অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

டெங்குவைக் கட்டுப்படுத்த 20 வழிமுறைகள்

டெங்குவைக் கட்டுப்படுத்த 20 வழிமுறைகள்

  • கொசுக்களை ஒழிப்பதே டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் ஒரே வழி. டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் முட்டையிடும் என்பதால், கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும்.
  • வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசுவலை பொருத்தலாம். வாசலில் நீண்ட திரைச் சீலைகளைப் பயன்படுத்தலாம். கொசுவத்தி, கொசு விரட்டி, கொசு ஸ்பிரே போன்றவையும் பலன் கொடுக்கும்.
  • கொசு எதிர்ப்புக் களிம்பை உடலில் பூசிக்கொள்ளலாம். கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியலாம்.
  • வீட்டில் தினமும் வேப்ப எண்ணெயில் விளக்கு ஏற்றினால், அதன் வாசனைக்கு கொசு வீட்டுக்குள் வராது. மேலும், வேப்ப எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து உடலில் தடவிக் கொண்டால் கொசு கடிக்காது. நாட்டு மருந்து கடைகளில் வேப்ப எண்ணெய் கிடைக்கும்.
  • வீட்டைச் சுற்றியுள்ள சாக்கடையை மட்டுமல்ல, கொசுக்கள் வாழும் இடங்களான மேல்நிலைத் தொட்டிகளையும், கீழ்நிலைத் தொட்டிகளையும் நன்றாக மூடி வைக்க வேண்டும். தண்ணீரைத் திறந்த பாத்திரங்களில் ஊற்றிவைக்காமல், மூடி உள்ள பாத்திரங்களில் ஊற்றிவைப்பது பாதுகாப்பானது.
  • குப்பைத்தொட்டிகள், தேங்காய் மூடிகள் ஆகியவற்றில் கூட தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • சிமெண்ட் தொட்டிகள், பூந்தொட்டிகள், ஏர்கூலர், ஏர்கண்டிசனர் ஆகியவற்றில் உள்ள தண்ணீரையும் இவ்வாறே சுத்தப்படுத்த வேண்டும்.
  • குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்புகளைச் சீரமைக்க வேண்டும்.
  • திறந்தநிலையில் கழிவுநீர் கால்வாய்கள் இருந்தால் சுகாதாரத் துறையினரை அணுகி, குறிப்பிட்ட இடைவெளியில் தவறாமல் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பயனற்ற பிளாஸ்டிக் பொருட்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் டயர்கள் இருந்தால் அவற்றில் தேங்கும் தண்ணீர் மூலம், நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு அபாயம் இருப்பதால் அவற்றை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
  • கட்டிடப் பணிகளுக்காக நீண்ட நாட்களாக தொட்டிகளில் நீர் தேக்கி வைத்திருப்பதால் அதன்மூலம் நோய்கள் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் இருப் பதால் தேவையான அளவுக்கு மட்டும் தண்ணீர் தேக்கி பயன் படுத்திவிட்டு, அப்பகுதிகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  • மருத்துவமனைகள், நிறுவனங்கள்,  புதிய கட்டுமானப் பணி நடைபெறும் இடங்கள், வணிக கட்டிடங்கள்,  அரசு கட்டிடங்கள் ஆகியவற்றில் ஆய்வு  மேற்கொண்டு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் செயல்படும் நிறுவனங்கள், தனி நபர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் அபராதம் விதிக்க வேண்டும்.
  • மழைநீர் தேங்கும் வகையில் நிறுத்தப்பட்டிருக்கும் பயனில்லாத பழைய வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்ட பல அரசுத் துறைகளிலும் பழுதடைந்த நிலையில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் அவற்றையும் அப்புறப்படுத்த வேண்டும்.
  • உள்ளாட்சி அமைப்புகளால் அடிக்கப்படும் கொசு மருந்து புகையை விட தீபாவளி பண்டிகைக்கு வெடிக்கப்படும் பட்டாசுகளால் ஏற்படும் புகை அளவு பன்மடங்கு அதிகம் என்பதால் இது தீவிர கொசு விரட்டியாக அமைந்து விடுகிறது. இதையும் குறிப்பிட்ட அளவில் மட்டும் பயன்படுத்தலாம்.
  • காய்ச்சல் வந்தால் அது டெங்குவாக இருக்கும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தாமாக ஒரு முடிவுக்கு வரக்கூடாது. சாதாரணக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள், பெரியவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும்.
  • காய்ச்சல் வந்த பிறகு, மருத்துவர்களிடம் ஆலோசனை பெறாமல் மருந்துக்கடைகளில் மாத்திரை வாங்கிச் சாப்பிடும் பழக்கத்தை வளர்க்க வேண்டாம். கை வைத்தியம், பாட்டி வைத்தியம் பார்த்துவிட்டு காய்ச்சல் குறையவில்லை என்று கடைசியில் மருத்துவரைச் சந்திப்பதும் சரியான போக்கு அல்ல.
  • காய்ச்சல் வந்தவுடன் ஒவ்வொரு வீட்டிலும் சுடுகஞ்சியைத்தான் கொடுப்பார்கள். காரணம் உடம்பிலுள்ள நீர்ச்சத்தை ஈடுகட்டும் வல்லமை படைத்தது சுடுகஞ்சி. இதுபோன்ற பாரம்பரிய முறைகளைப் பின்பற்றினாலே காய்ச்சலை பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.
  • நீர்ச்சத்து பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காக வீட்டிலேயே குளுக்கோஸ் ஏற்றுவது போன்ற தவறைச் செய்யவே கூடாது.
  • காய்ச்சல் வந்து மூன்று நாட்களுக்கு பின்னரே அதன் அறிகுறி தெரியும். நில வேம்புக் கசாயம் குடிக்கலாம், பப்பாளிச் சாறு குடிக்கலாம். ஆனால் டெங்கு கட்டுப்படவில்லை, பிளட் லெட் குறைகிறது என்றால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகிவிட வேண்டும்.
  • நிலவேம்பு ஜுர சூரணம் என்ற பொடியை தகுதியான மருத்துவர்கள் தயாரித்து விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது அங்கீகரிக்கப்பட்ட பொடியா என்று கவனித்து அதைத்தான் வாங்கி பயன்படுத்தப் வேண்டும். சாதாரணமாக நில வேம்பு பொடியால் எந்த உபயோகமும் இல்லை.
ஆதாரம் : தி இந்து நாளிதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 4/9/2021



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate