைச்சகம் மூலமாக இந்திய இளைஞர்களின் யதார்த்தமான மற்றும் பலன் அளிக்கக் கூடிய வளர்ச்சிக்கான மேம்பாட்டு அம்சங்கள் மீதும் முன்னேற்றங்கள் மீதும் தொடர்ச்சியான கவனத்தைச் செலுத்தி வருகின்றது. வழக்கமான மீளாய்வுகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. அதனோடு இளைஞர்கள் தொடர்புடைய புதிய நடவடிக்கைகள்/திட்டங்கள் மற்றும் பயிலரங்குகளையும் நடத்தி வருகின்றது.
வழக்கமான மற்றும் வாழ்க்கை முறை / தலைமைத்துவத் திறன்களுக்கான பயிற்சியின் அவசியத்தையும் அரசு வலியுறுத்தி வருகின்றது. “தேசிய இளைஞர் கொள்கை"யானது இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதிப்படுத்த ஒட்டுமொத்த தேசமும் அர்ப்பணிப்புடன் இருந்தாக வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றது. அப்போதுதான் இளைஞர்கள் தங்களின் முழுமையான ஆற்றலை உணர்வதோடு தேசிய கட்டுமானச் செயல்முறையில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பையும் செலுத்துவார்கள்.
இந்திய இளைஞர்களுக்கு ஒரு முழுமையான பார்வையைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. தங்களது முழுமையான ஆற்றலை அடையும் வகையில் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று இந்தக் கொள்கையானது குறிப்பிடுகின்றது. மேலும் இளைஞர்களின் மூலமாக உலக நாடுகளுக்கு இடையில் இந்தியா தனக்கான சரியான இடத்தைப் பெற உதவ வேண்டும் என்றும் இந்தக் கொள்கையானது தெரிவிக்கிறது.
இளைஞர்களின் பங்கேற்பை அதிகப்படுத்தவும் இளைஞர்களின் முழுமையான ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கு உதவவும் தற்போது ஆட்சி செய்யும் மத்திய அரசானது பன்முகப்பட்ட செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. எடுத்துக்காட்டாக, தேசக் கட்டுமான நடவடிக்கைகளில் இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும்; அதற்கேற்ப அவர்களை மேம்படுத்த வேண்டும் என்பது கட்டாயமான நிபந்தனையாக தற்போது உள்ளது. “இளையோர் மற்றும் வளர் இளம்பருவத்தினர் மேம்பாட்டுக்கான தேசிய செயல்திட்டங்கள்’ என்பதும் மேலே கூறிய திட்டங்களோடு நடைமுறையில் உள்ளது. மேலும் இளைஞர்களை ஊக்கப்படுத்தவும் அவர்களைப் பங்கேற்கச் செய்யவும் தேசிய இளையோர் விழாக்கள் நடத்தப்படுகின்றன; மற்றும் தேசிய இளையோர் விருதுகளும் வழங்கப்படுகின்றன.
இந்திய மக்கள் தொகையில் தோராயமாக 41 சதவிகிதம் நபர்கள் 20 வயதிற்குக் கீழ் உள்ளனர். இந்த வயது எல்லை என்பது தனிநபர் ஆளுமைத்திறன் மேம்பாடு என்ற அம்சத்தில் மிக முக்கியமானதாகும். இந்த ஆளுமைத் திறன் என்பது சரியான வழிகாட்டுதல், அணுகும் நிலை மற்றும் செயல்நெறிகள் ஆகியவற்றைச் சார்ந்து உருவாவது ஆகும். அதி வேகமாக வளர்ந்து வரும் நகர நெருக்கடிகளின் தீய விளைவுகளுக்கு இன்றைய இளைஞர் சமுதாயமானது வருத்தப்படத்தக்க அளவில் ஆட்படுகின்றனர். மேலும் வாழ்க்கையை நடத்துவதற்காகவே குற்றச் செயல்களைச் செய்வதிலும் ஈடுபடுகின்றனர். இந்த எதிர்மறையான அணுகுமுறைக்கு ஒரு மிகப்பெரும் காரணமாக கிடைப்பதற்கும் அணுகுவதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைக் குறிப்பிட முடியும். இளைஞர்களின் நலனுக்காக அரசு முன்னோடி நடவடிக்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்தக் கூடும். ஆனால் அத்திட்டங்களின் பலனைப் பெறுவதற்கான முறையோ அல்லது வழியோ அவர்களால் எளிதில் அடைய முடியாததாக உள்ளது. இத்தகைய பலன்களைப் பெறுவதில் மேலாதிக்கச் சக்தியாக இருப்பது நிதிசார்ந்த தடைகள் அல்லது சமூகக் கட்டமைப்பு முறைகளே ஆகும்.
