போதுமான அளவுக்குத் தூங்க இயலாமையே தூக்கமின்மைக் கோளாறு என அழைக்கப்படுகிறது. பல தூக்கம் மற்றும் மனவியல் கோளாறுகளின் அறிகுறியே தொடர்ந்து தூங்க இயலாமல் போவதாகும். இதன் விளைவாக விழித்திருக்கும்போது செயல்பாட்டுக் கோளாறுகள் தோன்றுகின்றன. இது எந்த வயதிலும் தோன்றலாம். ஆனால் முதுமையிலேயே பொதுவாக உண்டாகிறது.
தூக்கமின்மை தொடர்பாக மனிதர்களிடம் காணப்படும் ஒட்டுமொத்த அலட்சியப்போக்கு மிகப்பெரிய அளவில் மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆபத்தாக உருவெடுத்திருப்பதாக சர்வதேச மருத்துவ விஞ்ஞானிகள் கூட்டாக எச்சரித்திருக்கிறார்கள்.
மனித உடலின் இயற்கையான செயற்பாடான தூக்கம் மற்றும் விழிப்புத்தன்மையை கட்டுப்படுத்தும் மனித உடலியக்க செயற்பாட்டு கண்காணிப்புத்தன்மையை ஆங்கிலத்தில் Body Clock, அதாவது உடல் கடிகாரம் என்கிற பெயரில் விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.
ஒரு நாளின் 24 மணி நேரத்தில் சராசரியாக வெளிச்சமாக இருக்கும் பகல் 12 மணி நேரத்தில் மனித உடல் விழிப்புடனும் துடிப்புடனும் இருப்பதும், வெளிச்சமற்ற 12 மணி நேரமான இரவில் மனித உடல் உறக்கம் கொள்வதுமான நடைமுறை என்பது இன்று நேற்று உருவானதல்ல. அது இன்றைய மனித உடல் உருவாக காரணமாக அமைந்த சுமார் 400 கோடி ஆண்டு பரிணாம வளர்ச்சியில் படிப்படியாக உருவாகி மனித உடலுக்கு பழகிய ஒன்று.
இப்படி பல கோடி ஆண்டுகளின் பரிணாமத்தை தன்னுள் கொண்டு அதற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு வளர்ந்திருக்கும் இன்றைய மனித உடலின் கடிகார செயற்பாட்டில் தற்போது மிகப்பெரிய இடையூறு செய்யப்படுவதாக கூறுகின்றனர் மருத்துவர்கள்.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் தூங்கிய சராசரி நேரத்தைவிட, இன்றைய மனிதர்கள் ஒரு நாளைக்கு இரண்டுமணி நேரம் குறைவாக தூங்குவதாக கூறும் அவர், இந்த குறைவான தூக்கம் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக எச்சரிக்கிறார்கள்.
தூக்கமின்மை என்பது வெறும் இரவு நேரப்பணியில் ஈடுபடுபவர்களை மட்டும் பாதிக்கும் பிரத்யேக பிரச்சனை மட்டுமல்ல என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள். இன்றைய நிலையில் இது ஒட்டுமொத்தமாக மனிதர்கள் அனைவரையும் பாதிக்கிறது என்றும், தொழில்நுட்பம் இதில் முக்கிய காரணியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறார்கள் அவர்கள்.
குறிப்பாக குறிப்பிட்ட ரக மின்சார விளக்குகளின் நீலநிறம் அதிகமாக இருக்கும் வெளிச்சமும், டேப்ளட் எனப்படும் தொடுதிரை கணினி மற்றும் ஸ்மார்ட் போன் எனப்படும் தொடுதிரை செல்பேசிகளின் திரைகளில் இருந்து வெளியாகும் நீலம் கலந்த வெண்மையான வெளிச்சம் மனிதக்கண்களில் தொடர்ந்து மணிக்கணக்கில் படும்போது அதனால் கண்களின் தூக்கம் மிகப்பெரிய அளவில் இடையூறு செய்யப்படுவதாக கூறுகிறார்கள்
அதிகப்படியான சர்க்கரை, கொழுப்புச்சத்து மற்றும் உப்பு போன்ற குறிப்பிட்ட சில உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அதன் காரணமாக மோசமான நோய்கள் உருவாகும் என்பது எந்த அளவுக்கு எளிமையான மருத்துவ அறிவியல் உண்மையோ, அதே அளவுக்கு எளிமையான மருத்துவ அறிவியல் உண்மை என்பது போதுமான தூக்கமின்மையால் உங்களின் உடலின் ஆரோக்கியம் மாற்றியமைக்க முடியாத அளவுக்கு மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகிறார்கள்.
இந்த விஞ்ஞானிகளின் எச்சரிக்கை இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கும் பொருந்தும் என்கிறார் தூக்கமின்மை தொடர்பான மருத்துவ பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து எச்சரித்துவரும் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் லக்ஷ்மி நரசிம்மன். தமது அனுபவத்தின் அடிப்படையில் சொல்வதானால், சென்னையில் சுமார் 30 சதவீதமான இளம் தலைமுறையினர் ஏதோ ஒரு விதத்தில் தூக்கமின்மையால் வரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தூக்கமின்மையின் வகைகள்
கடும் தூக்கமின்மை: ஒரு மாதத்துக்குக் குறைவாகத் தூக்கமின்மைக் கோளாறு இருந்தால் அது கடும் தூக்க மின்மை எனப்படுகிறது. தூக்கம் வராமை, தொடர்ந்து தூங்க இயலாமை அல்லது சரியான தூக்கம் இன்மை ஆகியவையே தூக்கமின்மைக் கோளாறின் இயல்புகளாகும். தூங்குவதற்கான வாய்ப்பும் சூழ்நிலையும் இருந்த போதிலும் தூக்கமின்மைக் கோளாறு ஏற்படும். இதனால் பகல் நேர செயல்பாடுகளுக்கு இடையூறு உண்டாகும். கடும் தூக்கமின்மையைக் குறுகிய கால தூக்கமின்மை அல்லது மனவழுத்தம் தொடர்பான தூக்கமின்மை என்பர்.
நீடித்தத் தூக்கமின்மை: இது ஒரு மாதத்துக்கு மேலும் நீடிக்கும். இது இன்னொரு கோளாறாலும் உண்டாகலாம் அல்லது அதுவே முதன்மையான கோளாறாகவும் இருக்கலாம். மனவழுத்த இயக்குநீர்களின் அளவு அதிகரித்தல் அல்லது சைட்டோகைன்களின் அளவு மாற்றாங்களால் நீடித்தத் தூக்கமின்மை ஏற்படலாம். காரணத்தைப் பொறுத்து அதன் விளைவுகளும் மாறுபடும். தசைத்தளர்ச்சி, மாயத்தோற்றம் அல்லது மனக்களைப்பு இதன் விளைவுகளாகும். இக் கோளாறு உடையவர்களுக்கு மாயத்தோற்றமும் செயல்கள் மெதுவாக நிகழ்வது போன்றும் தோற்றமளிக்கும். இரட்டைத் தோற்றங்களும் ஏற்படலாம்.
அவையாவன
மனவழுத்தம் தரும் நிகழ்வுகள்: வேலை, பணம், உடல்நலம், அன்புக்குரியவர்களுக்கு ஏற்படும் நோய் அல்லது மரணம், ஒலி, ஒளி ஆகிய யாவும் மனவழுத்தத்தைக் கொடுத்து இரவு முழுவதும் உங்களைத் தூங்கவிடாமல் செய்யலாம்.
மனவியல் பிரச்சினைகள்: புதைந்திருக்கும் மனவியல் பிர்ச்சினைகளும் தூக்க முறையைப் பாதிக்கும்.
அவையாவன
கீழ்வருவனவற்றால் தூக்கமின்மை உண்டாகலாம்
அவையாவன
அறிவு மற்றும் நடத்தை சார்ந்த சிகிச்சைகள்: தூக்கமின்மைக்குக் காரணமான தேவையற்ற சிந்தனைகளையும் நடத்தைகளையும் மாற்ற இது பயன்படுகிறது. நான்கு வாரங்களுக்கு மேலாக ஒருவருக்கு தூக்கப் பிரச்சினை இருந்தால் இச்சிகிச்சை பரிந்துரைக்கப் படுகிறது.
அவையாவன:
இவை புரிந்து கொள்வதற்காகத் தரப்படும் தகவல்களே. இத்தகைய அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்.
ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020
இரவில் படுக்கும் முன் எந்த பானத்தைக் குடித்தால் நல...
இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள் பற்றிய குறிப்பு...
துயில்மயக்க நோயை பற்றிய குறிப்புகள் இங்கு தரப்பட்ட...
ஆழ்ந்த உறக்கத்தைப் பெற சில குறிப்புகள் இங்கு கொடுக...