உமிழ்நீர்ச் சுரப்பிகள் அல்லது அதன் அருகில் உள்ள பகுதிகளும், முகநரம்பும் (பொதுவாக அறுவை மருத்துவத்தால்) சேதமடைவதால் ஏற்படும் நரம்பியல் கோளாறே ஃபிரே நோயாகும்.
தோல் சிவப்பாதலும் காதுக்கு அருகில் இருக்கும் கன்னப் பகுதியில் வியர்வை உண்டாகுதலும் இந்நோயின் அறிகுறிகளாகும். உமிழ்நீரை அதிகமாக சுரக்க வைக்கும் சில வகை உணவுகளைப் பாதிக்கப்பட்டவர் உண்ணும், பார்க்கும், கனவுகாணும், நினைக்கும் அல்லது அவற்றைப் பற்றிப் பேசும்போது மேற்கண்ட அறிகுறிகள் பொதுவாகத் தோன்றும். ஒரு எலுமிச்சைத் துண்டை சாப்பிட வைத்து கன்னப்பகுதியில் வியர்வை தோன்றுவதைக் கொண்டு கண்டறியலாம்.
சிவத்தல்.
உமிழ் நீர் சுரப்பியில் அல்லது அதன் அருகில் அறுவை மருத்துவம் செய்ததால் ஏற்படும் பக்க விளைவு அல்லது உமிழ்நீர்ச் சுரப்பியைக் கடந்து செல்லும் நடுக்காது நரம்புக் காயம் ஆகியவற்றால் பொதுவாக இந்நோய் உண்டாகிறது. சரியான முறையில் மறுபடியும் மீளமைப்பு ஏற்படாததால் துணைப்பரிவு மண்டல நரம்புகள் தடம் மாறுகின்றன. இதனால் சுவைப்புலனால் தூண்டப் பட்டும், உண்பதை நினைத்தாலும் இயல்புக்கு மாறாக வியர்வை உண்டாகிறது.
பலனளிக்கும் மருத்துவம் எதுவும் இல்லை. கீழ்வருவன சாத்தியக் கூறுகள் ஆகும்:
சிக்கல்கள்
தோலில் இருந்து மிகையாக வியர்வை சுரத்தல் ஃபிரே நோயின் அறிகுறிகளில் ஒன்றாகும். அறிகுறிகளாவன:
ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்
கடைசியாக மாற்றப்பட்டது : 7/6/2020
இத்தலைப்பில் மருத்துவம், காவல்துறை மற்றும் தீயணைப்...
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...
ரத்த அழுத்தத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை பற்றி இங்க...
3 வகை உடல் 6 வகை பருமன் பற்றி இங்கு கொடுக்கப்பட்டு...