இளைஞர்கள் நெருக்கடி மற்றும் அதை எதிர்கொள்வதற்கான வழிமுறை குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக விரிவான கல்விப்புலத்தில் இந்த இளைஞர்களை இணைக்க வேண்டும் என்ற முயற்சியின் தோல்வியே உள்ளது. கல்விப்புலமானது இளைஞருக்கான அடையாள உருவாக்கலில் வளர்ந்து வரும் நெருக்கடி குறித்து முழுமையாக உணர்ந்திருக்கவில்லை. அதேபோன்று, இளைஞர்களின் உள்ளுறை ஆற்றலையும் அவர்கள் ஆற்றக் கூடிய பங்களிப்பையும் கல்விப்புலம் உணர்ந்திருக்கவில்லை. கல்வியைப் போதிப்பதில் பல்துறை சார்ந்த அணுகுமுறையை உள்ளடக்குவதன் மூலம் பலவிதமான பலன்களை இளைஞர்கள் மூலம் பெற முடியும். இளைய சமுதாயத்தினரின் சிந்தனையையும் மனதையும் அங்கீகரிக்கவும் ஏற்றுக் கொள்ளவும் அவர்களைப் பாராட்டவும் வேண்டிய அவசரத் தேவை இப்பொழுது உருவாகி உள்ளது.
இளைஞர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற வழக்கமாகக் கறாராக எதிர்பார்க்கப்படும் எதிர்பார்ப்புகளைக் கொண்ட இறுக்கமான சிந்தனை அமைப்பில் இருந்து வேறுபட்டதாக இந்த அங்கீகாரமானது இருக்க வேண்டும். உரையாடல் மற்றும் இதுபோன்ற தொடக்க நடவடிக்கைகள் மூலமாக இளைஞர்களுக்கு இன்றியமையாதது எனக் கருதப்படும் மாறிலிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக இந்த அக்கறையானது இருக்க வேண்டும். ஏற்கனவே பரவலாக நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது நடைமுறையில் இருக்கின்ற நாட்டுநலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்) என்பதைத் தாண்டி நேரு யுவகேந்திரா சங்கதனின் கீழ் குறிப்பிட்ட விசேஷமான திட்டங்களும் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இவை பிரச்சனைகளுக்கு பலவிதத் தீர்வுகளை முன்வைத்து தீர்த்து வைக்கும் அணுகுமுறையைக் கொண்டவையாக உள்ளன.
அரசின் மிக முக்கியமான தொடக்க நடவடிக்கைகளில் சில கீழே தரப்படுகின்றன:
இத்திட்டமானது தொழில்கல்விப் பயிற்சிக்கான திறன்களை பயிற்சி பெற்ற நபர்களின் மூலம் மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது.
கூடுதல் வருமானம் ஈட்டவும் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் இத்திட்டமானது உதவும். உள்ளூர்த் தேவையை அறிந்து அதற்கேற்ப தொழில்கல்விப் பயிற்சியை அங்கீகரித்து வழங்குவதை இந்தத் திட்டம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
தலைமுறையானது மேற்குலக மாயையில் மூழ்கி இருக்கும் இச்சூழலில் இத்திட்டமானது செயல்பாட்டுக்கு வந்துள்ளது, ஊரக இளைஞர்கள் தங்களிடம் மறைந்துள்ள கலாச்சாரக் கூறுகள் மற்றும் திறன்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை எடுத்துக்காட்டுவதற்கு இத்திட்டம் உதவுகிறது. இளைஞர்களுக்கு மிகவும் தேவைப்படும் திட்டமாக இது இருக்கும்.
