অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

சிறுநீரக நோய்களைப் பற்றி கட்டுக் கதைகளும், உண்மை நிலைகளும்

சிறுநீரக நோய்களைப் பற்றி கட்டுக் கதைகளும், உண்மை நிலைகளும்

கட்டுக்கதை - 1

சிறுநீரக நோய்கள் எல்லாமே மிகவும் தீவிரமானவை

உண்மை : இல்லை. எல்லா சிறுநீரக நோய்களும் தீவிரமானவை அல்ல. விரைவாகச் செயல்பட்டால், மற்றும் சிகிச்சையை உடனுக்குடன் மேற்கொண்டால், எத்தனையோ சிறுநீரக நோய்கள் குணப்படுத்தப்படலாம். பெருவாரியானவற்றில், நோய் குணமாவது வேண்டுமானால் காலதாமதம் ஏற்படலாம் அல்லது தடுக்கப்படலாம்.

கட்டுக்கதை - 2

ஒரே ஒரு சிறுநீரகம் செயலிழப்பதால், சிறுநீரகமே செயலிழந்து விடும்.

உண்மை : இல்லை. சிறுநீரகம் முழுவதுமாக செயலிழப்பது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழப்பதால்தான். வழக்கமாக, ஒரே ஒரு சிறுநீரகம் செயலிழப்பதால் நோயாளிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படுவதில்லை. இம்மாதிரியான சமயங்களில், இரத்தத்தில் இருக்கும் யூரியாவின் அளவும், சீரம் கிரியேட்டினைன் அளவும் இருக்கவேண்டிய அளவே இருக்கின்றன. ஆனால் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டால், கழிவுப் பொருட்கள் உடலுக்குள்ளேயே தங்கி விடுகின்றன. இரத்தத்தில் சேரும் யூரியாவின் அளவு கூடுகிறது. சீரம் கிரியேட்டினைனின் அளவும் கூடி, சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன என்பதைக் காண்பிக்கின்றன.

கட்டுக்கதை - 3

பரிசோதனைகளின் பொழுது இடீமா'இருப்பது தெரிய வந்தால், சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன என்று அர்த்தம்.

உண்மை: ஒரு சில நேரங்களில், இடிமா எனும் வீக்கம் இருப்பது தெரியவரும். ஆனால் சிறுநீரகங்களின் செயல் முழுவதும் மிகச் சாதாரணமாக இருக்கலாம். சிறுநீரகத்தைத் தாக்கும் ஒரு நோய் வரிசையில் இது தெரியலாம்.

கட்டுக்கதை - 4

சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும் பொழுதெல்லாம் இடீமா எனும் நிலைதாக்கும்.

உண்மை : இல்லை. ஒரு சிலதாக்கங்களில் இடிமாவும் சேர்வது இயற்கை. இது பெருவாரியான நோயாளிகளுக்கு ஏற்படுகிறது. ஆனால் நிச்சயமாக 100 க்கு 100 என்ற கணக்கில் இது ஏற்படுவதில்லை. மிக மோசமாக முற்றிய நிலையிலும் ஒரு சிலருக்கு இது ஏற்படுவதில்லை. ஆகவே இடிமா இல்லை என்ற காரணத்தால் சிறுநீரகங்கள் பழுதாகவில்லை என்று அர்த்தமில்லை.

கட்டுக்கதை - 5

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் எல்லோருமே நிரம்ப நீர் பருக வேண்டும்.

உண்மை : இல்லை. வீக்கம் ஏற்பட்ட பிறகு வெளி வரும் சிறுநீரின் அளவு குறைவாகவே இருக்கும். இது பல சிறுநீரகக் கோளாறுகளின் ஒரு அம்சம். இம்மாதிரியான நோயாளிகளுக்கு குடிக்கும் நீரை கட்டுப்படுத்துவது அவசியமாகிறது. சிறுநீரக நோய்கள் இருப்பவர்களுக்கு உடலுக்குள் இருக்கும் நீரை ஓரளவு சமநிலைப்படுத்திவைப்பது அவசியம் இருந்தாலும், கற்கள் இருந்து அவதிப்படும் நோயாளிகள் மற்றும் சிறுநீர்ப் பாதையில் தொற்று உள்ளவர்கள், அத்துடன் சிறுநீரகங்கள் பழுதடையாதவர்கள் நீரை நிரம்பவே குடிக்க வேண்டும்.

கட்டுக்கதை - 6

நான் சுகமாகவும் நலமாகவுமே இருக்கிறேன். ஆகவே எனக்கு சிறுநீரகப் பிரச்னை இல்லை என்றே நினைக்கிறேன்.

உண்மை : நோயாளிகளில் அனேகருக்கு சிறுநீர்ப் பிரச்னை இல்லாதது போலவே நோயின் ஆரம்ப காலங்களில் தெரியும். சோதனைச் சாலைகளில் எடுக்கப்பட்ட சோதனைகளில் மிக மோசமான நிலை இருப்பதற்கான தடயங்கள் தென்பட்டாலே இவற்றை உணரமுடியும்.

கட்டுக்கதை - 7

நான் நன்றாக இருப்பதாகவே உணர்கிறேன். ஆகவே சிறுநீரகப் பிரச்னைகளுக்காக நான் எந்தவித சிகிச்சைகளும் மேற்கொள்ளவேண்டியது இல்லை.

உண்மை: மிக மோசமான அளவில் சிறுநீரகங்கள் பாதிக்கப் பட்டவர்கள் கூட நன்றாக இருப்பதாகவே உணர் கிறார்கள். முறையான மருத்துவம் தொடரும் நிலையில் அப்படி உணர்வதால், மருத்துவ சிகிச்சையை நிறுத்தி விடுகிறார்கள் உணவுக் கட்டுப் பாடுகளையும் இல்லாமல் தொடர்கிறார்கள். அப்படி மருத்துவத்தை ஒரேயடியாக நிறுத்துவது மிகவும் அபாயகரமான சூழ்நிலையாகும். சிறுநீரக பாதிப்பு மென்மேலும் அதிகரித்து சீக்கிரம் மோசமாகக் கூடும். மிகக் குறைந்த நாட்களிலேயே இத்தகைய நோயாளிகள், டையாலிஸிஸ் சிகிச்சை தேவைப்படும் நிலை அல்லது மாற்று சிறுநீரகங்கள் பொருத்த வேண்டிய நிலைக்குப் போய்விடுவார்கள்.

கட்டுக்கதை - 8

என்னுடைய சீரம் கிரியேட்டினைன் அளவு சராசரிக்கு சற்று உயர்வாக இருக்கிறது. ஆனால் நான் சுகமாகவே இருப்பதாக உணர்கிறேன். ஆகவே எனக்கு இக்கால கட்டத்தில் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.

உண்மை: சீரம் கிரியேட்டினைனின் அளவு மிகக் குறைந்த அளவே கூடினாலும் சிறுநீரகம் பாழடைய ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். எத்தனையோ வகையான சிறுநீரக பாதிப்புக்கள் சிறுநீரகங்களைப் பாழடிக்கலாம். ஆகவே சிறுநீரக நோய்களை கவனிக்கும் சிறப்பு மருத்துவரை (Nephrologists) உடனடியாகக் கண்டு ஆலோசனை கேட்பது அவசியம். நோயின் பல்வேறு நிலைகளில் மேற்கண்டதிரவத்தின் சற்று அதிகமான நிலையை நாம் புரிந்து கொள்வோமாக. அதிலும் மிக மோசமாக தாக்கப்படும் நிலைகளின் ஆரம்பத்தில் கண்டு உணர்வோமாக.

நோயை ஆரம்ப காலங்களிலேயே கண்டறிந்து கொள்வதும் உடனடியாக மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்வதும் மிகுந்த பயனை அளிக்கும். அதனால் மேலும் நெடுநாட்களுக்கு சிறுநீரகங்கள் பழுதாகாமல் தொடரும்.

சீரம் கிரியேட்டினைனின் அளவு 5.0 மி.கி./டெசி விட்டராக இருக்கும்பொழுது, சிறுநீரகங்களின் திறன் 80 சதவீதத்திற்கும் மேல் குறைந்து விட்டது அல்லது இழந்து விட்டது என்று அர்த்தம். முறையான மருத்துவத்தை இந்த நிலையிலாவது தொடரவேண்டும். அது சிறுநீரகங்களை ஒரளவு பாதுகாக்கும்.

சீரம் கிரியேட்டினைனின் அளவு 10.00 மி.கி/டெசி லிட்டராக இருக்கும்பொழுது, சிறுநீரகங்களின் திறன் 90 சதவீதம் இழந்து விட்டது என்று அர்த்தம். இது நோயின் முடிவு நிலையையே காட்டுகிறது. இந்த நிலையில் நோயாளியை வெறும் மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை போய் விடுகிறது. இந்த நிலையில் அனேக நோயாளிகளுக்கு டையாலிஸிஸ் தேவைப்படுகிறது.

கட்டுக்கதை - 9

என்றைக்கு டையாலிஸிஸ் என்று ஆரம்பிக்கப் படுகிறதோ அப்புறம் அதைக் கைவிடவே முடியாது. அதுவே தொடர வேண்டும்.

உண்மை : இல்லை. எந்த அளவுக்கு டையாலிஸிஸ் வேண்டு மென்பது குறிப்பிட்ட நோயாளியின் நிலையைப் பொறுத்தது

மிக மோசமான பாதிப்பு என்பது தற்காலிகமானதும், சாதாரண நிலைக்குத் திரும்பக் கூடிய வாய்ப்பையும் உடையதாக இருக்கும். மிக மோசமாக சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டவர்கள் எல்லோருக்குமே டையாலிஸிஸ் அவசியம் என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு மிகக் குறுகிய காலமே டையாலிஸிஸ் செய்தால் போதும். முறையான சிகிச்சையோடும் ஒரு சில சமயங்களே செய்து முடித்தவுடனும் சிறுநீரகங்கள் அனேகமாக சாதாரண நிலைக்குத் திரும்பி விடுகின்றன. நீண்டநாட்கள் தொடர வேண்டுமோ என்ற பயத்தில் டையாலிஸஸ்ஸை ஆரம்பிக்காமல் இருப்பதுதான் அபாயம். ஏன் உயிருக்கே ஆபத்தும் கூட

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு (chronic kidney disease) என்பது சாதாரண நிலைக்குத் திரும்ப முடியாததும், தொடர்ந்து மோசமாகிக் கொண்டே போகும் தன்மையை உடையதாகும். முற்றிய நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால் வாழ்நாள் முழுவதும் டையாலிஸிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும்.

கட்டுக்கதை - 10

டையாலிஸிஸ் எனும் சிகிச்சை சிறுநீரகங்கள் செயலிழப்பதை தடுத்து குணப்படுத்துகிறது.

உண்மை : இல்லை. டையாலிஸிஸ் சிறுநீரகங்கள் பாதிக்கப் பட்டதை குணப்படுத்துவதில்லை. ஆனால் அது உயிரைக் காக்கும் ஒரு சிகிச்சை. உடலில் உருவாகும் வீண் பொருட்களை அது அகற்றுகிறது. உபரியாக நின்று விடும் நீரையும் வெளியேற்றுகிறது. அத்துடன் அமிலங்கள், காரங்கள் இவற்றிற்கு இருக்க வேண்டிய சமநிலை பாதிப்புக்களை சரிசெய்கிறது. சிறுநீரின் அடையாளங்கள் எதுவுமில்லாமல், உடலை சாதாரண நிலைக்குத் திருப்பி ஆரோக்கியமாக வைப்பதோடு கடும் சிறுநீரக செயலிழப்பிலிருந்தும் உடலை சரி செய்கிறது.

கட்டுக்கதை - 11

மாற்றுச்சிறுநீரகங்கள் பொருத்துவதற்கு சிறுநீரகங்களில் ஒன்றை மாற்றுப் பாலில் உள்ள ஒருவருக்கு அதாவது பெண் ஆணுக்கோ அல்லது ஆண் பெண்ணுக்கோ கொடுக்க முடியாது.

உண்மை : இது தவறு. ஆணோ பெண்ணோ எதிர்ப்பாவில் இருக்கும் ஒருவருக்கு சிறுநீரகம் ஒன்றைக்கொடுக்கலாம்.

இருபாலாருக்கும் சிறுநீரகங்களின் செயல்பாடுகள் அனைத்தும் ஒன்றே.

கட்டுக்கதை - 12

சிறுநீரகத்தில் ஒன்றை பிறருக்குக் கொடுத்து உதவுவதால் ஆரோக்கியமும் பாலியல் ஈடுபாடும் குறையும்.

உண்மை : சிறுநீரகத்தின் செயல்பாடு மாறுவதே இல்லை. ஆரோக்கியமோ மற்றும் பாலியல் ஈடுபாட்டிலோ குறைவு இருக்காது. அப்படி சிறுநீரகங்களை தானமாகக் கொடுத்தவர்கள், வெகு சாதாரணமான வாழ்க்கையையே தொடர்ந்து வாழ்வார்கள். இதில் பாலியல் ஈடுபாடோ அல்லது குழந்தைகள் பெறுவதோ எதிலும் குறைபாடு ஏற்படுவதில்லை.

கட்டுக்கதை - 13

சிறுநீரகம் தேவைப்படும்பொழுது, ஒரு சிறுநீரகத்தை வெளிச்சந்தையில் காசு கொடுத்து வாங்க முடியும்.

உண்மை: சிறுநீரகங்களை வணிக ரீதியாக வாங்குவதோ விற்பதோ தண்டிக்கப் பட வேண்டிய ஒரு குற்றம். சிறுநீரகத்தை கொடுக்க முன்வருபவர் பொருத்தப் படவேண்டியவருக்கு சொந்தமாகவும், அந்த சிறுநீரகம் பின்னவருக்கு மருத்துவ ரீதியாக பொருந்துவதாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த சிறுநீரகத்தை பின்னவரின் உடல் உதறித்தள்ளக்கூடிய அபாயம் இருக்கிறது.

கட்டுக்கதை - 14

இப்பொழுது என் இரத்த அழுத்தம் சாதாரண நிலையில் இருக்கிறது. ஆகவே நான் உயர்இரத்த அழுத்தத்திற்காக எந்த மாத்திரையும் சாப்பிட வேண்டியதில்லை. நான் அதற்கு எதிர் விளைவு கொடுக்கும் மாத்திரைகளை விழுங்காமல் இருந்தால் உடல் சரியாக இருப்பதாகவே உணர்கிறேன். ஆகவே நான் மருந்துகளைத்தான் ஏன் உட்கொள்ள வேண்டும்?

உண்மை : இரத்த அழுத்தம் கட்டுப் படுத்தப் பட்டவுடன், அப்படி மருந்து சாப்பிட்டு வந்தவர்கள் நிறுத்தவே செய்கிறார்கள். அவர்களுக்கு உயர் இரத்த அழுத்தத்தின் அடையாளங்கள் அற்று விட்டதால் அப்படிச் செய்கிறார்கள். ஆனால் இரத்த அழுத்தம் என்பது நாளடைவில் முற்றிப் போய் இருதயத்தை பாதிக்க வைத்துக் கொல்லும் நோய். ஆகவே உடலின் மிக முக்கியமான அங்கங்களைப் பாதுகாப்பதற்கு முறையாகவும் சரியான இடைவெளிகள் பார்த்து மருந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படிச் செய்து இரத்த அழுத்தத்தை சீராக ஒரே எல்லைக்குள் வைத்தே ஆகவேண்டும்.

கட்டுக்கதை - 15

ஆண்களுக்கு மாத்திரமே சிறுநீரகங்கள் இருக்கின்றன. அது கால்களுக்கு இடையில் உள்ள ஒரு பைபோன்ற அமைப்பிற்குள் இருக்கிறது.

உண்மை : ஆணோ, பெண்ணோ அடிவயிற்றின் மேற்பகுதியில் அதே அளவிலும் வடிவமைப்பிலும் செயல்பாட்டோடும் பொருத்தப் பட்டிருக்கின்றன. ஆண்களுக்கு பிறப்புறுப்புக்கள் கால்களுக்கு இடையில் இருக்கும் பை போன்ற அமைப்பில் வைக்கப்பட்டிருக்கின்றன.

ஆதாரம் : http://kidneyeducation.com/Tamil

கடைசியாக மாற்றப்பட்டது : 6/18/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate