மருத்துவ உலகிலேயே ஒரு புரட்சியைக் கொண்டு வந்த பல முன்னேற்றங்களில் மாற்றுச் சிறுநீரகங்கள் பொருத்துவதும் ஒன்று.
விரும்பத்தகாத ஒரு முடிவு நிலையை நோக்கி மிக வேகமாகச் சென்று கொண்டிருக்கும் சிறுநீரக நோய்க்காரர்களுக்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை. இந்த முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலைக்கு, ESKD (End stage kidney disease) என்று பெயர். அப்படிச் செயற்கை சிறுநீரகம் பொருத்தப்பட்ட பின் வாழ்க்கை அனேகமாக சாதாரண நிலைக்கு வந்து விடுகிறது.
இது அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படுவது ஆகும். நல்ல ஆரோக்கியம் உள்ள ஒருவருடைய அல்லது இறந்தவருடைய சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து எடுத்து, சிறுநீரக நோய் உடையவருக்குப் பொருத்துதல் ஆகும்.
இனிவேறு வழியில்லை என்ற ஒரு முடிவான நிலைக்கு வந்து விட்டோருக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
மிகத் தீவிரமாக (ஆனால் தாற்காலிகமாகவே) சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும்பொழுது இந்த மாற்றம் தேவையே இல்லை. அல்லது ஒரே ஒரு சிறுநீரகம் மட்டும் பழுது பட்டிருக்கும் பொழுதும் இந்த சிகிச்சை மாற்றம் தேவையே இல்லை.
இவ்வகை நோயாளிகள் பொதுவாக முடிவு நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில், டையாலிஸிஸும் மருத்துவமும் சேர்ந்து கை கொடுக்கிறது. ஆனால் அதுவே பூரண குணத்தைக் கொண்டு வராது. வெற்றிகரமாக சிறுநீரக மாற்றத்தைச் செய்வதே மிகவும் திறன் வாய்ந்த ஒரு வழியாகும். மாற்றுச் சிறுநீரகத்தைப் பொருத்துவது எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றி வந்து, அனேகமாக சாதாரண வாழ்க்கையையே மீண்டும் வாழ வைக்கிறது.
1. முழுவதுமாக நோயிலிருந்து காப்பாற்றப்படுதலும் நலம் பெற்ற வாழ்க்கையை மீண்டும் வாழத்துவங்குவதும் ஆகும். நோயாளியின் முழு வாழ்க்கை மீண்டும் அனேகமாக திரும்பக் கிடைத்துவிடுகிறது. மீண்டும் அவர் வழக்கம் போல ஒடி ஆடி சுற்றித் திரிந்து அலுவல்கள் யாவையும் கையாளுகிறார். மேலும் அவருக்கு சக்தி கூடுகிறது. உடலுக்கு தாங்கிக் கொள்ளும் வலிமை கூடுகிறது. உற்பத்தித் திறனும் படைப்பாற்றலும் கூடுகிறது.
2. டையாலிஸிஸ் இனி செய்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. வலி, கால விரயம், மற்றும் டையாலிஸிஸினால் வரும் உபரியான உபாதைகள் - இவற்றிலிருந்து பூரண விடுதலை.
3. வாழ்நாள் கூடும். வெறும் டையாலிஸிஸினால் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்நாட்களை விட சிறுநீரகத்தை மாற்றிக்கொண்டு, மாற்று சிறுநீரகத்தைப் பொருத்தி வாழ்பவர்கள் மேலும் நீண்ட நாட்கள் வாழ்கிறார்கள்.
4. உணவுக்கட்டுப்பாடுகள் மிகக் குறைவு. அதேபோல் எடுத்துக் கொள்ளப்படும் திரவங்களும் மிகக் குறைவாகவே கட்டுப்படுத்தப்படுகின்றன.
5. மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப் படுவதில் வரும் சிக்கல்கள் மிகக் குறைவு. டையாலிஸிஸ் சிகிச்சையில் சிக்கல்களின் சாத்தியக் கூறு மிக அதிகம்.
6. செலவு குறைவு. சிறுநீரகம் பொருத்தப்பட்ட ஆரம்பத்தில் செலவு சற்று அதிகம்தான். ஆனால் இரண்டாவது, மூன்றாவது வருடங்களில் அதைப் பேணும் செலவு குறைகிறது. உண்மையில் பார்க்கப் போனால் டையாலிஸிஸ் செய்து கொண்டே போவதே செலவை அதிகரிக்கச் செய்யும்.
7. பாலியல் வாழ்க்கையில் நல்ல மேம்பாடு தெரியும், பெண்கள் கருத்தரிக்கும் வாய்ப்பும் சாத்தியக் கூறுகளும் அதிகம்.
மாற்றுச் சிறுநீரக சிகிச்சை எத்தனையோ நன்மைகளைக் கொண்டுதான் வருகின்றன. இருந்தாலும் அதிலும் கூட சில தீய விளைவுகளின் சாத்தியக்கூறுகள் இல்லாமல் இல்லை.
நோயாளிக்கு,
மாற்று அறுவை சிகிச்சையை பரிந்துரைக்க முடியாது.
அப்படி எந்த வயது வரம்பும் கிடையாது. வழக்கமாக 5 வயதிலிருந்து 65 வயது வரை இருக்கும் எவருக்கும் இந்த அறுவை சிகிச்சையை செய்யலாம்.
இந்த சிகிச்சைக்கு உகந்த சிறுநீரகங்கள் கிடைக்கும் இடங்களின் சாத்தியக்கூறுகள் என்னென்ன?
மூன்று சாத்தியக்கூறுகள் அப்படி உள்ளன.
1. உயிருடன் இருந்து தானமளிக்க முன்வரும் உறவினர்கள் : உயிருடன் இருந்து தானமளிக்க முன்வருவோர்கள், பெறுபவரோடு இரத்த உறவு இருப்பவராக இருத்தல் வேண்டும். அது பெற்றோராக இருக்கலாம், சகோதரன் அல்லது சகோதரியாக இருக்கலாம், மகன் அல்லது மகளாக இருக்கலாம், அத்தை, சிற்றப்பா அல்லது அவருடைய மகன்/மகள் போன்றவர்களின் சிறுநீரகங்கள் கிடைத்தால் பொருத்தலாம்.
2. உயிருடன் இருந்து உறவினராக இல்லாமல் தானமளிக்க முன்வரும் உறவினர்கள் : மனைவி / கனவர் அல்லது நண்பர் போன்றவராக இருக்கலாம்.
3. இறந்துவிட்டவரின் சிறுநீரகங்கள் : மூளைச் சாவால் இறந்தவராக இருந்தால், அவருடைய சிறுநீரகத்தை எடுத்துப் பொருத்தலாம்.
ஒரே அச்சாக வளர்ந்த இரட்டையர்களே அத்தகைய சிறப்பைக் கொண்டவர்கள்.
ஆரோக்கியமானவர்களே தங்களுடைய இரு சிறுநீரகங்களில் ஒன்றை தானமாகக் கொடுக்கலாம். அதுவும் இரத்த குரூப்பும், தசை வகைகளும் ஒத்து இருத்தல் அவசியம். பொதுவாக அப்படிக் கொடுப்பவர்கள், 18 லிருந்து 65 வயதிற்குள் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.
இரத்த வகை பெறுபவருக்கும் கொடுப்பவருக்கும் நிச்சயம் ஒத்து இருத்தல் வேண்டும். ஒன்று ஒரே வகையானதாக இருக்கலாம் அல்லது ஒன்றுக்கொன்று ஒத்துப் போகும் வகையாக இருக்கலாம்.
பெறுபவருடைய இரத்த வகை |
கொடுப்பவர் இரத்த வகை |
O |
O |
A |
A or O |
B |
B or O |
AB |
AB, A, B or O |
உயிருடன் இருந்து தானம் செய்ய முன்வருவரை முழுக்க முழுக்க மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தல் வேண்டும். உளவியல் பூர்வமாகவும் அவர் சோதிக்கப்படல் வேண்டும். அப்படி தானம் செய்வது முற்றிலும் பாதுகாப்பான பழக்கமே என்பதை அவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். கொடுக்க நினைப்பவருக்கு நீரிழிவு நோய் அல்லது புற்று நோய் இருந்தால், அவர் சிறுநீரகத்தை எடுக்கக் கூடாது. இதே போல் எய்ட்ஸ் தொற்றுதல், உயர் இரத்த அழுத்தம் அல்லது தீவிரமான மருத்துவ அல்லது உளவியல் பூர்வமான நோய் போன்றவை இருந்தாலும் அவருடைய சிறுநீரகத்தை எடுக்கக்கூடாது.
முதலில் அவர்தானம் செய்யத்தகுந்தவர் என்பதை முற்றிலுமாக சோதித்து அறிதல் வேண்டும். பொதுவாக ஒரே சிறுநீரகத்தை வைத்துக் கொண்டு மீண்டும் வாழ ஆரம்பிக்கும்பொழுது எந்தவித பிரச்னையும் எவருக்கும் எழுந்ததில்லை. தானம் செய்ய நினைக்கும் பெண்மணிக்கு குழந்தைகள் இருக்கலாம். தானம் செய்ய முன்வருபவர் ஆணாக இருந்தால் அவர் ஒரு குடும்பத்திற்கு தந்தையாக இருக்கலாம்.
வேறு எந்த சாதாரண அறுவை சிகிச்சைக்கும் என்னென்ன அபாய சாத்தியக் கூறுகள் உண்டோ அதைப் போலத்தான் இந்த சிகிச்சைக்கும் உண்டு. ஒரே சிறுநீரகத்தைக் கொண்டு வாழ ஆரம்பிப்பதால், அவருக்கு சிறுநீரக நோய்கள் வரும் என்ற அதிக சாத்தியக் கூறு உண்டு என்றே சொல்ல முடியாது.
உயிருடன் இருப்பவர்கள் சிறுநீரக தானத்தைச் செய்வதால் பற்பல நன்மைகள் உண்டு. அதாவது இறந்து விட்டவரின் சிறுநீரகத்தை எடுப்பதை விட உயிருடன் இருப்பவர்களின் சிறுநீரகத்தை எடுப்பது பல நன்மைகளைக் கொண்டு வரும். எத்தனையோ நபர்கள், சிறுநீரக நோயின் முற்றிய நிலையில் இருப்பவர்கள் ஆரோக்கியமான சிறுநீரகங்களை வைத்துக் கொண்டும் தானம் செய்ய முன்வருவார்கள். ஆனால் இரத்த வகை ஒன்றாகவோ அல்லது ஒத்துப் போகவோ செய்யாது.
ஜோடியாகக் கொடுக்கப்படும் சிறுநீரக தானம் அல்லது 'உயிருடன் இருக்கும் தானமளிப்பவரோடு வைத்துக் கொள்ளும் சிறுநீரக பரிமாற்றம்" என்பது சிறுநீரகங்களை வேறொருவரோடு பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதாகும். சில சமயங்களில் ஒத்துப் போகாத இரு சிறுநீரகங்களை இப்படிச் செய்வதால் ஒத்துப் போய் விடலம். ஒத்துப் போகாத இருவருடைய சிறுநீரகங்களை எடுத்து, இரு ஒத்துப் போகும் சிறுநீரக அறுவை சிகிச்சையாக செய்து விடலாம்.
பொதுவாக டையாலிஸிஸ் செய்து முடித்த பின்தான் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். சில சமயங்களில் மேலே சொல்லப்பட்ட விதத்தில் அதற்கும் முன்பே மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் படலாம்.
மருத்துவரீதியாக முற்றிலும் சரியென்று தீர்மானிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு அதுவும் நோய் தீவிர நிலைக்குச் சென்று விட்ட நிலையில் இருப்பவருக்கு, மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளுவது சரியே. அப்படிச் செய்வதால் அபாய சாத்தியக் கூறுகள் குறைவு, செலவு குறைவு மற்றும் டையாலிஸிஸினால் வரும் உபத்திரவங்கள் குறைவு. அத்துடன் மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கு ஒப்புதலான சூழல்கள் உருவாகி இருக்கும். பொதுவாக இப்படி டையாலிஸிஸ் செய்யும் முன்பே அறுவை சிகிச்சை மேற்கொள்ளுவதே சாலச் சிறந்தது என்று பரிந்துரைக்கப்படுகிறது.
பெற்றவரின் உடல் புதிதாக உள்ளே நுழைக்கப்பட்ட சிறுநீரகத்தை உதறித்தள்ளலாம், தொற்றுக்கள் பரவலாம் அல்லது மருந்துகளின் பக்க விளைவுகள் ஏற்படலாம். அல்லது அறுவை சிகிச்சையிலேயே ஏற்படும் சில கோளாறுகள் பாதிக்கலாம்.
பொதுவாகவே அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, முறையான மருத்துவமும் உதறித்தள்ளும் தன்மையை கண்காணிப்பதும் மிக அவசியம்.
ஆ. அறுவை சிகிச்சைக்கு மாற்றப்பட்ட சிறுநீரகம் சரியாக இயங்குகிறதா என்பதை இடைவிடாது கவனித்தல்.
பெரும்பாலான சிகிச்சைகளுக்குப் பின், 7 லிருந்து 10 நாட்களுக்காவது மேற் சொன்ன கவனம் தொடர வேண்டும். ஆனால் சிறுநீரகம் பொருத்தப்பட்ட பின், வாழ்நாள் முழுவதுமே முறையான மருத்துவமும் கூரிய கவனமும் மிகவும் அத்தியாவசியமே.
ஒவ்வொரு மனித உடலுக்குமே வெகு இயல்பாக ஒரு தடுப்பு அமைப்பே வேலை செய்கிறது. இது உடலுக்குள் வரும் அன்னிய பொருட்கள் யாவையும் - (பாக்டீரியாக்கள், வைரஸ்கள், போன்றவை) உதறித் தள்ளி உடலைப் பாதுகாக்கிறது. அப்படித்தான் புதிதாக உள்ளே வைக்கப் பட்ட சிறுநீரகத்தையும் உடல் உதறித் தள்ள முயற்சிக்கும்.
ஏனென்றால் உடலைப் பொறுத்த வரை, அது ஒரு அன்னியப் பொருள்”. அதன் செயலை முறியடிக்க முயற்ச்சிப்பதுமல்லாமல் அதையே அழிக்க நினைக்கிறது. பெறுபவரின் உடல் இப்படி புதிதாக வந்த சிறுநீரகத்தை "ஒப்புக் கொள்ளாத’ நிலைமைகளும் உண்டு.
அப்படிப் பட்ட உதறித்தள்ளப்படும் நிலை அறுவை சிகிச்சை நடந்து முதல் ஆறு மாதங்களுக்குள் நடக்கலாம். இந்த உதறித் தள்ளப் படும் தன்மையின் தீவிரம் நோயாளிக்கு நோயாளி மாறுபடும். அநேகமாக அந்த செயல் அவ்வளவு தீவிரமாக இருக்காது. அதை முறையான மருத்துவத்தால் உடலின் இயல்பான சக்திகளை ஊக்குவித்து சரி செய்யலாம். ஆனால் ஒரு சிலருக்கு உண்மையிலேயே இந்த உதறித் தள்ளும் தன்மை மிகத் தீவிரமாகவே இருக்கலாம். மருத்துவத்தால் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கலாம். இந்த தீவிரத்தன்மை சிறுநீரகத்தையே அழிக்கும்.
இத்தகைய மருந்துகளுக்கு immunosuppressant மருந்துகள் என்று பெயர். மிகவும் பெரும்பாலும் மேற்சொன்ன வகையில் உபயோகப்படுத்தப்படும் மருந்துகளாவன - prednisolone, cyclosporine, azathioprine, mycophenolate mofetil (MMF) , tacrolinus and sirolimus போன்றவை ஆகும்.
immunosuppressant மருந்துகளை வாழ்நாள் முழுவதும் கொடுக்க வேண்டும். ஆனால் சிகிச்சை காலத்தில் கொடுக்கப்பட்ட மருந்துகளின் எண்ணிக்கையும் வீரியமும் காலப்போக்கில் படிப்படியாக குறைக்கப்படும்.
ஆமாம். சிகிச்சைக்குப் பிறகு பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்துகள் - இரத்த அழுத்தம் அதிகமாவதைத் தடுக்கும் மருந்துகளும், டையூரெடிக்ஸ், கால்ஷியம், விட்டமின் மாத்திரைகள், தொற்றுதலைத் தடுக்கும் மருந்துகளும், வயிற்றில் புண் வராமல் தடுக்கும் மருந்துகளையும் மருத்துவர் கொடுப்பார்.
அவை கீழே விளக்கப்பட்டிருக்கின்றன.
மருந்து |
பொதுவான பக்க விளைவுகள் |
Prednisolone |
உடலின் எடை கூடும், இரத்த அழுத்தம் கூடும். வாயு உபத்திரவம் எரிச்சல், பசி அதிகமாகும், நீரிழிவு பாதிப்பு, எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களும், கண் புரையும் ஏற்படும் |
Cyclosporine |
உயர்இரத்த அழுத்தம், மெலிதான நடுக்கம், உபரியாக முடி வளர்தல், பல் ஈறு வீங்குதல், நீரிழிவு மேலும் தாக்கக் கூடிய சாத்தியக் கூறு |
Azathioprine |
இரத்த அணுக்கள் உற்பத்தியில் தடங்கல், தொற்றுதலின் அதிகபட்ச அபாயம் |
MMF |
அடிவயிற்றில் வலி, வாந்தி எடுத்தல், வயிற்றுப் போக்கு |
Tacrollinnus |
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு அபாயம், பதைபதைப்பு, தலை வலி, சிறுநீரகம் பாதிக்கப்படுதல் |
Sirolimus |
உயர் இரத்த அழுத்தம், இரத்த அணுக்கள் குறையும் அபாயம், வயிற்றுப் போக்கு, மூட்டுக்களில் வலி, காலஸ்ட்ரால் கூடுதல் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் கூடுதல் |
மாற்றுச் சிறுநீரகம் செயலிழந்தால், மாற்று அறுவை சிகிச்சை அல்லது டையாலிஸிஸ் செய்தல் வேண்டும்
மாற்றுச்சிறுநீரகம் பொருத்தப்பட்ட பின் எடுத்துக் கொள்ளப் பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள்
வெற்றிகரமான மாற்றுச் சிறுநீரகம் புதிய, முழு இயல்புடன் கூடிய ஆரோக்கியமானதும் சுதந்திரமானதுமான வாழ்க்கையைக் கொண்டு வருகிறது. ஆனால் வாழ்க்கையில் மருத்துவ ரீதியில் வெகு வெகு கண்டிப்புடனும் ஒழுங்குடனும் நடந்து கொள்ள வேண்டியதும் தலையாய முக்கியத்தைக் கொண்டது.
மாற்றுச் சிறுநீரகத்தை ஆரோக்கியத்துடன் பாதுகாப்பதற்கான பொதுவான சில அறிவுரைகள்
கீழ்க்கண்ட சமயங்களில் உங்கள் டாக்டரையோ அல்லது மாற்று அறுவை சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரியின் உதவியை கூப்பிட்டுப் பெறவும்.
சிறுநீரகம் செயலிழந்தவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்படுவது சாத்தியமாகிறது. ஏன்?
சிறுநீரகக் கோளாறுகள் மிகத் தீவிரமான நிலையை அடைந்து விட்ட பிறகு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே முறையான வழியாகும். மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சையை வேண்டி வெகு அதிகமான எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள். அதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன.
1. மாற்றுவதற்கு சிறுநீரகம் கிடைப்பதில்லை மாற்றுச் சிறுநீரகம் வேண்டி நிற்பவர்களில் ஒரு சிலருக்கு உயிருடன் இருக்கும் சொந்தக்காரர்கள் அல்லது இறந்து விட்டவர்கள்தானம் செய்யும் வகையில் கிடைக்கிறார்கள். உயிருடன் இருந்து தானம் செய்பவர்கள் கிடைப்பது ஒரு பெரும் பிரச்னை. இதற்காக காத்திருப்பவர்களின் பட்டியல் வெகு நீளம், அதிலும் இறந்து விட்டவர் ஒருவர்-அவருடைய சிறுநீரகத்தை உபயோகப்படுத்தக் கூடிய நிலையில் - இருப்பவருக்காக காத்திருப்பவர் ஏராளம்.
2. அதற்காகும் செலவு. மாற்று சிறுநீரக அறுவைக்கு ஆகும் செலவும், மாற்றிய பின் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகளின் செலவும் அபரிமிதமான அளவில் அதிகம். இதுவே முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் நாடுகளில் மிக மிக அதிகமான அளவில் நோயாளிகளைக் காக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
3. வசதிகள் போதாமை; எத்தனையோ முன்னேறிவரும் நாடுகளில் மாற்று சிறுநீரகம் பொருத்தும் அறுவை வசதிகள் மிகக் குறைவு.
மூளைக்காய்ச்சலினால் அல்லது இருதயம் நின்று போனதால் இறந்தவருடைய சிறுநீரகத்தை எடுத்துப் பொர்த்துவது என்பதே மேற்கண்ட சிகிச்சையைக் குறிக்கும். வெகு அண்மையில் இறந்தவருடைய சிறுநீரகமாக அது இருத்தல் வேண்டும்.
இறந்தவருடைய சிறுநீரகத்தை எடுத்து வேண்டியவருக்குப் பொருத்துவது ஏன் தேவைப்படுகிறது?
உயிருடன் இருந்து தன் சிறுநீரகங்களில் ஒன்றை தானம் செய்பவர்கள் மிகக் குறைவு. மிகத்தீவிரமான சிறுநீரகக் கோளாறு உடையவர்கள் நெடுநாட்களாக மாற்றுச் சிறுநீரகத்திற்காகக் காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் ஒரே நம்பிக்கை இறந்தவர் ஒருவருடைய சிறுநீரகத்திற்காகக் காத்திருப்பதுதான். தன் சிறுநீரகங்களில் ஒன்றை தான் இறந்த பின் வேறு ஒருவருக்குப் பொருத்துவதற்குத் தயாராக இருப்பது ஒரு பெரும் மனிதாபிமான செயலாகும். அப்படிச் செய்வதின் மூலம் சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் சிறுநீரக வியாபாரமும் தடுப்பதற்கு உதவும்.
"இறப்பு" என்ற சாதாரண வார்த்தை, இருதயமும் சுவாசித்தலும் மீண்டும் ஏற்பட வாய்ப்பில்லாமலும் நிரந்தரமாகவும் நின்று போய்விடுவதாகும். 'மூளைச் சாவு" என்ற சொற்றொடர், முழுவதுமானதும் திரும்ப ஏற்பட வைக்க இடமில்லாமலும், மூளையின் எல்லா செயல்களும் நிரந்தரமாக நின்றுபோய் இறப்புக்கு வழிவைப்பதுதான் ஆகும்.
அந்த வகை இறப்பை தீர்மானிப்பதற்கு முன் இருக்க வேண்டிய நிலைகள் யாவை?
1. நோயாளிக்கு நினைவு தவறி இருத்தல் வேண்டும். அதன் காரணம், தலை பாகம் முழுவதும் செயலிழந்து இருத்தல் வேண்டும். மூளை பழுதாகி விடுவதால் ஏற்படும் மிக அதிக இரத்தப் போக்கு முதலியவை ஊர்ஜிதப் படுத்தப்படல் வேண்டும். தூக்க மருந்துகள், உடல் நடுக்கத்தைக் குறைப்பதற்காகக் கொடுக்கப் படும் மருந்துகள், சதையை தளர்ச்சியாக்குவதற்காக கொடுக்கப்படும் மருந்துகள், மனத் தொய்வை குறைக்கக் கொடுக்கப்படும் மருந்துகள் hypnotics, narcotics போன்ற மருந்துகளால் மூளைச் சாவு ஏற்படும். இன்னமும் சில காரணங்களால் அது ஏற்படக் கூடும். இவை எல்லாம் இல்லையா என்பதை தீர்மானத்திற்கு முன் ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளுதல் வேண்டும். மருத்துவர் முதலில் இரத்த அழுத்தத்தை சரி செய்வார். அல்லது குறைவான உடல் வெப்பநிலையையும் உடலுக்குள் பிராணவாயு குறைந்த அளவே செல்லுவதையும் குறைப்பார். அதற்குப் பிறகே மூளைச்சாவு ஏற்பட்டிருக்கிறதா என்பதை சோதித்துப் பார்ப்பார்.
2. முறையான சிகிச்சைக்குப் பின்னும் வல்லுநர்களின் கவனத்திற்குப் பின்பும் நினைவிழந்த நிலை நீடித்து, 'இனி பிழைப்பதற்கு வழி இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்த பின் அந்த முடிவை எடுக்கலாம்.
3. நோயாளியினால் இயல்பாக சுவாசிக்க முடியாது போய் அவரை நிரந்தரமாக செயற்கையாக வெளிப்புறத்திலிருந்து ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய நிலை.
4. சுவாசித்தல், இரத்த அழுத்தம் மற்றும் இரத்த ஓட்டம் போன்றவை வென்டிலேட்டர் அல்லது இதர உயிரைக் காக்குக் உபகரணங்களால் பேணப்பட்டால் -
நினைவிழந்தவருக்கு வென்டிலேட்டரின் உதவி வேண்டியோ வேண்டாமலோ போகலாம். முறையான சிகிச்சைக்குப்பின் அவர் உயிரோடு மீண்டு வர சாத்தியக் கூறுகள் உண்டு. ஆனால் 'மூளைச் சாவினால் வரும் தாக்குதல் மிக மோசமானதும் திரும்ப நோயாளியை சாதாரண நிலைக்குக் கொண்டு வர முடியாத நிலையுமாகும். எந்த வித மருத்துவ சிகிச்சையோ அல்லது அறுவை சிகிச்சையோ அவரை மீண்டும் சாதாரண நிலைக்கு உயிருடன் மீட்டுக் கொண்டு வர முடியாது. வென்டிலேட்டரை "ஆஃப்' செய்தவுடன் சுவாசிப்பது நின்றால் மேலும் இருதயமும் துடிப்பதை நிறுத்தினால், நோயாளிக்கு குணம் ஏற்படப் போவதில்லை. ஆனால் சட்டபூர்வமாகப் பார்த்தால் நோயாளி ஏற்கனவே இறந்து விட்டார் என்று தான் அர்த்தம். வென்டிலேட்டரை அவர் மூக்கை விட்டு நகர்த்தியதால் அவர் இறப்பதில்லை அல்லது அது இறப்பதற்கு உண்டான காரணம் இல்லை. கால வரையறை இல்லாமல், மூளைச் சாவினால் இறப்பவர்களுக்கு வென்டிலேட்டர் வைத்து காப்பாற்றிக் கொண்டே இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு சில மணிநேரங்களுக்குள் இருதயம் துடிப்பதை நிறுத்திவிடும்.
முடியாது. கண் தானத்தைச் செய்வது போல, இறந்த பின் சிறுநீரகங்களை தானம் செய்ய முடியாது. இறப்பு ஏற்பட்டவுடன், இருதயம் நின்று விடுகிறது. அதே சமயத்தில் சிறுநீரகத்திற்குச் செல்லும் இரத்தமும் தடைப்பட்டு நின்று விடுகிறது. இதனால் சிறுநீரகம் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப முடியாத நிலையை அடைந்து விடுகிறது. கடுமையான தாக்கத்துக்கு உள்ளாகிறது. இதனால் அந்த சிறுநீரகத்தை எடுத்து இன்னொருவருக்கும் பொருத்த முடியாது.
தலையில் காயம் ஏற்படுதல் (விபத்தினால்) அல்லது மூளைக்குள் தாக்கம் ஏற்பட்டு அதீதமான இரத்தப் போக்கு, மூளையில் கட்டி போன்றவை மூளைச் சாவுக்கு காரணமாகின்றன.
ஆஸ்பத்திரிகளில் அவசர கால நிமித்தம் அனுமதிக்கப் பட்டு ஆக்ஸிஜன் சிலிண்டரிலிருந்து செயற்கையாக காற்றை உள்ளே புக வைத்தும், எந்த வித முன்னேற்றத்தையும் காண்பிக்காத நோயாளிகளை அல்லது நரம்பியல் நிபுணர்களும் கைவிட்டுவிட்ட நிலையில் இருக்கும் அவ்வகை நோயாளிகளை "மூளை செயலிழந்து "இறப்பைத் தழுவுபவர்கள் என்று கூறுவார்கள். இந்த முடிவுக்கு வரும் முன் மருத்துவர் குழுவே முன்னின்று முடிவு செய்யும். அவர்களுக்கும் மாற்று சிறுநீரகம் பொருத்தும் வல்லுநர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்தக் குழுவில் சம்பந்தப்பட்ட நோயாளியை கவனிக்கும் டாக்டர், ஒரு நியூரோடாக்டர், ஒரு நியோரோசர்ஜன் என்று பலர் இருப்பர். பின்னவர்கள் நரம்பியல் துறையில் வல்லுநர்களாக இருப்பவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே சோதித்து 'மூளை முழுமையாக செயலிழந்து விட்டதால்" இறந்து விட்டார் என்பதை தீர்மானிப்பார்கள். விரிவான பரிசோதனைகள், வெகு பல மருத்துவ சோதனைகள், முக்கியமான EEG பரிசோதனைகள் (மூளையை பரிசோதிக்கவே ஏற்பட்டவை) போன்ற பல சோதனைகளை மேற்கொண்டு, மூளை பாதிப்பிலிருந்து நோயாளியை விடுவிக்க சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்று வெகு விரிவாக பரிசோதிப்பார்கள். எல்லா பரிசோதனைகளும் ஊர்ஜிதப்படுத்திய பிறகு, மீண்டும் உயிர் பிழைக்க நோயாளிக்கு வழியே இல்லை என்று தெரிந்த பிறகு, "மூளை செயலிழந்த நிலையில் இறப்பு" என்பது வெளியாகிறது.
கீழ்க்கண்ட நிலைகளில் 'மூளை செயலிழப்பால் இறந்த" ஒருவருடைய சிறுநீரகத்தை இன்னொருவருக்குப் பொருத்த சம்மதிக்கக்கூடாது.
1. நோயாளிக்குக் கடுமையான தொற்றுதல்கள் இருத்தல்
2. HIV and hepatitis B (மஞ்சள் கா மாலை) இருந்தால் கூடவே கூடாது.
3. வெகு நாளைக்கு இரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர், நீரிழிவு நோயினால் பாதிக்கப் பட்டவர், அல்லது சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்டவர் அல்லது சிறுநீரகம் செயலிழந்த நிலையில் உள்ளவர்.
4. புற்று நோயால் அவதிப்படுபவர், (மூளையில் ட்யூமர் இருப்பவரைத்தவிர)
5. 10 வயதிற்க்கும் குறைவான நோயாளி அல்லது 70 வயதிற்கும் அதிகமான நோயாளி
இறந்தவர்களுடைய இரு சிறுநீரகங்களையும் எடுத்து உயிருடன் இருக்கும் இருவருக்குப் பொருத்தி அவர்களை பிழைக்க வைகக் முடியும். சிறுநீரகத்தைத் தவிர வேறு தானமாகக் கொடுக்கப்படக்கூடிய அங்கங்கள் : கண்கள், கணையம், கல்லீரல், தோல், போன்றவை.
தீவிர நிலையை எட்டி விட்ட சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு ஒரு இறந்தவருடைய சிறுநீரகங்களை எடுத்து இருவரைக் காப்பாற்ற முடியும். பின்னவருடைய இரு சிறுநீரகங்களும் உபயோகப்படுத்தப்படுகின்றன.
மேற்கண்ட அறுவை சிகிச்சைக்கு ஒரு மருத்துவர் குழுவே இயங்க வேண்டும். அதில் –
அந்த அறுவை சிகிச்சையின் முக்கிய அம்சங்களாவன:
இல்லை. அந்த குடும்பத்திற்கு எந்தவித பண உதவியும் கிடைக்காது. சிறுநீரகத்தை வாங்கிக் கொள்பவர் வேறு எவருக்கும் பெற்றதற்காக பணம் எதுவும் கொடுக்க வேண்டாம். அப்படி தானமாக வரும் சிறுநீரகங்களே ஒரு மாபெரும் பரிசாகும். இந்த வகை கருணை உதவிக்கு பரிசளிப்பது பெரும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுக்க வேண்டும். சிறுநீரகத்தை வேண்டி நிற்பவர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றியதில் இருக்கும் திருப்தியே எந்தவித பணக் காப்பீட்டை விட சிறந்தது.
இந்தியாவில் அப்படி மாற்றுச் சிறுநீரகம் பொருத்தும் வசதிகள் நிறைந்த நிலையங்கள் எங்கு இருக்கின்றன?
இவ்வகை நிலையங்களை மத்திய மாநில அரசுகள் அங்கீகரிக்கின்றன. இவ்வகை வசதி உள்ள பெருநகரங்களாவன - அகமதாபாத், பெங்களூர், சென்னை, டெல்லி, மும்பை, கல்கத்தா, ஹைதராபாத் போன்ற ஊர்களாகும்.
ஆதாரம் : http://kidneyeducation.com/Tamil