தூய்மையாக்கல் பணியிலும் நீர் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு பணியிலும் இளைஞர்களை ஈடுபடுத்தி பங்காற்றச் செய்யும் திட்டமாக இது இருக்கிறது. நாடு முழுவதிலும் உள்ள பாகுபாடு, குறைவான மற்றும் போதாமை நிலையில் உள்ள பங்கேற்பு ஆகியவற்றைத் தொடர்ந்து அனைவரையும் உள்ளடக்கும் சில திட்டங்களை அரசு இப்போது செயல்படுத்தி வருகிறது. சமூக உள்ளடக்கல் மற்றும் வளர்ச்சிக் கொள்கை மீதான அரசின் நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் இத்திட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன. அவற்றில் மிக முக்கியமான சில திட்டங்கள் கீழே தரப்படுகின்றன:
இளைஞர்களின் உளவியல் தடுமாற்றம் குறித்து கவனம் கொள்வதால் இது மிக முக்கியமான மற்றும் முழுமையான திட்டமாக உள்ளது. மன அழுத்தத்தை எதிர்கொண்டு சமாளிப்பதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கைத் தேர்வுகளை மேற்கொள்ளவும் தேவையான பயிற்சியை இளைஞர்களுக்கு அளிக்கவும் இத்திட்டமானது உதவுகிறது. இனப்பெருக்க மண்டல ஆரோக்கியம் குறித்த பிரச்சனைகள் மற்றும் அக்கறை குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கவனம் செலுத்த வைப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரச்சனையைத் தீர்த்து வைப்பதில் இளைஞர்களின் ஆற்றலை ஒருமுகமாகச் சேர்த்து ஒருமனதான தீர்வை உருவாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. புவியியல் மற்றும் சமுதாய தடைகளை நீக்குவதற்கான பாலங்கள் சிறப்பாக உள்ள இரண்டு திட்டங்கள் :
தீவிர வாதம் பாதித்துள்ள பழங்குடியினப் பகுதிகளில் இருந்து ஆற்றல் மிக்க இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை நாட்டின் பிற பகுதிகளுக்கு சுற்றுலாவாக அழைத்துச் சென்று வருவது இத்திட்டத்தின் நோக்கமாகும். ஆதிக்க நிலையிலான உள்ளூர் கருத்தியலின் தாக்கத்தில் இருந்து இத்தகைய இளைஞர்களின் மனப்போக்கை விடுவித்து அவர்களின் சிந்தனையை தேசியமயமாக்குதல் என்பதும் இதன் நோக்கமாகும். டிஒய்-இ.பி. என்ற இந்தத் திட்டமானது அனுபவங்களின் மூலம் கற்றல் என்ற முறையை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது. பழங்குடியின இளைஞர்களின் சொந்த ஊரில் இதை நடைமுறைப்படுத்த முடியும். இந்த ஊரின் இளைஞர்கள் வளர்ச்சி, உள்கட்டமைப்பு வசதி, அபிவிருத்தி மற்றும் தொழில்திறன் மேம்பாடு என்ற மாயாஜாலத்தைக் கண்கூடாகப் பார்க்க முடியும்.
இளைஞர் உறவுகள் அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகிய இரண்டு அமைச்சகங்களின் கூட்டு முயற்சியாக நேரு யுவகேந்திரா சங்காதனின் கீழ் இத்திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பிராந்திய இளைஞர்களை மஹாராஷ்டிர மாநில இளைஞர்களுடன் இணைந்து கலாச்சார ரீதியில் வேறுபட்ட வாழ்க்கை முறையின் பண்பாட்டுக் கூறுகளையும் சமூகப்பொருளாதார மேம்பாட்டையும் புரிந்து கொள்ளச் செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்த வகையில் முதலாவதாக, தமிழ்நாட்டின் பூரீபெரும்புதூரில் ஒரு மைல்கல் சாதனையானது எட்டப்பட்டுள்ளது. இளைஞர் உறவுகள் மற்றம் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கல்வி நிலையம்” நிறுவப்பட்டு இச்சாதனையானது எட்டப்பட்டுள்ளது.
2012ல் ஒரு சட்டம் இயற்றி அதன் மூலம் *ராஜீவ்காந்தி தேசிய இளையோர் மேம்பாட்டு நிலையம்” நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இளையோர் மேம்பாட்டில் சர்வதேச அளவில் அங்கீகாரம் மற்றும் கல்விப் புலச் செயல்பாட்டில் உயர்சிறப்பு மையம் என இந்த நிலையம் தன்னளவில் புகழ் பெற்றுள்ளது. இந்த நிலையம் பலவிதமான கல்வி சார்ந்த படிப்புகளை வழங்குகிறது. குறிப்பாக எம்.எஸ்சி ஆலோசனை உளவியல், எம்.ஏ. சமூகப் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு, எம்.ஏ.பாலின ஆய்வியல், எம்.ஏ.வளர்ச்சிக் கொள்கை மற்றும் நடைமுறை முதலான படிப்புகள் இந்த மேம்பாட்டு நிலையத்தில் வழங்கப்படுகின்றன. முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான வசதியும் இந்த நிலையத்தில் உள்ளது. இளைஞர் தொடர்பான பல்துறை சார்ந்த முனைவர் பட்ட ஆய்வை ஒருவர் இங்கு மேற்கொள்ளலாம்.
கலாச்சார ரீதியாக மற்றும் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் அரசு இளைஞர் விடுதிகளை அமைத்துள்ளது. கட்டணம் குறைவான, சமுதாய மக்களின் நம்பிக்கைக்குரிய மற்றும் எளிதில் கிடைக்கக் கூடிய விடுதிகளாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இவை கட்டப்பட்டுள்ளன. நகரங்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் எனக் கண்டறியப்பட்ட இடங்களில் இந்த விடுதிகள் உருவாக்கப்படுகின்றன. மின்சாரமும் தண்ணீரும் எப்போதும் கிடைக்கும் வகையில் இந்த விடுதிகள் செயல்படும். தேசிய அளவில் பல்வேறுபட்ட கலாச்சாரங்களின் ஒரு வாழ்வியல் அனுபவத்தைத் தருவதாக இவை இருக்கும். மேலும் குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதி தரப்படுவதோடு பிற கலாச்சார உறவினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பும் ஒருசேர இங்கு கிடைக்கிறது.
ஒவ்வொரு தனிப்பட்ட இளைஞனின் உள்ளுறை ஆற்றலையும் திறமைகளையும் வெளிக்கொணர பல்வேறு வழிமுறைகளில் அரசு முயற்சித்து வருகின்றது. இது அந்த இளைஞரின் தனிநபர் ஆளுமை வளர்ச்சிக்கு உதவுவதோடு தேசிய, உலகளாவிய ஆதிக்கக் குரலை எழுப்ப உதவுவதாகவும் இருக்கும். மடைமாற்றம் பெறும் இளைஞர்கள்தான் மனசாட்சி உள்ள, கூர் உணர்வுள்ள மற்றும் ஒருங்கிணைந்த உலகின் முன்னோடிகளாக விளங்குவார்கள்.
ஆதாரம் : திட்டம் மாத இதழ்
இந்திய தேசத்தின் சின்னங்கள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன
ஆற்றலின் வகைகள் சார்ந்த டி.இ.டி அறிவியல் வினா - விடைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன
இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதற்கான சவால்கள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன
இந்தியக் கல்விமுறையின் கொள்கைகளும் அணுகுமுறைகளும் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன
இந்திய இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நான்கு முனை அணுகுமுறை மாதிரியை பற்றிய குறிப்புகள் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன
Dilson
7/23/2024, 3:38:56 PM
Super
தருணி
7/20/2024, 3:19:27 PM
நான் கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு இருக்கிரேன்
Iswarya
8/12/2021, 4:53:13 PM
முடிவுரை
பங்களிப்பாளர்கள் : Mariyappan06/09/2023
நீண்ட வாசிப்பைத் தவிர்க்கவும். விகாஸ் AI வழங்கும் சுருக்கமான சுருக்கத்திற்கு 'தகவலை சுருக்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.
55
இந்திய தேசத்தின் சின்னங்கள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன
ஆற்றலின் வகைகள் சார்ந்த டி.இ.டி அறிவியல் வினா - விடைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன
இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதற்கான சவால்கள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன
இந்தியக் கல்விமுறையின் கொள்கைகளும் அணுகுமுறைகளும் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன
இந்திய இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நான்கு முனை அணுகுமுறை மாதிரியை பற்றிய குறிப்புகள் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன