ஜெனிடல் ஹெர்பிஸ் என்பது, ஹெர்பிஸ் சிம்ளக்ஸ் வைரஸ்கள் டைப்-1 (எச்.எஸ்.வி-1) மற்றும் டைப்-2 (எச்.எஸ்.வி-2) எனப்படும் வைரஸ் நோய் கிருமிகளால் ஏற்படும் ஒரு பால்வினை நோயாகும்.
எச்.எஸ்.வி-2 நோய்தொற்று கண்ட நபருடன் பாலுறவு வைத்துக்கொள்வதால் இந்நோய் ஏற்படுகிறது. இந்நோயின் அடையாளமாக எந்த புண்ணும் இல்லாமல் இருந்து, தனக்கு இந்நோயுள்ளது என்பதை அறியாமல் இருக்கும் பெண் அல்லது ஆணிடமிருந்து, இந்நோய் இவர்களுடன் பாலுறவு கொள்பவர்களுக்கு பரவுகிறது.
எச்.எஸ்.வி 2 நோய்தொற்று கண்ட பெரும்பாலான மக்கள் தங்களுக்கு இவ்வகை நோய்தொற்று ஏற்பட்டுள்ளது என்ற விழிப்புணர்வு இன்றி இருக்கிறார்கள். இவ்வைரஸ் நோய்கிருமியின் தொற்று ஏற்பட்ட 2 வாரங்களுக்குள், இந்நோயின் அறிகுறிகள் முதலில் ஏற்படும். இந்நோயினால் ஏற்படும் புண்கள் 2 முதல் 4 வாரங்களுக்குள் சுகமாகி விடும். நோயின் அறிகுறிகள் இல்லாதிருந்தாலும், அவை தனிதன்மையுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொப்புளங்கள் பாலுறுப்புகளின் மேலோ அல்லது அவற்றை சுற்றியோ அல்லது குதத்தை சுற்றியே தோன்றும். இக்கொப்புளங்கள் உடைந்து புண்களை ஏற்படுத்தும். இப்புண்கள் முதல்முறை ஏற்படும்போது 2 முதல் 4 வாரங்களில் சுகமாகிவிடும். இந்நோய் முதல் முறை ஏற்பட்ட பின், வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்து, முன்போலவே கொப்புளங்கள் ஏற்படும். ஆனால், இது பெரும்பாலும் குறைந்த பாதிப்புண்டாக்கும் மற்றும் முதல் முறையைவிட குறுகிய கால்த்திற்கே காணப்படும். இந்நோய்தொற்று உடலில் காலவரையின்றி தங்கியிருக்கும். இந்நோய் ஏற்படும் எண்ணிக்கை ஒரு ஆண்டுக்குள் குறைந்து விடும். மற்ற அடையாளங்களாவன, ப்ளு போன்று காய்ச்சல் மற்றும் சுரப்பிகள் வீக்கமடைதல் ஆகும்.
ஹெர்பிஸ்-ஐ குணப்படுத்த சிகிச்சை கிடையாது. ஆனால் வைரஸ்-ஐ எதிர்க்கும் மருந்துகளை உட்கொள்ளும்போது, இந்நோயின் தாக்கத்தை குறைக்கிறது மற்றும் வருவதை தடுத்துக்காக்கிறது.
ஜெனடல் ஹெர்பிஸ் முதலிய அனைத்து பால்வினை நோயும் ஏற்படாமல் தவிர்க்க, தகாத பாலுறவுகளுக்கு விலகியிருப்பதே தகுந்த நம்பத்தக்க வழியாகும்.
கடைசியாக மாற்றப்பட்டது : 7/20/2020
பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள...
ரத்த அழுத்தத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை பற்றி இங்க...
3 வகை உடல் 6 வகை பருமன் பற்றி இங்கு கொடுக்கப்பட்டு...
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...