অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

வெள்ளை அணு புற்று நோய்

வெள்ளை அணு புற்று நோய்

தீவிர லிம்போஸைடிக் லுகீமியா என்பது என்ன?

  • வெள்ளை அணு புற்று நோய் (லுகீமியா) என்பது ஒரு உயிர்கொல்லி நோயாகும். இதில் லிம்போசைட்ஸாக உருவாகும் சாதாரன செல்கள் புற்று தன்மையாக மாறி எலும்பு மஜ்ஜைக்குள் இருக்கும் சாதாரணமான செல்களுக்கு மாற்றாக அமைகிறது.
  • தீவிர லிம்போஸைடிக் லுகீமியா எல்லா வயதினருக்கும் ஏற்பட்டாலும், 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 25% இதுவாகதான் உள்ளது.
  • இந்த நோய் அதிகபட்சமாக 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கின்றது. பெரியவர்களில் இது 45 வயதிற்கும் மேற்பட்டவர்களில் அதிகமாக காணப்படுகின்றது.
  • இந்த நோயில் மிகவும் வளர்ச்சியடையாத லுகீமியா செல்கள் எலும்பு மஜ்ஜையில் ஒன்றுகூடி, சாதரணமான இரத்த செல்களை உருவாக்கும் செல்களை அழித்து மாற்றுகிறது. லுகீமியாசெல்கள் இரத்த ஓட்டம் மூலமாக கல்லீரல், மண்ணீரல், லிம்ப் நோட்ஸ், மூளை, மற்றும் ஆண் விதை பைகளுக்கும் பரவி, அங்கே வளர்ந்து விருத்தி அடைகின்றது. மூளை மற்றும் முதுகு தண்டு நரம்புகளின் மேல் பரப்பாக இருக்கும் திசுக்களின் படிவங்களை அரித்து வீக்கத்தை உண்டாக்கும் (மெனின்ஜைடிஸ்). மேலும் இரத்தசோகை, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் வேலை செய்யாமல் போகலாம். மேலும் மற்ற உறுப்புகளும் பழுதடையலாம்.

அறிகுறிகள் மற்றும் நோய்கண்டறியும் முறை

  • எலும்பு மஜ்ஜை, தேவையான அளவு சாதாரண இரத்த செல்களை உருவாக்க இயலாத நிலையே ஆரம்ப அறிகுறி ஆகும்.
  • சாதாரன வெள்ளை அணுக்கள் காய்ச்சல் மற்றும அதிக வியர்வை மூலமாக சோர்வினை உண்டாக்கும் .இரத்த சோகையை குறிக்கும் சோர்வு, தளர்ச்சி மற்றும் தோல் வெளுத்து போகுதல் ஆகியவை குறைவான சிவப்பு இரத்த அணுக்களால் ஏற்படுகின்றது.
  • குறைவான பிலேட்லெட்களால், நீலம் பாய்தல் மற்றும் இரத்தக்கசிவு, சிலசமயம் மூக்கில் இரத்தம் வடிவது அல்லது ஈறுகளில் இரத்தம் கசிவு ஏற்படுகின்றது. மூளையில் லுகீமியா செல்கள் இருந்தால் தலைவலி, வாந்தி மற்றும் கடுகடுப்பு ஏற்படலாம். எலும்பு மஜ்ஜையில் லுகீமியா செல்கள் இருந்தால் எலும்பு மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படலாம். லுகீமியா செல்கள் கல்லீரல் மற்றும் மண்ணீரலை வீக்கமடைய செய்வதால் வயிற்றுபகுதி நிரம்பி இருப்பது போன்ற உணர்வு அல்லது சிலசமயம் வலி ஏற்படலாம்.
  • முழுமயான இரத்த அணுக்களின் எண்ணிக்கை போன்ற இரத்த சோதனைகள் இந்த நோயின் ஆரம்ப தடையங்களை அளிக்கலாம்.
  • வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்தோ, சாதாரணமாகவோ அல்லது கூடுதலாகவோ இருக்கலாம் ஆனால் சிவப்பு அணுக்கள் மற்றும் பிலேட்லெட்டுகளின் எண்ணிக்கை எப்பொழுதும் குறைவாகத்தான் இருக்கும்.
  • மேலும் மைக்ரோஸ்கோப் அடியில் இரத்தத்தை பரிசோதித்து பார்க்கும்போது மிகவும் வளர்ச்சியடையாத வெள்ளை அணுக்கள் காணப்படுகின்றது.
  • நோயை கண்டறிந்து உறுதிபடுத்தவும், மற்ற லுகீமியாகளிருந்து வேற்றுமை அறிந்து கொள்ளவும் கண்டிப்பாக எலும்பு மஜ்ஜை பையாப்ஸி செய்யப்படுகின்றது.
  • அதிகமான மக்களுக்கு, முதல் கட்ட கீமோதெராபியே நோயை கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்துவிடுகின்றது. (முழுமையான கட்டுப்பாடு)
  • 3 முதல் 7 வயதிற்குட்பட்ட குழந்தைகள் குணமடைய நல்ல வாய்ப்பு உள்ளது. 2 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குணமடையும் வாய்ப்புகள் மிக குறைவானது. வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை மற்றும் லுகீமியா செல்களில் இருக்கும் குறிப்பான மரபணு கோளாறுகள் குணமடையும் தன்மை குறைகிறது.

சிகிச்சை

  • கீமோதெராபி மிகவும் பயன் அளிக்கக்கூடியது, மேலும் பகுதிகளாக அளிக்கப்படுகின்றது. லுகீமியா செல்களை அழித்து, முழுமையான கட்டுப்பாடு அடைவதுதான் ஆரம்ப சிகிச்சியின் நோக்கமாகும். இதனால் எலும்பு மஜ்ஜையில் சாதாரணமான செல்கள் மீண்டும் வளர முடியும்.
  • எலும்பு மஜ்ஜை எவ்வளவு விரைவாக குணம் அடைகிறதோ அதைப் பொருத்து, நோயாளிகள் சில நாள்களோ அல்லது வாரங்களோ மருத்துவமனையில் தங்க வேண்டிய நிலை ஏற்படலாம். இரத்த சோகையை குணப்படுத்தவும் மற்றும் இரத்தக்கசிவை தவிர்க்கவும், இரத்தம் மற்றும் ப்லேட்லெட் தேவைப்படலாம். பாக்டிரியா பாதிப்பை குணப்படுத்த நுண்கிருமி எதிர்ப்பு மருந்துகள் தேவைப்படலாம். லுகீமியா செல்களை அழிக்கும்போது யுரிக் ஆசிட் போன்ற கேடு விளைவிக்கும் துணைப் பொருள்கள் வெளியேற்றப்படுகின்றன. இவைகளை உடலிலிருந்து நீக்க இரத்த நாளங்கள் மூலமாக அல்லது மருந்துகள் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
  • பல வகை மருந்துகள், பல நாள்களுக்கோ அல்லது வாரங்களுக்கோ தொடர்ந்து தரப்படுகிறது. மூளை மற்றும் முதுகு தண்டு நரம்பின் (மெனின்ஜஸ்) மேற்பரப்பை மூடும் திசுக்களில் இருக்கும் லுகீமியா அணுக்களுக்கு சிகிச்சை அளிக்க, புற்று நோய் எதிர்ப்பு மருந்துகளை நேரடியாக செரிப்ரோஸ்பைனல் திரவத்தில் உள்ளே ஏற்றப்படுகிறது.
  • கீமோதெராபி, கதிர்வீச்சு சிகிச்சையுடன் சேர்ந்தும் மூளைக்கு அளிக்கலாம். லுகீமியா மூளைக்கு பரவியதாக சிறிய தடையம் இருந்தாலும் இதேபோன்ற சிகிச்சை தற்பாதுகாப்பு நடவடிக்கையாக தரப்படுகிறது, ஏனெனில் மெனின்ஜஸ்ஸிற்கு இது பரவுவதற்கு அதிகமான வாய்பு உள்ளது.
  • ஆரம்ப கட்ட தீவிர சிச்சைக்குப் பிறகு, சில வாரங்களுக்கு கூடுதல் சிகிச்சை (தொகுப்பு கீமோதெராபி), மீதம் உள்ள லுகீமியா அணுக்களை அழிக்க தரப்படுகிறது.
  • கூடுதல் கீமோதெராபி மருந்துகள் அல்லது இண்டக்சன் கட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்ட அதே மருந்துகளை மீண்டும் சில தடவைகள் பல வாரங்களாக பயன்படுத்தலாம்.
  • குறைவான மருந்துகள், சில சமயம் குறைந்த அளவுகள் கொண்ட, நீடித்த சிகிச்சையாக (பராமரிப்பு கீமோதெராபி) 2 முதல் 3 ஆண்டுகளுக்கு தொடந்து அளிக்கலாம்.
  • அணுக்களில் உள்ள குறிப்பிட்ட மரபணு மாற்றங்களால், நோய் மீண்டும் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ள சில நோயாளிகளுக்கு, முதல் சிகிச்சைக்குப்பிறகு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது.
  • எலும்பு, எலும்பு மஜ்ஜை, மூளை அல்லது ஆண் விதைப்பையில் அதிகபட்சமாக மீண்டும் லுகீமியா அணுக்கள் காணப்படலாம். (எ கன்டிஷன் டர்ம்ட ரிலாப்ஸ்). எலும்பு மஜ்ஜையில் மீண்டும் காணப்படுவது குறிப்பாக கவலைக்கிடமானது.
  • கீமோதெராபி மீண்டும் அளிக்கப்படுகிறது. பெறும்பான்மையான நோயாளிகள் சிகிச்சையின் மூலம் குணமடைந்தாலும், குறிப்பாக இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும், இந்த நோய் மீண்டும் வர திடமான வாய்ப்பு உள்ளது. மூளையில் லுகீமியா அணுக்கள் மீண்டும் காணப்பட்டால், கீமோதெராபி மருந்துகளை ஸெரிப்ரோஸ்பைனல் திரவத்தில் ஊசி மூலமாக, வாரம் 1 அல்லது 2 முறை அளிக்கப்படுகிறது.
  • ஆண் விதை பையில் லுகீமியா அணுக்கள் மீண்டும் தோன்றினால், கீமோதெராபியுடன் கதிர்வீச்சு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
  • நோய் மீண்டும் ஏற்பட்ட நோயாளிகளுக்கு, அல்லோஜெனிக் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சையுடன் அதிக அளவு கீமோதெராபி மருந்துகள், நோய் குணமடைவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும்.
  • திசு ஒற்றுமையுடைய ஒருவரிடமிருந்து ஸ்டெம் செல்கள் கிடைத்தால் தான் மாற்று சிகிச்சை செய்ய முடியும். (ஹெச் எல் ஏ – மேட்ச்ட)
  • பொதுவாக தானம் தருபவர் உடன் பிறந்தவராகதான் இருப்பர். ஆனால் சில சமயம் செல்கள், திசு சேர்க்கையுள்ள, சம்பந்தமில்லாத தானம் அளிப்போரிடமிருந்தும் (சில சமயம் பகுதி மற்றும் திசு சேர்க்கையுள்ள செல்கள் குடும்பத்தினர் இடமிருந்தோ அல்லது சம்பந்தமில்லாத தானமளிப்போரிடமிருந்தும்) உபயோகிக்கப்படுகிறது.
  • ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை, 65 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு சில நேரங்களில்தான் செய்யபடுகிறது. ஏனெனில் சிகிச்சை வெற்றி அடைவதற்கன வாய்பு மிகவும் குறைவு. மேலும், பக்க விளைவுகள் உயிருக்கு ஆபத்தானதாக முடியும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
  • நோய் மீண்டும் வந்த பிறகு, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை செய்து கொள்ள முடியாத நோயாளிகளின் உடல் கூடுதல் சிகிச்சையை குறைந்தபட்சமே ஏற்று கொள்கிறது. மேலும் சிகிச்சை பயனளிக்காமல் நோயாளியை மிகவும் கஷ்டப்படுத்துகிறது. ஆனால் நோய் குறையலாம். சிகிச்சையினால் குணம் பெறாத நோயாளிகளுக்கு வாழ்வின் இறுதி கட்ட கவனிப்புகளை ஆலோசிக்கவேண்டும்.

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate