சளி போன்ற நோயுடன், இரண்டாம் நிலை பாக்டீரியா நோய்தொற்றுவினால், காதுகளிலிருந்து திரவம் வடிதல் ஏற்படுகிறது.
காதில் சீழ் வடிதல் என்றால் என்ன?
காதுமெழுகு, இரத்தம், சீழ் அல்லது ஏதாவது திரவம் காதில் இருந்து வடிவதே காதில் நீர் வடிதல் எனப்படும்.
நாம் நம் காதுகளை ஏன் பேண வேண்டும்?
காது ஓர் உணர்வு உறுப்பாகும். கேட்கும் திறனே நம்மை உலகத்தோடு இணைக்கிறது.
ஒருவருக்கு கேட்கும் திறன் இழப்பு இருக்கிறது என்பதை எப்போது உங்களால் சந்தேகிக்க முடியும்?
ஒலி தூண்டலுக்கு ஒருவர் பதில்வினை ஆற்றாமல் இருக்கும்போது. அவர்களால் பிறருடைய பேச்சை புரிந்துகொள்ள முடியாது. பிறரை சத்தமாகப் பேசும்படி கூறுவார்கள். சொன்னதைத் திரும்பச் சொல்லக் கேட்பார்கள்.
எனது காதைச் சுத்தமாக வைத்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?
காது தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்ளும் ஓர் உறுப்பு. பிரத்தியேகமாக நாம் அதைச் சுத்தம் செய்ய வேண்டியதில்லை. வெளிப்புறத்தில் மட்டுமே சுத்தம் செய்வது நல்லது. எந்த ஒரு பொருளையும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் காதுக்குள் நுழைக்கக் கூடாது.
ஆதாரம் : தேசிய சுகாதார வலைதளம்
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020
தோல் அலர்ஜி ஏற்பட காரணங்கள் மற்றும் அதன் தடுப்பு ம...
இந்த தலைப்பு வெள்ளை அணு புற்று நோயின் அறிகுறிகள், ...
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...
ஆக்னி வல்காரிசின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் எள...