மரபு வழியாகத் தோலில் ஏற்படும் கோளாறே தோல்கெட்டியாதல் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. எல்லா வகையான தோல்கெட்டியாகும் நோயிலும் உலர்ந்த, தடிப்பான, செதில் போன்ற தோல் காணப்படும். இதை முற்றிலுமாகக் குணப்படுத்த முடியாது. ஆயினும் பாதிப்புகள் இலேசாக இருப்பதால் தினசரி பராமரிப்பின் மூலமாகவே இதைக் கட்டுப்படுத்த முடியும். இயல்பான உலர்தோலாகத் தவறாகக் கருதப்படும் இக்தியாசிஸ் வல்காரிசில் இருந்து உயிருக்கு ஆபத்தான ஹர்லிகுயின் இக்தியாசிஸ் வரை அறிகுறிகளின் பாதிப்பு மிகவும் வேறுபடும். மிகவும் பரவலான வடிவம் 95 % காணப்படும் இக்தியாசிஸ் வல்காரிஸ் ஆகும்.
இக்தியாசிஸ் வல்காரிஸ்
புறத்தோல் இக்தியாசிஸ்
மரபியல் பிறழ்வால் இக்தியாசிஸ் வல்காரிஸ் உண்டாகிறது. இது யாராவது ஒரு பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்கு வரும். குழந்தைப் பருவத்தின் ஆரம்ப கட்டத்தில் இது தொடங்கும்.
பொதுவாக, தோல் பரிசோதனை மூலம் தோல்கெட்டி நோய் கண்டறியப்படுகிறது. குடும்ப நோய் வரலாறும் சில வேளைகளில் பயனுள்ளதாக இருக்கும். உறுதிசெய்ய, தோல் திசு ஆய்வும் செய்யப்படக் கூடும்.
மருத்துவர்கள் ஈரப்பதமூட்டிகளைப் பரிந்துரைக்கலாம். லோஷன்களை விட கிரீம்களும் களிம்புகளும் அதிக பலன் தரும். குளித்தவுடன் தோலை ஈரப்பதமாக்க இக் களிம்புகளைப் பூச வேண்டும். மெல்லிய வறட்டுத்தன்மை ஏற்படுத்தாத சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
ஈரப்பதமூட்டும் களிம்புகளில் லேக்டிக் அமிலம், சாலிசைலிக் அமிலம், யூரியா போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. இவை தோல் இயல்பாக உதிர உதவுகின்றன.
ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்
கடைசியாக மாற்றப்பட்டது : 7/20/2020
ரத்த அழுத்தத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை பற்றி இங்க...
பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள...
இத்தலைப்பில் மருத்துவம், காவல்துறை மற்றும் தீயணைப்...
3 வகை உடல் 6 வகை பருமன் பற்றி இங்கு கொடுக்கப்பட்டு...